Jump to content

விம்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விம்பம்

இதமான காலை நேரம். இளவேனிற் காலத்தின் ஆரம்பம். ஆங்காங்கு புள்ளினங்களின் கீச் ;கீச்’ ஒலி. ஐன்னல் திரைச்சீலை இடைவெளிகளினூடாககதிரவனின் ஒளிக்கீற்று கட்டிலில் விழ ஆரம்பித்தது. ராதி மெதுவாகப் புரண்டு படுத்தாள். மெல்லிய திரும்பலிலேயே வயிற்றுக்குள் குழந்தை உதைத்தது.‘’அம்மா’’ என்ற வார்த்தை அவளையறியாமலேயே தன்னிச்சையாய் உதிர்ந்தது.

ரமேஸ் அதிகாலையிலேயே எழுந்து வேலைக்குப் போய்விட்டதால் பக்கத்துப் படுக்கை வெறுமையாய்க் கிடந்தது.

ரமேஸ் அவன்தான் எவ்வளவு நல்ல கணவன். மெல்ல எழுந்து திரைச்சீலைகளை நீக்கி விட்டாள். கண்ணாடி ஐன்னலூடாக வீதியில் அவசரம் அவசரமாக அசையும் மக்கள் கூட்டம். அவளது நினைவுகள் தான் பிறந்து வளர்ந்த அந்த அழகிய கிராமத்தை அசை போட்டது.

பச்சைப்பசேல் என்று காட்சிதரும் அந்தப் பூமியில் இருக்கும் வரை அதன் அருமையை உணரத்தவறி விட்டாள். அந்த மண்ணின் அருமை மட்டுமா? மனம் இப்பொழுதெல்லாம் கொஞ்சக் காலமாக ஏதோ ஏக்கத்தில் தவித்தது. அதிலும் தாய்மை அடைந்ததிலிருந்து அவளுக்குள் தவிப்பு அதிகமாக இருந்தது, செற்றியிலிருந்து எழும்பும்போதும் படுக்கையில் புரண்டு படுக்கும்போதும் அடிக்கடி அவளது வாய் தன்னிச்சையாய் உதிர்க்கும் ‘’அம்மா’’என்ற அந்தச் சொல்.

‘’ராசாத்தி கெதியா குளிச்சுக்போட்டு வா சாப்பாடு ஆறுது’’

‘’ஓ பெரிய நினைப்பில ராசாத்தி என்று பேர் மட்டும் வச்சுப் போட்டினம்’’

‘’ஏன் பிள்ளை பெயருக்கென்ன?’’அம்மா ஆற்றாமையுடன் கேட்டாள்.

ராசாத்திக்கு விபரம் தெரிந்த நாளிலி;ருந்து அவளுக்குள் ஏனோ பெரிய குறை.

ராசாத்தி அழகில் ராசாத்திதான் ஏன் அறிவிலுங்கூட.

ஆனால் ஏழ்மை அவளை இயலாதவளாக்கி விட்டது.

‘’வா பிள்ளை சாப்பிட’’

‘’பெரிய விருந்து சமைச்சு வச்சிருக்கு சாப்பிட தினமும் இந்த ரொட்டிதானே

அதுக்குள்ள ஆறிப்போகுதென்ற அழைப்பு வேற’’

கமலம் என்ன செய்வாள். ஏழ்மையுடன் போராடிப் போராடி களைத்து விட்டாள்.

கணவனை இளமையிலேயே இழந்து விட்டவள்.

ராசாத்தியின் குத்தல்பேச்சுக்கள் அவளை வேதனை அடைய வைத்தாலும்

‘’பாவம் ராசாத்தி மற்றப்பிள்ளையளப்போல வடிவா உடுத்த சாப்பிட ஆசைப்படுற வயதுதானே நான் என்ன செய்வன்?’’என்று தனது ஆற்றாமையை எண்ணி மனதுக்குள் மறுகினாள்.

தோட்டத்தில் வேலை செய்து வரும் கூலிக் காசு இல்லாவிட்டால் முதலாளியம்மாவுக்கு மா இடித்து அரைத்து ஏதோ கிடைக்கும் கூலி.

இல்லாமையுடன் அவளது வாழ்க்கை ஓடியது.

அன்றும் வழக்கம் போல் தோட்ட வேலையை முடித்துக்கொண்டு களைக்கட்டை தலையில் வைத்தபடி வயல்வரப்புகளினூடாக ஓட்டமும் நடையுமாக வந்துகொண்டிருந்தாள் கமலம்.

பள்ளிக்கூடம் விட்டாச்சு ராசாத்தி பசியில வரப் போறாள் போய் சமைக்க வேணும் என்ற அவசரம் நடையை விரைவாக்கியது.

மாணவ மாணவிகள் சிட்டுக்குருவிகள் போல சிறகடித்து வீதியில் துள்ளலுடன் வரும் காட்சி கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.

நாள் முழுவதும் வெய்யிலில் காய்ந்து கறுத்து களைத்த தோற்றமும் பரட்டைத் தலையுமாக வந்த கமலத்தைப் பார்த்த மாணவிகள் சிலர் தமக்குள் ஏதோ சொல்லிச் சிரித்துக் கொண்டனர்.

அவள் உடுத்தியிருந்த கிழிந்த சேலையும் இயற்கையிலேயே மிதந்த பல்லும் அவளது தோற்றத்தை அலங்கோலமாகக் காட்டியது.

பின்னால் வந்துகொண்டிருந்த ராசாத்திக்கு அவமானம் பிய்த்துத் தின்றது.

‘’சீ எப்ப இந்த மனுசி திருந்தப்போகுது? சுமதியின் அம்மா என்ன வடிவா சாறி உடுத்தி கொண்டை போட்டு வேலைக்குப் போறா. ஐனனியின் அம்மா காரிலதான் எங்க வேணுமென்றாலும் போறா. என்ர வகுப்பில எல்லோரும் விதம் விதமா உடுத்தினம் விதம்விதமா சாப்பாடு கொண்டு வருகினம்.

நான்- நான் மட்டும் ஏன் இப்படி?

கழுவிக் கழுவி கலர் மங்கிய உடை.

காலில் தேய்ந்த இரப்பர் செருப்பு.

தலைக்கு எண்ணை கூட இல்லை.

அறியாப் பருவம் அவளை ஏங்க வைத்தது.

வீட்டிற்கு வந்ததும் கமலம் புல்லுக்கட்டை போட்டு விட்டு அவசர அவசரமாக

அடுப்பைப் பற்ற வைத்தாள். அரிசியை உலையில் போட்டு விட்டு கூடைக்குள் கிடந்த கிழங்கை எடுத்து அவசரமாக கறி சமைத்தாள்.

‘’பிள்ளை சாப்பிட வாவன்’’

‘’எனக்கு சாப்பாடும் வேணாம் ஒரு இழவும் வேணாம்’’

‘’ஏன் பிள்ளை பசியோட இருக்கக் கூடாது சாப்பிட வா’’

‘’என்ர வகுப்பில படிக்கிற பிள்ளைகளெல்லாம் விதவிதமா பலகாரம் கொண்டு வருகினம் விதவிதமா உடுத்தினம் எனக்கு மட்டும் இரண்டு தேய்ந்து ஒட்டுப் போட்ட சட்டை. எனக்கு சாப்பாடும் வேணாம் ஒண்ணும் வேணாம்.’’

‘’ராசாத்தி’’

‘’இனி என்னை ராசாத்தி எண்டு கூப்பிட வேணாம்’’

‘’ஏன் பிள்ளை’’கமலத்தின் கண்கள் குளமாகியது.

‘’ராசாத்தி எண்டா மாளிகை இருக்க வேணும் பஞ்சு மெத்தை இருக்க வேணும் பகட்டான உடுப்புகள் இருக்க வேணும் .இங்க எதுவுமே இல்லை.

ஓலைக் குடிசை தலையில இடிக்குது. கிழிந்த ஓலைப்பாய் உடம்பெல்லாம் குத்துது. உடுப்பு அதைப்பற்றி நான் சொல்லத் தேவையில்லை.’’படபட என்று பேசிய ராசாத்தி சாப்பிடப் பிடிக்காமல் குப்புறப் படுத்துக் கொண்டாள்’

அவளுக்கு எல்லாவற்றிலும் வெறுப்பு வந்தது.

கொஞ்ச நாட்களாக அவள் தனக்குள்ளேயே தன்னைப் பற்றி கற்பனைக்கோட்டை கட்டத்தொடங்கி இருந்தாள்.

அவளது அழகும் மெருகு படத்தொடங்கியது. ராசாத்திக்கு மட்டும் நல்ல உடை நகைகள் பூட்டி விட்டால் உண்மையிலேயே சிறந்த அழகிதான்.

சென்ற வாரம் ஐனனி வீட்டுக்குச் சென்றபொழுது அங்கிருந்த ஆளுயர நிலைக் கண்ணாடியில் தன்னை முழுமையாகப் பார்க்க முடிந்தது. நெடு நெடு என்ற உயரம். எடுப்பானதோற்றம் அந்த விழிகள் நாசி எல்லாமே பார்ப்போரை மயக்கின.

கமலம்; என்ன செய்வாள்? பாவம் தனக்குள் அழுதாள். தனது ஏழ்மை தன் மகளை அவளது எதிர்காலத்தை பாதிக்கக் கூடாது என்று இறைவனை வேண்டுவதைத் தவிர அவளால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

கமலத்தின் வேண்டுதலோ அல்லது ராசாத்தியின் அதிஸ்டமோ ராசாத்தி வகுப்பில் சிறந்த மாணவியாகச் சித்தியடைந்திருந்தாள். கமலம் பல நாளாக

யார் யாரையோ பிடித்து அதிபர்;ஆசிரி;யர்களின் உதவியுடன் மறு வருடம் பட்டணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் அனுமதி பெற்று விட்டாள்.

ராசாத்திக்கோ கொள்ளை மகிழ்ச்சி.

‘’சீ இனி இந்தக்குடிசை வாழ்வு எனக்கு வேண்டாம்.’’

கமலம் தன் முதலாளியம்மாவிடம் கைமாற்றாக வேண்டிய கடன் மூலம் சில உடைகளும் தேவையான பொருட்களும் ராசாத்திக்கு வாங்கிக் கொடுத்தாள்.

ராசாத்தி சிறகு முளைத்த சிட்டுக் குருவியானாள்.

காலம் யாருக்காகவும் காத்திருக்காமல் வேகமாக சுழன்றது.

ஆறு மாதங்கள் ராசாத்தியைப் பார்க்காதது கமலத்திற்கு வேதனையாக இருந்தது.

தன்னால் முடிந்தளவு கொஞ்சம் பலகாரம் செய்து கையில் எடுத்துக்கொண்டு

ராசாத்தியைப் பார்க்க பட்டணம் ;போனாள்.

பாடசாலை விடுதி வாசலில் வாடனிடம் தன்னை அறிமுகப்படுத்தி விட்டு

வாங்கில் ஓரமாக உட்கார்ந்தாள்.

மகளைக் கண்டதும்’’ராசாத்தி’’என்றபட

Link to comment
Share on other sites

கண்மணியக்கா தொடர்ந்து உங்கள் படைப்புக்களை தாருங்கள் காவலூர் என்பது எந்த ஊர் காரைநகரா??அல்லது நல்லூரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவலூர் என்று இன்று அழைக்கப்படுவது ஊர்காவற்றுறை.

Link to comment
Share on other sites

காவலூர் என்று இன்று அழைக்கப்படுவது ஊர்காவற்றுறை.

ஓ நீங்கள் ஊர்காவற்துறையா நல்லது :D

Link to comment
Share on other sites

கதை நெஞ்சை ஒரு கணம் உலுக்கிவிட்டது உங்கள் எழுத்து நடையில் வாழ்த்துகள் :) ......இது கதை அல்ல பல தாய்மார்களின் ஏக்கம் நிஜத்தில் நடக்கும் நாடகங்கள் கண்மணி அக்கா. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துத் தெரிவித்த சாத்திரி யமுனா இருவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

நெஞ்சை தொட்டு நிற்கின்றது கதையும் உங்கள் தொய்வில்லாத எழுத்தும். தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சத்தை கனமாக்கிய கதை வாழ்த்துக்கள் காவலூர் கண்மனி அக்கா

Link to comment
Share on other sites

கண்மணிக்கு வாழ்த்துக்கள்.

எதுவும் அருகாமையில் இருக்கும் போது அதன் கனதி யாருக்கும் புரிவதில்லை. தூரங்கள் ஆகும் போதுதான் தேவையும் துயரமும் மனிதரை துரத்துகிறது.

உங்கள் கதையின் ராசாத்தியும் அவள் அம்மாவும் எங்கள் மனங்களுக்குள் சிம்மாசனமிடுகிறார்கள்.

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

கதை மனதை கனமாக்கியது. கதைநடையும் கதையுடன் ஒன்றிப்போகவைத்தது வாழ்த்துக்கள் தொடர்ந்தும் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாந்தி

உங்கள் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

அவ் ஏழைத் தாயின் மனநிலையை மனத்திரை முன் கொணர்ந்து பார்த்தபோது கண்களில் கண்ணீரை வரவழித்து விட்டீர்கள் கண்மணி.

அன்று அத்தாயை ஒதுக்கியவள் இன்று தன் குழந்தையை என்ன செய்வாள்?

Link to comment
Share on other sites

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக எழுதி இருக்கிறீர்கள்..கண்கள் பனித்தன...கண்மணி அக்கா..நீண்ட நாட்கள் ஆகிவிட்டது உங்கள் ஆக்கம்கள் படித்து..வாழ்க்கை ஆற்றுக்குள் தொலைந்துபோய்விட்ட பல யாழ்கள படைப்பாளர்கள் போல் நீங்களும் காணாமல் போய்விட்டது கவலையாக இருக்கிறது...யாழ் வந்த ஆரம்பகாலங்களில் என்னைகவர்ந்த ஒருசில யாழ்கள படைப்பாளர்களில் கணமணி அக்காவும் ஒருவர். நன்றி நியாணி...

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தெரிவாக எனது சிறுகதையை எடுத்துவந்த நியானிக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இக் கதையைப் படித்தேன். நெஞ்சைப் பிசைந்துவிட்டது. வாழ்த்துக்கள் சகோதரி...!

 

ஊர்காவற்துறை , காரைநகர். இடையில் இருக்கும் ஜெற்றி பாதைப் பயணம், கடற்கோட்டை வாழ்வுடன் கலந்துவிட்ட காலங்கள்...! :rolleyes::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் சுவி. நீங்களும் எங்கள் ஊரின் சுற்றாடலைச் சேர்ந்தவர் என நினைக்கிறேன். அந்த அலை ஓசையையும் ஆலய மணியோசையும் இன்னும் எம் காதுகளில் ஒலித்தபடி......நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை சகோதரி ! நான் காரைநகர்  n.r.t.b. யில்  சில வருடங்கள் பணிபுரிந்தேன். kayts பக்கம் எல்லாம் நன்பர்கள் உண்டு....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கண்மணி

என்னத்தை ஒதுக்குகிறோமோ அது வலிய தேடி வரும் என்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஈழப்பிரியன் உங்கள் கருத்துப்பதிவுக்கு நன்றிகள். தாய்மையில்தான் தாயின் பாசத்தை முழுமையாக உணரமுடியும்.

சுவி நீங்கள் காரைநகரா? கூப்பிடு தூரத்தில்தான் உள்ளது. சென்றவருடம் கசுனாபீச்சுக்கு போய் வந்தோம். அழகான அந்த சவுக்குத் தோப்பு மனதில் நிற்கிறது. பதிவுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரைநகரில் வேலை செய்தேன்...!  எனது பிறப்பிடம் யாழ்ப்பாணம்  நீராவியடி...! :)

Link to comment
Share on other sites

கண்மணி அக்காவின் கதைக்கருக்கள் எல்லாம் கனதியாக இருக்கிறது. எனது நண்பனொருவனின் தாயை நினைவு படுத்தியது கதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை படீத்து கருத்தெழுதியமைக்கு நன்றிகள் விஸ்வா. இது என் வெள்ளைபுறா ஒன்று.. சிறுகதைத்தொகுதியில் உள்ளது. நன்றிகள்

Link to comment
Share on other sites

கதையை படீத்து கருத்தெழுதியமைக்கு நன்றிகள் விஸ்வா. இது என் வெள்ளைபுறா ஒன்று.. சிறுகதைத்தொகுதியில் உள்ளது. நன்றிகள்

 

நீங்கள் அண்மையில் எழுதிய  மற்றுமொரு கதையிலும் கூட கதையின் முடிவு இதே போல் அவர்களின் முன்வினை  பிள்ளையை  பாதித்திருந்தது போல் எழுதினீர்கள்.... மற்றுமொன்று கதையில் கதை மாந்தர்களை பற்றிய விவரணங்களை, அவரகளது  குணநலன்களை   அதிகமாக  சேர்க்கலாம்.... கதையில் பொதுவாக உரையாடல்கள் குறைவாக வருகிறது, கதை கதையாசிரியர் சொல்வது போல் இல்லமால் கதை மாந்தர் வாயிலாக வரும்  போது அவர்களது குணாதிசயங்கள் படிப்பருள்  நன்கு  உள்வாங்கப்படும்.... இவை எனக்கு தோன்றியவை கண்மணி அக்கா, தவறிருப்பின்  மன்னிக்க... 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 03:25 PM   உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும்இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவஅதிகாரியாக நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182029
    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
    • O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
    • 26 APR, 2024 | 03:16 PM   மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/182025
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.