Jump to content

முகநூலில் ரசித்தவை


Recommended Posts

  • Replies 178
  • Created
  • Last Reply
எப்படி கட்டப்பட்டிருக்கும் இப்படி ஓர் அற்புதம்?
 
 
thanjavur.jpg
   
   ராஜராஜேச்சரத்தின் நெடிதுயர்ந்த ஸ்ரீ விமானத்தைப் பார்க்க நேரும்போதெல்லாம் என்னுள் இந்தக் கேள்வி எழும்: எப்படி கட்டப்பட்டிருக்கும் இப்படி ஓர் அற்புதம்?
 
                   இந்தக் கேள்விக்கு ஒரே மாதிரியான பதில்தான் கிடைக்கிறது: ஸ்ரீ விமானத்தைச் சுற்றி மண் சாய்வுத்தளம் அமைக்கப்பட்டு, அதன் வழியாக யானைகள் துணையுடன் கற்கள் கொண்டுசெல்லப்பட்டு கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். தஞ்சாவூர்ப் பகுதியில் இது தொடர்பாக  சரளமாகப் புழங்கும் இரு கதைகள் உண்டு. ஒன்று, பெரிய கோயிலைச் சுற்றி குளங்கள் வெட்டப்பட்டு, அவற்றின் மூலம் பெறப்பட்ட மண்ணால் மண் சாரம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த கதைக்குச் சாட்சியாக குளங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. மற்றொன்று, தஞ்சாவூருக்கு வடகிழக்கேயுள்ள சாரப்பள்ளம் என்னும் ஊரிலிருந்து மண் சாய்வுதளம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கதைக்கு சாட்சியாக சாரப்பள்ளம் ஊர் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால், இந்த விளக்கங்கள் எப்போதுமே எனக்கு திருப்தி அளித்ததில்லை. நாம் நம் முன்னோரின் திறனைக் குறைத்து மதிப்பிடுகிறோமோ என்று தோன்றும். இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ராஜராஜேச்சரத்தில் ஸ்ரீ விமானத்தின் மையத்தில் இருக்கிறது பெருவுடையார் திருமேனி. இதிலிருந்து ஏறத்தாழ 191 அடி உயர இடைவெளிக்கு அப்பால் உச்சத்தில் இருக்கிறது ஸ்ரீ விமானத்தின் சிகரக் கலசம். பெருவுடையார் திருமேனியின் மையமும் சிகரக் கலசத்தின் மையமும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றன. இந்த நேர்க்கோட்டைக் கற்பனை செய்தவாறே சுற்றியுள்ள ஸ்ரீ விமானத்தைக் கற்பனை செய்யுங்கள். எப்பேர்ப்பட்ட மகத்துவமான கட்டமைப்பு இது?!
 
                   நவீனங்கள் எழுச்சிபெற்ற ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.  நாம் வசிக்கும் இந்தப் புவிக் கோளத்தின் எந்த ஒரு பகுதியையும் நினைத்த மாத்திரத்தில் அணுகவும் மாற்றியமைக்கவும் அழிக்கவுமான தொழில்நுட்பத்தை, சாதனங்களை, வல்லமையை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால், இன்றைக்கு நாம் கொண்டிருக்கும் இந்த நவீன வசதிகள் அனைத்தையும் பயன்படுத்தி இப்படியொரு மகத்துவத்தை விஞ்சக்கூடிய ஒரு கோயிலை இதே துல்லியத்துடன் நம்மால் கட்டியெழுப்ப முடியுமா? சந்தேகம்தான். ஆனால், முடியும் என்று சாத்தியமாக்கிய நம் முன்னோரின் தொழில்நுட்பம் எத்தகையானதாக இருந்திருக்கும்? நிச்சயம் இப்படியோர் கட்டுமானத் திறன் ஒரேயொரு கட்டடத்தில் வெளிப்படக் கூடியதல்ல. நீண்ட கால மரபின் உச்சமாகவே இந்தப் படைப்பு முகிழ்ந்திருக்க வேண்டும். அப்படியென்றால், நம்முடைய முன்னோரின் மரபு எத்தகையதாக இருந்திருக்கும்?
 
                   நீண்ட காலமாக அழுத்திக்கொண்டிருந்த கேள்வி இது:  எப்படி கட்டப்பட்டிருக்கும் இப்படி ஓர் அற்புதம்?  
 
                   அண்மையில் ஒரு தகவல் கிடைத்தது. ராஜராஜ சோழன் ஒரு நிலப்பகுதியை கீழ்முந்திரியாகப் பிரித்திருக்கிறான் என்ற தகவல் அது. கீழ்முந்திரி என்பது கீழ்கணக்கிலுள்ள ஓர் அளவு. ஒன்றைப் பங்கு போட கையாளப்பட்ட கணக்கே கீழ்கணக்கு. முக்கால் என்ற அளவில் தொடங்கும் அந்தக் கணக்கு அதிசாரம் என்ற அளவில் முடிகிறது. முக்கால் என்பது ஒரு ரொட்டியின் நான்கில் மூன்று பங்கை குறிக்கிறது (3/4) என்றால், அதிசாரம் என்பது ஒரு ரொட்டியின் பதினெட்டு லட்சத்து முப்பத்தியெட்டாயிரத்து நானூறில் ஒரு பங்கைக் குறிக்கிறது (1/18,38,400). இதில், கீழ்முந்திரி  என்பது ஒரு ரொட்டியின் லட்சத்து இரண்டாயிரத்து நானூறு (1/1,02,400) கூறுகளில் ஒரு பங்கைக் குறிக்கும்.
 
                   நவீனத்தின் உச்சத்தில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் இந்தத் தலைமுறையைச் சேர்ந்த நமக்கு கீழ்கணக்கு தெரியாது. நமக்கு முந்தைய தலைமுறையினர் இந்தக் கணக்கை அறிந்திருக்கலாம். எனினும், அந்தக் கணக்கிலுள்ள பல்வேறு வகைமைகளில் எந்த அளவு வரை கையாண்டிருக்கக் கூடும் என்று தெரியவில்லை.  ஆனால், ராஜராஜன் தலைமுறையோ மிக நுட்பமான இந்தக் கீழ்கணக்கை முழுமையாக அறிந்திருக்கிறது. நுட்பமான கீழ்கணக்கை முழுமையாகக் கையாண்டிருக்கிறது.
 
                   எப்படி கட்டப்பட்டிருக்கும் இப்படி ஓர் அற்புதம்?
 
                   இந்தத் தலைமுறையின் அறிவிலிருந்து அந்தத் தலைமுறையின் அறிவை அறுதியிட முனைவது அறிவீனமாகத் தோன்றுகிறது.
 
எப்படி கட்டப்பட்டிருக்கும் இப்படி ஓர் அற்புதம்?
 
இந்தக் கேள்விக்கான பதில் இப்போது புலப்படுவதுபோல இருக்கிறது.
 
Link to comment
Share on other sites

கோழிக்கும் பூனைக்கும் இடையில் ஒரு சிறிய உடன்பாடு  :)
 
https://www.facebook.com/photo.php?v=735653593143461
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி புன்னகை ஆரம்பமானது!

'மூளை விஞ்ஞானத்தின் மார்கோ போலோ’ என்று அழைக்கப்படும் ராமச்சந்திரன், எப்படி புன்னகை ஆரம்பமானது என்பது குறித்து எழுதியிருக்கிறார். மனிதக் குரங்கினங்களில் எல்லைப் பகுதி எது என்கிற போட்டி வந்துவிட்டது. ஒரு மனிதக் குரங்கினம் வாழும் பகுதிகளில் மற்றொரு மனிதக் குரங்கினம் தப்பித் தவறி நுழைய நேர்ந்தால், அதைத் தொலைவில் பார்த்த உடனேயே அந்தப் பகுதியைச் சார்ந்த விலங்கு தன்னுடைய கோரைப் பற்களைக் காட்டி 'கடித்துவிடுவேன்’ என்று பயமுறுத்தும். உடனே அந்த எதிராளியும் 'எனக்கும் கோரைப் பற்கள் இருக்கிறது. ஜாக்கிரதை’ என்று பதிலுக்குப் பல்லைக் காட்டும். அருகில் வந்த பிறகு தன் குழுவைச் சார்ந்தது என்று தெரிந்ததும், அந்தப் பல்லைக் காட்டுவது புன்னகையாக மருவியது. இந்தப் பண்பை பரிணாம வளர்ச்சியில் மனிதன் தக்க வைத்துக்கொண்டான். 'நீ ஆபத்து இல்லாதவன். நானும் பல்லைக் காட்டுகிறேன்’ என்பதில்தான் ஒரு தற்காப்புக்காக புன்னகை தொடங்கியது. இப்போதும் நாம் மேலதிகாரியைப் பார்த்தால் புன்னகைப்பது ஒரு பாதுகாப்புக்காகத்தான்.

ஜூனியர் விகடனில் திரு.இறையன்பு எழுதும் மனிதன் மாறி விட்டான்! பகுதியில் இருந்து..

Link to comment
Share on other sites

விடுதலைக் குரல் வழிந்தோடும் சிம்பொனி...

 

அண்மையில் பின்லாந்து சும்மா சுற்றிப் பார்க்கப் போன போது,கொஞ்சம் சீரியஸ் ஆக பார்க்க நினைத்த ஒரு இடம் " பின்லான்டியா " என்ற ஒரு சிம்பொனி இசை வடிவத்தை இசை அமைத்த ஜோன் சிபிலிஸ் என்ற பின்லாந்து நாட்டவரின் நினைவிடம்.  அந்த நாட்டின் தலை நகரம் ஹில்சின்கியில் உள்ள அவரின் வீட்டை. வார இறுதி விடுமுறை நாளில் போனதால் தற்சமயம் முயூசியம் ஆக்கப்பட்டுள்ள  அவரின் அந்த வீடு மூடி இருந்தது. " பின்லான்டியா " சிம்பொனி எவளவு அதிசயமோ, அவளவு அதிசயம் அதை இசை அமைத்த ஜோன் சிபிலிஸ் இன் வாழ்க்கை, அதைவிட அதிசயம் அதை இசை அமைக்க அவர் பட்ட கஷ்டம். அதன்  பின்னால் உள்ள அடக்குமுறை சர்வாதிகார  பழிவாங்கல்கள். பிராந்திய வல்லரசுகளின் அட்டகாசம்.

 

 

பொதுவாக நாடுகள் சுற்றிப் பார்க்கப் போனால் அந்த நாடுகளின் பெண்டுகளை வேடிக்கை பார்பது தான் எப்பவும் முக்கியமா இருக்கும். கொஞ்சம் அங்கே இங்கே  படித்த உலக விசியங்களை நேரம் இருந்தால் ஆர்வக்கோளாரில நோண்டிப் பார்ப்பது." பின்லான்டியா "  என்ற பெயரில் ஒரு மயக்கும் வோட்கா குடிவகை உலகப் பிரசித்தம் என்று என்னைப் போன்ற கவுரவமான பெருங் குடிமக்களுக்கு நல்லாத் தெரியும்,ஆனால் அந்த " பின்லான்டியா " என்ற பெயரில் வோட்காவை விட மயக்கும்  ஒரு  உலகப் புகழ்  சிம்பொனி இருக்கு எண்டு பலருக்கு தெரியாது. அதுக்கு முக்கிய காரணம் அதை உருவாக்கியவர் வாழ்ந்த பின்லாந்து வடக்கு ஐரோப்பாவின் தொங்கலில் ,பால்டிக் கடல் விளிம்பில் உள்ள பின்லாந்து அதிகம் சென்ற நுற்றாண்டில்  மத்திய ஐரோப்பா கவனிக்கப்பட்ட அளவு கலை இலக்கிய வெளிச்சம் அதன் மீது விழாமல் இருந்தது எண்டு நினைக்கிறன். வெறும் எட்டு நிமிடம் மட்டும் இசைக்கப்படும் " பின்லான்டியா " மூலம் அந்த வெளிச்சத்தை இன்று உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்கள் மீது தாராளமாகவே வீச வைத்தார் ஜோன் சிபிலிஸ்.

 

ஜோன் சிபில்ஸ் அவர் இசை அமைத்த " பின்லான்டியா " பற்றி கேள்விப்பட்டு,அதைக் கேட்டும் இருக்குறேன்,ஹெசின்கிக்கு நான் போன பகல் வேளை மழை வெளிய பெய்ய ஒரு பப்பில போய் இருந்து ஒரு பியரை வேண்டி உறிஞ்சிக் கொண்டு இருத்த நேரம் அந்த பப்பில சிபிலிஸ் இசை அமைத்த " லேக் சுவான் " என்ற இசை கோர்வையும்,வேறு சில கிளாசிகல் இசையும் மெதுவாக யாருக்கும் நோகாமல் ஒலிக்க விட்டு இருந்தார்கள்,அங்கே வேலை செய்த பெண்ணிடம் ஆங்கிலத்தில் சிபிலிஸ் பற்றியும் பின்லான்டியா பற்றியும் கேட்டேன்,அவள், கொஞ்சம் சொன்னாள், " சிபிலிஸ் இன் வீடு இங்கே அருகில தான் , கொஞ்சம் தள்ளி கொர்ர்ப்பி சதுக்கத்தின் முடிவில் வரும் நடைபாதையின் முடிவில் இருக்கு,ஒரு பத்து நிமிடம் நடந்தால் போய்ப் பார்க்கலாம் " எண்டு சொன்னாள், " பின்னிஷ் மக்கள் நேரம் காலம் இல்லாத தண்ணிச்  சாமிகள் எண்டுதான் கேள்விப்பட்டேன்,இப்படி உலகத்தரமான ஆட்கள் உன்னோட நாட்டில் இருந்து இருகுரார்களே,ஆச்சரியம் " என்றேன், அதுக்கு அவள் " அப்படி ஒரு வதந்தி பின்ட்லாண்டுக்கு வெளிய தான் உலாவுது " எண்டு முகத்தில அடிச்ச மாதிரி சொன்னாள் சிரித்துக்கொண்டே.

 

 

" பின்லான்டியா " ஒரு சுதந்திர விடுதலைக் குரல் வழிந்தோடும்  சிம்பொனி , பின்லாந்தை ரசியப் பேரரசு  மறைமுகமாக அடக்கி ஒடுக்கிக்கொண்டு இருந்த நேரம் இசை அமைக்கப்பட்ட இசை வடிவம்,அதால ரசியா அதை தடை செய்தது, பல பின்லாந்து கலாசார விளிமிய அடையாளங்கள் அங்கங்கே அள்ளித் தெளிக்கப்பட்ட " பின்லான்டியா " இசை அருவியை ஜோன் சிபிலிஸ் அதை முறிஞ்சு முறிஞ்சு எழுதியது மட்டும் தான் ,அதை மேடை ஏற்ற பின்லாந்தில் தடை இருந்தது. எப்படியோ அது வேறு பெயரில் பல ஐரோப்பிய நகரங்களுக்கு கசிய,அதன் பெறுமதி கொஞ்சம் கொஞ்சமா வியன்னா வரை  பிரபலம் பெற்று இருக்கு. அந்த இசையின் கோலங்கள் நாடுகள், எல்லைகள்,மொழிகள்  தாண்டி அமுத மழை பொழிந்து இருக்கு .

 

 

பின்லாண்டியாவை இசை அமைத்த ஜோன் சிபிலிஸ் டாக்டர் வேலை செய்த பெற்றோருக்கு கொஞ்சம் வசதியான  குடும்பத்தில் பிறந்தவர், சின்ன வயசிலேயே இசை ஆர்வம் இருந்ததால் தேவாலயத்தில் இருந்த ஒரு பியானோவில் வாசித்து இசைக் குறிப்புகளை எழுதி எழுதி வீட்டுக்கு வந்து அதை மனத்தால இன்னும் மெருகு ஏற்றிக்கொண்டு அடுத்தமுறை தேவாலயம் போய் இன்னும் வாசித்து, இப்படிதான் பலவருடம் அதை உருவாக்கி இருக்குறார். சொந்தமாக ஒரு பியானோ வேண்டுவரை அப்படிதான் தேவாலய பியானோவில் இசை அமைத்து அதை நோட் வடிவில் எழுதி இருக்குறார்.

 

 

முதல் முதல் ஒரு பழைய பியானோ வேண்டி அந்த பியானோ வேண்டியபின், பல இசைக் கருவிகள் போட்டு ஒகேச்டிரா ஸ்டைலில் வாசிக்கும் முறையில் எழுதிய பின்லாண்டியாவை, அதன் பின் ஜோன் சிபிலிஸ் ஒரு பியானோவில் வாசிக்கும் ஒரு முறையில் ,முழு நேரமா பின்லான்டியா சிம்போனியை உருவாக்கி உள்ளார் .ஜோன்  சிபிலிஸ் ஏழு சிம்பொனிகள் இசை அமைத்து உள்ளார்,அதில் " பின்லான்டியா " தான் பின்லாந்தின் உயிரை அதில பிடிச்சு வைச்சு இருக்கு எண்டு சொல்லுறார்கள். அவரின் தேசிய சேவையைக் கவுரவிக்க பின்லாந்தின் காசில் அவர் படம் வந்து இருக்கு, ஆனால் பின்லாந்து காசு ஈய்ரோ என்ற ஐரோப்பிய யூனியன் காசாக மாறிவிட்டது சில வருடங்களில்.

 

 

பின்லாந்தின் ஆர்டிக் இயற்கை, குளிர் காலநிலை, சாமே கலாசாரம் , எல்லாத்தையும் இசை ஆக்கிய பின்லான்டியா சில வருடம் பின்லாந்தின் தேசிய கீதம் போல இருந்து இருக்கு. அதை உருவாக்கியா ஜோன் சிபிலிஸ் அதை மத்திய ஐரோப்பாவின் மிகச்சிறந்த ஒபேரா இசை அரங்குகளில் அது இசைக்கபடுவதை பார்க்க விரும்பினார், பல வருடம் ரசியா அதை தடை செய்து வைத்திருந்தது,வேறு சில தனிப்பட்ட காரனம்களால் அவரால் அதை பார்க்கவே முடியாமல் போக, தனிமையில் யாரையுமே சந்திக்காமல் வாழ்ந்து ,வயதாகி, பின்லாந்தின் ஒரு சிறிய நகரத்தில் ஒரு விண்டர் இரவு நேரம் அமைதியாக இறந்து, அவரின் இசைப் பயணம் முடிந்து போக, ஜோன் சிபிலிஸ்ன் சரஸ்வதிக் கைகளில் உருவான அவரின் " பின்லான்டியா " உயிர் பெற்று உலகம் முழுவதும் அதிசயிக்க வைக்கத் தொடங்கியது.....

 

 

நாவுக் அரசன் ஒஸ்லோ 01.08.14

 

10513373_10204058885573642_5415695208894

 

நன்றி நாவுக்கரசன்.(Naavuk Arasan)

10468095_10203985572140852_4111176859850

 

முகநூலிலிருந்து

Link to comment
Share on other sites

பிலே ஒரு வுமனைசர்

 

10514575_10203832769240875_6199796071687

 

பிலே என்ற பெயர் ஹிபுரு மொழியில் அதிசயம் என்ற அர்த்தத்துக்கு கொஞ்சம் நெருக்கமான அர்த்தம் உள்ள இந்தப் பெயர்தான் இன்றுவரை புட் போல் என்ற கால்ப் பந்தாடத்தின் மிக முக்கிய அதிசயம். இந்த நுற்றாண்டின் சிறந்த புட்போலர் என்ற ஒரு நுற்றாண்டு பிரமிக்கும் இந்த எளிமையான மனிதர் பிரேசிலில் மிகவும் வறுமைப்பட்ட நகரமான சாவ் பாவ்லோ நகரில் மிகவும் வறுமைப்பட்ட ஒரு பெற்றோர்களுக்கு பிறந்து ,சின்ன வயசில் ,படிக்க வசதி இல்லாமல் தெருவோர தேத் தண்னிக்கடையில் சப்பிளையர் வேலை செய்து கால் பந்து வேண்ட காசில்லாமல் கடதாசிப் பேபரை சப்பாத்து சொக்ஸ் இக்குள் அடைந்து அதை புட் போல் போல விளையாடியவர். இன்று அவர் பெயர் இல்லாமல் ஒரு புட் போல் விளையாட்டே இல்லை.
 
நமது மாபெரும் பெருமை எப்பொழுதும் தோற்காமல் இருப்பதில் இல்லை; ஒவ்வொரு முறை வீழ்கிற பொழுதும் அயராது கம்பீரமாக எழுந்து நிற்பதில் தான் இருக்கிறது என்று தற்சமயம் எழுவத்தி மூன்று வயதிலும் உற்சாகமாக இருக்கும் பிலே பதினாலு வயதில் புட் போல் விளையாட ஆரம்பித்தார், பதினாறு வயதில் அவர் விளையாடிய முதல் வேல்ட் கப் மேட்ச்சிலையே சிறந்த இளம் அறிமுக வீரர் எண்டு சொல்லி விருது வேண்டியவர் . மூன்று முறை பிரேசில் வென்ற வேர்ல்ட் கப் இலும் அவர்தான் காரணம் பிரேசில் வெல்ல, வேர்ல்ட் கப் மட்சில் மட்டும் எழுவத்தி ஏழு கோல் அடித்து இருக்கிறார், இதற்கு மேல நிறைய லத்தின் அமரிக்கன் கப் மட்ச்கள்.அவர் விளையாடிய பிரேசிலின் முக்கிய கிளப் ஆன சாந்தோஸ் என்ற கிளப் க்கும் அதிக காலம் விளையாடிய வீரர் பிலே. 
 
பிலே பிரேசிலின் தேசிய சொத்து, அவர் அவளவு முக்கியம் பிரேசில் நாட்டு மக்களுக்கு . அதனால அவர் என்ன சொன்னாலும் அது கொஞ்சம் அதிகமாக கவனிப்பு பெற, சமூக ஏற்ற தாழ்வு அதிகம் உள்ள பிரேசிலில் அவர் சொன்ன அரசியல் சீர்திருத்த கருத்துக்கள் அரசியலில் குழப்பம் உண்டாக்க, இப்பொழுது கடைசியா பிரேசில் நாட்டு விளையாட்டு அமைச்சரா இருந்தது ஓய்வு பெற்று, நிறைய மனிதாபிமான உதவும் நிறுவனங்களில் கவுரவ அங்கத்தினரா இருக்குறார், இந்த வருடம் நடக்கும் பிரேசில் வேர்ல்ட் கப் கால்பந்தின் முக்கிய கோஷமான../////கால்ப் பந்து உலகத்தில் உள்ள எல்லாருக்கும்//// என்ற வாசகத்தையே பிலே தான் எழுதிக் கொடுத்ததா சொல்லுறார்கள்.
 
பிலே ஒரு வுமனைசர் , பெண்கள் அவர் காலுக்க நிண்டு பந்து போல சுழன்டார்கள். பிலே இன் தனிபட்ட வாழ்கை அவர் விளையாடிய புட் போலை விட சுவாரசியம், அவர் பல முறை சட்டப்படி திருமணம் செய்தார்,,சட்டத்துக்கு வெளியேயும் திருமணம் செய்தார், சட்டத்தை காலுக்க போட்டு மிதித்து கால் பந்து போல உதைந்தும் திருமணம் செய்யாமல் பிள்ளைகள் பிறந்த போது,அவரின் புகழின் வழி வந்த கோடிக்கணக்கான சொத்துக்கு பங்கு கேட்டு பல குழப்பம் அவரின் பிள்ளைகள் வடிவில் வந்து அவர் வாழ்க்கை வேர்ல்ட் கப் ரேஞ்சுக்கு பரபரப்பா இருந்தது சில வருடங்களின் முன்னர். வெளையாட்டு வீரன் இப்படி எல்லாம் விளையாடாமல் வேற யார் வெளையாடுறது. ஆனாலும் பிலே இன் தனிபட்ட வாழ்கை அவர் விளையாடிய புட் போலை விட அதிகமா அடி வேண்டி, அதிகமா உருண்டும் இருக்கு.
 
பிரேசிலில் போத்துகிஸ் மொழி பேசும் , ஆபிரிக்க கண்டத்தில் இருந்து கோப்பி பயிர்ச் செய்கைக்கு தென் அமரிக்க கண்டத்துக்கு வேட்டை ஆடி விலங்க்கு போட்டு கப்பல் ஏற்றி கொண்டு பிரேசிலுக்கு மிருகங்கள் போலக் கொண்டு வரப்பட்ட கறுப்பின அடிமைகளின் மூதாதையர் வழி வந்த " கறுப்பு வைரம் " எண்டு இன்று உலகம் புகழும் பிலே , ஆபிரிக்க கண்டத்தில் இருக்கும் போது விடுதலை அடைந்த உணர்வுடன் இருப்பதாக சென்ற வேர்ல்ட் கப் மேட்ச் இன் போது தென்னாபிரிக்க கேப் டவுன் நகரில் இருந்து சொல்லி இருந்தார் , இந்தப் படம் தென் ஆபிரிக்காவில நடந்த வேர்ல்ட் கப் மேட்ச் பார்க்க பிலே போனபோது, அந்த நாட்டு கறுப்பின மக்களுடன் ,வேர்ல்ட் கப் தொடக்க நிகழ்வில் சந்தோசமா ஆடிப்பாடிய போது எடுக்கப்பட்டது , 
 
பிலே முதல் முதல் அமரிக்கா போய்,வெள்ளை மாளிகையில் ரோனல்ட் ரீகனை சந்தித்த போது இப்படிதான் அப்போதைய அமரிக்க அதிபர் ரீகன் சொன்னாராம், " My name is Ronald Reagan, I’m the President of the United States of America. But you don’t need to introduce yourself, because everyone knows who Pelé is." பொல்லுக் கட்டையால் புட் போல் விளையாடும் அமரிகர்களே அவரை ஒரு விளையாட்டின் அடையாளமா பார்ப்பது இன்னுமொரு அதிசயம். பில் கிளிங்க்டன் அமரிக்க அதிபரா இருந்த போது பிலேயை அழைத்து கவுரவித்து,வெள்ளை மாளிகைக்கு வெளியே புல் வெளியில் அவருடன் புட் போல் விளயாடி இருக்குறார். உங்களுக்கு பின்னும், உங்களுக்கு முன்னும் இருக்கும் எவையும் பெரிய விஷயங்களே இல்லை. உங்களுக்கு உள்ளிருக்கும் ஆற்றல்தான் உலகின் மிகப்பெரிய அற்புதம் எண்டு செய்து காட்டியவர் பிலே. 
 
புட் போல் ஒன்னும் பெரிய மாயம் இல்லை,எண்டும் அதை சிம்பிளா விளையாடலாம் எண்டு " You have to think really quickly because everyone is close to each other. Learning the game probably helped me think on my feet better. It was through that I first got my chance to play That gave me a lot of confidence. I knew then not to be afraid of whatever might come." எண்டு சிம்பிளா சொல்லுறார் இந்த நுற்றாண்டின் மிக சிறந்த புட் போல் விளையாட்டு வீரர் பிலே .
 
இந்த உலகத்தில் புட் போல் என்ற விளையாட்டு இருக்கும் வரை பிலே என்ற பெயரும் இருக்கும்,சில மனிதர்கள் தான் இந்த உலகத்தில் எல்லாரும் செல்லாத பாதையில் பயணிக்கிறார்கள் , கடைசியில் யாரும் பயணிக்காத அந்த பாதையில் பயணித்து அழிக்க முடியாத காலடிச் சுவடுகளை விட்டுச்செல்லுகிறார்கள் .........அவர்களில் ஒருவர் பிலே.
 
நன்றி
நாவுக் அரசன் 
முகநூலிலிருந்து
Link to comment
Share on other sites

மொழி அவமானமல்ல அடையாளம்....

 

யாழ்பாணத்தில எங்களின் வீட்டுக்கு அருகில், ஒரு மாஸ்டர் இருந்தார்,அவர் யாழ்பாணத்தில இருந்த முக்கிய அறிவு மையமான ஒரு பிரபல கல்லூரியில் இங்கிலீஷ் படிபித்தார்! பள்ளிக்கூடம் போகும்போது மட்டும் தான் வெள்ளைக்காரன் போல "லோங்க்ஸ்" போடுக்கொண்டு போவார், மற்றப்படி வேட்டி கட்டிக்கொண்டு, காலில செருப்பும் இல்லாமல் நல்லூர் கோவிலுக்குப்போய் ,கோவிலுக்கு முன்னால இருக்கிற அஞ்சு வேம்புக்குக் கீழ யாரோடும் கதைக்காமல் தனிய, செல்லப்பா சுவாமிகளுக்கு முன்னால இருந்த ,யோகர் சுவாமிகள் போல மவுனமாக இருப்பார். 

 

விக்டோரியன் கால ஆங்கிலத்தில், வில்லியம் சேக்ஸ்பியர்,பெர்னாட்ஷா ,மில்டன், பெர்சி செல்லி, ஹென்றி வோர்ட்ஸ் வோர்த், டி எச் லாரன்ஸ் , எல்லாரையும் சாம்பாரு போலக் கரைத்துக் குடித்த அவர் ஒருநாளும் இங்கிலிஸ் பேப்பர் படித்ததையோ,அல்லது யாரோடும் இங்கிலிசில் கதைதத்யோ,இங்கிலிஸ் நியூஸ் ரேடியோவில கேட்டதையோ நான் காணவில்லை!நெறைய வேற்று மொழி தெரித்தால் நிறைய அறிவு விசாலம் ஆகும்,அதுக்காக கர்வப்பட வேண்டிய அவசியம் இல்லை எண்டும் படித்தவர்கள் அமைதியா அடக்கமா இருப்பார்கள், அரை அவியல்கள் தான் அட்டகாசம் போடுவார்கள் என்பதும்  அந்த ஆங்கில ஆசிரியரின் அறிமுகம் எனக்கு தந்த  அனுபவம் ...

 

யாழ்பாணத்தில பள்ளிக்கூடதில படிப்பிக்கிற மாஸ்டர்,டிச்சர் மாரோட கதைகிறது கொஞ்சம் வில்லங்கம்,அவர்கள் எப்பவும் " எப்படிப் படிக்கிறாய்?,எத்தினையாம் பிள்ளை இந்த முறை,கணக்குக்கு எத்தினை மார்க்ஸ்? " எண்டு வயித்தில புளியைக் கரைகிற கேள்வி கேட்பதால்,அவர்களை கண்டால் முதல் வேலை நைசா நலுவுறது !

 

இந்த மாஸ்டர் அப்படி ஒண்டுமே கேட்கமாட்டார் ! அதால அவர்கள் வீடுக்குள்ள துணிந்து உள்ளிட்டு ,அவர் ஹோலில் இருந்த அலுமாரியில் சேகரித்து வைத்திருந்த பெரிய,மொத்தமான கவர் போட்ட ஆங்கிலப் புத்தகங்களின் தலைப்பையும்,அதுகளை எழுதியவர்களின் பெயர்களையும் மட்டும் வாசிப்பேன்.அந்த ஹோலில, இருந்த பழைய மர மேசையில ,அந்த இங்கிலிஸ் மாஸ்டர் குறுந்தொகை என்ற சங்க இலக்கிய செய்யுள் புத்தகத்துக்கு எளிமையான விளக்கம் எழுதிக்கொண்டு இருந்த பேப்பர்கள் ஒரு கட்டாக இருக்க, அலுமாரிக்கு மேல ஒரு ராமகிருஷ்ண பரமஹம்சர் படம் இருந்தது, வீட்டிலயும் மாஸ்டர்,அந்த ஹோலில இருந்த கட்டிலில் ,கால் இரண்டையும் சப்பாணி கட்டிக்கொண்டு, ராமகிருஷ்ண பரமஹம்சர் போலவே கைகளைக் கட்டிக்கொண்டு மவுனமாக இருப்பார் .

 

ஒருமுறை நான் அந்தப் பெரிய புத்தகங்களை ஆராய்வதைப் பார்த்து" என்ன தேடுகின்றீர், உமக்கு விளங்குரமாதிரி ,எளிமைப்படுத்தின ஆங்கிலப் புத்தகமும் இதுக்குள்ள இருக்குது ,படிக்கப் போறீரா ?" என்றார் ,நான் " நீங்களே எனக்கு ஒரு சிறிய, எளிமைப்படுத்திய கதைப் புத்தகம் எடுத்து தாருங்கள் " என்றேன்,அவர் எடுத்துத்தந்த புத்தகம்தான் " The Mayor of Casterbridge".அந்த புத்தகத்தின் பெரிய பதிப்பையும் ,எடுத்து தந்தார்,அதில அவர் நிறைய குறிப்புகள் பென்சிலால எழுதி இருந்தார்," தோமஸ் ஹார்டி எழுதின இந்தக் கதை ஏன் நீர் படிக்கவேண்டும் எண்டு தெரியுமோ?" எண்டு கேட்டார்,நான் " தெரியாது,நீங்களே சொல்லுங்கள்" என்றேன்,அவர் "நாங்கள் செய்யுற தில்லுமுல்லுகள் ஒரு நாள் எங்களுக்குக் கழுத்தில கயிறு போடவைக்கும் " எண்டு சொல்லாமல் சொல்லுது இந்த நாவல்" என்று எனக்கு சொல்லுறமாதிரி சொன்னார். 

 

எனக்கு கொஞ்சம் பயம் வந்திடுது,நான் இப்ப போலதான்,அப்பவும் ரெம்ப நல்லவன் போல வெளிய தெரிந்தாலும்,அந்த நாட்களில் நிழலாக சில தில்லுமுல்லுகள் செய்துகொண்டு இருந்தேன்,அது எப்படி இவருக்கு தெரியும் எண்டு ஜோசிக்க அதைவிடப் பயம் வந்திடுது, என்றாலும் இப்படியான புத்தக கதைகளில் நிறைய , நான் அந்த நாட்களில் எதிர் கொன்ட ,இசகு பிசகு சூழல் நிளகளைக் சமாளிக்கும் ஐடியா எப்பவுமே இருக்கும் என்பதால் அதை கொண்டுவந்து வீடில "டிக்சனரி" உதவியோடு வாசித்தேன் !

 

அந்த மாஸ்டர் "இதைவிட நல்ல கதை உள்ள புத்தகம் வேற ஒண்டு இருக்குது, அது இந்த நாவலின் ஒருவித தொடர்ச்சிபோல இருக்கும் அந்த நாவல் ,முதலில் இதைப் படியும் ,அதைப் பிறகு தாரன் " என்றார்! " The Mayor of Casterbridge". கிடத்தட்ட ஒரு வருடமா இழுபட்டு இழுபட்டுதான் படித்து முடிக்க முடிந்தது, அதை வாசித்து முடித்து ,மாஸ்டர் சொன்ன அந்த அடுத்த புத்தகம் அவரிடம் வேண்டமுதல்,அவர் குடும்பத்தோடகனடாவிற்க்கு புலம் பெயர்ந்து போயிட்டார்! 

 

" மேயர் ஒப் கச்ற்றப்பிறிச் " என்ற அந்தக் கதை, 18 நுற்றாண்டில் விக்டோரியன் சமுக அமைப்பு இங்கிலாந்தில் இருந்த போது எழுதப்பட்ட  கதை . ஒரு விசித்திர குணம் உள்ள இளம் மனிதன்,முன்னேற பணம் தேவைப்பட ,தன்னோட அழகான மனைவியையும்,பெண் குழந்தையும், காஞ்ச மாடு கம்பில விழுந்த மாதிரி , வருடக் கணகில கடலில் அலைந்த ஒரு "செயிலர்" என்ற கப்பலோடிக்கு விற்று, வித்து வந்த பணத்தில், பல விதங்களில் முயற்சித்து, ஒரு விதமாக முன்னேறி,பணக்காரன் ஆகி, Casterbridge என்ற நகரத்துக்குகே Mayor என்கின்ற நகர பிதாவாக, பிரபுக்கள் வகுப்பில் சேர்க்கப்பட்டு , தன்னோட பழைய ஆரம்ப வாழ்கையை ஏறக்குறைய திட்டமிட்டு மறைத்த நிலையில், 20 சொச்சம் வருடங்களின் பின், கப்பலோடிக்கு விற்ற மனைவியும், வளர்ந்து குமாரியான அவரின் பெண் குழந்தையும், Casterbridge நகரத்துக்கு மீண்டும் வர, நகர பிதாவாக, கவுரவமாக தற்போது இருக்கும் அந்த மனிதனின் ,உண்மை முகம் வெளியவர ,கதை சூடு பிடிக்கிறது !

 

தோமஸ் ஹார்டியியின் ," மேலஞ்சொளி ஹசர் ஒப் ஜெர்மன் லேயின் "  என்ற சிறுகதை முதலே படித்து இருந்தேன்,அந்த ஒரு சிறுகதை இன்றுவரை மண்டையைக் குடையும் கதை, அதில வரும் குதிரை,வயதான அம்மா, தோட்டம் செய்ய வந்த ஒரு அப்பாவி நாடோடி, இரண்டாம் உலக யுத்தம் , கல்லறையில் வைத்த ஒரு ரோசாப்பூ , வேலிக்கு மேலால வெடித்த துப்பாக்கியின் முதல்க் குண்டு.......,எல்லாம் நல்லா நினைவு இருக்கு, ஒரு சிறுகதை எப்படி எழுத வேண்டும் என்று சொல்லும் கதை அது,அதன் முடிவு தலை சுற்ற வைத்தது , அதால தோமஸ் ஹார்டியின் இந்த நாவல் வடிவில் இருந்த " மேயர் ஒப் கச்ற்றப்பிறிச் " என்ற அந்தக் கதைய கட்டாயம் படித்தே ஆக வேண்டும் என்று , சுருக்கிய எளிமையான பதிப்பில் படித்தபோது, கதை ஆதாரமாக விளங்கினாலும்,தோமஸ் ஹார்டி என்ற அந்த எழுத்தாளரின் எழுத்து நடையை ரசிப்பதுக்கு அதை என்றோ ஒருநாள் முழுமையான நாவலாக வரிக்கு வரி வாழ்க்கை சொல்லும் புத்தகமாகப் படிக்கவேண்டும் எண்டு நினைத்துக்கொண்டு இருந்தேன்....

 

சில வருடம் முன் ஒஸ்லோவில் உள்ள டொச்மான்ச்க தலைமை லைபிரேரியில் அந்தப் புத்தகத்தைப் மறுபடியும் பார்த்தபோதும்,படிக்க ஏனோ இண்டரெஸ்ட் வரவில்லை. அதை விட சில வருடங்களின் முன் அந்த இங்கிலிஸ் மாஸ்டர் கனடாவில இறந்து விட்டதாகக் கேள்விப்பட்டேன்! அவர் சொன்ன அந்த இரண்டாவது புத்தகம் என்னவாக இருக்கும் எண்டு பலமுறை ஜோசிப்பது. இப்படிதான் " இந்த நாவலின் ஒருவித தொடர்ச்சிபோல இருக்கும் அந்த நாவல் ," என்று மாஸ்டரே சொன்னமாதிரி வாழ்க்கையே ஒருவித தொடர்ச்சிபோல இருக்குது சிலநேரம்!.......

 

 

நாவுக் அரசன் ,ஒஸ்லோ .

10552472_10204095065678122_1060625211187

Link to comment
Share on other sites

இன்றைய உலகத்தில் பெண்கள் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்வது கடினம் போல இருக்கு,

 

இன்றைய உலகத்தில் பெண்கள் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்வது கடினம் போல இருக்கு,

அதுக்கு காரணம் அவர்கள் புத்திசாலிகளா இருப்பது போலவும் இருக்கு.நான் வேலை செய்யும் ரேச்ற்றோறேண்டில் எப்பவும் கொஞ்சம் இடைவெளி கிடைக்கும் போது வெளியே படியில இருந்து கோப்பி குடித்துக்கொண்டு ரோட்டை விடுப்புப் பார்ப்பேன், அது பிடிகாததாலோ என்னனமோ தெரியலை என்னோடு முதலாளியின் மனைவி வந்து " படியில இருந்து கோப்பி குடிக்கவேண்டாம் " என்றாள் ,நான் " படியில இருந்து குடிக்காமல் உன்னோட மடியில இருந்து குடிக்க சொல்லுறியா " எண்டு கேட்டேன்,அவள் கிட்ட வந்து " இன்னொருதரம் இப்படி சொன்னி என்டால் கோழி பொரிக்கிற கொதி எண்ணயை முகத்தில ஊத்துவேன் " எண்டுறாள்.....

தனிய இருக்கும் இதய ராணிகளுக்கு எப்பவும் காலையில் மெயில் அனுப்பினா ,மரியாதையாகக் " காளை வணக்கம் " எண்டு தான் தொடக்குவேன்.....சூரிச்சில் தனிய இருக்கும் ஒரு இன்டர்நெட் இதயராணியின் சத்தத்தைக் காணலை எண்டு இரக்கப்பட்டு " காளை வணக்கம், சுகமா இருகுரின்களா " எண்டு மயில் அனுப்பினேன், " சுகமில்லாமல் இருக்கிறேன்,நீ வந்து என்ன வயித்தியம் செய்யப்போறியா " எண்டு கேட்டா, " ஐயோ ,நீங்க இன்னும் கலியாணமே கட்டவில்லை எண்டு எல்லோ கேள்விப்பட்டேன்,சுகமில்லாமல் இருகுரிங்க எண்டு குண்டைப் போடுறிங்களே " எண்டேன்,அதுக்கு அவா," டேய் ,வந்தன் எண்டால் வாயில போடுவேன்,எருமை மாடு " எண்டு சொல்லுறா.....

பிரெங் போர்டில இருக்கும் ஜெயதேவி அக்கா ஒரு கோழி ஒரு சின்ன வண்டிலில் முட்டைகளை அடுக்கி இழுத்துக்கொண்டு போற படம் போட்டு, " இதுக்கு வித்தியாசமா கொமன்ட் கொடுக்கிறவர்களுக்கு வித்தியாசமா பரிசு தருவேன் " எண்டு போட்டு இருந்தா,,வித்தியாசமா சிந்தித்து, " இந்த நேரம் பார்த்து சேவல் மிதிக்க வந்தா,கோழிக்கு என்ன நடக்கும்,முட்டைக்கு என்ன நடக்கும் அக்கோய் " எண்டு கொமென்ட் போட்டேன்,அந்த அக்கோய் " தம்பி அரசு நீர் பிரெங் போர்ட் வாரும் வித்தியாசமா நல்ல சாப்பாட்டுப் பரிசு தாறேன் " எண்டு சொன்னா, " அக்கோய் எனக்கு வித்தியாசமா நல்ல சாப்பாட்டு சாப்பிட விருப்பம் அக்கோய்,நீங்க மெசேச் போட்டு சொன்னால் கட்டாயம் வருவேன் " என்றேன், " பொறும் முதல் பொல்லுக்கட்டை எல்லாம் தேடி எடுத்து வைச்சுப் போட்டு மெசேச் போடுறேன் " எண்டுறா....

நல்லா கும்மி அடிச்சு கொண்டு இருந்த ஒரு நல்ல இதயம் " என்னோட ப்ரென்ட் சிப்பை தூக்கி எறிஞ்சு போட்டு போற உன்னோட இனி என்ன பிரண்ட்சிப் " எண்டு மெயில் அனுப்பி என்னை கேவலப்படிதிப்போட்டு போயிட்டா, அதுக்கு " ஐயோ...... உங்களைத் தூக்கி எறிய என்னால முடியாதுப்பா,,,நானே ஒரு பயித்தங்காய் போல இருக்குறேன் ,நீங்க குஸ்பு போல இருகுரிங்க எப்படி தூக்கி எறிய முடியும் சொல்லுங்க பார்ப்பம் " எண்டு உண்மையாகவே சொன்னேன்,,அவா சொன்ன பதிலை இங்கே எழுத முடியாது....

மலேசியவில இருக்கிற இன்னொரு இதயராணி " உன்னட்ட வைப்பர் இருக்கா " எண்டு கேட்டா, " ஐயோ என்னோட வீடில விஷப் பாம்ம்பு ஒண்டுமே வளர்ப்பது இல்லை " என்றேன், " அடே மூதேசி அது பிரி இன்டர்நெட் போன் டா, அதைவிடு வாட்ஸ் ஆப், தொங்கோ ஆவது இருக்கா அதைச் சொல்லு " என்றா, " என்னட்ட வட்டிலப்பம் ,தொதல் ஒண்டும் இல்லை அதுகள் எனக்கு சமைக்கவும் தெரியாது என்றேன், " அடே கட்டையில போறவனே அதுகளும் பிரி இன்டர்நெட் போன் டா செம்மறி " எண்டுறா.....

பூனைக்குக் கோபமா ஏதாவது சொன்னாலே சும்மா " மியாவ் மியாவ் போய் வேலையைப் பாரு " எண்டு அலட்சியமா சொல்லுது , நாய்க்கு திட்டினாலும் வாலை நன்றியோட வளைச்சு ஆட்டுது, அது ஏன்பா பெண்களுக்கு மட்டும் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னா பொசுக் எண்டு மூக்கில கோபம் முட்டிக் கொண்டு வருகுது..... என்ன சீவியமடா இது......

 

நாவுக் அரசன் ,ஒஸ்லோ .

Link to comment
Share on other sites

இந்த ஜாதியில் மணமகன்/மகள் தேவையென விளம்பரம் தரும் எவர்க்கும் மருத்துவமனை சூழலில் அதே ஜாதியில் இரத்தம்தேவை என விளம்பரம் தர தைரியமிருப்பதில்லை.

 

#Karna

Link to comment
Share on other sites

10574244_10154482599495173_7339396248126

அமெரிக்க மக்களில் கணிசமானவர்கள் யூதர்களை வெறுப்பவர்களாக உள்ளனர். ஆனாலும் அவர்களது அரசாங்கம் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருந்து வருகிறது. இதற்கு மத்திய கிழக்கு அரசியல் காரணிகளை யூதர்கள் திறம்பட பயன்படுத்துகிறார்கள்.

Link to comment
Share on other sites

ஈழத்து மெல்லிசை மன்னர் ,ஈழத்து கலைஞர் திரு எம்.பி.பரமேஸ் ஐயா

 

யாழ்பானத்தில் ,உள்ள வடமராட்சி கிழக்கில் ஒரு சிறிய அதிகம் அறியப்படாத இடத்தில பிறந்து, பொப்பிசையை ஈழத்தில் உருவாக்கிய ”ஈழத்து மெல்லிசை மன்னர் ",ஈழத்து கலைஞர் திரு எம்.பி.பரமேஸ் ஐயா அவர்களை இன்றைய இசை உலகம் மறந்த பொழுதும், அவரின் சாதனைகளை தேடி கண்டடைந்து அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை, சென்ற வருடம் தமிழ் நாடிடில் ”கலகம்” என்ற அமைப்பு கொடுத்து எங்களை எல்லாம் பெருமிதமும் கொள்ள்ளவைதிருகிரார்கள்! எம்.பி.பரமேஸ் ஐயா சார்பாக பாவலேறு பெருஞ்சித்திரனாரின் பேத்தியும்,வழக்குறைஞர் அங்கயற்கண்ணி அவர்கள் அதைப் பெற்று இருக்கிறார்கள் என்ற ஒரு பதிவில் படிக்க முடிந்தது !

எம்.பி.பரமேஸ் ஐயா அவர்கள் 1969 ம் ஆண்டு இலங்கையின் முதல் இசை தட்டில் வெளிவந்த " உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது, எனக்கு தெரியுமா நீ என்னை அழைப்பத" என்ற பாடலி இசை அமைத்து,எழுதிப் பாடி இசை தட்டு வடிவில் உருவாக்கி இருக்கிறார் ! அந்தப் பாடல் அப்போது அவர் காதலித்த அவரின் மனைவி சிவமாலினிக்காக எழுதியதாகவும் தகவல்கள் உள்ளது , அந்தப் படலை அந்த காலங்களில் காதலித்துக்கொண்டு இருந்த பலர் ஒரு " சிக்னல் " போல பயன்படுத்தி தங்களின் காதலில் வெற்றிபெற்றார்கள் எண்டும் சொல்லுறார்கள் !

அவரின் சகோதரர் எம்.பி கோனேஸ் உடன் சேர்ந்து அவர்கள் உருவாக்கிய " பரமேஸ்-கோனேஸ் " இசைக்குழுவை திருகோணமலையில் பலகாலம் நடத்தியுள்ளார்கள் ! மெல்லிசை என்பதை கிடத்தட்ட 40 இக்கு மேற்பட்ட இசைக்கருவிகளை ஒரு நேரத்தில "counter point "போல எல்லாம் இசைகோர்புக்கள் இணைத்து பாடல்கள் உருவாக்கி இருக்குறார்கள் ! சிங்கள இசை தட்டு வெளியிட்டவர்களையே திரும்பிப்பார்க்க வைத்து ,தமிழில் இசைத்தட்டு வெளியிடும் அளவுக்கு திறமையா இசை அமைத்திருகிறார்கள் !

"இலங்கை வானொலி " அவர்களின் இசை வாழ்விற்கு அடித்தளம் இட்டு இருக்கிறது , பிட் காலத்தில அவர்களின் பாடல்கள் ஒவ்வொரு நாளும் "இலங்கை வானொலி " இல் ஒலிபரப்பி இருக்குறார்கள் ! தமிழர்களும் ,சிங்களவர்களும் ஒன்றாக சந்தோசமா இருந்த அந்த காலத்தில் அவர் இசை அமைத்து பாடிய "மனமாளிகை ரோஜா " என்ற பாடலை , பிட்காலதில பிரபலமான விகடர் ரதினாயக்கா சிங்களத்தில் பாடி இருக்கிறார் ,"அளிக்கும் ஓசை கேட்கலையா " என்ற பாடலை மெல்றோய் தர்மரட்ன சிங்களத்தில் பாடி இருக்கிறார் , அவர்களின் சிங்களத்தில் வெளிவந்த பாடல்கள் இலங்கை முழுவதும் கலக்கி இருக்கிறது! எதோ காரணத்தால் அதன் பின் சகோதர்கள் இருவரும் பிரிந்துவிடார்கள் !

" இலங்கை வானொலி " தென் இந்திய இசை ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்கவைத்த காலத்தில், அவர்கள் இசை அமைத்த பாடல்கள் ஒரு வித்தியாசமாக இருந்தது உண்மை , ஆனால் இன்றைய காலத்தில் பலர் அவரின் சாதனைகளை அறியாமல் இருப்பது, எம்.பி.பரமேஸ் ஐயாவின் வாழ்நாள் சாதனையை யாரும் கண்டுகொள்ளமால் இருப்பது வேதனையாக இருந்தது, தற்சமயம் யேர்மனியில் வசிக்கும் அவருக்கு இந்த விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி!http://youtu.be/PIKDwR9rGYU?list=UUR7eTyBE5UQ89yuGRWANhlA

 

நாவுக் அரசன் ,ஒஸ்லோ .

Link to comment
Share on other sites

சவாரித்தம்பர், சின்னக்குட்டி, மைனர் மச்சான், மெயில் வாகனத்தார், மிஸ்டர் அண்டு மிஸஸ் டாமோடிரன்

 

யாழ்பாணத்தில் இருந்து " சிரித்திரன்"  எண்டு  ஒரு நகைசுவை பத்திரிகை வந்தது பலருக்கு தெரியும் ,ஈழத்து நகைச்சுவை இலக்கியத் துறையில், அதை இலங்கை தீவில் பல அறிவு சார்ந்த விசியன்களில் முன்னோடிகள் அதிகம் வசித்த வடமராசியின்   , கரவெட்டியில்  பிறந்த ,சிரித்திரன் சுந்தர் என அழைக்கப்படும் சிவஞானசுந்தரம் ,  " செய்தொழில் தெய்வம் சிரிப்பே சீவியம்' என்ற  சிந்தனைக் கொள்கையுடன் பல வருடம் வெளியிட்டார் .

 

!அறுபதுக்களில் ஆரம்பிக்கப்பட்ட "சிரித்திரன்" சஞ்சிகை திரு சி சிவஞானசுந்தரம் அவர்களின் மறைவு வரை சுமார் 32 வருடகாலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்திருக்கு என்கிறார்கள் , சிவஞானசுந்தரம் அவர்களின் தந்தை இலங்கையின் முதலாவது தபால் மாஅதிபர் திரு வி. கே. சிற்றம்பலம் என்கிறார்கள் . சுந்தரைக்  அவரின் தனத்தை இந்தியாவுக்கு ஆர்கிடெக்சர் என்ற  கட்டிடக்கலை படிக்க அனுப்ப , அவர் இந்தியாவின் ஹிந்து பத்திரிகையில் கார்டுநிஸ்ட் ஆக இருந் R K  லக்மனின் , கார்டுனில் மயங்கி , இந்தியாவில்  கார்ட்டூன் கலையைக் கற்றுக் கொண்டுஇலங்கை  வந்தாராம் . 

 

அவர் முதலில் கொழும்பில் இருந்து வெளிவந்த   தினகரனில் கார்டுநிஸ்ட் ஆக இருந்து , அதில்  வெளிவந்துகொண்டிருந்த சவாரித்தம்பர் கார்ட்டூன் மிகப் புகழ் பெற்றதால் , தானாகவே ஒரு பத்திரிகை ஆரம்பித்து இருக்கிறார்  . அவரது கார்ட்டூன் நாயகர்களனைவரும் சவாரித்தம்பர்,  சின்னக்குட்டி, மைனர் மச்சான், மெயில் வாகனத்தா ர் , எல்லாரும் அவர் பிறந்து வளர்ந்த சொந்தக்கிராமமான கரவெட்டியில் அவர் அன்றாடம் சந்திக்கும் உண்மைப்பாத்திரங்கள் என்று  சிரித்திரனில் எழுதியிருக்கிறார் ! 

 

அறுபதுக்களில் முதன் முதலில் கொழும்பில்  கொட்டாஞ்சேனையில் உ பல கஷ்டங்களுக்கு மத்தியில்  சிரித்திரனை வெளியிட ஆரம்பித்தார். அச்சடித்த சஞ்சிகைகளை தனியே வீதி வீதியாகக் கொண்டு சென்று கடைகள் தோறும் போடுவாராம்.  தமிழ்நாட்டு பத்திரிகைகள்  குமுதம், கல்கண்டு, விகடன் எல்லாம் வெளிவந்த காலத்தில் சிரித்திரன் கொஞ்சம் அவைகளுக்கு போட்டியாகவே உள்ளுரில்  வெளிவந்து  இருக்குது .  பல  வருடங்கள் கொழும்பில் இயங்கிய பின்பு யாழ் பிறவுண் வீதியில் இருந்து வெளியிட்டப்பட்டு " சிரித்திரன் " அதன் பின யாழ்ப்பான அடையாளத்துடன் வெளிவந்திருக்கு !

 

சிரித்திரனை அதன் பொருளாதார சிக்கல் நேரங்களில் கைகொடுத்தது  மில்க்வைற் சவுக்கரக் கொம்பனி  நிறுவனம்  நடத்திய  க கனகராசா அவர்கள் ! மில்க்வைற் கனகராசா   : "சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்கள் ஒரு நிறைமனிதன். தனது அறிவையோ ஆற்றலையோ அவர் குறிப்பிட்ட வட்டத்திற்குள் குறுக்கி விடவில்லை. அவர் நல்லவற்றைச் சிந்தித்தார். நல்லவற்றைச் செய்தார். நகைச்சுவை மூலம் நல்லவற்றை மக்கள் மனத்தில் ஆழப்பதிய வைத்தார். எமது பணிகளில் எம்முடன் இணைந்து வாழவைக்கும் வன்னிப் பிரதேசத்தில் பனம் விதைகளை விதைப்பதில் அவர் காட்டிய ஆர்வமும் கொண்ட பெருமிதமும் எமது நெஞ்சில் என்றுமே பசுமையாக நிறைந்து நிற்கும். இன்று நிமிர்ந்து நிற்கும் மரங்கள் சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்களையும் மறக்க மாட்டா."  என்று சொல்லியிருகுறார் ! 

 

சிரித்திரனில் ஆரம்பகால   எழுத்தாளர்கள்  தர்மு (சுவைத்திரள் ஆசிரியர்),அகஸ்தியர், டானியல் அன்ரனி, சுதாராஜ், அமிர்தகழியான், நவாலியூர் சச்சிதானந்தன், தெளிவத்தை ஜோசப்  , யாழ் நங்கை,  காசி ஆனந்தனின் இலட்சியத் தாகம் மிகுந்த மாத்திரைக் கதைகள் அதில்வர குடாரப்பூர் சிவா "நடுநிசி" என்ற மர்மக்கதையை  எழுதியிருகுறார் . மாஸ்டர் சிவலிங்கத்தின் விண்ணுலகத்திலே சிறுவர் கதை, அ. ந. கந்தசாமியின் கதைகள் .  மலையகப் படைப்பாளி ராகுலனின் "ஒய்யப்பங் கங்காணி" . செங்கை ஆழியானின்"  ஆச்சி பயணம் போகிறாள்" , " கொத்தியின் காதல்"  ,, எல்லாம் அதில வந்திருக்கு ,இலங்கையில் புதுக்கவிதையை அறிமுகப் படுத்தி  ஜனரஞ்சகப் படுத்திய பெருமை நிச்சயம் சிரித்திரனுக்குண்டு.

 

 ஈழத்து நகைச்சுவை இலக்கியத் துறையில் ,கவிதைகளுடன் அதற்கேற்ப சிறிய படங்களும் வரைந்து திக்குவல்லை கமால், ராதேயன், பூநகரி மரியதாஸ் (தனுஜா) இப்படிப் பலர் சிரித்திரனில் புதுக்கவிதைகள் எழுதியிருகுறார்கலாம்! சிரித்திரன் சுந்தரின் மனைவி தான் அவரோட முதல் வாசகி, ரசிகை , ஓர் ஆழமான ரசிகை. அவருடைய ஒத்துழைப்பும் பின்னணியும் சிரித்திரன் வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகித்தது என்று சொல்லிருகுறார்  திக்குவல்லை கமால். அதிகம் பேசாது நிறையச் சாதித்தவர் சுந்தர். தனது சித்திரங்களை கார்ட்டூன் என்று அழைப்பதில்லை, அவற்றைக் கருத்தூண்கள் என்றே அழைத்தார். அவர் நல்லவற்றைச் செய்து அவற்றை நகைச்சுவை மூலம் மக்கள் மனதில் ஆழப்பதிய வைத்தார். 

 

சிரித்திரனில் வந்த பகிடிகள் எப்பவுமே யாழ்ப்பான மக்களின் பழக்க வழக்கங்களை கிண்டல் செய்வதாக இருந்தது ,உதாரணத்துக்கு .-  ஒரு கிடாய்  ஆட்டினைத் தீபாவளிக்காக வெட்டுவதற்குக் காவல் நிற்கிறார்கள். ஆடு சொல்கிறது: "எல்லோரும் இன்புற்று இருப்பதேயன்றி வேறொன்று அறியேன் பராபரமே" என்கின்றது. இன்னொரு பகிடியில்  பாம்புக்குட்டியொன்று தன் அம்மாவிடம் கேட்கிறது: "அம்மா! அப்பா எப்படி செத்துப் போனார்?", அதற்கு அம்மா பாம்பு இப்படிப் பதில் கூறுகிறது: "கள்ள பெட்டிஷன் எழுதுகிற ஒருவரைக் கொத்தி, உடம்பில் விஷம் ஏறி உன் அப்பா செத்துப் போனார்."ஒரு மத்தியதர வர்க்கத்தின் யாழ்ப்பான  படிச்சாதான் வாழ்கை மெண்டாலிடியை ,இப்படி ", ஒருத்தி மயக்க நிலையில் கிடக்கின்றாள். எத்தனையோ வைத்தியர்கள் வந்து பார்த்தும் மயக்கம் தெளிந்த பாடில்லை. வேறொருத்தி வந்து காதில் ஏதோ சொல்கிறாள். உடனே மயக்கம் தெளிந்து விடுகின்றது. "அவள் காதில் என்ன சொன்னாள்? "உனது புருஷன் அக்கவுண்டன்ற் சோதனை பாஸ்".2 எண்டு கிண்டல் அடித்து இருக்குறார் !

 

சுந்தரின் மகுடியார் கேள்வி -பதிலில் எப்பவுமே நிறைய சிந்திக்கும் விசியம் இருக்கும் , அந்த கேள்விகளை சுந்தரே எழுதி பதிலையும் அவரே எழுதுவார் எண்டு அந்த நாடகளில் ஒரு செய்தி இருந்தது, எப்படியோ அவரின் ஒரு கேள்வியும் பதிலும் இப்பவும் எனக்கு நினைவு இருக்கு ! மகுடியாரிடம் ஒருவர் கேட்பார் " மனிதனின் அறிவு எதுக்குப் பயன்படுகுது எண்டு ? " அதுக்கு மகுடியார் சொல்லுவார் " மாட்டுகுக் குறி சுடப் பயன்படுகுது " எண்டு !

 

 சிரித்திரன் சுந்தர் உருவாகிய " மெயில்வாகனத்தார்"  வடமராட்சிப் பேச்சு வழக்கில் பல  விசியங்கள்  சொல்லுவார் ! அதில ஒன்று  "தாய் மூன்று மிளரும், தண்ணீருமாய் ஊரில் கந்தசஷ்டி பிடிக்க மகன் 304லும் தண்ணியுமாய் கொழும்பில் இருக்க".  எண்டு எழுதி இருப்பார் ,,,ஈழத்து நகைச்சுவை இலக்கியத் துறையில்  சிறிமாவோ அம்மையார் காலத்தில் சீனிக்கு ரேஷன் இருந்த சமயத்தில் சுந்தர் வரைந்த கார்ட்டூன் ஒன்று. எறும்பு அணியொன்றுக்குப் பின்னால் சென்றுகொண்டிருந்த மைனர் மச்சான் சொல்கிறான், "எறும்புகளுக்குத்தான் சீனி இருக்குமிடம் தெரியும்." எண்டு ஒரு காமடி அதில் வந்தது !

 

 

"மிஸ்டர் அண்டு மிஸஸ் டாமோடிரன் , சிரித்திரன் சுந்தர் உருவாகியா யாழ்பாணத்தில் ஆங்கில மோகத்தில் இருந்த "நாகரீகக் கோமாளிகளின் " அனாவசிய பந்தாவை கிண்டல் அடிக்கும் பாத்திரம் , அவர்கள தங்களுக்கு இடையில் " டார்லிங் " எண்டு தான் ஒருவரை ஒருவர் அழைப்பார்கள் , ஒரு முறை  மிஸஸ் டாமோடிரன் " டார்லிங்  பணம்கிளங்கு   ஏன் டார்லிங் சாப்பிட தும்பூ தும்பா வருகுது  எண்டு கேட்பா ..அதுக்கு   மிஸ்டர்  டாமோடிரன் " பணம்கிளங்கு ......" எண்டு சொல்லுவார் !சிரித்திரன் சுந்தர்  ஏன் தன்னுடைய பத்திரிகைக்கு  "சிரித்திரன்" எண்டு பெயர் வைத்த காரணம் ஒருமுறை எழுதி இருந்தார் ! எல்லாரும் சிரித்து இருப்பார்கள் ,, நான் மட்டும் சிரித்து இரேன், எண்டு அர்த்தம் சொன்னார் சுந்தர் ஒரு கட்டுரையில் ! இந்த தகவல்கள்   இரண்டும் நேற்று   எழுத நினைத்தேன்,,நேற்று வேலைக்கு போற அவசரத்தில் எழுதவில்லை ,, இன்று இங்கே இணைத்துள்ளேன் !

 

ஒரு நாட்டின் அறிவு வீச்சு , அந்த நாட்டில் இருந்து வெளிவரும் நகைசுவைப் பத்திரிகைகளின் எண்ணிக்கையில் தங்கி உள்ளது என்கிறார்கள் அறிவாளிகள் !  ஈழத்து நகைச்சுவை இலக்கியத் துறையில் சிரித்திரன் ஒரு கலாசார அடையாமா இருந்தது ,  அது மறைந்த பின் ,சுந்தருக்குப் பிறகு யாருமே அப்படி ஒரு பத்திரிகை கொண்டுவரவில்லை எண்டு நினைகேறேன் ! ஒரு இழப்புதான் !

1514576_10202453937130934_1942713594_n.j

 

 


நாவுக் அரசன் ,ஒஸ்லோ .

Link to comment
Share on other sites

a24c2339cef766ba3a604f91cc58dd3d

Link to comment
Share on other sites

பருத்தித்துறை கோட்டு வாசல் அம்மன் ஆலயதின் . கொட்டடி மக்களின் தெற்ப உற்சவவும் இந்திர விழாவும்  

பருத்தித்துறை கொட்டடி கடல்கரையில் ..... 

மயில் ஆட்டம், குதிரை ஆட்டம், பெம்மை ஆட்டம் , ..

.20/ 07 / 2014 (.இரவு)

 
 
10423977_676097819134659_778909407169718
 
10557169_676097832467991_560669944672897
 
10483903_676097835801324_842336936748758
 
www.facebook.com/myjaffna
Link to comment
Share on other sites

நட்பு வட்டம்

எதிர் வீட்டில் வசிப்பவர் யாரென்று வருடங்களில் இன்னமும் தெரியாது

நண்பர்களாகச் சாப்பிடப் போன இடத்தில் அவரவர் தேநீருக்கு அவரவரே காசு தருகிறோம்

 

அப்பாவுக்கு ஆனதைப்போல ரயிலில் சந்தித்த நண்பரென்று

யாரும் திருமண அழைப்பிதழோடு வீட்டுக்கு வந்தது கிடையாது

நித்தம் பார்க்கிற மளிகைக்காரனிடம் ரெண்டு ரூபாய் சில்லறை மீதத்தை

நான்கு புளிப்பு மிட்டாய்களோடு முடித்துக்கொள்கிறோம் கவனமாக...

 

Facebook ல் மட்டும் என்னவோ Hiew hui tang உட்பட நான்கு நிலுவைகளையும் சேர்த்து

இருநூற்றி எழுபது நண்பர்கள்!

- ப.ராமச்சந்திரன்

 

Link to comment
Share on other sites

இன்னுமொரு கதை பிறந்தது...

 

சின்ன வயசில எங்கட வீடுக்கு கிட்ட கவிஞ்சர் கந்தப்பு எண்டு ஒரு கவிஞ்சர் இருந்தார், அவர் ஒரு தமிழ்ப் பண்டிதர், எப்பவும் எட்டு முழ வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு, மேல ஒரு பவுன் பொத்தான் வைத்து தைச்ச நசினல் போட்டுக்கொண்டு,கழுத்தைச் சுற்றி உத்தரியம் போல ஒரு பச்சைச் நிற குஞ்சரம் தொங்கும் சால்வை போட்டுக்கொண்டு,நெற்றியில் சடையப்ப வள்ளல் போல சந்தனப் பொட்டு, அதன் நடுவில் சின்ன குங்குமப் பொட்டு வைச்சுக்கொண்டு அவர் பார்க்கிறதுக்கு காளமேகப்புலவர் போல தான் இருப்பார். அவரை யாரவது கவிஞ்சர் எண்டு சொன்னால்க் கடுப்பாகி " நீவீர் அறியீர் என் புலமை,யான் ஒரு தமிழ்ப் பண்டிதர், பண்டிதர் பரீட்சை ஒரே தரத்தில்ச் சித்தி எய்தியவன்,அய்யன் பண்டிதமணி சி .கணபதிப்பிள்ளையின் மதிப்புக்கு உரிய மாணவன் " எண்டு சொல்லுவார்.

 

கவிஞ்சருக்கும் பண்டிதருக்கும் வித்தியாசம் தெரியாமல் தான் ஊருக்குள்ள அதிகம் பேர் இருந்ததால், அவர் ஒரு தமிழ் அறிஞ்சர் எண்டு மட்டும் எல்லாருக்கும் தெரியும்.நான் இனி சொல்லப் போறது அவர் எழுதிய " இல்லற வாழ்க்கையை இனிமை ஆக்குவது எப்படி " என்ற கொஞ்சம், அவர் புலமை சார்ந்த துறையில் இருந்து இறங்கி வந்து எழுதிய  வில்லங்கமான புத்தகம் பற்றியும்,கடைசீல அந்தப் புத்தகம் அவர் சொந்த இல்லற வாழ்க்கைக்கு ஆப்பு வைத்த சம்பவங்கள் உள்ள கதை.

 

அவர் எழுதிய அந்த புத்தகம்,காம சூத்திரா, கொக்கேகம், திருக்குறளின் காமத்துப்பாலின் அடிபடையில்,கஜுரோகோ கருங்கல் சிற்பங்களின் துணையுடன் செய்யுள்களுக்கு விளக்கமும்,கொஞ்சம் செயல் விளக்கமும் ,அதிகமா இல்லற வாழ்க்கைத்துணையின் சிறப்பும்,பெண்ணின் பெருமையும் " பெண்கள் நிமிர்ந்து நடந்தால் யாரையோ பார்க்கிறாள்! குனிந்து நடந்தால் எதையோ நினைக்கிறாள்! சிரித்து பேசினால் அவனோடு "எதோ" அவளுக்கு! சிரிக்காமல் பேசினால் துக்கை (விதவைக்கு சமானம்) " என்று பெண்களின் அங்க இலட்சணம்கள் அதில இருந்தாலும்,அந்த புத்தகத்தைக் கவிஞ்சர் கந்தப்பு தானா எழுத வேண்டும் என்றுதான் அது வெளிவந்த நேரம் எல்லாரும் கதைத்தார்கள்,குறிப்பாகப் பெண்கள் கதைத்தார்கள்,ஆனாலும் அதை ஒரு தமிழ் அறிஞ்சர் எழுதியதால் கட்டாயம் அதில விசயம் இருக்கும் எண்டு தான் சொன்னார்கள்,அதையே நான் எழுதி இருந்தால்,கட்டாயம் " இந்த விடுகாலி எழுதியதால்  அதில விஷம் தான் இருக்கு " எண்டு சொல்லியிருப்பார்கள்.எப்படியோ அந்த புத்தகத்துக்கு இருட்டினாப் பிறகு பல வீடுகளில் வெளிச்சம் கிடைத்தது என்பது உண்மை. 

 

அதுக்கு முதல், காமசூத்திராவின் எளிமையான விளக்கம் போல,அதுக்கு வாத்தியாயனரின் சித்தப்பு  போல இருந்த பண்டிதர் கந்தப்பு  " இல்லற வாழ்க்கையை இனிமை ஆக்குவது எப்படி " என்று  எழுதிய புத்தகம் பற்றி அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இங்கே இல்லாததால், முதலில் கவிஞ்சர் கந்தப்புவின் பெர்சனாலிட்டி ,அவரின் " காதலர்ப் பிரிந்தோர் புலம்ப பெயல் கனைந்துன் கூதிர் நின்றன்றால் " என்ற நெடுநல்வாடைத் தமிழ் அறிவின் வீச்சு, அவர் கழுத்துக்கு ,தனிப் பாடல்த் திரட்டாகி " கரையோட்ட மாக மரக்கலம் போட்டுனைக் காணவந்தாற் திரை போட்டிருந்தனை யேலேல சிங்க சிகாமணியே.." என்று அந்த சிங்கத்தின் பொஞ்சாதிக்கு, எங்கள் ஊரில இருந்த ஒரே ஒரு " பிரஸ் " என்ற அச்சுக்கூடம் வைத்து இருந்த பரமானந்தம் வலை வீசியது  பற்றி கொஞ்சம் சொன்னால்தான் உங்களுக்கு கதை விளங்கும்.

 

கவிஞ்சர் கந்தப்பு மரபுக் கவிதை தான் எழுதுவார்,அடி ,தளை,சீர் தட்டாமல்,வெண்பா எல்லாம் " வா வே தே கு ஆயிடைத் தமிழில் " அட்டகாசமாக எழுதுவார், யாரவது செத்துப்போனால் அவர்களின் முப்பத்தி ஓராம் நாள் திதிக்கு வெளியிடும் கல்வெட்டை அறுசீர் நெடிலடி வெண்பாவில் ,இறந்து போன அந்தக் குடும்ப தலைவன்,அல்லது குடும்பத் தலைவி பற்றி, அந்த குடும்பம், அதன் நல்விழுமியங்கள் எல்லாம் வைச்சு வாட்டு வாட்டு என்று புகழ்ந்து எழுதுவார். இறந்து போன மனிதர்கள் பற்றியதால் யாரும் அதன் உண்மைத்தன்மை பற்றி அலட்டிக்கொள்ளமாட்டார்கள். சிறாப்பர் குமாரசாமி ஐயா செத்து அவரின் கல்வெட்டில் அவரின் நாலு பெண் பிள்ளைகளைக் கட்டிய, ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல எண்டு குடியும் குடித்தனமுமா இருந்த நாலு தன்னிச்சாமி மருமகன்களையும் ,ஏதோ தாயுமான சுவாமி ரேஞ்சுக்கு புகழ்ந்து எழுதி இருந்தார்,எப்பவும் போல யாரும் அலட்டிக்கொள்ளவில்லை..

 

மலையகத்தைப் பற்றி கவிஞ்சர் கந்தப்பு ஒரு மரபுக் கவிதைத் தொகுப்பே எழுதி இருந்தார்,அதுக்கு காரணம் அவர் அங்கே தான் தமிழ் ஆசிரியரா கனகாலம் படிப்பித்து இருக்கிறார், " குறிஞ்சி முகடுகள் " என்ற அந்த தொக்குப்பில் நிறய , " மலை மகளின் எண்ணம்,எழிலாக அலை பாயும் வண்ணம், நதியோடு நாணல்கள் இசை பாடும்  வடிவம் நிழல் தந்த மலையகம் "  எண்டு விரிவாக மத்திய மலை நாடு,அதன் கம்பளம் விரித்த தேயிலைத் தோட்டங்கள், வழிந்தோடும்  ஆறுகள், ஹட்டன் சமவெளி, போகம்பறைக் குன்றுகள், நானு ஓயா விளிம்பில் நுவரெலியாவின் குளிர், டயகம,  திஸ்பன இல் தேயிலை பிடுங்கும் மக்களின் அவலம், ,மொனறாகலையின் மயில்கள் என்று நிறைய எழுதி இருந்தார்,மத்திய மலை நாடு பற்றி யாழ்பான மக்களுக்கு விளங்காததால் அதிகம் அதையும் கவனிக்கவில்லை " கந்தப்பு அங்கேயும் யாரும் ஒரு தோட்டக் காட்டுப் பொம்பிளையை வைச்சு இருந்து இருப்பார்,அதால உருகி உருகி எழுதுறார் போல " எண்டு நினைத்து யாரும் அலட்டிக்கொள்ளவில்லை..

 

கந்தப்பு நிறைய தமிழ் மொழி தழைக்க வேண்டும் என்ற சமூக அக்கறை உள்ளவர்.தமிழ் நாட்டு முதல் அமைச்சர் எம்,யி ஆர் இறந்தபோது ,அவர் ஈழ விடுதலைக்கு ஆதரவா இருந்ததால்,யாழ்பாணத்தில அனுதாப அலை கொஞ்சம் "ஓவராக" அடித்தது !  இயக்க ஆதரவு மக்கள்  வாழை ,தோரணம் கட்ட,எங்கள் ஊர் மக்கள் திலகத்தின் அதிதீவிர ரசிகர்கள் , பெரிய தென்னை மரத்தையே புடுங்கிக்கொண்டு வந்து சந்தியில் நட்டுப்போட்டு,சந்தியில் இருந்த பாரதியார் சிலையை தூக்கிப் போட்டு அதில அவர்களின் "இதயக் கனி " சிலையை வைக்கப் போவதாகப் பயமுறுத்த நிலைமை கொஞ்சம் பொன்மனச் செம்மல்  படங்களில் வரும்  வாள்ச்  சண்டை, குஸ்தி , கைகலப்பு , சீலடி சிலம்படி  போல நடக்கப் போகுதுபோல இருந்தது. சவுகார் ஜானகி  வந்து காலில் விழுந்து,  கிளிசரின் வழிய அழுது ,குளறிக்  சண்டையை நிப்பாட்டுற மாதிரி  இல்லாமல் , அந்த நேரம் கவிஞ்சர் கந்தப்பு வெகுண்டு எழும்பி "சினிமா நடிகனுக்கு சிலை வைக்கும் ,சிற்றுனர்வுள்ள சிற் எறும்புகளை......" எண்டு கவிதை எழுதி,"மகா கவி பாரதி சிலையில் கை வைத்தால் ,சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து தடுப்பேன் " எண்டு பீதியக்கிளப்ப ,அந்தக் களேபரம் அதோட அமுங்கிவிட்டது!.

 

கவிஞ்சர் கந்தப்புவின் முக்கியமான இன்னுமொரு ஆளுமை மேடை நாடகம், சங்கர சாஸ்திரிகளின் தமிழ் நாடகங்கள், தமிழில் மொழி பெயர்த்த சில ஆங்கில நாடகம் எல்லாம் பழக்கிப் போடுவார். " ஏழு பிள்ளளை நல்லதங்காள் " நாடகம் அடிக்கடி எங்கள் ஊர் வாசிக்க சாலையில் போடுவார், அம்மா அந்த நாடகம் தொடக்கம் மட்டும் விரும்பி பார்பா, நல்லதங்காளின் அண்ணிக்காரி நல்ல தங்காளைக் கொடுமைப் படுத்த தொடங்க, அவா " இனிக் கந்தப்பு பழையபடி அவளைப் போட்டுப் படுத்தாத பாடு எல்லாம் படுத்தப் போறான் " எண்டு வாயில முனு முணுக்கத்  தொடங்குவா . அப்படி அந்த நாடகத்தின் உண்மைக் கதையைக் கொஞ்சம் உணர்ச்சி ஆக்கி போடுவார். ஒவ்வொரு பிள்ளையா நல்லதங்காள் கிணற்றுக்க எறிய தொடங்க அம்மா அந்த நாடகம் அதுக்கு மேல பார்க்க மாட்டா,எழும்பி வந்து வீடில ஹோல் மூலையில் இருந்து அழுவா, " கந்தப்பு நெஞ்சில இரக்கம் இல்லாமல் அந்த சின்ன பால் குடிப் பாலகங்களை ஒவ்வொன்றா கிணத்துக்கு எறியுறானே " எண்டு என்னவோ ஏழு பிள்ளளை நல்லதங்காள் நாடகம் கந்தப்பு எழுதின சொந்த கதை போலவும் ,கந்தப்பு அந்த பிள்ளைகளைக் கிணத்துக்க தள்ளி விழுத்துற மாதிரியும் அவரைப் பேசுவா. உங்களுக்கே தெரியும் நல்லதங்காள் ஒவ்வொரு சின்ன பால்குடிப் பாலகங்களை ஒவ்வொன்றா கிணத்துக்கு எறியிறதுக்கு அந்த நாடகத்தின் கதையில் ஒரு லொஜிக் இருக்கு எண்டு .அதை என்னோட  அம்மாவுக்கு சொன்னா அவாவுக்கு விளங்காது.

 

வாசிகசாலையில், கந்தப்பு இயக்கி,அவரே அதில மார்க் அந்தோனி வேஷம் போட்டு நடித்த ஜுலிய சீசர் நாடகத்தில் ஒரே ஒரே முறை அம்மாவுக்கு தெரியாமல்,கிளியோபற்றா  என்ற சீசரின் மனைவியா நானும் நடித்து இருக்றேன், நான் பொம்பிளை வேஷம் போட வேண்டி வந்த இடக்கு முடக்கான சம்பவம், நாடகத்தில் சீசர் கொல்லப்பட நெஞ்சில அடிச்சு பதறி ஒப்பாரி வைக்க, மார்பு பெண்கள் போல இருக்க எண்டு கந்தப்பு கொண்டுவந்து தந்த பிறசியருக்க வைச்சு இருந்த சிரட்டை கழண்டு விழுந்தது, அந்த நாடகத்தின் இடையில் பொம்புளை வேஷத்துடன மேடையை விட்டு இறங்கி மூத்திரம் பெய்ய அம்மசியா குளக்கரைக்கு இருட்டில பதுங்கி பதுங்கிப் போக, என்னைப் பதுங்கி பதுங்கி பின் தொடர்ந்து வந்த ஒரு உள்ளூர் ரோமியோ என்னை இருட்டில கற்பழிக்க முயட்சிதது,அதில நான் கொஞ்சம் புத்திசாலிதனமாக தப்பியது,பொம்பிளை வேஷம் போட்டு அதில உணர்ச்சிப் பிளம்ப்பா நடித்தது அம்மாவுக்கு தெரியவர வீடில சண்டை தொடங்கியது,,,,அதை ஒரு தனிக் கதையா எழுதுறேன்,,இப்ப கந்தபுவின்  " இல்லற வாழ்க்கையை இனிமை ஆக்குவது எப்படி புத்தகம் எப்படி குழப்பம் அவர் குடும்பத்தில் ஏட்படுத்தியது எண்டு சொல்லுறேன்....

 

வாக்குக் கண்ணால அங்க பார்த்துக்கொண்டு இங்க கதைக்கும் பரமானந்தம் வைத்து நடத்திய சில்லறைக்கடை  சைஸ் உள்ள ஒரு அறையில் இருந்த பிரசுக்கு அவரோட மனைவி பெயரில் " தனலக்ஸ்மி " பதிப்பகம் எண்டுதான் பெயர் இருந்தது. ஆனால் பரமானந்தம் தீவிர கொமின்ஸ்ட் கொள்கையில் இருப்பவர், எளிமையான, மெலிந்த மனிதர் வியட்நாமின் தந்தை ஹோசி மின் போல தாடி வைச்சுக்கொண்டு எப்பவும் பிரஸ் வாசலில் ஒரு கதிரையில் இருப்பார், சில நேரம் பிரிண்டிங் மிசினில காலால கோபமா அடிச்சு அமதிக்கொண்டு  ”நான் அடிக்கும் ஒவ்வொரு அடியும் லத்தீன் அமெரிக்காவையும் மூன்றாம் உலக நாடுகளையும் சுரண்டிக் கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அடி.”எண்டு சொல்லுவார். அவரின் வளர்ந்த மகள்கள் இருவர் தான் உள்ளுக்க புரூப் பார்ப்பது, அவரின் மூத்த மகள் அகிலாண்டேஸ்வரி " பிரமிளா " என்ற பெயரில் புதுக் கவிதை எழுதி இருக்கிறா. மகள்கள்தான் அச்சுக் கூடத்தை இயங்க வைப்பதே ,எழுத்துகளைத் தேடி எடுத்து அச்சுக் கோர்த்த புரூப் பக்கங்களை ஒரு தட்டில இடை வெளிகளில் சின்ன சின்ன இரும்பு துண்டு வைச்சு சுத்தியலால் அடிச்சு,நிமித்தி ,சரியாக்கி , லிண்டன்பேர்க் காலால அமத்துற ஜெர்மன் பிரிண்டிங் மிசினில பிளேட் ஏத்தி கறுப்பு மை தடவி தடவி முக்கித் தக்கி பிரிண்டிங் பண்ணுவார்கள், முதல் பிரின்டைக் பரமானந்தம் கையில கொடுக்க அவர் அதை வடிவா அவரோட வாக்குக் கண்ணால பல கோணங்களில் பார்த்து திருத்தும் சொல்லுவார்.

 

கவிஞ்சர் கந்தப்பு அவர் வெண்பா எழுதித்  திதிக்கு வெளியிடும் கல்வெட்டுக்கள் பலது  தனலக்ஸ்மி  பதிப்பகதில் அச்சு ஆக்கி வெளியிட்ட பழக்கத்தில் ஒரு முறை  " இல்லற வாழ்க்கையை இனிமை ஆக்குவது எப்படி " என்ற புத்தகம் எழுதிக்கொண்டு இருப்பதா சொல்ல,பரமானந்தம் " அப்படியே சங்கதி,அட்ரா சக்கை எண்டானாம் , புலவர் எழுதும் புத்தகம் பொருள் பதிந்தது, அது என்ன விடயம் உள்ள புத்தகம் எண்டு ஆழம் பார்த்து அறிய வேண்டிய அவசியம் இல்லை , அதை நான் தான் வெளியிடுவேன் " எண்டு ஒற்றைக்காலில் நிக்க,கடைசியில் அவர்தான் வெளியிட்டார், அந்தத்  தொடக்கம் தான் கவிஞ்சர் கந்தப்புவின்  இல்லற வாழ்க்கைக்கு அலுப்புக் கொடுக்கத்  தொடங்கியது. 

 

 எப்படி எண்டு சொல்லுறேன், தமிழ் ஆசிரியரா வேலை செய்து, வயதாக முன்னரே நடு வகிட்டில் நரை தட்ட முதலே ஓய்வு பெற்ற கந்தப்பு அதிகம் அவரின் இலக்கிய நண்பர்களின் இலக்கிய விவாதம், கோவிலில் கந்தபுராண படனம் சொல்லுறது,நாடகம் போட ஒத்திகை பார்க்கிறது, திருத்தொண்டர் திருச்சபை எண்டு ஒன்று உருவாக்கி அதில வளரும் பிள்ளைகளுக்கு சைவ சமயத்தின் அறம் சார் உண்மைகளை வகுப்பு வைச்சு சொல்லிக்கொடுப்பது ,வீராளி அம்மன் கோவிலில் இருவத்தி அஞ்சுநாள் திருவிழா தலைமை தாங்கி நடத்துவது, எண்டு எப்பவும் நேரத்தைக் காலில கட்டிக்கொண்டு கலாச்சார சூழலையே சுவாசித்து ஓடித் திரிவார்.

 

அதனால புத்தகம் அடிச்சுக்கொண்டு இருந்த நேரம், வீட்டில பொம்பிளைகளின் பிளவுஸ் தைச்சுக் கொடுக்கும்  தையல் வேலை செய்துகொண்டு  இல்லத்தை இனிமை ஆக்கிக்கொண்டு இருந்த அவரின் மனைவியைத் தான் அந்த புத்தகம் எப்படி வருகுது எண்டு பார்க்க பரமானந்தத்தின் " தனலக்ஸ்மி " பதிப்பகதுக்கு அனுப்பிக்கொண்டு இருந்தார்,அந்த மனுசியும் அடிக்கடி போய் புத்தகம் எப்படி வருகுது எண்டதை ஆர்வம் இல்லாமலும், அங்கே வேலை செய்த பரமானந்தத்தின் பிள்ளைகளுடன் அதிகம் ஆர்வமாயும் எப்பவும் பழகிக்கொண்டு இருந்து இருக்கிறா.,,எப்படியோ அந்தப் புத்தகம் வெளிவந்து சில நாட்களில் கொஞ்சம் கொஞ்சமா, பரமானந்தம் அந்த தையல் டிச்சருக்கு என்ன பரம ஆனந்தத்தைக் காட்டினாரோ தெரியாது ,அல்லது " இல்லற வாழ்க்கையை இனிமை ஆக்குவது எப்படி " என்ற புத்தகம் எழுதிய கந்தப்புக்கு தன் இல்லறத்தை இனிமை ஆக்க தெரியாமல் இருந்ததோ எண்டு எனக்கு தெரியாது.

 

ஒரு நாள்... 

 

வீராளி அம்மன் கோவிலில் வேட்டைத் திருவிழா நடந்து கொண்டு இருந்த அன்று பின்னேரம், அம்மன் ஆவேசமாக வேட்டை ஆடி முடிய, கோவிலில் நைவேத்தியம் வேண்டிக் கொண்டு வெளிய வந்த கவிஞ்சர் கந்தப்புக்கு, புண்ணியக் குஞ்சி கூப்பிட்டு வைச்சு சில விஷயம் சொல்ல...இன்னுமொரு கதை பிறந்தது...

 

 

நாவுக் அரசன் ஒஸ்லோ .

 

10583888_10204131323224538_9105819712869

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

"" குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா ""

............பாடல் வரி : முத்துலிங்கம்...

எல்லோருக்கும் சில நேரம் வரும் சோதனை

இருந்தாலும் கூடாது மன வேதனை

எல்லோருக்கும் சில நேரம் வரும் சோதனை

இருந்தாலும் கூடாது மன வேதனை

வெற்றி தோல்வி யாவும் நம் வாழ்கை பாடமே

தோல்வி காட்டும் ஞானம் புது வேதம் ஆகுமே

எது வந்த போதும் அதை ஏற்றுகொள்வாய்

இருள் கூட ஒளி வீசும் துணிந்தே செல்வாய்

எதற்கும் ஓர் நாள் உண்டு

எல்லோர்க்கும் வாழ்வுண்டு

கீழ்நோக்கி பிடித்தாலும் மேல்நோக்கியே

எரிகின்ற சுடர்போல எழவேண்டுமே

மண்ணில் மூடினாலும் விதை மாய்ந்து போகுமோ

வலை விண்ணில் வீசினாலும் வான்மீன்கள் வீழுமோ

உழைப்பார்க்கு என்றும் இழப்பேதும் இல்லை

இழந்தாலும் அதை மீண்டும் பெறுவார் கண்ணா

தளராது புயல்போலே

வரலாறு படைப்பாரே

மணிவண்ணா மலையப்பா

கோவிந்தா கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை

மறை மூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை கண்ணா

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

 

Link to comment
Share on other sites

உலகத்த மாத்த நினைச்சா பேச்சிலரா இருக்கும்போதே மாத்த முயற்சி பண்ணுங்க...

கல்யாணம் ஆயிட்டா டிவி சேனல கூட மாத்த முடியாது...!

Link to comment
Share on other sites

இதுக்கு மேல என்ன வேண்டும் இந்த நகரத்துக்கு..

 

ஐரோப்பாவின் மிகப் பழமையான கடலோடிகளின் வரலாற்றில் நிரந்தரமா முக்கியத்துவம்  சேர்த்த நகரம் ,வட துருவ நோர்வேயின் கலாச்சாரப்  ,பொருளாதாரத்  தலைநகர் , என்னைப்போல பல வந்தேறு குடிகள் ஆறு மாதம் குளிரைத் திட்டிக்கொண்டும் ,ஆறு மாதம் கொஞ்சம் மிதமான வெய்யிலில் சுகமான காற்றைச் சுவாசித்து  வருடக்கணக்கில் வசித்துக் கொண்டும்  இருக்கும் , பல வருட அயல் நாடுகளின் கழுத்தறுப்புக்களை , இரண்டாம் உலக யுத்த நாஸி  ஜெர்மனியின் அழிப்புக்களை மவுனமாகத் தாங்கிக்கொண்டு , ஒரு காலத்தில் வைக்கிங்குகள் என்ற கடல்க் கொள்ளைக் காரரின்  தற்காலிக தங்குமிடம் இருந்த, ஒரு பக்கம் கடலும் மற்றைய மூன்று பக்கமும் மலைகளும் சூழந்த,நீண்ட நோர்வேயின் தெற்கில் கடல் விளிம்பில் இருக்கும் ஒரு சின்ன விடிவெள்ளி நகரம் ஒஸ்லோ.

 

                                             " ஒஸ்லோ " என்று பெயர் வரக் காரணம், அந்தப் பெயரின் முதல் எழுத்தான  " ஒஸ் " என்பது பழைய நோர்வேயிய மொழியில் , வடக்கு கடலையும் அத்திலாந்திக் சமுத்திரத்தையும் கண்னுக்குள்ள  விரலை விட்டு ஆட்டிய வைகிங்குகளும், வடக்கு நோர்வேயில் வசித்த  லாபியர்கள் சகண்டிநேவியப் பழங்குடி மக்களும்  இயற்கையை வழிபட்ட காலத்தில், அவர்கள் வழிபட்ட ஒஸ் என்ற கடவுளின் பெயரையும் , அதன் பின்னய  அடியான " லோ "  என்பது மலைகள், காடுகள் ,கடல் சூழந்த மலைகள் உள்ள நிலப்பரப்பு என்று பழைய நோர்வேயிய மொழியில் உள்ள வார்த்தையையும் இணைத்து ஒஸ்லோ எண்டு பெயர் வந்தது எண்டும் சொன்னாலும், எல்லா வரலாறுக்குக்  குழப்பம் போல இந்தப் பெயர் வரவும்  வேறு சில விளக்கம்களும் இருக்கு எண்டும் சொல்லுறார்கள்.

 

                                          பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்னமே, கடல் வழி வியாபாரத்தில் பொருளாதார ரீதியாகப்  புகழ் பெற்று , புழக்கத்தில் இருந்த ஒஸ்லோ என்ற பெயரை, 1624 இல்  நோர்வே, சுவிடனை ஆண்ட டன்மார்க் நாட்டு சக்கரவர்த்தி கிறிஸ்டியான் IV தன்னோட பெயரையும் ,அவர் அம்மாவின் பெயரையும் இணைத்து கிரிஸ்தானியா என்று மாற்றி இருக்குறார். 1905 இல் நோர்வே அந்த சக்கரவர்தியின் டேனிஷ் ஆக்கிரமிப்பில் இருந்து சுதந்திரம் பெற்றாலும் 1925 இல் தான் மறுபடியும் , ஆக்கிரமிப்பின் அடாவடித்தனத்தில் இழந்து போன ஒஸ்லோ என்ற பெயர் உத்தியோக பூர்வமாக இந்த நகரத்திக்கு மறுபடியும் கிடைத்து இருக்கு. இன்றும் ஒஸ்லோவில் கிரிஸ்தானியா என்ற பெயரில் பல பழைய ஹோட்டல்  கட்டிடங்கள், சதுக்கம் வளைக்கும் இடங்கள், சிற்பங்கள் நிறைந்த பூங்காக்கள் , பழைய கருங்கல்லுப் பதித்த வரலாற்று வாசம் வீசும் வீதிகள் இந்த நகரத்தில் வரலாற்றின் கறுத்தப் பக்கத்தின் சாட்சியாக இருக்கு. 

 

                           இன்றைய திகதியில் இந்த நகரத்தின் முக்கிய லேன்ட் மார்க் என்று சொல்லப்படும் ஒஸ்லோ ஒபேரா ஹவுஸ் இருக்கும் பியோர்விக்கா என்ற இடத்திலும்,அதற்கு வெளியே ஒஸ்லோ பியோர்ட் கழிமுகத்தில் உள்ள ஹுவாட் ஓயா என்ற சின்ன தீவிலும் ,ஒஸ்லோ பியோர்டில் உள்ள இன்னொமொரு பெரிய தீவான மால்ம்ம் ஓயாவிலும் ஆயிரம் வருடம் முன்னமே எலும்பை உறைய வைக்கும் விண்டர் கால உறை பனியைச்  சமாளிக்கும் வசதிகள் ஏதுமற்ற காலத்தில்  மக்கள் வசித்து இருக்கும் அடையாளங்களைத் தோண்டி எடுத்து அந்த இடங்களில் இப்பவும் அந்த ஐஸ் ஏச் கால வாழ்விடங்களின் அடையாளங்களைப் பார்க்க முடியும். 

 

                                               இந்த சின்ன நகரத்தில் அண்மையில் செய்த கணக்கெடுப்பின் படி ஆறு அரை லட்சம் மக்கள் சண்டை சச்சரவு இல்லாமல்  அருகருகே அண்ணன் தம்பி போல வாளுறார்கள் எண்டும் ,நகரத்தின் கால் வாசி சனத்தொகை நோர்வேயில் பிறக்காத வேற்று நாட்டு மக்கள் என்றும்  சொல்லுறார்கள். பதினெட்டாம் நூற்றாண்டின் நடுவில் இந்த நகரத்தில் கையைக் காலை நீட்டி வைச்சு ,நெருக்கம் இல்லாமல் ஆசுவாசமாய் வெறும் முப்பது ணாயிரம் மக்களே பரந்து வாழ்ந்த இடத்தில் பத்தொன்பதாம் நூ ற்றாண்டின் தொடக்கத்தில் சடார் எண்டு சனத்தொகை இரண்டு இலட்சத்தி இருவதாக உயர்ந்து உள்ளது எண்டும் புள்ளி விபரம் புள்ளி புள்ளியா சொல்லுது. அதுக்கு காரணம் நோர்வேயையும் சுவிடனையும் இணைத்து காலுக்க வைச்சு நெரிசுக்கொண்டு இருந்த குட்டி நாடான டென்மார் இந்த இரண்டு நாட்டுக்கும் போனாப் போகுது எண்டு சுதந்திரம் கொடுத்துப் போட்டுப் போனது எண்டு சொல்லுறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஆனாலும் எவளவுதான் பல்லின மக்கள் வாழந்தாலும் இன்னும் இந்த சின்ன நகரம் மற்ற ஐரோப்பிய மெட்ரோபொலிட்டன்   ஆடம்பர அலங்காரத் தலை நகரங்களுடன் ஒப்பிடும் போது இன்னும் வயசுக்கு வராத பெண்ணின் அடையாளங்களுடன் தான் இருக்கு....

 

                                       ஹென்றிக் இப்சன் என்ற உலகப் புகழ் நாடக எழுத்தாளர் வசித்த, உலகம் வியக்கும் குஸ்தாவ் வியிலான்ட் என்ற சிற்பி கருங்கல்லில் சிலைகளுக்கு உயிர் கொடுத்த , உலகம் ரசிக்கும் எட்வார்ட் முன்ச்ச் என்ற ஓவியர் அபத்த நிறங்களில் வாழ்வின் அவலத்தை வரைந்த , மிகப் பழமையான பூங்காக்கள் , இயல் இசை நாடகக்  கலாச்சார  மையங்கள் இருக்கும்  ஒஸ்லோ ஐரோப்பாவின் குளிர்கால விளையாடுக்களின் தலை நகரம். இந்த நகரத்தில் இருந்து ஒரு இருபது நிமிடம் மெட்ரோ ட்ரெயினில் பிரயாணம் செய்தாலே உலகப் புகழ் பெற்ற ஹோல்மன் ஹொலன் குன்றுகளில், ஒலிம்பிக் நடத்தக் கூடிய முக்கிய விண்டர் பனி சறுக்கும் இடம் இருக்கு, ஐரோப்பாவில் வேறு எங்கேயும் இப்படி இல்லை என்கிறார்கள்.2020 இல் ஒஸ்லோ விண்டர் ஒலிம்பிக் நடத்தும் சாத்தியம் இருக்கு எண்டும் சொல்லுறார்கள், 

 

                                    உலகத்திலேயே அதிகம் காப்பி உறிஞ்சிக் குடிக்கும் மக்கள் வாழும்,கடவுளை விடக் குழந்தைகளை அதிகம் நேசிக்கும் இதயத்தில் ஈரம் உள்ள மனிதர்கள் வாழ்கையை அழகாக்கும் ஒஸ்லோ,  நோர்வேயிய இளம்  பெண்களின் இடுப்புப் போல சின்ன நகரம்,அதன் பிரகாசம் நோர்வேயியப் பெண்களின் கண்கள் போல எப்பவும் பணிவுடன் மின்னும், உதவும் குணம் உள்ள மக்கள் எப்பவும் இயல்பாக இந்த நகரத்தை இயங்க வைக்க , இந்த நகரத்தின் கவர்ச்சி கோடை காலத்தில் வானம் பாடிகள் நீல வானத்தில் எழுதிச் செல்லும் ஒரு புதுக் கவிதை, வெயில் கால அடர்ந்த இரவில் எண்ண முடியாத நட்சத்திரங்கள் அள்ளிக்கொட்ட,  மென்மையான,அதிர்ந்து பேசாத நோர்வேயிய மக்களின் மனம் போல விண்டர் உறை பனி வெள்ளைக் கம்பளம் விரிக்க, அமைதி அதன் அர்த்தத்தைத் உலகெல்லாம் தேடிக் கடைசியில் இங்கே கண்டு கொண்ட,

 

                                தெற்கில் நோர்டற ஆர்கிர்  சின்ன மலைகள் தாவணி கட்ட, பாதம் வரை மறைக்கும் குருறுட் டாலன் பள்ளத்தாக்குகள் பாவாடை கட்ட, இந்த சின்னப் பெண்ணின் இதயத்தை ஊடறுத்து ஆர்கிஸ் எல்வா ஆறு சலங்கை கட்டிச்  சதிராட,  காடெல்லாம் பேர்ச் மரங்கள்,  அதன் கரை எல்லாம் லில்லி மலர்கள், நாடெல்லாம்  நல்ல தண்ணி நளினம் காட்டும் ஏரிகள் ,  உயரத்தில் இருந்து விழியெல்லாம் மை பூசி ,  மொழி பேசி விரைந்தோடும் மேகங்கள்  விலாசம் சொல்லியே விரைந்தோடும் , கண்ணுக்கு எட்டிய வரை நீலக் கடல் அலைகள் நகரத்தின் தெற்கு  விளிம்பில்  " இதுக்கு மேலே சொர்க்கம் தான்.... " என்று நோர்வேயின் இசைப் பிதா எட்வார்ட் கிரிக் எழுதிய சிம்போனிகளை இசைக்க,    

 

 

                          இதுக்கு மேல என்ன வேண்டும் இந்த நகரத்துக்கு.

 

 

 

நாவுக் அரசன் ஒஸ்லோ 05.09.14

 

10514392_10204336655997729_6569101904664

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.