Jump to content

நகர்ந்து போன நாட்கள் ***காதலாய்..****


Recommended Posts

sanstitretruecolor01cx2.jpg

நட்பாய் என்னில் அமர்ந்து

காதலாய் என்னில் உறங்கி

இன்று கானலான

எனது நாட்குறிப்பின்

நனைந்து போன பக்கங்கள்

கண்ணீரில்....

நண்பனென்ற

அடையாளத்தில்

நீயும் அட்டகாசம் செய்கையில் ..

அவ்வப்போது சிறகடிக்கும்

உன் விழிகளில்

அடிக்கடி காதல்

அரங்கேறுவதை

எட்டி நின்று ரசிக்கத்தான்

எத்தனை ஆசை எனக்கு ..

உன்விழிகளில்

நான் கண்ட காதலை

நீ,...

என் மொழிகளில்

கேட்க வேண்டுமென

அடம்பிடித்தது

இன்றும் என்னில்

அழியாமல் இருக்கிறதே ....

வசந்தங்களில்

மட்டுமே ..

பூக்கள் பூக்குமாம்..

ஆனால்..

நீ மட்டும் எப்படி பெண்ணே ..

வேனலில் கூட

கவிச்சோலையாய் ...

எப்பொழுதும் என்னில் ?....

கேட்டதும் நீ தானே ..

அன்று

ஆற்றோரம் நாமும்

குழந்தைகள்

மணல் வீட்டில்

குடி இருக்கையில் ......

நினைவு இருக்கிறதா?..

நீ என் அருகில்

இருக்கையில்

உன் மூச்சுகூட

கவனமான

இளம் காற்றாய் ...

காரணம் கேட்டதற்கு,,,,

இனியவளே...

நீ ....

எந்தன் கவிதைப் பூ

என் சுவாசத்தின் சூடில்

கருகிடுவாயே ,...

அன்று கதைத்தது

இன்றும் கானமாய்

என் காதில் ,...

நீண்டு போன

நமது உரையாடல்கள்

ஈரமான நிலமாக ...

தொடர்ந்து வந்த

நமது சந்திப்புகள்

நல்ல உரமாக ....

இடைஇடையே வந்த

உன் இறந்தகால இன்னல்கள்

விதையாக ...

என்னிலும்

காதல்...மரமாகி

காய்க்க தொடங்கியதே ...

அன்றொருநாள் நீயும்

அவசரத்தில்

தாய்நாடு செல்ல ...

வழியனுப்ப

வந்த நானும்

கைக்குட்டையில்

கண்ட உன்

கண்ணீரில் தானே

கடனாளியாகிப் போனேனே

காதலில் ...

ஊர் முழுக்க

சொல்லி நடந்தேனே

என் காதலை ...

Link to comment
Share on other sites

இனியவள் என்ன கவிதை எல்லாம் நல்லாத்தான் இருக்கிது. ஆனா.. கருத்துக்கள்தான் கொஞ்சம் விளங்க இல்ல. இது என்ன யாருண்டையாவது உண்மைக்கதையோ? இல்லாட்டி யாவும் கற்பனையோ? ஏதோ அழுவுங்கோ. நாங்களும் சேந்து அழுவுறம்.

Link to comment
Share on other sites

இனியவள் என்ன கவிதை எல்லாம் நல்லாத்தான் இருக்கிது. ஆனா.. கருத்துக்கள்தான் கொஞ்சம் விளங்க இல்ல. இது என்ன யாருண்டையாவது உண்மைக்கதையோ? இல்லாட்டி யாவும் கற்பனையோ? ஏதோ அழுவுங்கோ. நாங்களும் சேந்து அழுவுறம்.

இனிய மாலை வணக்கம் கலைஞன்,

உங்களுக்கு எந்த கருத்துக்கள் விளங்கவில்லை??

மறுபடியும் வாசித்துவிட்டு தயக்கமின்றி கூறுங்கள் விளக்குகின்றேன்.....

Link to comment
Share on other sites

ஐயோ நீங்கள் கேக்கிறத பாக்க பயமா இருக்கிது. கோவிச்சு போடாதிங்கோ. நான் கேட்டது இந்தக் கவிதை உண்மைக்கதையா இல்லாட்டி கற்பனையா எண்டு.

Link to comment
Share on other sites

ஐயோ நீங்கள் கேக்கிறத பாக்க பயமா இருக்கிது. கோவிச்சு போடாதிங்கோ. நான் கேட்டது இந்தக் கவிதை உண்மைக்கதையா இல்லாட்டி கற்பனையா எண்டு.

கலைஞன் நீங்கள் பயப்பிடலாமா, நீங்கள் ஜேனரல் ஆச்சே...

இக்கவி நிஜகதையை வைத்து வடிக்கப்பட்ட கவி தான்.....

முதல் பகுதி படித்தீர்கள், இது இரண்டாம் பகுதி..

Link to comment
Share on other sites

இனியவள்,

இது எவரது சொந்தக்கதையாக இருந்தாலும் இதற்கு நான் கூறக்கூடிய ஒரேஒரு வார்த்தை இரத்தக்கண்ணீர்!

காதல் வேதனையைதரத் தொடங்கிவிட்டால் பிறகு எல்லாம் சர்வநாசம். சில ஆக்கள் காதலில் சோகம் சுகமான ஒரு உணர்வு எண்டு சொல்லுவீனம். இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

காதல் வெற்றிகரமாக அமைவதற்கு தனிநபர்களிடம் என்று ஒன்றும் இல்லை. தனிநபர் திறமையோ அல்லது புத்திசாதுரியமோ அல்லது தனிநபர்களின் ஏதாவது தனிப்பட்ட ஆற்றலோ காதல் வெற்றிகரமாக, சந்தோசமாக அமைவதற்கு உத்தரவாதம் அளிப்பதில்லை.

வேணுமென்றால் இதை அவனவன் தலைவிதி என்று சொல்லிக்கொள்ளலாம்.

காதலில் வந்த சோகங்களை எவ்வளவு நாட்களுக்கு ஒருவர் நினைத்து அழுதுகொண்டு இருக்கமுடியும்? இப்படி அழுது என்னத்தை செய்வது?

இதுக்கு மேல என்ன எழுதுவது என்று தெரியவில்லை. உதுகளில யாராவது எக்ஸ்பேர்ட் கொஞ்சம் விளக்கம் தாங்கோ.

Link to comment
Share on other sites

அட பாவமே நட்பு காதலாக மாறிட்டுதா?

நட்பாய் என்னில் அமர்ந்து

காதலாய் என்னில் உறங்கி

இன்று கானலான

எனது நாட்குறிப்பின்

நனைந்து போன பக்கங்கள்

கண்ணீரில்....

நட்பு நட்பாக இருந்திருப்பின் கண்ணீர் வந்திருக்காது இனியவள். என்ன செய்ய பாவம் அது காதலாகியதால் வந்த விளைவு தான் கண்ணீர்.

ஆனால் உங்கள் கவி வரிகள் நன்றாக உள்ளன. ரொம்ப வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

காதலில் வந்த சோகங்களை எவ்வளவு நாட்களுக்கு ஒருவர் நினைத்து அழுதுகொண்டு இருக்கமுடியும்? இப்படி அழுது என்னத்தை செய்வது?

ஆமாம் உண்மை தான், காதலில் சோகம் ,சந்தோசம் எல்லாம வருமாம்... சோகங்களில்

வேதனைகள் இருந்தாலும்,ஆனால் நீங்கள் கூறுவது போல , சோகத்தால் கடிகாரம் ஓடாமல் இருப்பதில்லை,,இவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலங்கள் நடந்து சொல்கின்றன!!

அழுது ஒன்றும் பன்ன முடியாது , காதல் வேதனை உள்ள அனைவரும் சந்தோசமாக வாழ இந்த பொங்கள் அன்று அன்பாக வாழ்த்துகின்றேன்!! :unsure:

நன்றி உங்கள் உண்மை கருத்துக்கு கலைஞன்

Link to comment
Share on other sites

அட பாவமே நட்பு காதலாக மாறிட்டுதா?

நட்பு நட்பாக இருந்திருப்பின் கண்ணீர் வந்திருக்காது இனியவள். என்ன செய்ய பாவம் அது காதலாகியதால் வந்த விளைவு தான் கண்ணீர்.

ஆனால் உங்கள் கவி வரிகள் நன்றாக உள்ளன. ரொம்ப வாழ்த்துக்கள்.

ம்ம்ம் இருக்கலாம் நிலா,எல்லா நட்பும் காதலாக மாறுவதில்லை தானே,இந்த உறவை

இருவரும் நட்பாக பாத்திருந்தால் அது நட்பாக இருந்திருக்கும் இல்லையா....??

நண்பனென்ற

அடையாளத்தில்

நீயும் அட்டகாசம் செய்கையில் ..

அவ்வப்போது சிறகடிக்கும்

உன் விழிகளில்

அடிக்கடி காதல்

அரங்கேறுவதை

எட்டி நின்று ரசிக்கத்தான்

எத்தனை ஆசை எனக்கு .. ( இக்கவியில் வரும் கதானாயகிக்கும் ஆசை...)

காதலாக மறுவதுக்கு இதுவும் ஒரு காரனம் என்று நிணைக்கின்றேன்...

இடைஇடையே வந்த

உன் இறந்தகால இன்னல்கள்

விதையாக ...

என்னிலும்

காதல்...மரமாகி

காய்க்க தொடங்கியதே ...

நன்றி கருத்துக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனியவள் அக்கா!

உங்கள் கவிதையின் வரிகள், சோகம் நிறைந்த வரிகள்.

பாராட்டுக்கள் சொல்லவா? அல்லது இந்த வரிகளின்............. உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறுவதா?

எதைச் சொல்லப்போனாலும் நான் உளறுபவள் ஆகிவிடுவேன். இந்த வரிகளுடன் எனது வாழ்க்கையும் ஒத்தவை.

Link to comment
Share on other sites

நட்பாய் என்னில் அமர்ந்து

காதலாய் என்னில் உறங்கி

இன்று கானலான

எனது நாட்குறிப்பின்

நனைந்து போன பக்கங்கள்

கண்ணீரில்....

இனி கானலா போன உங்கள் நாட்குறிப்பின் கண்ணீரிலான பக்கங்கள் வாசிக்கும் எங்களையும் உருக செய்கிறது வாழ்த்துகள் :mellow: ....நட்பாக ஆரம்பித்த உங்கள் நாட்குறிப்பின் பக்கங்கள் காதலாக மலர்ந்த விதம் அழகு ஆனாலும் இறுதியில எல்லாமே கானலா போனது தான் துயரம்....!! :D

"கானலா போன உங்கள் நாட்குறிப்பை எனி அப்படியே வைத்து விட்டு புது நாட்குறிப்பில் பக்கங்களை புரட்டுங்கள் வாழ்க்கை இனிக்கும் :huh: ...நான் சொன்னது கதையில வாற ஆட்களிற்கு தான்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை

மறுநாள் ஒன்று விடியும்

விழிசிவக்க

நான் எழுதி வைத்த கவிதையெல்லாம்

அதுநாள்வரை

எங்கே

இருளிள் ஒளிந்திருக்கு!! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.