Jump to content

அலைவரிசை 4 இல் அறிமுகமான மாவீரன்!


Recommended Posts

பின் மண்டையில் சுடுபட்டு... நான் வீழ்ந்தபோது,

என் மூளைநரம்புகளின் அதிர்வுகளை...

நீங்கள் புரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான்!!!

வெறும் செய்தியாகத்தான்.... அதுவும் உங்களுக்கு இருந்திருக்கலாம்!!!

சாகப் போகின்றோம்.... எனும்போது,

"கடைசி ஆசை" என்றொன்று..... எனக்கும் இருந்தது!

இயலாமையுடன் எதிர்ப்பட்ட எண்ணங்களில்... யாரேனும் எம்மை

காப்பாற்ற வரமாட்டார்களா? எனக் கூட, எண்ணத் தோன்றவில்லை!

அனாதையாகி நிற்கும் தாய்மண்ணில்....

நாங்களும் நாதியற்றுத்தான் நின்றோம்!!!

பிரடி மயிரைத் தொட்டு... கனலாய் வந்த தோட்டா....

விரைவாகத் துளைபோட்டு... மெதுவாகச் சுழன்று,

என் மூளை திருவி... வலக்கண் வழியே,

வெளியே வர.... பீறிட்ட இரத்தம்... தொடர்ந்தோடியும்,

எனக்கு வலிக்கவேயில்லை!!!

செருகிக் கொண்டிருந்த என் ஒற்றை விழியிலும்...

அப்போதும் கடைசிக் கண்ணீர்த் துளியொன்று...... என் இனத்துக்காய்!!!

புறநானூறு பிறழ்ந்த தமிழனாய்...

பின் பிரடியில் புண் வாங்கி,

மண்மீது சரிந்த எங்களையும்,

என்றாவது ஒரு நாளேனும்... - விடிந்த

எம் மண்ணின்... மாவீரர் பட்டியலில் சேர்ப்பார்கள்....என்ற

கடைசி நப்பாசையுடன்,

இறுகிப்போன என் இதயம் -முதலும் கடைசியுமாய்,

தன் இயக்கத்தினை நிறுத்திக்கொள்ள,

என் ஒற்றை விழியும் மூடிக்கொண்டது.

இறுதியாக ஒரு வேண்டுகோள்...

"இப்பிடிச் செத்ததுக்கு... கழுத்தானைக் கடிச்சிருக்கலாம்!!!

ஏன் சயனைட் கடிக்கவில்லை???" என்று

தயவுசெய்து..... எங்கள் ஆன்மாக்களை பழிக்காதீர்கள்!!!

"இறுதிவரை நீங்கள் இருக்கின்றீர்கள்" என்ற நம்பிக்கையுடன்தான்...

அதையும் நான் மறந்திருந்தேன்'!!!

Link to comment
Share on other sites

உங்களுக்கு உள்ள கவி பாடும் வலிமை என்னிடம் இல்லை . வாழ்துக்கள் . இரண்டாவது எனது பச்சை :) :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது எனது.

பின்மண்டையில் சூடுபடுவதைப் பார்த்தபோது நாம் இயலாதவர்கள் என்று உச்சியில் உறைத்தது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இப்போது பச்சைப் புள்ளி போடக்கூடியதாக இருக்கிறது.

கவிதை உங்கள் கவிதை பற்றிய குறிப்பை சிறிதுநேரம் கழித்துப் போடுகின்றேன்

Link to comment
Share on other sites

இன்று 5வது பச்சைப்புள்ளியைத் தான் குத்த நேரம் வந்தது. ஆறுதலாக வருகிறேன் கருத்தெழுத.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதைக்கு என்ன என்ன கருத்து எழுதுவது என்று தெரியவில்லை...முதலாவது பச்சை என்னோடது

Link to comment
Share on other sites

ஏன் சயனைட் கடிக்கவில்லை???"

கவிதை, கவிதையின் வரிகள், எங்கோ! யாரோ ஒரு போராளியைக் கேட்டதுமாதிரி ஒரு பிரமை. ஆன்மாக்களுடன் பேசுவதற்கு எனக்கும் ஆசை விரைவில் பேசுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரடி மயிரைத் தொட்டு... கனலாய் வந்த தோட்டா....

விரைவாகத் துளைபோட்டு... மெதுவாகச் சுழன்று,

என் மூளை திருவி... வலக்கண் வழியே,

வெளியே வர.... பீறிட்ட இரத்தம்... தொடர்ந்தோடியும்,

எனக்கு வலிக்கவேயில்லை!!!

செருகிக் கொண்டிருந்த என் ஒற்றை விழியிலும்...

அப்போதும் கடைசிக் கண்ணீர்த் துளியொன்று...... என் இனத்துக்கா.......

....... எப்படி முடிகிறது இப்படி எழுத ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நினைத்துப் பார்க்கவே பயங்கரமா இருக்கிறதை, கவிதையில் படைத்துள்ளீர்கள், என்ன செய்ய, எம்மால் செய்யக் கூடியது மாவீரர் தினத்தை வியபாரமாக்கிவிட்டேம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீழ்ந்து போன வீரர்களின் நினைவுகளை,

விலை பேசும், ஈனப் பிறவிகளின் நடுவில்,

வலி தெரியாமல்,

வாழ்விழந்த மாவீரன்,

வாழ்ந்திருப்பான்!

எங்கள் நினைவுகளில்,

வரலாறு உள்ள வரை!

உங்கள் கவிதை மூலம்!!!

நன்றிகள், கவிதை!!!

Link to comment
Share on other sites

என் ஒற்றை விழியும் மூடிக்கொண்டது.

கண் மூடி நின்மதியாக தூங்குகிறீர்கள்.உங்கள் மாவீரர் தினத்தை கொண்டாட நடக்கும் வெட்டுக்குத்துக்கள் ... சொல்ல வார்த்தையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை

இனத்தின் மீதான முழு நம்பிக்கையில் அவனுக்கு மரணத்தின் வலி தெரியவில்லை...கண்கள் பார்க்காத, காதுகளுக்கு எட்டாத செய்திகளாக எத்தனையோ மாவீரர்களின் ஆன்மாக்கள் இனவிடுதலையின் நேசிப்பால் காலவெளிகளில் கரைந்து போயிருக்கின்றன..... இப்படிச் செத்ததைக் காட்டிலும் அவன் குப்பி கடித்திருக்கலாம்தானே..... என்று நாக்கு வளைத்து நாலு விதமாகவும் பேசலாம்.. ஆனால் கொண்ட இலக்கை அடைவதற்காக இந்த வலிகளைக்காட்டிலும் எத்தனையோ வலிகளைத் தாங்கி இருக்கிறார்கள் போராளிகள். கடைசித்துளி கண்ணீரில் இருந்த நம்பிக்கைகளைச் சிதறடித்துக்கொண்டிருக்கிறார்கள் தேசியத்தின் பேரால் பிரிவுகளாகி குழுமங்கட்டியவர்கள்...

கடைசித்துளி கண்ணீர்..

கடைசி நிமிட ஆன்மதாகம்

கடைசிநேர உயிரின் துடிப்பு

அனைத்தையும் துடைத்துப் போட்டுவிட்டு பாகுபடுகிறது குறுகிய உள்ளங்கள்.

மன்னித்துவிடுங்கள் மாவீரர்களே...

இப்போது விடுதலைக்காய் எழும் சக்தியை தின்று கொண்டிருக்கிறது குழுமவாதங்கள்... இவர்களிடம் இருந்து விடுபட்டு எழவேண்டிய காலத்தில் இப்போது உங்களையெல்லாம் நேசிக்கும் நாங்கள்... :(

கவிதை உங்கள் கவிதைக்கு கருத்து எழுதத்தான் முயன்றேன் முடியவில்லை....

Link to comment
Share on other sites

தயவுசெய்து..... எங்கள் ஆன்மாக்களை பழிக்காதீர்கள்!!!

நன்றி வல்வை சாகரா. கவிஞர்கள் ஊடாக எங்கள் விடுதலைக்காக வீழ்ந்த சகல அமைப்புகளையும் சார்ந்த மாவீரர்களின் ஆன்மா மேலும் மேலும் ஒலிக்கவேண்டிய தருணமிது தோழி.

Link to comment
Share on other sites

தயவுசெய்து..... எங்கள் ஆன்மாக்களை பழிக்காதீர்கள்!!!

நன்றி வல்வை கவிதை. கவிஞர்கள் ஊடாக ஈழ விடுதலைக்காக வீழ்ந்த சகல தரப்பையும் சேர்ந்த மாவீரர்களின் ஆன்மா மேலும் மேலும் ஒலிக்கவேண்டிய தருணமிது தோழா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

இறுதியாக ஒரு வேண்டுகோள்...

"இப்பிடிச் செத்ததுக்கு... கழுத்தானைக் கடிச்சிருக்கலாம்!!!

ஏன் சயனைட் கடிக்கவில்லை???" என்று

தயவுசெய்து..... எங்கள் ஆன்மாக்களை பழிக்காதீர்கள்!!!

"இறுதிவரை நீங்கள் இருக்கின்றீர்கள்" என்ற நம்பிக்கையுடன்தான்...

அதையும் நான் மறந்திருந்தேன்'!!!

எமது இனத்தவர்களின் கேடு கெட்ட, எண்ணங்களை நாலுவரியில் சொல்லி விட்டீர்கள் கவிதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரடி மயிரைத் தொட்டு... கனலாய் வந்த தோட்டா....

விரைவாகத் துளைபோட்டு... மெதுவாகச் சுழன்று,

என் மூளை திருவி... வலக்கண் வழியே,

வெளியே வர.... பீறிட்ட இரத்தம்... தொடர்ந்தோடியும்,

எனக்கு வலிக்கவேயில்லை!!!

செருகிக் கொண்டிருந்த என் ஒற்றை விழியிலும்...

அப்போதும் கடைசிக் கண்ணீர்த் துளியொன்று...... என் இனத்துக்காய்!!!

கவிதைதானே என அநாசயமாக படித்துவிட்டுச் செல்ல முடியாத வலி சுமந்த வரிகள்..இன்றும் எம் கன்னங்களில் கண்ணீர் ரேகைகள்..

Link to comment
Share on other sites

கவிதைக்கு நன்றிகள் கவிதை..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறுதியாக ஒரு வேண்டுகோள்...

"இப்பிடிச் செத்ததுக்கு... கழுத்தானைக் கடிச்சிருக்கலாம்!!!

ஏன் சயனைட் கடிக்கவில்லை???" என்று

தயவுசெய்து..... எங்கள் ஆன்மாக்களை பழிக்காதீர்கள்!!!

"இறுதிவரை நீங்கள் இருக்கின்றீர்கள்" என்ற நம்பிக்கையுடன்தான்...

அதையும் நான் மறந்திருந்தேன்'!!!

வார்த்தைகள் வரவில்லை கவிதை(அண்ணா). :(

வலிகளைச் சுமந்தவர்களாய் நாம். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கவிதை

போரின் வடுக்களை கவிதையில் விகாரமாக்கியிருக்கின்றீர்கள்.

Link to comment
Share on other sites

கவிதை உங்கள் கவியில் இருக்கும் கருத்தின் ஆழத்தை வருணிக்க எனக்கு வார்த்தையுமில்லை அருகதையுமில்லை. நாம் இருக்கின்றோம் என்று எமக்காக உயிர்துறந்த அந்த மாவீரர்கள் எங்கே - விட்டால் போதும் என்று ஓடி வந்து ஒழிந்திருக்கும் நாம் எங்கே. மாவீரர் வணக்கம் செய்ய அடிபடும் நாமும் தமிழ் இனத்தில் தான் பிறந்தோமா????? உங்கள் கவிதை நிட்சயம் ஒவ்வொரு தமிழனையும் சிந்திக்கவைக்கும். கவிக்கு நன்றிகள் கவிதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் கவிதைக்கு என்னுடைய பதின் எட்டாம் புள்ளி.உங்கள் கவிக்கு என்ன கருத்தை எழுதுவது என்றே புரிய இல்லை.

Link to comment
Share on other sites

கவிதைக்கு நன்றி ,

அதை சொன்ன விதமும் சொன்ன நேரமும் அதைவிட பக்குவம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி கவிதை

இதை தமிழர் மீதான கோபமாக பார்க்காமல் செய்தவன் செய்வித்தவன் மீதான கோபமாக மாற்றுவதே சிறந்தது. அல்லது தமிழர்கள் அதிலும் மாவீரர்கள் செய்த அனைத்தையும் தடுத்து இந்தநிலைக்கு ஆளாக்கியோரிடம் போகவேண்டிய செய்தி இது. தமிழர்களில் பெரும்பான்மையானோர் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் செய்தனர் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. அதை அனுமதித்திருந்தாலோ அல்லது இவர்கள் இதற்குள் தலையிடாக்கொள்கையை கடைப்பிடித்திருந்தாலோ நாம் வென்றிருப்போம். எமக்கான ஆதரவு அதிகரித்தபடியேதான் இருந்திருக்கும். யாரிடமும் நாம் பிச்சையேந்தவில்லை. எமது மக்களையும் மாவீரர்களையும் போராளிகளையும் தளபதிகளையும் காக்கும் சக்தி எம்மிடமிருந்தது. அதை அழித்து இந்தநிலைக்கு எம்மை விட்டவர் யார்??????????????????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.