Jump to content

அவர்கள் இன்னும் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்...


Recommended Posts

முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் கடந்து போன நாளொன்றில், 'வன்னியுத்தம் " என்ற பொத்தகம் ஒன்றை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எழுத்தாளர் 'அப்பு" கண்ணீரையும் இரத்தத்தையும் சாட்சி வைத்து எழுதியிருந்த அப்பதிவில் எனது இதயத்தை ஊடுருவிய பக்கமொன்றை வாசகர்களுக்காக அப்படியே தருகின்றேன்.

1998ம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்துடன் நடந்த ஒரு மோதலில் விசுவமடுவைச் சேர்ந்த ஒரு இளைஞன் வீரச்சாவடைந்தான்;. அந்த விபரத்தை அவனது குடும்பத்திற்கு அறிவிக்கும்படி விசுவமடு அரசியல் துறை பொறுப்பாளருக்கு அறிவிக்கப்பட்டது.

உடனே அந்த விசுவமடு பொறுப்பாளர் தனது உந்துருளியில் அந்த மாவீரனின் வீடு நோக்கி புறப்பட்டார். அப்போதுதான் முதன் முதலாக அந்த பொறுப்பாளர் அந்த வீட்டுக்கு செல்கின்றார். அது வரை ஒரு போராளியின் வீடு அங்கே இருப்பது அவருக்கு தெரியாது.

வீடு எந்தவித அச்சறுக்கையோடும் இருக்கவில்லை. நான்கு பக்க வேலியும் திறந்து கிடந்தது. வீடோ மேச்சல் போகம் என்றோ தவறிப்போன சிறிய கொட்டிலாக இருந்தது. பொறுப்பாளர் அந்த வீட்டுக்கார அம்மாவின் பெயரைச்சொல்லி அழைத்தார்.

பரட்டைத்தலையுடனும் பஞ்சடைத்த கண்களுடனும் 15 வயது சிறுமி தன் இடுப்பில் ஒரு பிள்ளையுடனும் வெளியில் வந்தாள். அந்த சிறுமிக்கு பக்கத்தில் ஜிப்பு இல்லாத பின்பக்கம் கிழிந்த அரைக்கால் சட்டையுடன் ஒரு சிறுவன் அவளது பாவாடையை பற்றியவாறு நின்றுகொண்டிருந்தான். அவர்களது தகப்பனார் ஏற்கனவே அவர்களை விட்டு பிரிந்திருந்தார். தாய் மட்டுமே அக்குடும்பத்தை தாங்கி நின்றார்.

அம்மா நிக்கிறாவா? என் அப்பிள்ளைகளிடம் வினவிய போது அம்மா விசுவமடு சந்தையில் நிக்கிறவா என பிள்ளைகள் பதில் கூறினார்கள். சந்தையில் சிறு வியாபாரம் செய்வதாக நினைத்துக்கொண்ட பொறுப்பாளர். சந்தையை நோக்கி புறப்பட்டார்.

மரக்கறி சந்தையில் விசாரித்தபோது அந்த தாய் அங்கு இருக்கவில்லை அந்த தாயின் வீட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவன் பொறுப்பாளர் விசாரிப்பதனை அவதானித்து விட்டு அந்த மாவீரனின் தாய் நிக்கும் இடத்தை பொறுப்பாளருக்கு காண்பித்தான். . . . .

இந்த தேசத்திற்காக தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி மடிந்த ஒரு மாவீரனின் தாய் தன் எஞ்சிய பிள்ளைகளின் பசியைப்போக்க கிழிந்த சேலையுடன் சந்தைக்குள் பிச்சை எடுத்துக்கொண்டடிருந்தாள்.(நன்றி அப்பு எழுதிய - வன்னியுத்தம்)

நெஞ்சையுருக்கும் இச்சம்பவத்தில் குறிப்பிட்ட குடும்பத்தைப் போன்று இன்னும் எத்தனையோ குடும்பங்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

பெண்தலைமை தாங்கும் குடும்பங்கள், ஒற்றை பெற்றோர் குடும்பங்கள், மாற்றுவலுவுள்ளோர், மனைநிலை பாதிப்புற்றோர், அரசியல்கைதி, காணமல்போனவர், முன்னாள்போராளி, புனர்வாழ்வு என்ற இன்னோரன்ன ஊடக குறியீட்டு சொற்களில் ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றை தமக்குரியதாக்கி நாளாந்தம் வலிகளுடன் வாழ்ந்து வரும் மாவீரர், போராளி குடும்பங்களை பொறுத்தவiரையில் ஒட்டு மொத்த தமிழினத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் இன்று தங்கள் சொந்த சமூகத்திலிருந்து பாதுகாப்பு பெற போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

மௌனிக்கப்பட்டது வெடியோசைகள் மட்டுமே. முள்ளிவாய்காலில் இறுதிநாட்களில் எஞ்சியிருந்த போராளிகளின் தலைகளில் அனைத்து போராட்டப்பளுவும் சுமத்தப்பட்டிருந்தது.

களப்பணியில் நின்ற ஒரு போராளிக்கு செய்தியொன்று வருகின்றது. அவரது மனைவிக்கு பிரசவவலியேற்பட்டு மிகவும் அவதிப்பட்டுக்கொண்டிருப்பதாக. ஆனால் அவர் அவ்விடத்தை விட்டு செல்ல முடியாத நிலைமை இருந்தது. மிகுந்த சகிப்புத்தன்மையுடன் தனது பணியில் அவர் தொடர்ந்தும் ஈடுபட்டார்.

அன்று இரவு நடந்த எறிகணை வெடிப்பு சம்பவத்தில் அவர் வீரச்சாவடைந்து விட்டார். அம் மாவீரனின் வித்துடல் விதைப்பிற்கு அவரது மனைவி இயலாத உடலுடனும் பிறந்த ஒரு நாளான அவரது குழந்தையுடனும் வந்து வீரவணக்கம் செலுத்தியது விடுதலைப் போராட்ட வரலாற்றில் பதியப்பட வேண்டிய செய்தி.

ஆனால் அதன் பின் நடைபெற்றதோ கொடுமையிலும் கொடுமை.

போர் முடிவடைந்து தனது கிராமத்துக்கு மீள குடியமர வந்த அந்த குடும்பம் தனது கணவரின் இறப்பை சிறிலங்காவில் சட்டரீதியாக பதிவு செய்வதன் மூலம் சிறு நிவாரணத்தையாவது பெற்று, பிள்ளைகளின் பசியை போக்கலாம் என்று கருதிய அம்மாவீரனின் மனைவி அப்பகுதிக்குரிய அரச செயலகத்தை நாடுகின்றார்.

அவருக்குரிய நிர்வாகப் பணிகளை செய்து கொடுக்க சட்டப்படி கடமைப்பட்டுள்ள அங்கிருந்த அதிகாரி ஒருவர் அப்பணிகளை செய்து கொடுத்த அதேவேளை அதற்குப் பிரதியுபகாரமாக அம்மாவீரனின் மனைவியிடம் இருந்து பாலியல் இலஞ்சத்தை எதிர்பார்த்தார்.

மிகவும் அதிர்ச்சியடைந்த அப்பெண் தனது நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் தனது கவலயை தெரிவித்துள்ளார். அதனை மீறி ஏதும் செய்ய முயன்றால் அப்பெண் மீதே விபச்சாரிப்பட்டம் கட்டப்பட்டு விடும் சூழ்நிலை தான் தமிழர் தாயகத்தில் தற்போது நிலவி வருகின்றது. நீதியை எதிர்பார்க்க இது என்ன புலிகளின் காலமா? இது உதாரணத்துக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம்.

இதே போன்று வீரச்சாவடைந்த, காணமல்போன சிறையில் அடைக்கப்பட்ட போராளிகளின் குடும்பங்களின் மீது குறிப்பாக பெண்களின் மீது தமிழ் இனத்தில் பிறந்த 'சமூகக் குற்றவாளிகள்" செய்த செய்துவரும் அருவருப்பான குற்றங்களுக்கு யாரை நோவது.? இது தாயகத்தில் என்றால் புலத்தில் வேறு விதமாக கதை போகின்றது.

தமிழீழ போராட்டத்தில் பங்கு பற்றிய எனது நண்பர் ஒருவர் 2009 மே மாதத்தின் பின்னர் பல துன்பங்களை அனுபவித்து ஒருவாறாக நாட்டை விட்டு தப்பியோடி ஜரோப்பாவுக்குள் கால் பதிக்கின்றார். சூழல், காலநிலை, மொழி, மனிதர்கள் என அனைத்துமே புதிதாக இருந்தது. அவர் இடைத்தங்கலாக ஒரு வீட்டில் தங்க வேண்டியேற்பட்டது.

அவர் சென்றிருந்த நேரம் அவ்வீட்டு உரிமையாளர் வேலைக்கு சென்றிருந்தார். அவரது மனைவி இவரை வரவேற்று வீட்டில் இருக்க சொல்லிவிட்டு அவரும் வெளியே சென்று விட்டார். அந்த வீட்டில் பெரியளவிலான தேசியத்தலைவரின் படமும், தமிழீழ தேசியக்கொடியும் வைக்கப்பட்டிருந்ததை அவதானித்த அவர். 'தான் சரியான இடத்திற்கு" வந்திருப்பதாக உணர்ந்து நிம்மதிப்பெருமூச்சு விட்டார்.

ஆனால் நடந்ததோ வேறு அன்று மாலை அவரைச் சந்தித்த அந்த வீட்டு உரிமையாளர் பேசிக்கொண்டிருக்கும் பொழுது கதையோடு கதையாக 'தடுப்பில் இருந்து வந்த உங்களை என்னென்று நம்புவது"? என்று கேட்டுவிட எனது நண்பர் இடிந்து போய்விட்டார். பின்னர் என்னிடம் கதைக்கும் போது இவர் 'உலகில் எங்களை போன்று நிலைமை எந்த ஒரு போராளிக்கும்" வரக்கூடாது என்றார்.

தனது நாட்டிற்காக சிறை சென்று ஊர் திரும்பும் போராளிகளும், வீரர்களும் தம்மினத்தின் மக்களால் வரவேற்கப்பட்டு மதிக்களிக்கப்படுவதே உலக வரலாறு ஆனால் தமிழ்ப் போராளிகளுக்கு மட்டும் இது விதி விலக்காகி விட்டது.

அநேக முன்னாள்; போராளிகளின் தயவான வேண்டுகோள் என்னவென்றால் எங்களுக்கு நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். உங்களுடய குறுகிய நலன்களுக்காக எங்களை கேவலப்படுத்தாதீர்கள் என்பதுதான்.

மிகவும் வேதனையான விசயம் என்னவெனில் இந்த சேறடிப்புகளின் விளைவாக ஒவ்வொரு போராளிகளின் தனிப்பட்ட தியாகங்களும், திறமைகளும் அதனால் அவர்கள் இப்போதும் பட்டுவரும் உடல், உள துன்பங்களும் கொச்சப்படுத்தப்படுகின்றமைதான்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் 33 வருட போராட்ட வரலாற்றில் போராட்ட பணிக்காக ஒரு உப்புக்கல்லைக்கூட தூக்காத ஒருவர் புலம்பெயர் நாட்டின் தேசியம் சார்ந்த அமைப்பொன்றின் பிரமுகராகவுள்ளார். அவரது மேடைப்பேச்சுக்களையும் ஊடக அறிக்கைகளையும் நம்பிய எனது நண்பர் ஒருவர் அவரிடம் உதவியொன்றை கோரி நின்றார்.

அதாவது வன்னி மாவட்டம் ஒன்றில் இருக்கும் உடல் அவயவங்களை இழந்த முன்னாள் போராளிகள் சிலர் (அவர்கள் புனர்வாழ்வு பெற்று விடுதலையானவர்கள்) இணைந்து ஆடை தயாரிப்பிலும், பாடசாலைப் பை தயாரிப்பிலும் ஈடுபட்டனர். அவர்களின் உற்பத்தி பொருட்களை ஜரோப்பாவின் நாடொன்றில் விற்பனை செய்வதற்கான அநுசரணையை பெறும் நோக்குடன் அவரை சந்தித்தார்.

அது பற்றிய ஆவணங்களையும், உற்பத்தி மாதிரியின் ஒளிப்படப் பிரதிகளையும், கையளித்து விளக்கமளித்தார். எல்லாவற்றையும் செவிமடுத்த அவர், நையாண்டி பாணியில் 'இவையள் அரசாங்கத்திட்ட புனர்வாழ்வு பெற்ற பெடியள் நீங்க போய் ராஜபக்சவிட்டையே உதவி கேளுங்கோ" என்று கூறிவிட்டார். ஏமாற்றத்தின் விளிம்புக்கு சென்ற அந்த நண்பர் இப்போது தமிழ் தேசியம் தொடர்பாக கதைப்பவர்களுடன் கதைக்காமல் விட்டு விட்டார்.

இச்சம்பவங்களை எழுதுவதன் ஊடாக எவரையும் குற்றம் சாட்;டவோ, அல்லது நியாயப்படுத்தவோ, அனுதாபத்தை பெறவோ முனையவில்லை.

ஆனால் இலங்கை தீவில் தமிழ் மக்களுக்கு தனியான தேசம் அமைப்பதற்காக முழுமூச்சுடன் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நேரடிப் பங்காளிகளாகி அதில் இணைந்து போரிட்ட போராளிகளும், அவர்களின் குடும்பங்களும் அன்றிலிருந்து இன்றுவரை சுமக்கும் சுமைகள் கொஞ்சநெஞ்சமல்ல. அதன் வலியை உணரச்செய்வதில் சிறு முயற்சியாகவே எழுதியுள்ளேன்.

போர் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்து கொண்டே போகின்றது. ஆனால் போரின் போது தமது பிரதான உழைப்பாளிகளை, குடும்ப அங்கத்தவர்களை, உடல் அங்கங்களை இழந்தும், கடுமையான காயங்கள் பட்டும், அசையும் அசையா சொத்துக்களை இழந்தும், சமுதாய பாதுகாப்பிலும் பொருளாதார நிலைமையிலும் கடுமையான பின்னடைவுகளை சந்தித்துள்ள போராளி, மாவீரர் குடும்பங்களினால் இன்றும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை.

அடிப்படை தேவைகளான மனித உரிமைகள், சமூக தேவைகள், பாதுகாப்பு, சுய கௌரவம், பொருளாதாரம் மீது தாக்கத்தை விளைவிக்கும் காரணிகள் மீதான அவர்களின் 'எதிர்ப்புசக்தி" இல்லாமல் செய்யப்பட்டுள்ளதால் 'சமூகக் குற்றவாளிகள்" என்ற கிருமி(னல்)களின் தாக்கத்திற்கு இலகுவில் உள்ளாகின்றனர்.

இக்கிருமி(னல்)களிடமிருந்து தப்பி பிழைப்பதற்காக தமது சொந்த சமூகத்துக்குள்ளேயே நாளாந்தம் போராடிக்கொண்டிருக்கும் முன்னாள் போராளிகள், மாவீரர், போராளி குடும்பங்களை பாதுகாக்க வேண்டிய வரலாற்று கடமை நம் எல்லோருக்கும் உரியதே.

மீண்டும் நினைவுபடுத்துகின்றேன்,

ஒட்டு மொத்த தமிழினத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் இன்று தங்கள் சொந்த சமூகத்திலிருந்து பாதுகாப்பு பெற போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் வரும்.

உயிர்த்தமிழ்.

http://www.tamilwin.com/show-RUmtyFRdSUgpzG.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எமக்கான சாபக்கேடு,ஒன்றும் செய்யமுடியாது.

Link to comment
Share on other sites

 

 

மிழீழ விடுதலைப் புலிகளின் 33 வருட போராட்ட வரலாற்றில் போராட்ட பணிக்காக ஒரு உப்புக்கல்லைக்கூட தூக்காத ஒருவர் புலம்பெயர் நாட்டின் தேசியம் சார்ந்த அமைப்பொன்றின் பிரமுகராகவுள்ளார். அவரது மேடைப்பேச்சுக்களையும் ஊடக அறிக்கைகளையும் நம்பிய எனது நண்பர் ஒருவர் அவரிடம் உதவியொன்றை கோரி நின்றார்.

இணைப்புக்கு நன்றிகள் பகலவன் .

 

 

Link to comment
Share on other sites

ஒட்டு மொத்த தமிழினத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் இன்று தங்கள் சொந்த சமூகத்திலிருந்து பாதுகாப்பு பெற போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

 

 

 

மிகவும் துரதிஸ்டமானது. அவர்கள் செய்த ஒரே பிழை எமது இனத்துக்காக போராடியது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் 33 வருட போராட்ட வரலாற்றில் போராட்ட பணிக்காக ஒரு உப்புக்கல்லைக்கூட தூக்காத ஒருவர் புலம்பெயர் நாட்டின் தேசியம் சார்ந்த அமைப்பொன்றின் பிரமுகராகவுள்ளார். அவரது மேடைப்பேச்சுக்களையும் ஊடக அறிக்கைகளையும் நம்பிய எனது நண்பர் ஒருவர் அவரிடம் உதவியொன்றை கோரி நின்றார்.

நன்றி பகலவன்

அதைவிடக் காலத்துக்குக் காலம் புலிகள் அமைப்பில் இருந்து விலகி அவ்வப்போது புலம்பெயர்ந்து விட்டு பின்னர் தாங்கள் புலிகள் என்று படங்காட்டி பிழைப்பவர்களும், போர் தொடங்க முன்னரே சும்மா ஒரு சீனவெடிச் சத்தத்துக்கு வெளிநாட்டுக்குப் பறந்து தன்னுடைய சுற்றம் முழுவதையும் வெளிநாட்டுக்குப் பாதுகாப்பாக எடுத்துவிட்டு அடுத்தவன் பிள்ளை உயிரில் தமிழீழம் காணத்துடித்தவர்களும் தற்போது தாயகத்தில் ஏதோ ஒருவகையில் சிறிதளவாயினும் இயல்பு நிலை திரும்பி முன்னாள் போராளிகள் அடங்கலாக மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கு தடையாக நிற்கின்றனர். இவர்களின் தேவை தாங்களைத் தொடர்ந்தும் தேசியவாதிகளாகக் காண்பித்து படங்காட்டுவதே ஆகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் புலிகளின் தலைமை அழிந்து போராட்டம் முற்றுப்பெற்றபோது போராளிகளையும் மக்களையும் புலம்பெயர் தேசியவாதிகள் கைவிட்டுவிட்டனர். சிறிலங்கா அரசுக்கூடாகத்தான் உதவிசெய்யவேண்டிய நிலை உள்ளது என்பதால் உதவி செய்யும் நிலை என்று சாட்டுச் சொல்லி மக்களை அந்தரிக்கவிட்டனர். உறவினர், நண்பர்களினதும், முன்னர் போராளிகளாக இருந்து புலம்பெயர்ந்தவர்களினதும் கருணையாலும் ஒரு பகுதியினர் ஓரளவு உதவிகளைப் பெற்றனர். ஆனால் எந்தவொரு கட்டமைப்பும் இல்லாமல் உதவிகள் ஒழுங்குபடுத்தப்படாமல் உள்ளதால் பலர் ஆறு வருடங்கள் கடந்த பின்னரும் இன்னும் அவல வாழ்வில் அல்லல்படுகின்றனர்.

மைத்திரியின் நல்லாட்சி நிலவும் இக்காலத்திலும் ஒரு வேலைத்திட்டத்தை ஒருமுகமாக செயற்படுத்த எவரும் முன்வந்ததாகத் தெரியவில்லை.

அத்தோடு சரியான அரசியல் வழிநடத்தல் இல்லாவிட்டால் சமூகக் குற்றவாளிகள் பெருகுவதும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்றுவதும் தவிர்க்கமுடியாதது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.