Jump to content

500 மில்லியன் டாலரில் சவூதி இளவரசருக்காக உருவாக்கப்பட்ட பறக்கும் அரண்மனை!


Recommended Posts

சில ஆண்டுகளுக்கு முன் உலகின் மிகப்பெரிய தனிநபர் பயன்பாட்டு விமானம் உருவாக்கப்பட்டு வருவது குறித்த தகவல்கள் மீடியாக்களில் பரபரப்பாக எழுதப்பட்டன. உலகின் மிகப்பெரிய விமானம் என்ற பெருமைக்குரிய ஏர்பஸ் ஏ380 விமானத்தை பெரும் பணக்காரர் ஒருவருக்காக, ஆடம்பர வசதிகளுடன் மாற்றப்படுவதாக அந்த தகவல்கள் கூறின. அந்த விமானத்தில் இருந்த வசதிகள், யாருக்காக கட்டப்பட்டது உள்ளிட்ட பல சுவையானத் தகவல்களை ......

 

ஏர்பஸ் ஏ380 விமானம் 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையது. அந்த விமானத்தில் ஆடம்பர வசதிகளுக்காக கூடுதலாக 200 மில்லியன் டாலர் செலவிட முடிவு செய்யப்பட்டது.இந்த விமானத்தில் வெறும் எக்கானமி கிளாஸ் இருக்கைகளுடன் அமைத்தால் 853 பேர் பயணிக்க முடியும். ஆனால், இந்த விமானத்தை சவூதி இளவரசர் தனது குடும்பத்தினர், சகாக்கள் மற்றும் வர்த்தக நண்பர்களுடன் பயணிக்கும் வகையில், சகல வசதிகளுடன் மாற்றப்பட்டது.விமானத்தில் சவூதி இளவரசரின் ரோல்ஸ்ராய்ஸ் கார் நிறுத்துவதற்காக பிரத்யேக இட வசதியுடன் செய்யப்பட்டது. இதன்மூலம், காரில் நேரடியாக விமானத்திற்குள்ளேயே வந்து இறங்க முடியும்.

ஏர்பஸ் ஏ380 விமானத்திற்குள் ஆடம்பர வசதிகளுடன் கட்டமைப்பதற்காக இங்கிலாந்தை சேர்ந்த டிசைன் க்யூ என்ற பிரபல நிறுவனத்தை சவூதி இளவரசர் அல் வாலீத் நியமித்தார். அந்த நிறுவனம்தான் இன்டிரியரை வடிவமைக்கும் பொறுப்புகளை ஏற்றது.உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்குவதற்கான 2 பிரம்மாண்ட படுக்கையறைகள், அதனுடன் இணைந்த குளியலறைகள், 20 விருந்தினர்கள் தங்குவதற்கான படுக்கை வசதிகள், கூட்ட அரங்கம், பொழுதுபோக்கு அரங்கம், சாப்பாட்டுக் கூடம் என்று ஆடம்பரத்தின் உச்சமாக ஒரு ஐந்த நட்சத்திர விடுதிக்கு இணையாக இதனை உருவாக்கினர்.விமானத்தில் தொழுகைக்கான இடத்தில் இளவரசர் அமரும் தரைவிரிப்பு எந்தநேரமும் மெக்காவை நோக்கி இருக்கும் வகையில், கம்ப்யூட்டர் முறையில் கட்டுப்படுத்தும் வசதி கொண்டது.இந்த விமானத்தில் இருக்கும் மேஜிக் கார்பெட்டில் இருந்து விமானம் பறந்துகொண்டிருக்கும்போது வெளிப்புறத்தில் இருக்கும் சூழலை அப்படியே திரையில் பார்க்க முடியும்.

 

இந்த விமானத்தில் ஆடம்பர வசதிகளுடன் கட்டமைப்பதற்கு 3 ஆண்டுகள் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், என்ன நடந்தது தெரியுமா...

 

உலகின் மிகப்பெரிய தனிநபர் பயன்பாட்டு விமானமாக கூறப்பட்ட இந்த ஏர்பஸ் ஏ380 விமானத்தை சவூதி இளவரசர், டெலிவிரி எடுப்பதற்கு முன்பே வேறு ஒருவருக்கு கைமாற்றிவிட்டார் சவூதி இளவரசர் அல் வாலீத் பின் தலால். காரணம் என்னவென்று தெரிவிக்கப்படவில்லை. மேலும், அந்த விமானத்தை யாருக்கு விற்றார் என்ற தகவலையும் வெளியிட அல் வாலீத்தின் செய்தித் தொடர்பாளர் மறுத்துவிட்டார்.பணக்காரர்கள் கார் கலெக்,ன் செய்வதுபோல  அல் வாலீத்திடம் பல விமானங்களை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தி வருகிறார். அவரிடம் போயிங் 747, ஹாக்கர் ஜெட், ஏர்பஸ் ஏ321 போன்ற தனிநபர் பயன்பாட்டு விமானங்கள் சொந்தமாக உள்ளன. உலகின் மிகவும் காஸ்ட்லியான ஆடம்பர படகும் உள்ளது.

x27-1432716838-pic-11.jpg.pagespeed.ic.k    x27-1432716800-pic-05.jpg.pagespeed.ic.dx27-1432716781-pic-02.jpg.pagespeed.ic.b


Read more at: http://tamil.drivespark.com/off-beat/interesting-details-about-worlds-biggest-private-jet-008278.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.. 'பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்' எனயெண்ணி பெருமூச்சு விடவேண்டியதுதான் ! :(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவூதி இளவரசருக்கு... எண்பது வயது இருக்குமா?
ஏனென்றால்.... இப்போ இளவரசர், இளைஞரணித் தலைவர் என்னும் போது...
நாங்களும்.. அம்புலி மாமா கதைகளில் வரும், இளவரசர்களை கற்பனை பண்ணி,
படத்தைப் பார்க்கும் போது,  வாழ்க்கையே.... வெறுத்துப் போகுது. :D  :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.