தூக்க கலக்கத்தில் வாகனம் ஓடுபவரா நீங்கள்?
Posted by
போக்குவரத்து
,
in
CarDriving.Ca,
சாரதி பயிற்சி
03 June 2012
·
71 views
தூக்க கலக்கத்தில் வாகனம் ஓடுவது மதுபோதையில் வாகனம் ஓடுவது போல் அதிகளவு ஆபத்தானது. போதியளவு தூக்கம் இல்லாமல் வாகனம் ஓடினால் மதுபோதையில் வாகனம் ஓடும்போது உள்ளதுபோல வீதி விபத்தில் நீங்கள் சிக்குவதற்கு அதிகளவு சாத்தியம் உள்ளது.
நீண்ட பயணங்களின் போது வாகனம் ஓடும் முன்னர் போதியளவு தூக்கம் கிடைக்காது என நீங்கள் கருதினால் வாகனத்தை நீங்கள் ஓடாது வேறு பயண வழிமுறைகளை கையாளுங்கள்.
குறுகிய தூர பயணங்களாயினும் போதியளவு தூக்கம் கிடைக்கவில்லையாயின் வாகனத்தை நீங்கள் ஓடாது வேறு போக்குவரத்து முறைகளை பயன்படுத்துங்கள், உதாரணமாக பொது பேருந்து சேவை, டாக்சி போன்றவை.
வாகனம் ஒரு இயந்திரம் என்பதை நினைவில் வையுங்கள். இயந்திரத்தை நீங்கள் இயக்கும் போது உங்கள் கவனம் அங்கு குவிக்கப்படாவிட்டால் அது மோசமான வீதி விபத்துக்களில் முடியலாம். அவ்விபத்துக்களில் உங்களுக்கு உடலியல் ரீதியான பாதிப்பு ஏற்படாவிட்டாலும் ஏனைய வீதி பாவனையாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கவன குறைவுடன் வாகனம் ஓட்டியதற்காக உங்களுக்கு சிறை தண்டனையும் கிடைக்கலாம். உங்கள் வாகனத்தினுள் உள்ள யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால் அது ஆயுள் முழுவதும் உங்களுக்கு மன அழுத்தத்திற்கு காரணமாக அமையலாம்.
அண்மைய ஆய்வு தகவல்களின்படி போதியளவு தூக்கம் இல்லாமல் வாகனத்தை ஓடுவதனால் மோசமான பல வீதி விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
சில மருந்து வகைகள் தூக்கம், சோம்பலை ஏற்படுத்தக்கூடியன. நீங்கள் மருந்துகளை உட்கொள்ள முன்னர் வைத்தியரிடம் அவற்றினால் ஏற்படக்கூடிய விளைவுகளை முழுமையாக கேட்டு அறியுங்கள். தூக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மருந்து எதையாவது உள்ளெடுத்தால் அந்த மருந்தின் தாக்கம் நீங்கும் வரை வாகனம் ஓடுவதை கண்டிப்பாக நிறுத்தி வையுங்கள்.
தூக்க கலக்கத்தில் வாகனம் ஓடுவது உங்கள் இனிமையான பயணத்தையும் கெடுத்துவிடும் என்பதை மறவாதீர்கள்.
வாகனம் வீதியில் நகர்கின்ற ஒரு இயந்திரம். அதற்கு தன்னை இயக்குபவர் தூங்குகின்றாரா அல்லது விழித்துள்ளாரா என்று எல்லாம் தெரியாது. தூக்க கலக்கத்தினால் ஒரு சில நொடிகள் உங்கள் கவனம் சிதறுவது உங்கள் வாழ்க்கையையே மோசமான முறையில் தலைகீழாக மாற்றக்கூடும்.
ஆக்கம்: போக்குவரத்து
http://cardriving.ca
நீண்ட பயணங்களின் போது வாகனம் ஓடும் முன்னர் போதியளவு தூக்கம் கிடைக்காது என நீங்கள் கருதினால் வாகனத்தை நீங்கள் ஓடாது வேறு பயண வழிமுறைகளை கையாளுங்கள்.
குறுகிய தூர பயணங்களாயினும் போதியளவு தூக்கம் கிடைக்கவில்லையாயின் வாகனத்தை நீங்கள் ஓடாது வேறு போக்குவரத்து முறைகளை பயன்படுத்துங்கள், உதாரணமாக பொது பேருந்து சேவை, டாக்சி போன்றவை.
வாகனம் ஒரு இயந்திரம் என்பதை நினைவில் வையுங்கள். இயந்திரத்தை நீங்கள் இயக்கும் போது உங்கள் கவனம் அங்கு குவிக்கப்படாவிட்டால் அது மோசமான வீதி விபத்துக்களில் முடியலாம். அவ்விபத்துக்களில் உங்களுக்கு உடலியல் ரீதியான பாதிப்பு ஏற்படாவிட்டாலும் ஏனைய வீதி பாவனையாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கவன குறைவுடன் வாகனம் ஓட்டியதற்காக உங்களுக்கு சிறை தண்டனையும் கிடைக்கலாம். உங்கள் வாகனத்தினுள் உள்ள யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால் அது ஆயுள் முழுவதும் உங்களுக்கு மன அழுத்தத்திற்கு காரணமாக அமையலாம்.
அண்மைய ஆய்வு தகவல்களின்படி போதியளவு தூக்கம் இல்லாமல் வாகனத்தை ஓடுவதனால் மோசமான பல வீதி விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
சில மருந்து வகைகள் தூக்கம், சோம்பலை ஏற்படுத்தக்கூடியன. நீங்கள் மருந்துகளை உட்கொள்ள முன்னர் வைத்தியரிடம் அவற்றினால் ஏற்படக்கூடிய விளைவுகளை முழுமையாக கேட்டு அறியுங்கள். தூக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மருந்து எதையாவது உள்ளெடுத்தால் அந்த மருந்தின் தாக்கம் நீங்கும் வரை வாகனம் ஓடுவதை கண்டிப்பாக நிறுத்தி வையுங்கள்.
தூக்க கலக்கத்தில் வாகனம் ஓடுவது உங்கள் இனிமையான பயணத்தையும் கெடுத்துவிடும் என்பதை மறவாதீர்கள்.
வாகனம் வீதியில் நகர்கின்ற ஒரு இயந்திரம். அதற்கு தன்னை இயக்குபவர் தூங்குகின்றாரா அல்லது விழித்துள்ளாரா என்று எல்லாம் தெரியாது. தூக்க கலக்கத்தினால் ஒரு சில நொடிகள் உங்கள் கவனம் சிதறுவது உங்கள் வாழ்க்கையையே மோசமான முறையில் தலைகீழாக மாற்றக்கூடும்.
ஆக்கம்: போக்குவரத்து
http://cardriving.ca
- இணையவன் likes this












