Jump to content

பெண்கள் மீதான வன்கொடுமைகளும் நியாயந் தேடும் சமூகங்களும் - கலாநிதி.சி.ஜெயசங்கர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் மீதான வன்கொடுமைகளும் நியாயந் தேடும் சமூகங்களும்

- கலாநிதி.சி.ஜெயசங்கர்

29 மே 2015

Rape_CI.jpg

உலகின் வளர்ச்சிப் போக்கில் பெண்ணிலைவாத முன்னெடுப்பு மிகுந்த முக்கியத்துவம் உடையது. அது எந்த வகையிலும் வன்முறைகளை ஏற்றுக் கொள்ளாதது. இதன் காரண மாகவே ஒடுக்கு முறைகளிலில் இருந்து விடுவித்தலுக்கான ஏனைய முன்னெடுப்புக்களுடன் முரண்பாடுகளை எதிர் கொண்டும் வருகின்றது. ஏனெனில் ஏனைய எந்த வொரு விடுவித்தலுக்கான முன்னெடுப்புக்களும் ஏதோ ஒருவகையில், ஏதொவொரு கட்டத்தில் வன் முறையை ஏற்றுக் கொள்வதாக வேநிலைமைகள் இருந்துவருகின்றன.

பெண்ணிலைவாத முன்னெடுப்புக்கள் வாழ்க்கையை அதன் இயல்புடன் எதிர கொள்கின்றன. சமத்துவமான வாழ்க்கையும், உரிமையும் வேண்டுவதுடன் பூக்களையும் வேண்டுவதாகவும் அவை இருந்து வருகின்றன.

இந்தப் பின்னணியில் பெண்கள் வன் முறைகளுக்கு ஆளாக்கப் படுவதும், கொல்லப் படுவதும் ஒரு தனித்த நிகழ்வு அல்ல. அது ஒரு சமூகப் பண்பாடாகவே இருந்து வருகின்றது. புங்குடுதீவு பள்ளி மாணவி மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன் முறைமற்றும் கொலையை முன்வைத்து நிகழும் எதிர்ப்புக்கள் மேற்படி கூற்றை வெளிப்படுத்தி நிற்பதை எவரும் அவதானிக்கலாம். ஒரு சிறு குழுவைக் குற்றவாளிகளாக நிறுத்தி அவர்கள் மீதும் அவர்களை முன்வைத்தும் நிகழ்த்தப்படும் எதிர்ப்புக்களும் அனர்த்தங்களும் எங்களை எங்களுக்கு அறிவிப்பதாக இருக்கின்றது.

மேலும் பெண்களது காவலர்களாக ஆண்கள் தங்களை ஆக்கிக் கொள்வது, காலாதி காலமாக பெண்கள் மீதான ஆதிக்கத்தையும் அடக்கு முறையையும் மீளவும் வலியுறுத்தி வலுப் படுத்துவதிலேயே வந்து முடிகின்றது.

எந்த வகையிலும் வன்முறையை எதிர்ப்புவடிவமாக ஏற்றுக் கொள்ளாத பெண்ணிலைவாத முன் னெடுப்புக்களின் அம்சமாக அமைந்திருக்க வேண்டிய எதிர்ப்புப் போராட்டம் எந்தவகையிலான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் சாத்தியமற்ற சூழலை உருவாக்கி இருப்பது வேதனைக்குரியது.

இது தேவ, அசுரகதைகளைக் கேட்டு, அறிந்துவளர்ந்த சூழலின் விளைவு என்பதையும் நிராகரிக்க முடியாது. ஏனெனில் புராண இதிகாசக் கதைகளிலும் சரி, புதியதிரை, சின்னத்திரை கதைகளிலும் சரிநாயகர்களின் அநியாயங்கள்; பார்க்கப் படுவதில்லை. அதுபோல் வில்லன்களின் அல்லது அசுரர்களின் நியாயங்கள் பார்க்கப் படுவதே இல்லை. பாடப் புத்தகங்களில் இருந்து பாட்டாபாட்டி கதைகள் வரைநிலைமை இதுவாகத்தான் இருந்துவருகின்றது.

புதிய, மாற்று வாசிப்புக்கள் பொதுசன உரையாடல்களுள் இன்னும் புளங்கத் தொடங்கவில்லை.மாறாகஅதிநவீன இலத்திரனியல் தொழில் நுட்பங்கள் வழியும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியகதைகளே கூறப்பட்டு வருகின்றமையும் கவனத்திற்கு உரியதாகிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உலகம் முழுவதும் நிகழ்த்தப்பட்டு வருகின்ற பொழுதும் அது அதீதமாகவும் குற்ற உணர்வற்ற வகையிலும் இந்தியத் துணைக் கண்டத்தில் காணப்படுவதற்கு புராண இதிகாசங்களே காரணமாக இருக்கின்றன என்பதை பேராசிரியர் 'காஞ்சஎலையா'தனது ஆய்வில் வெளிப்படுத்தி இருப்பது இந்தச் சந்தர்ப்பத்தில் பொருத்திப் பார்க்கப்பட வேண்டியது.

புராண இதிகாசங்களில் வரும் தேவத்தன்மை பொருந்திய பாத்திரங்கள் பெண்கள் மீதுநிகழ்த்தி வந்திருக்கின்ற வன்முறைகளை லீலைகளாக அல்லது அவற்றிற்கு நியாயம் கற்பிப்பது, பெருமை கொண்டாடுவது வழக்கமாகி இருக்கின்றது. இந்தப் பண்பாட்டு அனுபவங்கள் பெண்கள் மீதான வன்முறைகளை இயல்பானவையாக நம்பவைத்து வருகின்றன. ஆண்மை பெண்மை என்ற மரபுரீதியான விளக்கங்கள், வியாக்கியானங்கள் ஊடாக இக்கருத்தாக்கங்கள் தொடர்ந்து நிலை நிறுத்;தப்பட்டு வருகின்றன.

ஆண் ஆதிக்கத்தை புனரமைப்புச் செய்ய முனைந்து கொண்டிருக்கும் அனைத்து சமூகங்களது புராணங்களும் இந்தவகையிலான பணியினைச் செய்யும் வகையிலேயே மீள உற்பத்தி செய்துபரவலாக்கம் செய்வது நிகழ்ந்துவருகின்றது. இந்தவகையில் அதிகாரத்திலிருப்போர் கல்வி, வெகுசன ஊடகம் என்பனவற்றை கச்சிதமாகக் கையாண்டு வருவ தொன்றும் ஒழிவுமறைவானதல்ல.

பெண்களை தெய்வமாகவும் பேயாகவும் போகப் பண்டமாகவும் சித்திரிப்பதிலிருந்து எங்களை விடுவித்துக் கொண்டு பெண்களுடன் சக மனிதர்களாக சேர்ந்து வாழும் வாழ்க்கையை ஆக்கிக் கொள்வதே தேவையானது. பொறுப்புணர்வுடைய ஆண்களாக வாழ்தலின் அடிப்படை இதுவாகத் தான் இருக்க முடியும்.

எனவே அசுர- தேவ, நாயக- வில்லன் - வில்லிபார்வையில் இருந்து விடுவித்துக் கொண்டு பெண்ணிலைவாத முன்னெடுப்புக்களின் சாராம்சத்தைப் புரிந்து கொண்டு பொதுசனக் கவனிப்பிற்கு வந்த ஒரு சிலசம்பவங்களுடன் மட்டுப்படுத்திக் கொள்ளாது பொதுசன கவனிப்பிற்கு வராத பல்வேறு சம்பவங்களையும் கருத்திற் கொண்டு முன்னெடுப்புக்களை மேற் கொள்வது பொருத்த முடையது. முன்னெடுப்புக்களின் தொடர்ச்சி என்பது முக்கியமானது. குறித்த சிலகாலம் வெகுசன ஊடகங்களுக்கு தீனிபோடும் விடயமாக மட்டுப்படுவதன் பலா பலன்கள் கேள்விக்குரியவை ஆகியிருக்கின்றன.

பாதிக்கப்பட்டவர்கள் நீதி பெறுவதும் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளாமல் இருப்பதற்கான முன்னெடுப்புக்கள் அவசியமானவை. இதற்கும் மேலாக, குற்றவாளிகள் என அழைக்கப்படுபவர்கள் ஒன்றும் பாதாளக் குகைகளில் இருந்து உருவாகி வந்தவர்கள் அல்லர். எல்லோரையும் போல் தாயின் கருவறையில் உருவாகி, தாயின் உதிரத்திலும் வியர்வையிலும் வளர்ந்துவெளியாகி இந்தச் சமூகத்தினால் வடிவமைக்கப்பட்டவர்கள். இந்த சமூகங்களின் வன்முறைச் சூழல்களால் உருவாக்கப்பட்டவர்கள். இந்தவன்முறைக் கூறுகள்அற்ற இயல்பினர் நாமெனஎவர்தான் கூறமுடியும்? இந்தவன் முறைச் சூழலில் இருந்து விடுபடுவது எமது முதன்மை நிபந்தனை ஆக இருக்கின்றது.

எமதுவன்முறைச் சூழலுக்கு எவை யெவை எந்தவகையில் பங்களிப்புச் செய்துவருகின்றன. இவற்றை எல்லாம் விரும்பிஏற்றுக் கொள்பவர்களாக நாங்கள் எந்த வகையில் இருந்து வருகின்றோம்.

வன்முறையும் பாலியல் பலாத்காரமுமேவாழ்க்கைஎனக் கட்டமைக்கும் நட்சத்திர நடிகர்கள், நெறியாளர்களது சினிமாப் பண்டங்களை நிராகரிப்பதிலிருந்து எமது ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களைத் தொடங்குவது எந்தவகையில் சிரமசாத்தியமானது?

புலம்பெயர் ஈழத்தமிழர்களைச் சந்தையாக வைத்து செய்யப்படும் சினிமாப் பண்ட வியாபாரத்தில் இருந்து விடுவித்து ஆக்கபூர்வமான சமூக உருவாக்கங்களுக்கான சினிமாக்களை வரவேற்பது எந்தவகையில் இயலா தவிடயமாகிவிடும்?

வன்முறைகளையும் பாலியல் வக்கிரங்களையும் கச்சாய்ப் பொருளாகப் பாவிக்கும் வெகுசனஊடகங்கள் மீதும் பொதுசனக் கவனிப்பு ஏற்படுவதும் இதனுடன் தொடர்புடையது.

இந்தவகையில் குடும்பங்களாகவும், சமூகங்களாகவும் வாழ்வதற்கான கலைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள் எங்களைஎங்களுக்குஅறிவிக்கும.; எங்களைவிடுவிக்கும்.

ஆக்கபூர்வமானதொரு சமூக உருவாக்கத்திற்கான முன்னெடுப்புக்களுக்காக உரையாடல்களும் உரையாடல்களை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகளும் தொடர்ச்சியையும், பகிர்வையும் வேண்டி நிற்பவை.

இந்தப் பூமிதான் எங்களின் சொர்க்கம். இந்தப் பூமியில் எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கும் வாழ்வு செய்ய வேண்டும். சிறைச்சாலைகள் நீங்கி அன்புச் சாலைகள் பெருகும் புதியதோர் உலகு செய்வோம்.

நாங்கள் வாழ வேண்டும் இந்தப் பூமியில் - என்றும்

நாங்கள் வாழ வேண்டும் இந்தப் பூமியில்

இயற்கைதந்த இனிய வாழ்வை

இணைந்து மகிழ்ந்து வாழ வேண்டும்..

இயற்கைமடியினில் கூடுகள் கட்டி

இயற்கைமகிழ்ந்திடவாழ்வினைக் கூட்டி

இணைந்து மகிழ்ந்து உயர்வு பெற்று வாழவேண்டும் - நாங்கள்

இணைந்து மகிழ்ந்து உயர்வு பெற்று வாழவேண்டும்

துயர்களைஎல்லாம் துச்சமாய் எண்ணி,

தடைகளைஎல்லாம் வெற்றிப் படிகளாய் மாற்றி

துணிந்து நிமிர்ந்து உயர்வு பெற்று வாழவேண்டும்- நாங்கள்

துணிந்து நிமிர்ந்து உயர்வு பெற்று வாழவேண்டும்

அன்பின் வழியிலேவாழ்வினைக் கூட்டி.

வன்முறையற்ற வாழ்வினைக் ஆக்கி

இணைந்துமகிழ்ந்துஉயர்வுபெற்றுவாழவேண்டும்- நாங்கள்

இணைந்து மகிழ்ந்து உயர்வு பெற்று வாழவேண்டும்

கலாநிதி.சி.ஜெயசங்கர்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/120281/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
    • எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க..... உங்களால் முடியாதது எதுவுமில்லை.
    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.