Jump to content

ரவிராஜ் படுகொலையுடன் கோத்தபாய, கரன்னகொடவுக்குத் தொடர்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரவிராஜ் படுகொலையுடன் கோத்தபாய, கரன்னகொடவுக்குத் தொடர்பு!

[Wednesday 2015-05-27 19:00]
raviraj-murder-400-seithy.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலையுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவிற்கும், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கும் தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய விசாரணைகளை குற்ற புலனாய்வுப் பிரிவினர் பூர்த்தியாக்கியுள்ளனர்.

  

 

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மெத்தனப் போக்கே இவ்வாறு பிரதான சந்தேக நபர்களை கைது செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டதற்காக காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

ரவிராஜ் கொலை தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தியாகி அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளை சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் காவல்துறையினர் கோரியுள்ளனர். இவ்வாறு கோரிக்கை விடுத்து சில காலமாவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரவி ராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஐந்து கடற்படை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த படுகொலையை மேற்கொள்ளுமாறு பணிப்புரையை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் வழங்கியதாகவும், நேரடியாக இந்த கொலையை வழிநடத்தியவர் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட எனவும் சாட்சியங்களுடன் நிரூபணமாகியுள்ளது. இதன் அடிப்படையிலேயே குறித்த இருவரையும் கைது செய்ய அனுமதியளிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸிற்கு நெருக்கமானவர்கள் தொடர்ந்தும் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் கடமையாற்றி வருவதாகவும் அவர்களின் நடவடிக்கைகளினால் இவ்வாறு கோதபாயவையும், கரன்னாகொடவையும் கைது செய்ய முடியவில்லை.

 

இதேவேளை, கொலை தொடர்பில் ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாகவும் அது குறித்த அறிக்கை இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அறிக்கை கிடைக்கும் வரையில் இந்த சம்பவம் குறித்த ஆலோசனைகளை வழங்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=132857&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரவிராஜ் படுகொலை – ஸ்கொடலண்ட் யார்ட் இன் பங்கு என்ன?

05/30/2015 இனியொரு...

மேற்கு ஏகாதிபத்திய நாடுகளுக்குத் தேவையென்றால் சாரிசாரியாகக் கொலை செய்யவும், சமாதானம் பேசவும், ஜனநாயகத்தை அழிக்கவும், ஆக்கவும் இலங்கை ஆடுகளமாகப் பயன்படுகிறது. வன்னியில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு ஆயுதங்களையும் வெடிமருந்துகளைம் மட்டுமல்ல ஆலோசனைகளையும் வழங்கிய மேற்கு நாடுகள் இன்று தமிழர்களைத் தலைமை தாங்க அவர்களின் கொத்தடிமைகளை நியமித்துள்ளனர்.

மேற்கு நாடுகள் இலங்கையில் தீர்க்கமான அரசியலை நடைமுறைப்படுத்துகின்றன.

இலங்கையில் ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டதன் பின்புலத்தில் ஏகாதிபத்திய நாடுகளின் தலையீடும் உள்ளனவா என்ற சந்தேகங்கள் இன்று மீளுறுதி செய்யப்படும் நிலைக்கு வந்துள்ளது.

யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் நவம்பர் 10, 2006 அன்று இலங்கை நேரம் காலை எட்டு மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத ஆயுததாரியினால் கொழும்பில் அவரது இல்லத்தில் இருந்து அலுவலகத்தை நோக்கி செல்லும் வழியில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

மகிந்த ராஜபக்ச அரசு தனது கொலைக் கரங்களை இறுக்க ஆரம்பித்த அக்காலப் பகுதியில் நடைபெற்ற கொலைகளில் இதுவும் ஒன்று. ரவிராஜின் காலப்பகுதியில் தமது தாகம், சாப்பாடு, சாராயம் எல்லாமே தமிழீழம் என்று அழைத்த பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்களை கடந்து நடராஜா ரவிராஜ் கொல்லப்பட்டதற்கான காரணம் வெளிப்படையானது.

கொழும்பில் குறுகிய காலத்துள் சிங்களம் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்ட ரவிராஜ், சிங்களத்தில் சிங்கள மக்களுக்காக தமிழர்களின் பிரச்சனைகளப் பேசினார். சிங்கள மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கும் குரல்கொடுத்தார். ரவிராஜ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நேரமான காலை 8.30 மணிக்கு முன்னதாக காலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை “தெரண” தொலைக்காட்சிக்கு அவர் நேர்காணல் அளித்தார். சிங்கள மொழியில் வழங்கிய அவரின் நேர்காணல் சிங்கள மக்களின் மனச்சாட்சியை உறுத்தும் வகையில் அமைந்திருந்தது. சிங்கள மக்களின் பிரச்சனைகளையும் பேசியது.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நச்சுக் காற்றால் மயக்கமுற்றிருந்த மக்கள் ரவிராஜை அவதானிக்கத் தொடங்கினர். இறுதிக் காலங்களில் ரவிராஜின் பேச்சுக்கள் சிங்கள மக்கள் மத்தியிலும் அவரை ஒரு கதாநாயகனாக மாற்றிக்கொண்டிருந்தது.

இதனால் தமமது சிங்கள பௌத்த பேரினாவாதப் பிழைப்பிற்கு ஆபத்துவந்த்விடலாம் என மகிந்த அரசு அஞ்சியது.

இதனால் ரவிராஜைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்தது. நடராஜா ரவிராஜ் தெருவோரத்தில் அனாதரவாக அனாமோதய நபர்களால் கொல்லப்பட்டார்.

கொலையின் பின்னர் இலங்கை அரசு அதிர்ச்சியடைந்தது போல நாடகமாடியது. ஸ்கொட்லாண்யார்டை விசாரணைக்கு அழைத்தது. இலங்கைக்குச் சென்ற ஸ்கொட்லாண்ட் யார்ட் போலிஸ் விசாரணை நடத்திவிட்டுத் தமக்குப் போதிய ஆதாரங்கள் கிடைக்காமையால் விசாரணையை முழுமைப்படுத்த முடியவில்லை என்றது.

ஒன்பது வருடங்கள் கடந்து மைத்திரி அரசின் கீழ் ரவிராஜ் கொலை தொடர்பான விசாரணை மீண்டும் நடைபெற்றது.

நடராஜா ரவிராஜின் படுகொலையுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவிற்கும், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கும் தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய விசாரணைகளை குற்ற புலனாய்வுப் பிரிவினர் பூர்த்தியாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

ரவிராஜ் கொலை தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தியாகி அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளை சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் காவல்துறையினர் கோரியுள்ளனர். இவ்வாறு கோரிக்கை விடுத்து சில காலமாவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரவி ராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஐந்து கடற்படை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த படுகொலையை மேற்கொள்ளுமாறு பணிப்புரையை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் வழங்கியதாகவும், நேரடியாக இந்த கொலையை வழிநடத்தியவர் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட எனவும் சாட்சியங்களுடன் நிரூபணமாகியுள்ளது. இதன் அடிப்படையிலேயே குறித்த இருவரையும் கைது செய்ய அனுமதியளிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொலை தொடர்பில் ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாகவும் அது குறித்த அறிக்கை இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அறிக்கை கிடைக்கும் வரையில் இந்த சம்பவம் குறித்த ஆலோசனைகளை வழங்க முடியாது என தெரிவித்துள்ளனர்

வன்னிப் படுகொலைகள் வரையான காலப்பகுதியில் இனக்கொலை அரசிற்கு ஆதரவு வழங்கிய மேற்கு அரசுகள், இனப்படுகொலைக்கு ஆதரவாகச் சிங்கள மக்களைத் தயார்படுத்த விரும்பின. நடராஜா ரவிராஜ் இதற்குத் தடையாகவிருந்தார். இதனால் கோத்தாபயவின் கொலை விசாரணை கிடப்பில் போடப்பட்டது.

http://inioru.com/46384/raviraj-m-p-murder-and-gota/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.