Jump to content

யாழில் எம்மைக் கவர்ந்த பதிவு / திரி


Recommended Posts

 
யாழை சீராக /ஒவ்வொரு நாளும் பார்க்கமுடியாமல் போகும் போது நாம் சில முக்கிய(சுவையான)   பதிவு / திரியினை  தவற விட்டுவிடுகிறோம்.  
 
சில திரிகளின் தலைப்புகள் அத்திரியினை வாசிப்பதற்குரிய ஆர்வத்தை தருவதில்லை ஆனால் உள்ளே நல்ல விடயங்கள் இருக்கும்.
நேரமின்மையால் எல்லாராலும் எல்லாப் பதிவகளையும் படிக்க முடிவதில்லை.
 
எனவே நாம் இந்த திரியில் , 
 
நாம் ரசித்துப் படித்த பதிவுகளை
 
உபயோகமான பதிவுகளை  
 
ஒரு சிறிய குறிப்புகளுடன் இணைத்து விடுவோம்.
 உறவுகள் அந்த சிறு குறிப்பினை வாசித்து அவர்களுக்கு பிடித்திருந்தால் அந்த திரியினைத் திறந்து வாசிக்கலாம்.
 
 இதன் மூலம் நாம் எமது பார்வையிலிருந்து நல்ல பதிவுகள் விலகிப்போவதைக் குறைக்கலாம் என நினைக்கின்றேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்திரிகளுக்கும் செல்லாத என்னைப் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும். சில வேளைகளில் நல்ல கருத்தாடல்கள் உள்ள திரிகளைத் தவறவிடுபவர்களில் நானும் ஒருவன். தொடருங்கள் ஆதவன்

Link to comment
Share on other sites

இரண்டு யாழ்கள உறவுகள் எதிர்பாராத விதமாக ஒருவரையொருவர் சந்தித்துள்ளனர். அவர்கள் தாம் சந்தித்த அனுபவத்தினை மிகவும் உணர்வுபூர்வமாக‌ கீழுள்ள திரியினில் பதிந்துள்ளார்கள் , வாசிக்கும் போது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. 
நீங்களும் அந்த நெகிழ்ச்சியான அனுபவத்தினை பெறுங்கள்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமை உணர்வைப் பற்றியும், அதனால் எற்படும், ஆபத்து பற்றியும்... கிருபன் பதிந்த பதிவு பலரது கவனத்தை ஈர்க்காமல் இருந்துள்ளது.

 

நாம் புலம் பெயர்ந்த போது... எமது பெற்றொர் பெற்ற வேதனையை... அடுத்த தலை முறையினராகிய நாம் அனுபவிக்கும் நேரம் இது.
எமது பிள்ளைகள் கல்வி நிமித்தமாகவோ, வேலை கிடைத்ததோ... எம்மை விட்டுப் பிரியும் போது... ஏற்படும் தனிமை பலரை ஆட்கொண்டுள்ளதை அண்மையில் அறிய முடிந்தது.
 

அதிலிருந்து மீள இப்பதிவு நிச்சயம் உதவி புரியும் என நம்புவதால்... எனக்குப் பிடித்த பதிவு இது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=140875

Link to comment
Share on other sites

  • 1 month later...

எல்லோராலும் மதிக்கப்படும் திரு விவசாயி விக் அவர்களின் அற்புதமான பதிவொன்று. இந்தப் பதிவிற்கு சசி வர்ணம் எழுதிய பின்னூட்டம் இதோ.

 

விவசாயி விக், 
சத்தியமாக என்ன எழுதுவது என்று தெரியவில்லை !!
 
முதலில் நீங்கள் எதிர்கொண்ட துன்பங்கள், இன்னல்கள் வாசிக்க கண்கள் கலங்கியது. 
நான் இழந்த பள்ளி நண்பர்கள், அன்றாடம் பேசித்திரிந்த அயலவர்கள், பண்பும், பாசமும் கொண்ட  போராளிகள்...இப்படி பலபேர் என் கண் முன்னே தோன்றி மறைந்தார்கள்.  
 
உங்கள் எழுத்து திறன், மொழி ஆளுமை, கருப் பொருளை சொல்லிய விதம்.... அப்பாடா ...ஒவ்வொரு வரியும் வாசித்து உண்மையில் ஸ்தம்பித்துப் போய் இருக்கிறேன். 
 
பெரூவில் நீங்கள் சாமன் ஒருவர் மூலம் உணர்ந்தது "உங்களை நீங்களே அறிதல்"  என்ற உன்னத நிலை.
எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிட்டுவது இல்லை. தேடுதல் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் யோகம் அது. 
எம் முன்னோர் தந்த நாடி சுத்தி, பிரணாயாமம், தியானம், மந்திர ஜெபங்கள் கூட "அயவாஸ்கா" போன்ற நிலையை அடைய உதவும்.  
 
நீங்கள் வாழ்கையில் சந்தித்த ஒவ்வொரு அனுபவத்தையும் நானும் ஆழமாய் சந்தித்து இருக்கிறேன். இலங்கையில் தமிழனாய் பிறந்த பாவத்திற்காக நாங்கள் ஒவ்வொருவரும் பட்ட அவஸ்தைகள் தான் எத்தனை, இழப்புகள் தான் எதனை. 
 
சகோதரரே,
உங்களை செம்மை படுத்தியது உங்கள் அனுபவம்,
உங்களை நேர்வழிப் படுத்தியது உங்கள் அனுபவம் 
உங்களை திடமானவனாகவும் திறமை உள்ளவனாகவும் மாற்றியதும் கூட உங்கள் அனுபவங்கள் தான்
உங்களை அமைதியானவனாகவும் இந்த அனுபவங்கள்  மாற்றி இருக்கக் கூடும்.
 
"யாழ் களத்தில் இதுவே உங்கள் கடைசிப் பதிவு" இது மட்டுமே எனக்குப் புரியவில்லை!!!
விடை தருவீர்களா?
 
 

விழித்துக்கொண்டே இறந்தேன்! பச்சையம்மா அரவணைத்தாள்! - கடைசி கருத்து (18+ வயதினருக்கு மேல் மட்டும் வாசிக்கவும்)

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=142245

Link to comment
Share on other sites

 
ரத்தத்திலேயே ஊறியிருக்க வேண்டும்
 
 
 
 
அலுவலகத்தில் ஒரு இள‌ம் மேனேஜரின் திறமயை விபரிக்கும் நல்லதொரு பதிவை அபராஜிதன் அவர்கள் இணைத்துள்ளார். 
 
இந்தப் பதிவுக்கு யாயினி பின்வருமாறு பின்னூட்டம் பதிந்திருந்தார்
 
"ஒவ்வொருவரிடமிருந்தும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது..."
 
 
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சசி வர்ணம் அண்மையில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் தொடர்பாக சிறப்பான கவிதையொன்றினை பதிவு செய்துள்ளார்.

விமானத்தினுள் நடந்த நிகழ்வுகளை விவரித்த விதம்  நாம் நேரில் பார்ப்பது போல் இருந்தது. 
 
இக் கவிதை தொடர்பாக அர்ஜுன் தனது கருத்தினை பின்வருமாரு பதிகிறார்.
 
"சசி ,ஒரு புள்ளியில் அத்தனை உயிர்களையும் அவர்தம் நினைப்புகளையும்  இணைத்த விதம் அபாரம் ."

 

மரணத்தின் வாசனை ~ மலேசிய விமானம்

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=142807

Link to comment
Share on other sites

இக்கவிதை  தாயகத்தில் என் வீட்டின் ஏக்கங்களை உணரவைத்தது.

நன்றி கண்மனி அக்கா

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=141903&p=1028776

Link to comment
Share on other sites

  • 2 months later...

ஜெர்மனியில் தமிழர்கள் நிகழ்வுகளை. நடத்துவதர்க்காக ஒரு மண்டபத்தை திறக்க இருக்கும் சபேசன் அண்ணாவை வாழ்த்துவோம்

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/147013-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
20 மில்லியன் கனடிய டொலரை  லொத்தர் சீட்டிலுப்பில் வென்ற கனடா வாழ் ஈழத்தமிழர்.
 
 

http://www.yarl.com/forum3/index.php?/topic/145445-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A/page-28

 

நன்றி யாயினி 

Link to comment
Share on other sites

  • 1 month later...
 
கால மாற்றங்களுக்கு ஏற்ப இதுவரை இருந்த யாழ் கள விதிகள் மீளாய்வு செய்யப்பட்டு தெளிவற்றவை சிலவற்றில் மாற்றங்களும், புதிய விதிகளும் புகுத்தப்பட்டு கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 3.0 ஆக இன்னும் சில நாட்களில் புதுப்பிக்கப்படவுள்ளது. இப்புதுப்பிக்கப்படும் விதிமுறைகள் பற்றி யாழ் களத்தின் முன்னேற்றத்திற்கு என்றென்றும் துணைபுரியும் கள உறுப்பினர்களின் எண்ணப்பாட்டை அறிந்துகொள்ளும் முயற்சியாக இக் கருத்துக்கணிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
 
 
 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
யாழ்க் கள உறவுக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்று சர்வதேச விருது ஒன்றிற்காக போட்டியிடுகிறது,நாமும் வாக்களித்து அந்நிறுவனத்தினை வெற்றியடையச் செய்வோம்.
 
மேலதிக விளக்கங்கள் இங்கே
அந்த நிறுவனத்துக்கு, வாக்களித்து விட்டேன்.
தற்போதைய.... வாக்கு நிலவரம்: 413
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஆதவன்,
எதிர் பாராவிதமாய் இன்று தான் உங்கள் இந்தப் பதிவினை பார்க்க நேர்ந்தது.
தவறிய சில முத்துக்களை இங்கே பொருக்கவும் முடிந்தது...
இங்கே  நான் எழுதியிருந்த கவிதை, மற்றும் ஒரு கருத்தை இணைத்து இருந்தீர்கள்.
பரவசம், நெகிழ்ச்சி இரண்டும் கலந்த உணர்வுடன் உங்களுக்கு நன்றியை தெரிவிகின்றேன்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடனடியாக என் நினைவுக்கு வந்த ஒரு கவிதை ...

அஞ்சரன் எழுதியிருந்தார்
கவிதையில் வரும் எம் மண் சார்ந்த அடையாள உருவகங்கள் மிகவும் அருமை...
 

http://www.yarl.com/forum3/index.php?/topic/143454-இலக்கை-நோக்கி-நடந்த-வேளை/

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
நல்லதோர் வீணை செய்வோம்!
 
கள உறவு ஜஸ்டின் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உடல் ஆரோக்கியத்திற்கான திரி மிகவும் சிறப்பாக இருக்கிறது. இத்திரியை ஆரம்பித்ததற்கான காரணத்தினை திரு ஜஸ்டின் பின் வருமாறு கூறுகிரார்.
 
"கடந்த சில மாதங்களாக யாழின் பதிவுகளில் என் கவனத்தை ஈர்த்தவை உடல், மன ஆரோக்கியம் பற்றிய பல் வேறு மூலங்களில் இருந்தும் பகிரப் படும் பதிவுகளாகும். இவை அனைத்தும் நல்ல நோக்கத்தோடு பகிரப் பட்ட பதிவுகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மூலங்களின் நம்பகத் தன்மை அல்லது முழுதான மூட நம்பிக்கைகளின் அடிப்படை போன்ற காரணங்களால் இந்த ஆரோக்கியப் பதிவுகள் சில தவறான தகவல்களையும் வாசிப்போரிடையே புகுத்தி விடுவதைக் கண்டேன். இப்பதிவுகளுக்கு தனித் தனியாகப் பதில் இடுவதை விட நாமே வாசகர்கள் அறிய ஆவல் கொள்ளும் ஆரோக்கிய அறிவியல் தகவல்களைத் தொகுத்து வழங்கினால் என்ன என்ற அவா எனக்கு எழுவதால் இந்தத் தொடரை ஆரம்பிக்கிறேன். இந்தத் தொடரில் பகிரப் படும் தகவல்கள் டாக்டரின் ஆலோசனைகள் அல்ல (நான் வைத்தியரும் அல்ல!). ஆனால் விஞ்ஞான ஆய்வுகள் மூலம் நிரூபணமான தகவல்கள் மட்டுமே பகிரப் படும். ஓரிரு நாட்களில் தொடர்வேன்."
 
இப்போது அவர் கொலஸ்ட்ரோலைப் பற்றி மிகவும் சிறப்பாக எழுதி வருகிறார்........., திரியின் தலைப்பு மிகவும் அருமை. 
 
மிக்க நன்றி ஜஸ்ரின் இப்படியொரு சிறந்த பதிவைத் தொடர்ந்து தருவதற்கு.
 
 
பதிவுக்குச் செல்ல
 
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
எண்ணை கலந்த யாழ்ப்பானம் நீர் தொடர்பாக அடுத்து என்ன செய்யலாம்..? ஒரு பகிர்வு
 
தற்போது தமிழர்களை உலுக்கிக் கொண்டிருக்கும் மிக முக்கிய பிரச்சனையான சுன்னாகம் எண்ணைக் கிணறுகள் தொடர்பில் நாம் அணைவரும் ஒன்றிணைந்து போராடா வேண்டியது மிகவும் இன்றியமையாதது.
 
கள உறவு உதயம் இதற்கென ஒரு திரி திறந்து மிகசிறந்த  கருத்துப் பரிமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளார்.
 
இந்தத் திரியில் தமிழறிவு அவர்கள் தாயகத்திலிருந்து எண்ணைக் கிணறுகள் தொடர்பில் தனது நேரடி அனுபவத்தினை பதிந்துள்ளார். அவரது பதிவு  நாம் எமது போராட்டத்தினை இன்னும் தீவிரப்படுத்தி , விரைவு படுத்த வேண்டிய அவசியத்தினை உணர்த்தி நிக்கின்றது
 
திரிக்குச் செல்ல
 
 
 
Link to comment
Share on other sites

  • 3 months later...
தாயகத்தில் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசன்ரேசன் தயாரிப்பு.

 

 

எமது தாயக மக்களை போதைப் பொருள் பாவனையில் இருந்து மீட்பதற்காக ஆரம்ம்பிக்கப் பட்டுள்ள திரி. தயவு செய்து அணைவரும் உங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கி எமது இளையோரை மீட்டெடுத்து பாதுகாக்க வாருங்கள்

 

இத்திரியை ஆரம்பித்துவைத்த நெடுக்கால்போவானுக்கு பெரு நன்றிகள்

 

இத்திரி தொடர்பாக நெடுக்கால்போவான் பின் வருமாறு கூறுகிறார்

 

யாழ் இணையம் சார்ப்பாக.. யாழ் இணைய கள உறவுகளின் ஒருமித்த கருத்தியல் அடிப்படையில்.. தமிழர் தாயகத்தில் ஏவிவிடப்பட்டுள்ள.. மாணவ சமூகத்தையும் இளைய சமூகத்தையும் சீரழிக்கவல்ல.. போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்பூட்டல் பிரசன்ரேசன் ஆன்லைனில் தயாரிப்பதற்கான முன்னெடுப்பாக இத்தலைப்பு பிரசுரிக்கப்பட்டுள்ளது.

 

 

திரிக்குச் செல்ல

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/158445-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88/

 

தொடர்புடைய மேலுமொரு திரி

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/158387-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/#entry1114714

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.