Jump to content

கணினி / லேப்டாப்பில் எளிதாக வாட்ஸ் ஆப்-பை உபயோகிப்பது எப்படி...?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கணினி / லேப்டாப்பில் எளிதாக வாட்ஸ் ஆப்-பை உபயோகிப்பது எப்படி...?

ஆண்ட்ராயிட் மொபைல், ஐபோன் மற்றும் டேப்லட்டுகளில் மட்டுமென பிரத்யேகமாக இருந்து வந்த வாட்ஸ் ஆப்-பை இனி நமது PC, லேப்டாப்பிலும் பயன்படுத்த முடியும்.
 
மொபைல், PC, லேப்டாப், டேப்லட் போன்ற அனைத்து டிவைசிலும் ஒரே நேரத்தில் வாட்ஸ் ஆப்-பை பயன்படுத்தலாம். ஒரு டிவைசிலிருந்து அனுப்பப்படும் மெசேஜ் அனைத்து டிவைசிலும் sync ஆகி விடும். மொபைலில் சிரமப்பட்டு  டைப் அடிப்பதை விட கணினியில் எளிதாக வேகமாக வாட்ச் அப் அனுப்புவது  இலகுதானே?

எப்படி PC / லேப்டாப்பில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது ?

முக்கியமாக இதனை பயன்படுத்த மொபைல் மற்றும் உங்கள் கணினி ஒரே நேரத்தில் இணையத்துடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

Step 1

 
மொபைலில் உள்ள வாட்ஸ் ஆப்-பை ஓபன் செய்து, மேல் வலது புறத்திலுள்ள மூன்று புள்ளிகள் போன்ற அமைப்பை க்ளிக் செய்து அல்லது ஆண்டிராயிட் மொபைலில் ஆப்சன் பட்டனை அழுத்தி ... ,  'வாட்ஸ்ஆப் வெப்' என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.

1.png

Step 2

இப்பொழுது மொபைலில் QR ரீடர் ஓபன் ஆகி இருக்கும். PC / லேப்டாப்பில், கூகிள் க்ரோம் பிரவுசரில் "web.whatsapp.com" என்ற லிங்கை டைப் செய்து, திரையில் தோன்றும் code -ஐ மொபைல் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும்.

2.png

Step 3

ஸ்கேன் செய்த அடுத்த நிமிடம் PC / லேப்டாப்பில் கான்டாக்ட்ஸ் மற்றும் கான்வர்சேஷன் திரையில் தோன்றி வாட்ஸ் ஆப் பயன்படுத்த தயாராகி விடும்.
 
புதிய மெசேஜ் வந்தால் notify செய்யும் ஆப்ஷன்-ஐ PC / லேப்டாப்பில் on செய்து கொள்ளலாம். இதன் மூலம் புதிதாக வரும் மெசேஜ் திரையில் பாப் அப் ஆகும்.

3.png
Step 4

இனி  புதிதாக ஒரு சாட்-ஐ தொடங்கலாம். நமது ப்ரொபைல் படம் மற்றும் ஸ்டேடஸ்-ஐ PC / லேப்டாப்பிலிருந்து அப்டேட் செய்து கொள்ளலாம்.
மொபைலுக்கு வரும் மெசேஜ்கள் PC / லேப்டாப்பிலும் இருக்கும். இதில் அழிக்கப்படும் மெசேஜ்கள் மொபைலிலிருந்தும் அழிந்து விடுமாறு இது sync செய்யப்பட்டுள்ளது.

4.png

Step 5

மொபைலிலிருந்து 'வாட்ஸ் ஆப் வெப்' என்ற ஆப்ஷனை தற்போது க்ளிக் செய்தால், லாஸ்ட் ஸீன் மற்றும் PC / லேப்டாப்பிலிருந்து லாக் அவுட் செய்து கொள்ளும் ஆப்ஷன்கள் இருக்கும்.

கணினி / லேப்டாப்பில்  வாட்ஸ் ஆப்  பயன்படுத்துவது  குறித்து வாட்ஸ் ஆப்-பின் உதவி பக்கம் : http://www.whatsapp.com/faq/en/web/28080003

எளிமையாக விளக்கும் வீடியோ

 
 'வாட்ஸ் ஆப் வெப்' - குறிப்பிடும்படியான அம்சங்கள்

  • PC / லேப்டாப்பில் பெரிய திரை என்பதால்,மொபைலில் இருந்து சாட் செய்யும் போது தோன்றும் மெசேஜ்களை விட இதில் இன்னும் கூடுதல் மெசேஜ்கள் தோன்றும்.
  • வாட்ஸ் ஆப் வெப்பிலிருந்து லாக் அவுட் செய்த பிறகு, மறுமுறை PC / லேப்டாப்பில் வாட்ஸ் ஆப் பயன்படுத்த மீண்டும் QR code ஸ்கேன் செய்ய வேண்டும்.
  • ஏற்கனவே இருக்கும் கான்டாக்ட்ஸ் மற்றும் குரூப்பிற்கு மெசேஜ் செய்ய முடியுமே தவிர, புதிதாக ஒரு குரூப் உருவாக்க முடியாது.
  • புது மெசேஜ் வந்தால் PC / லேப்டாப்பிலும் நோட்டிபிக்கேசன் வரும்.
  • வாட்ஸ் ஆப் வெப்-ஐ PC / லேப்டாப்பிலிருந்து பயன்படுத்த வேண்டுமென்றால், மொபைலிலும்   இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
  • டைப் செய்ய ஏதுவாக, பெரிய திரையில் மெசேஜ்களை விசாலமாக பார்க்கும் வசதி தவிர வேறு வாட்ஸ் ஆப் வெப் கென பிரத்தியேகமாக எந்த வசதியும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
  • http://www.techmalar.com/2015/05/pc.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுடன் கூடிய இணைப்பிற்கு நன்றி பெருமாள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.