Jump to content

உலகில் பசியோடு இருக்கும் 194 மில்லியன் மக்களின் வீடு இந்தியா, ஐ.நா. அறிக்கை


Recommended Posts

உலகில் பசியோடு இருக்கும் மக்கள் அதிகமாக உள்ள நாடுகள் பட்டியலில் 194 மில்லியன் மக்களுடன் இந்தியா முதலிடம் பிடித்து உள்ளது. சீனாவை மிஞ்சி உள்ளது என்று ஐ.நா.வின் ஆண்டு பட்டினி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலக அளவில் பசியோடு இருக்கும் மக்களின் எண்ணிக்கையானது 2014-15 ஆண்டில் 795 மில்லியனாக குறைந்து உள்ளது. கடந்த 1990-92-ம் ஆண்டுகளில் பட்டினியாக இருக்கும் மக்களின் எண்ணிக்கையானது ஒரு பில்லியன் ஆகும். உலகில் உணவுப் பாதுகாப்பின்மை நிலைகுறித்து (‘தி ஸ்டேட் ஆப் புட் இன்செக்குரிட்டி இன் தி வேல்ட் 2015’ ) ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு அறிக்கை சமர்பித்து உள்ளது. இந்தியாவில் பட்டினி குறைந்து உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 1990-92ம் ஆண்டுகளில் பசியோடு இருந்த மக்களின் எண்ணிக்கை 210.1 மில்லியனாக இருந்தது. தற்போது 2014-15ல் 194.6 மில்லியனாக குறைந்து உள்ளது.

ஐ.நா.வின் அறிக்கை, வளர்ச்சியின் முடிவானது உள்ளடங்கியதாக இல்லை என்று குறிப்பிட்டு உள்ளது. வளரும் நாடுகளில் கிராமபுறங்களில் உள்ள மக்கள் பசி மற்றும் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் அதிகசதவீதம் உள்ளனர். விவசாயத்துறையில் வளர்ச்சியை மேம்படுத்தும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கவேண்டும் என்றும், உள்ளடங்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் கிராமப்புறம் முக்கியமான கூறாக இருக்கமுடியும் என்றும் ஐ.நா. தெரிவித்து உள்ளது.

இருப்பினும் சீனாவில் பசியோடு இருக்கும் மக்களின் எண்ணிக்கையானது குறைந்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவை விட அதிகமான அளவு சீனாவில் குறைந்து உள்ளது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. சீனாவில் பசியோடு இருக்கும் மக்களின் எண்ணிக்கை 1990-92-ம் ஆண்டைய கணக்கெடுப்பின் போது 289 மில்லியனாக இருந்தது. தற்போது 2014-15ல் 133.8 மில்லியனாக குறைந்து உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.Fud.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/43763.html#sthash.FFFpnwFf.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உலகில் பசியோடு இருக்கும் 194 மில்லியன் மக்களின் வீடு இந்தியா, ஐ.நா. அறிக்கை

 

 

நான் நம்பமாட்டன்.  :D
 
நூறு கோடி செலவில் திரைப்படமெடுத்து மக்களை மகிழ்விக்கிற பாரதத்தை!!!!!!!
சந்திரனுக்கு ராக்கெட் விட்டு மண் அள்ளிய இந்தியாவை!!!!!!!
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் ஆராய்ச்சி செய்யும் அயல் நாட்டை!!!!!!!
ஆசியாவின் வல்லரசை!!!!!
ஐநா கேவலப்படுத்துகின்றது. :lol:
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.