Jump to content

நாகூர் ஹனீபாவுடன் ஒரு நேர்காணல்


Recommended Posts

நாகூர் ஹனீபாவுடன் ஒரு நேர்காணல்

இசைமுரசு நாகூர் ஹனீபாவை அவரது இல்லத்தில் வைத்து ‘ராணி’ வார இதழ் ஆசிரியர் அ.மா.சாமி சந்தித்தபோது நடந்த நேர்காணல் இது:

அரசியல் அனுபவங்கள்

எப்படி அரசியல் மேடைகளில் பாடத் தொடங்கினீர்கள்?

தமிழ் ஆர்வம்தான் அதற்குக் காரணம். இயற்கையாகவே என்னிடம் தமிழார்வம் இருந்தது. 1938-ஆம் ஆண்டில் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த ராஜாஜி, பள்ளிக்கூடங்களில் இந்தியை கட்டாயப் பாடம் ஆக்கினார். இதை எதிர்த்துத் தமிழ்நாடு எரிமலையாக வெடித்தது. முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. அப்போது (1939) ராஜாஜி நாகூருக்கு வந்தார். அங்கே அவருக்குக் கறுப்புக்கொடி காட்டி கைது செய்யப்பட்ட நாலு பேரில் நானும் ஒருவன். அப்போது எனக்கு 13 வயதுதான்!

அந்தச் சின்ன வயதிலேயே உங்களிடம் தமிழ் எழுச்சி ஏற்பட்டு விட்டதா?

ஆமாம். இன்றும் அந்தத் தமிழ்க் கனல் என் உள்ளத்தில் எரிந்து கொண்டிருக்கிறது!

நல்ல தமிழர் நீங்கள்! பிறகு ..?

அந்நாளில் திராவிடர் இயக்கத்தில் “டார்பிடோ” ஜனார்த்தனம் என்ற நல்ல பேச்சாளர் இருந்தார். அவரை அழைத்து நாகூரில் கூட்டம் நடத்தினோம். நான் கூட்டத்தில் பாடினேன். பாவேந்தன் பாரதிதாசன் எழுதிய ‘ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள் – நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே” என்ற பாடலை உணர்ச்சி பொங்கப் பாடினேன். அது முதல் அரசியல் மேடைகளில் பாடத் தொடங்கி விட்டேன்.

உங்களுக்கு நல்ல குரல் வளம் இருக்கிறது. தமிழை இனிமையாக, தெளிவாக உச்சரிக்கிறீர்கள். பேச்சாளர் ஆகியிருக்கலாமே?

திராவிட இயக்கத்தில் பேச்சாளர்கள் அதிகம். எல்லாரும் சேர்ந்து என்னை அமுக்கி இருப்பார்கள்.! ஆனால், பாட்டு எனக்குக் கை கொடுத்தது. என்னைப் போல எடுப்பாகப் பாடக் கூடியவர் வேறு எவரும் இல்லை. அதனால்தான் போட்டியில்லாமல், இந்த 81-வது வயதிலும் திருமண வீடுகள், கழக மேடைகள், மாநாடுகளில் பாடிக் கொண்டிருக்கிறேன். இதில் இன்னொரு ஆதாயமும் கிடைத்தது.

என்ன?

பெரியார் முதல் அண்ணா, கலைஞர், பேராசிரியர், நாவலர், நாஞ்சிலார் என்று எல்லத் தலைவர்களும் என்னிடம் பாசத்துடன் இருந்தார்கள். இன்று கூட கலைஞர், “வா, அனிபா. உட்கார்” என்று அன்புடன் என்னை வரவேற்பார். நான் கலந்துக் கொண்டு பாடாத கழக நிகழ்ச்சிகள், சிறப்புக் கூட்டங்கள், மாநாடுகள் கிடையாது. “நீங்கள் பாடி முடித்தபின்தான் எங்களை மேடைக்கே அழைக்கிறார்கள்” என்று ஒருமுறை முரசொலி மாறன் அவர்கள் என்னிடம் வேடிக்கையாகக் கூறினார்.

தந்தை பெரியாருடன் உங்களுக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது?

பெரியாரை நாகூருக்கு அழைத்து நான் கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் நான் பாடியதைக் கேட்டு மகிழ்ந்தார், பெரியார். “அனிபா அய்யா பாட்டுக்கு ஒலிபெருக்கித் தேவையில்லை” என்பார். மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வரும்போது என்னை அழைத்து வரச்சொல்லி பாட வைத்துக் கேட்டு மகிழ்வார், பெரியார். சிலநேரம் என் பாட்டைக் கேட்டு, ஒரு ரூபாய் இனாம் கூடக் கொடுத்திருக்கிறார்.

காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபு அவர்களுடன் உங்கள் தொடர்பு பற்றிச் சொல்லுங்களேன்.

அவரது கண்ணியத்தால், சமுதாயத் தொண்டால் கவரப்பட்டவன், நான். எனது இசையால் ஈர்க்கப்பட்டவர், அவர். எனது பாடல்களை மிகவும் விரும்பிக் கேட்பார்.

நாகூரில் நான் கட்டிய “அண்ணா இல்லம்” என்ற புதிய இல்லத்தை காயிதே மில்லத் திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால், அன்று அவரால் வர இயலவில்லை. எனக்கு மடல் எழுதி அதைத் தெரிவித்தார். அதன்பின் ஒருமுறை அல்ல, இருமுறை எனது இல்லத்துக்கு காயிதே மில்லத் அவர்கள் வந்திருக்கிறார். அவர் எப்போது நாகூருக்கு வந்தாலும் முதலில் தர்காவுக்குப் போவார். என்னையும் அழைத்துப் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்வார்.

அறிஞர் அண்ணாவுடன் உங்களுக்கு எப்படித் தொடர்பு ஏற்பட்டது?

அது பற்றிச் சொல்லுவது என்றால், பக்கம் பக்கமாக எழுத வேண்டியிருக்கும்

எழுதுகிறேன், சொல்லுங்கள்

அந்த நாளில் திராவிட இயக்கத்தில் பட்டுக்கோட்டை அழகிரிசாமி என்ற கருஞ்சட்டை வீரர் இருந்தார். அவரை ‘அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி’ என்பார்கள். அவ்வளவு துணிச்சலானவர். மன்னார்குடியை அடுத்த மதுக்கூரில் ஒரு பொதுக்கூட்டம். அதில் பேச அழகிரி வந்தார். நான் பாடினேன். “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்று நான் முழங்கினேன். அழகிரிக்கு மிகவும் பிடித்து விட்டது. அது முதல் எங்கே கூட்டம் நடந்தாலும் , என்னை அழைப்பார், பாடச் சொல்லுவார்.

ஒருமுறை பட்டுக்கோட்டையில் கூட்டம். அண்ணா பேசுவதாக இருந்தது. “டேய் கருப்பா நீயும் வந்து விடு” என்று என்னையும் அழைத்தார். என்னை ‘கருப்பா’ என்றுதான் அழகிரி கூப்பிடுவார். நானும் போனேன். மாலையில் அழகிரி வீட்டில் சிற்றுண்டி சாப்பிட்டோம். அப்போது அண்ணாவுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார், அழகிரி.

அதன்பின் அண்ணாவுடன் பழக எவ்வளவோ வாய்ப்புகள். ஒருமுறை நான் குடும்பத்துடன் காஞ்சிபுரத்துக்குப் போய், அண்ணாவின் விருந்தாளியாக இருந்தேன். அண்ணாவே எங்களுக்குப் பரிமாறியதை என்றைக்கும் மறக்க இயலாது!

அதைச் சொல்லுங்கள்

முதல் முதல் நான் காஞ்சியில் அண்ணாவின் வீட்டுக்குப் போனபோது வெறும் லுங்கி, சட்டையுடன் அண்ணா எங்களை வரவேற்றார். “அண்ணா.. அண்ணா.. என்று சொல்லுவீர்களே, அந்த அண்ணாத்துரை இவர்தானா?” என்று என் மனைவி ஆச்சரியத்துடன் கேட்டாள்! பிறகு அண்ணா எங்கள் வீட்டுக்கு வர, குடும்ப நண்பர்கள் ஆகிவிட்டோம்.

ஒருமுறை அறந்தாங்கி அருகே ஒரு கூட்டம். அண்ணா கலந்துக் கொண்டார். என்னையும் அழைத்துக் கொண்டார். அதற்கு முன் இரண்டு நாள் அடை மழை. வழியில் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. அண்ணா வேட்டியைத் தூக்கி கட்டிக் கொண்டு, தண்ணீரில் நடந்தார். நானும் நடந்தேன். ஒரு மைல் நடந்து, கூட்டம் நடந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்.

ஒருமுறை அண்ணா மலேசியா, சிங்கப்பூருக்குப் போய்விட்டு வந்தார். அவரைப் பார்க்க நான் போனேன். “அனிபா! நான் போன இடத்திலெல்லாம் நீதான் இருந்தாய்” என்று அண்ணா சொன்னார். எனக்குப் புரியவில்லை. “வீட்டுக்கு வீடு உன் பாட்டுதான் ஒலித்துக் கொண்டிருக்கிறது” என்று அண்ணா சிரித்தார். பிறரை பாராட்ட அண்ணா தயங்கவே மாட்டார்.

கலைஞருக்கும் உங்களுக்கும் உள்ள உறவு பற்றிச் சொல்லுங்களேன்

அது 65 ஆண்டுக்கதை!. அத்தனையும் சொல்லுவது என்றால் அதையே ஒரு தனி நூலாக எழுத வேண்டியிருக்கும்.

எழுதி விடலாம், சொல்லுங்கள்.

நானும் கலைஞரும் ஏறத்தாழ ஒரே வயது. கலைஞர் 1924-இல் பிறந்தார். நான் 1925-இல் பிறந்தேன். அந்தக் காலத்தில் அவரை “மு.க.” என்று சொல்லுவேன். அவ்வளவு நெருக்கம்.

நாகூரில் ஏழாம் வகுப்புடன் எனது படிப்பு முடிந்தது. அதற்கு மேல் படிக்க வறுமை இடம் கொடுக்கவில்லை. திருவாரூரில் எனது சிறிய தகப்பனார் இருந்தார். அவரது வீட்டுக்குப் போய் தங்கிக் கொண்டு, அவரது பலசரக்குக் கடையில் வேலை பார்த்தேன்.

திருவாரூரில் ஓடம்போக்கி ஆறு ஓடுகிறது. தண்ணீரை போக்கிவிட்டு மணல்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த ஆற்று மணலில் அடிக்கடி நீதிக்கட்சியின் கூட்டம் நடைபெறும். கூட்ட ஏற்பாட்டாளர்களில் கலைஞரும் ஒருவர்! அப்போது அவர் பள்ளிக்கூட மாணவர். அரைக்கால் சட்டை போட்டிருப்பார். பம்பரம் போல சுழன்று சுறுச்சுறுப்பாக இயங்குவார். நான் அவரையே பார்த்துக் கொண்டு இருப்பேன்.

இரவு ஏழு மணிக்குக் கூட்டம் என்றால், ஆறு மணிக்கே நான் போய்விடுவேன். மேடையில் ஏறிப் பாடி கூட்டம் சேர்ப்பேன். கூட்டம் சேர்ந்ததும், பொதுக்கூட்டம் தொடங்கும். கூட்டத்துக்குத் தலைவர் யார் தெரியுமா? பெரும்பாலும் அரைக்கால் சட்டை போட்டிருக்கும் கலைஞர்தான்.!

அன்று தொடங்கிய எங்கள் நட்பு இன்றும் தொடர்கிறது. என்றும் தொடரும். நாகூரில் நான் கட்டிய வீட்டுக்குக் ‘கலைஞர் இல்லம்’ என்று பெயர் சூட்டினேன். கலைஞரே வந்து திறந்து வைத்தார். எங்கள் வீட்டில் என்ன விழா நடந்தாலும் கலைஞர் வந்து கலந்துக் கொள்ளுவார். என் பிள்ளைகளின் திருமணத்துக்கு வந்து வாழ்த்தியிருக்கிறார்.

எனது கழகப் பற்றும், பணியும் கலைஞருக்குத் தெரியும். அவர் எனக்கு “எம்.எல்.சி.” (மேல் சபை உறுப்பினர்) பதவி கொடுத்துச் சிறப்பித்தார். “கலைமாமணி” விருது வழங்கிப் போற்றினார். எல்லாவற்றிற்கும் மேலாக எனக்குக் “கலைஞர் விருது” தந்து, என்னை புகழ்க் கோபுரத்தில் ஏற்றி வைத்தார்.

இப்போது அவர் புகழின் உச்சியில் இருக்கிறார். தமிழ் நாட்டின் முதல்வராக ஐந்தாவது முறை பதவி ஏற்று சாதனை படைத்துள்ளார். பதவி ஏற்றதும், பதவி மேடையிலேயே, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி, ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய், உழவர்களின் கூட்டுறவுக் கடன் ரத்து, சத்துணவில் வாரம் இரண்டு முட்டை என்று மூன்று ஆணைகள் பிறப்பித்து புதிய வரலாறு படைத்து விட்டார். அந்த ஆணைகளில் கலைஞர் கையெழுத்திடுவதை டி.வி.யில் பார்த்து மெய்ச்சிலிர்த்துப் போனேன்! முஸ்லிம் சமுதாயத்திக்கு இரு அமைச்சர் பதவியை கலைஞர் அளித்திருப்பது பெருமையாக இருக்கிறது.

இந்தத் தேர்தலில் கூட நீங்கள் பிரச்சாரம் செய்தீர்கள் போலிருக்கிறதே?

ஆமாம். வாணியம்பாடியில் இரண்டு நாளும், சென்னையில் மூன்று நாளும் முகாமிட்டு தெருத் தெருவாகப் பாட்டுப் பாடி, தி.மு.க. கூட்டணிக்கு வாக்குச் சேகரித்தேன்.

தி.மு.க.வும் வெற்றி பெற்று கலைஞர் முதல்வர் ஆகிவிட்டார்

அந்த மகிழ்ச்சியில் எனக்கு இளமைத் திரும்பி விட்டது.

கழகத்தில் இவ்வளவு ஈடுபாடு கொண்ட நீங்கள், கழகம் நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டீர்களா? ‘கலைஞர்கள் கலந்துக் கொள்ள வேண்டியதில்லை’ என்று அறிஞர் அண்ணா விலக்கு அளித்தார் அல்லவா?

போராட்டம் என்றதும் ஓடி ஒளியும் கோழைகளாக, சிறை என்றதும் நடுங்குகிற கோழைகளாக சில கலைஞர்கள் கழகத்தில் இருந்தார்கள். அவர்களுக்காக அண்ணா இந்த விலக்கை அளித்தார். ஆனால், நான் வீரத்தமிழன், என் உடம்பில் தமிழ்க்குருதி ஓடுகிறது. கழகம் நடத்திய எல்லாப் போராட்டங்களிலும் நான் கலந்துக் கொண்டேன். 11 முறை சிறைக்குப் போயிருக்கிறேன்.

கழகத்தில் இவ்வளவு ஈடுபாடு கொண்ட நீங்கள், முஸ்லிம் லீக்குடனும் தொடர்பு வைத்திருந்தீர்களே, எப்படி?

அரசியல் பணிக்குக் கழகம், சமுதாயப் பணிக்கு முஸ்லீம் லீக் என்று வைத்துக் கொண்டேன்.

திராவிட இயக்கம், நாத்திக இயக்கம். முஸ்லிம் லீக், இஸ்லாமிய இயக்கம். இரண்டும் எப்படி ஒத்துப் போகும்?

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றார் அண்ணா. ‘ஏக இறைவன்’ என்பதுதான் இஸ்லாமியக் கொள்கையும். ‘நான் கைலி கட்டாத முஸ்லிம்’ என்றும் அண்ணா சொல்லியிருக்கிறார். எனவே இரண்டு இயக்கத்துக்கும் எந்த வேறுபாடு இல்லை.

நீங்கள் நாத்திகரா? ஆத்திகரா?

நான் இஸ்லாத்தை பின்பற்றுபவன். மார்க்கக் கடமைகளில் ஒரு சிறுகுறைகூட வைக்க மாட்டேன். எனது ஏழாம் வயதில் நோன்பு வைக்க என் அம்மா எனக்கு கற்றுக் கொடுத்தார்கள். அன்று முதல் 74 ஆண்டுகளாக தொடர்ந்து நோன்பு வைக்கிறேன். ஒரு நோன்பைக் கூட விட்டதும் இல்லை, விட்டுவிட்டு, பிறகு நோன்பு வைத்ததும் இல்லை. நாகூர் தர்கா ஆலோசனைக்குழு உறுப்பினராக இருந்தேன். வக்ப் வாரிய உறுப்பினராகவும், தலைவராகவும் இருந்திருக்கிறேன். நபிகள் நாயக (ஸல்) பிறந்தநாள் விழாக்கள், பள்ளிவாசல் திறப்பு விழாக்கள், தர்கா விழாக்களில் பாடுகிறேன். புனித ஹஜ் யாத்திரை போய் வந்தேன்.

நீங்கள் முஸ்லிம் லீக் உறுப்பினரா?

இல்லை. முஸ்லிம் லீக்கில் என்னை சேரச் சொன்னார்கள். மறுத்து விட்டேன். கழகம் உடைந்த போதுகூட என்னை மாற்று முகாமுக்கு இழுக்க மிகப்பெரிய முயற்சி நடந்தது. நான் கொஞ்சம் கூட இடம் தரவில்லை. என் இரத்தத்தை எடுத்து சோதித்தால் கூட அதில் வேறு கட்சியின் கலப்பு இருக்காது

அரசியல் பாட்டுக்களும் பாடுகிறீர்கள். ஆன்மீகப் பாடல்களும் பாடுகிறீர்கள். இரண்டுக்கும் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?

நிச்சயமாகத் தெரிகிறது. அரசியல் பாடல்களில் ஒரு மிடுக்கு வேண்டும்! வீரம் வேண்டும்! ஆன்மீகப் பாடல்கள் என்றால், மெய்மறந்து பாடுவேன். அரசியல் பாட்டு உணர்ச்சிமயமான வேகம். ஆன்மீகப் பாட்டு உள்ளுணர்வு கூடிய பக்தி தாகம்.

ஆயிரக்கணக்கான பாடல் பாடியிருக்கிறீர்கள். அவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல்கள் என்று சில பாடல்கள் இருக்கும் அல்லவா?

ஒரு தாய் நூறு பிள்ளைகள் பெற்றாலும், எல்லாப் பிள்ளைகள் மீதும் ஒரே மாதிரி பாசத்துடன்தான் இருப்பாள். அதுபோல நான் பாடிய எல்லாப் பாடல்களுமே எனக்கு பிடித்தவைதான்.

ஆனாலும் ரசிகர்கள் திரும்பத் திரும்ப விரும்பிக் கேட்கும் பாடல்கள் என்று சில இருக்கும் அல்லவா?

அப்படியென்றால், அரசியலில் ‘அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா’, ‘கல்லக்குடி கொண்ட கலைஞர் வாழ்கவே’, ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என்ற பாடல்களைச் சொல்லலாம்.

ஆன்மீகப் பாடல்களில், ‘இறைவனிடம் கையேந்துங்கள்’, ஐயாயிரம் ஆண்டுக்கு முன்னே நடந்தது அரபு நாட்டிலோர் தியாகம்’, மக்கத்து மலரே, மாணிக்கச் சுடரே’ ‘ மதினா நகருக்குப் போக வேண்டும்’ ‘மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே’ என்ற பாடல்களை குறிப்பிடலாம்.

தமிழ் தவிர வேறு மொழிகளில் பாடுவிர்களா?

இலங்கைக்குப் போயிருந்தபோது அன்றைய அமைச்சர் ஜெயவர்த்தனாவின் விருப்பப்படி சிங்கள மொழியில் ஒரு பாட்டு பாடினேன். மும்பைக்கு போயிருந்தபோது ‘ஓ துனியாகே ரக் வாலே’ என்ற இந்திப் பாடலை பாடினேன். அரபு நாடுகளில் அரபுப் பாடல்களை பாடியிருக்கிறேன். ஐதராபாத்தில் உருது பாட்டு பாடி, ரசிகர்களை மகிழ்வித்தேன்.

உங்கள் பாடல்களுக்கு யார் இசை அமைப்பது?

நானே இசையமைப்பேன். ‘அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா’ பாடலும்’ ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடலும் நானே இசை அமைத்தவை. என் குழுவினரும் இசை அமைப்பார்கள்.

உங்கள் பாட்டுக்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறாராமே?

ஆமாம். நான் எம்.எல்.சி.யாக இருந்தபோது ஒருநாள் காலையில் ராசா என் அறைக்கதவைத் தட்டினார். எனது பாடல்களுக்கு இசை அமைக்க விரும்புவதாகச் சொன்னார். “நாளை வந்து பாருங்கள் என்றேன். மறுநாள் வந்தார். ஒரு பாடல் தந்தேன்.இசை அமைத்தார். அது இசைத்தட்டில் பதிவாயிற்று. “தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு! கொஞ்சம் நில்லு! எங்கள் திருநபியிடம் போய்ச் சொல்லு! சலாம் சொல்லு” என்பது அந்தப் பாடல்.

உங்கள் புகழுக்கும் சிறப்புக்கும் முதல் காரணம் யார் என்று சொல்ல முடியுமா?

சந்தேகம் இல்லாமல் என் மதிப்புக்குரிய ஆசிரியரான புலவர் ஆபிதீன்தான். அவரே ஒரு பாடகர்தான். நான் மேடையேறிய பின் அவர் பாடுவதை நிறுத்திக் கொண்டார். எனக்கு பாடல்கள் எழுதிக் கொடுத்தார். இந்தப் பாடல்களே எனது சிறப்புக்கு முதல் காரணம்.

வேறு யார், யார் பாடல்கள் எழுதிக் கொடுத்தார்கள்?

அது ஒரு பெரிய பட்டியல். குணங்குடி மஸ்தான் சாகிபு, பாவேந்தன் பாரதிதாசன் பாடல்களை நான் பாடுகிறேன். பேராசிரியர் அப்துல் கபூர், சிக்கல் மதிதாசன், தா.காசிம் என்று சிலரைக் குறிப்பிடலாம். உடுமலை நாராயண கவியின் பாடலையும் பாடியிருக்கிறேண்.

திரைப்படங்களில் கூடப் பாடியிருக்கிறீர்கள் அல்லவா?

அதில் அவ்வளவு ஆர்வமில்லை. விரும்பி அழைப்பவர்களின் படங்களில் மட்டும் பாடுகிறேன்.

நீங்கள் மிகவும் ரசித்துப் பாடல் எது?

‘தாயிப் நகர வீதியிலே எங்கள் தாஹா ரசூல் நபி நடக்கையிலே, பாவிகள் செய்த கொடுமையினை, என்ணிப் பார்த்தால் நெஞ்சம் உருகுதம்மா! கண்களில் கண்ணீர் பெருகுதம்மா’ என்ற பாடலை என்னையே மறந்து அனுபவித்துப் பாடுவேன்.

உங்கள் கச்சேரிகளில் மறக்க முடியாதது இருக்கிறதா?

எவ்வளவோ இருக்கிறது. ஒன்று சொல்லுகிறேன். திருச்சியில் முஸ்லிம் லீக் மாநாடு. தேவர் மன்றத்தில் காங்கிரஸ் கூட்டம். அப்போதைய அமைச்சர் வெங்கட்ராமன் பேசுவதாக இருந்தது. மாநாட்டில் நான் பாடினேன். “இறைவன் மீது ஆணை! இனத்தின் மீது ஆணை! இறைமறை மீது ஆணை!” என்று பெருங்குரலில் பாடினேன். “ஈட்டியின் முனையில் நிறுத்தியபோதும், ஈமான் இழக்க மாட்டோம்! காட்டிக் கொடுக்கும் கயவர்கள் தம்மை, கனவிலும் விடமாட்டோம்!” என்று எனது பாட்டு தொடர்ந்தது. வெங்கட்ராமனுக்கு காது கிழிந்துவிடும் போல இருந்ததோ என்னவோ! “பிறகு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு பேசாமலே எழுந்து போய் விட்டார்.

உங்கள் குரலை பாதுகாக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

நான் எதுவும் செய்வதில்லை! இறைவன் கொடுத்ததை அப்படியே வைத்திருக்கிறேன். ஒருமுறை காரைக்காலில் நாயகம் (ஸல்) பிறந்தநாள் விழா. புதுக்கோட்டை திவான் அபிபுல்லா சாகிபு தலைமை தாங்கினார். கோட்டாறு சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் உரையாற்றினார். நான் பாடினேன். என் பாட்டை கேட்ட பாவலர், “வாப்பா, இங்கே வா” என்று என்னை அருகில் அழைத்து, வாழ்த்தினார், “இறைவன் உனக்கு இனிய குரலை கொடுத்திருக்கிறான். அதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு” என்று அறிவுரை வழங்கினார். நான் அந்தப் பொறுப்பையும் இறைவனிடமே விட்டுவிட்டேன்.

நான் இளைஞனாக இருக்கும்போது சில நண்பர்கள் கள்ளுக் கடைக்கு போவார்கள். அவர்களுடன் நானும் போவேன். அவர்கள் கடைக்கு நுழைவார்கள். நான் கடலை வாங்கிக் கொண்டு, அருகிலிருந்த புளியமரத்தின் மீது ஏறிக்கொண்டு கடலையை உடைத்து தின்பேன்.

பீடி, சிகரெட்டுகளை தொட்டு அறியேன். இளநீர் விரும்பிக் குடிப்பேன். இந்த வயதிலும் குரல் அப்படியே இருக்கிறது என்றால், அதை இயற்கையின் அதிசயம், இறைவனின் அருட்கொடை என்றுதான் கூற வேண்டும்.

உங்கள் இளமைக் கால இனிய நண்பர்கள் யாரும் இப்போது நாகூரில் இருக்கிறார்களா?

இருக்கிறார்களே! என் இனிய நண்பர்களான இ.எம்.அலி மரைக்காயர், வித்துவான் எஸ்.எம்.ஏ.காதர் இருவரும் இப்போது நாகூரில் இருக்கிறார்கள். காரைக்கால் நண்பர் கலைமாமணி எஸ்.எம்.உமர் அவர்கள் சென்னையில் இப்போது வசித்துக் கொண்டிருக்கிறார். அ.மு.சயீது நீடூரில் இருக்கிறார்.

உங்களுக்கு 81 வயது ஆகி விட்டது. ஏதாவது ஆசை இருக்கிறதா?

சொந்தமாக ஒரு பள்ளிவாசல் கட்ட வேண்டும் என்று ஆசை இருக்கிறது. வக்ப் வாரியத் தலைவராக இருந்தபோது பள்ளிவாசல்கள் கட்ட, விடுதிகள் கட்ட, பள்ளிகள் கட்ட முடிந்த அளவு உதவி செய்தேன். பள்ளி வாசல்கள், பள்ளிக்கூடங்கள் கட்ட கச்சேரி நடத்தி நிதி திரட்டிக் கொடுத்திருக்கிறேன். எனது சொந்தப் பணத்தில் நானே ஒரு பள்ளிவாசல் கட்ட வேண்டும் என்று எனக்கு ஆசை. எனக்கு இனிய குரல் கொடுத்து வாழவைத்த இறைவனுக்கு இந்த நன்றியையாவது நான் செய்ய வேண்டும் அல்லவா? இறைவன் நாடினால் நிச்சயம் இந்த ஆசை நிறைவேறும்.

தட்டச்சு & வலைப்பதிவு : அப்துல் கையூம்

http://nagoori.wordpress.com/2009/10/21/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாகூர் ஹனீபாவுடன் ஒரு நேர்காணல்

------

------

நாகூர் ஹனீபாவின் குரலுக்கு நான் அடிமை. அற்புதமான ஒரு குரல்.

என்னுடைய பக்திப்பாடல் வரிசையில் அவரது பாடலும் இடம் பிடித்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல குரல் வளமுள்ள் பாடகன்.............ப்திவுக்கு நன்றி

Link to comment
Share on other sites

பாடகர்களில் பலர் தமிழ் உச்சரிப்பில் கவனம் செலுத்துவதில்லை, விதிவிலக்காகவும் சிலர் உளர் .உ.ம். சீர்காழி கோவிந்தராஜன் , நாகூர் கனீபா, டீ ஆர் மகாலிங்கம், ரி எம் எஸ். அதி உச்சஸ்தாயியில் பாடும் கனீபாவுக்கு நிகர் அவரே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.