Jump to content

சம்சாரா: நிழலாய்த் தொடரும் வினைப்பயன்கள்


Recommended Posts

samsara_007_2417453f.jpg

 

உயர்நிலை தகுதி பெறும்பொருட்டு மலைக்குகையொன்றில் தீவிர தியானத்தில் மூழ்குகிறான் தாக்ஷி எனும் இளம் துறவி. குறிப்பிட்ட காலம் நிறைவடைந்தவுடன், இமாலயத்தின் மடியில் அமைந்துள்ள ஒரு புத்தமடாலயத்தின் லாமாக்கள் (துறவிகள்) ஆளரவமற்ற திபெத் மலைப் பிரதேசத்திற்கு வருகின்றனர். அங்கு அமைந்துள்ள மலைக்குகைக்கு வந்து உள்ளே அமர்ந்திருக்கும் அவனை தியானத்திலிருந்து எழுப்புகின்றனர்.
 
அருகிலுள்ள ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று அவனை தூய்மைப்படுத்துகின்றனர். புதிய துவராடைகள் அணிவிக்கப்படுகிறது. புத்தமடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். அவனுக்கு உலகமே புதியதாக தெரிகிறது. 'கென்போ' எனும் உயர்நிலை தகுதிச் சான்றும் அவனுக்கு வழங்கப்படுகிறது.
 
அதைத் தொடர்ந்து நடைபெறும் விழாவில் பெரிய ராட்சச பொம்மை முகம் தாங்கிய ஒரு நடனமிடும் கலைஞனாக அவன் பங்கேற்கிறான். அப்போது பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருக்கும் குழந்தைக்கு பால்தரும் இளந்தாயின் ஆடைவிலகிய அந்தக் கணத்தில் அவன் மனம் சஞ்சலப்படுகிறது.
 
சிலநாட்களில் மடத்திற்கு சொந்தமான பகுதிகளில் ஊர்ப்பயணம் மேற்கொள்கிறார்கள் லாமாக்கள். மடத்திற்கு சொந்தமான நிலத்தைப் பயிரிடும் விவசாயியின் குடும்பத்தில் அவர்களுக்கு சிறந்த வரவேற்பு கிடைக்கிறது. விருந்துணவும் உபசரணையும் சிறப்பாகவே அமைகின்றன. அங்கிருந்து புறப்படும்போது விவசாயி மகள் பீமாவின் கண்களோடு தாக்ஷியின் கண்கள் கலக்கின்றன. பலரும் அறியவே இந்த விபத்து நடந்தேறுகிறது.
 
இமய மலையில் உள்ள மடத்திற்கு வந்தபிறகும் அவன் மனம் அந்தப் பார்வையில் கிடைக்கும் இளைப்பாறுதலுக்காக ஏங்குகிறது. அவனது இந்நிலை சக பருவத் துறவியின் மூலம் மடத்தின் மூத்த பிக்குகளின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படுகிறது. சிலகாலம் அவனை வெளியுலகிற்கு அனுப்பிவைக்க மடத்தின் நிர்வாகம் முடிவு செய்கிறது. அதன்படி, அவன் செல்லவேண்டிய பாதை, சந்திக்கவேண்டிய மனிதர்கள் என உரிய வழிகாட்டுதல்களும் தரப்படுகின்றன. அவனும் செல்கிறான். ஆனால் அந்தப் பயணம் என்றென்றைக்குமாய் தூயநெறிக்கு திரும்ப முடியாதவாறு நிலைத்து விடுகிறது.
 
ஓர் அற்புதமான காட்சி இப்படத்தில் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. ஆழ்நிலை தியானத்திற்குப் பிறகு, புத்த மடத்திற்கு வந்ததிலிருந்து அவனுடன் எப்போதும் அழகும் துடிப்பும் மிக்க ஒரு நாய்க்குட்டி சுற்றிக்கொண்டேயிருக்கும். அவன் மடத்தைவிட்டு புறப்படும்போது அந்த நாய்க்குட்டியும் அவனுடன் புறப்படும். அவன் செல்லும் பாதையெங்கும் உடன் செல்லும். அவன் ஆற்றங்கரைக்கு வந்து ஒருமுறை மூழ்கி எழுவான். பிறகு மடத்தில் அணியப்படும் துவராடைகளைக் களைந்து நாட்டுபுற குடியானவன் போன்ற துணிகளை அணிந்துகொள்வான். பிக்குகளுக்கேயுண்டான மொட்டைத் தலையையும் மறைத்து தலைப்பாகை அணிந்துகொள்வான்.
 
அவனுடைய திடீர் மாற்றத்தை கரையில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் நாய்க்குட்டி திகைக்கிறது. அவனைப் பார்த்து ''லொள்லொள்'' என்று குலைத்துவிட்டு அந்தக்கணமே அவனிடமிருந்து விலகி ஓடிவிடுகிறது. அந்த நாய்க்குட்டியின் பெயர் 'காலம்'.
 
'ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்கிற புத்தமொழிக்கான திரைக்கதைக் காட்சிகள், வானிலையை தீவிரமாக்கும் மேகங்களைப்போல திரண்டெழுந்து வருகின்றன இத்திரைப்படமெங்கும். அவை யாவும் உருவகத் தன்மையோடும் யதார்த்த வாழ்வின் அடர்த்தியோடும் சில இடங்களில் மோகத்தின் குளிர்சாகரமாகவும் அலையடிக்கின்றன.
 
கோதுமை கொள்முதல் செய்யவரும் வியாபாரிகளின் பேராசையில் விளைந்த அவர்களின் தில்லுமுல்லுவை அம்பலப்படுத்துவான். அதற்காக பழிவாங்கப்படுகிறான். பின்னர் நகரத்திற்குச் சென்று அவர்களிடமே சண்டைக்குச் சென்று தோற்கிறான்.
 
கிராமத்தில் இன்னுமொரு அழகான பெண்ணை தாக்ஷி காணுவான் . வயல் வேலைகள் செய்ய வரும் அந்தப் பெண்ணின் மீதும் தாக்ஷிக்கு ஆசை முளைக்கும். பூவுக்குப் பூ தாவும் பட்டாம்பூச்சியாய் அவன் மனம் படபடக்கும். இவன் மனைவி வெளியூர் செல்லும் நாளில் அந்த 'ஆசை' நிறைவேறவும் செய்யும்.
 
மனைவி என்கிற உயர்ந்த ஸ்தானத்திலிருப்பவளைக் கடந்து மனம் தடுமாறி தடுக்கிவிழுந்ததை நினைத்து வருந்துவான். மனைவியும் அவளும் இப்பவும் தோழிகள்தான். இத்தகைய விஷயங்களை மறைத்து வாழும் நிலைக்கு அவன் தள்ளப்படுவான். இந்நிலையில் வாழ்வின் கசப்பை உணர்ந்தவனாகிறான். இந்த கேவலப்பட்ட பிழைப்புக்காகவா ஆழ்நிலை தியானம் எனும் உயர்நிலை தகுதி அடைந்தோம் என்றெல்லாம் அவன் மனம் விகசிக்கும். ஒரு நீண்ட இரவெங்கும் விழித்திருப்பான். மீண்டும் புத்தமடத்திற்கு சென்றுவிட அவன் தீர்மானிப்பான். பின்னிரவில் புறப்பட்டுவிடுவான்.
 
வெயில் ஏறிய காலையில் நதிக்கரையை அடைவான். அங்கு வழக்கம்போல தனது குடியானவனுக்கு உண்டான தோற்றங்களைக் களைந்து புத்த பிக்குகளுக்கான துவராடையை அணிந்து தலையையும் மழித்துக்கொள்வான். அதைத் தொடர்ந்து முற்றிலும் மாறுபட்டவனாய் இமாலய மலையின் மடியில் அமைந்துள்ள புத்த மடலாயத்தை நோக்கி பீடுநடை போடுவான். புத்த மடாலய அடிவாரத்தில் கல்லடுக்குகள் நிறைந்து மதிலாக நீண்டிருக்கிற எல்லைபோன்ற வாயில் பகுதி திருப்பத்தை அடையும்போது அவனுக்கு அங்கு பேரதிர்ச்சி காத்திருக்கும்.
 
'எண்ணங்கள், ஆசைகள் யாவும் மனத்தினாலே உண்டாக்கப்படுகின்றன. ஒருவன் தீய செய்கைகளைச் செய்தாலும் சரி, அவற்றினால் உண்டாகும் துக்கங்கள், இழுத்துச் செல்லும் எருதுகளைப் பின் தொடர்ந்து போகும் வண்டியைப் போல அவனுடைய அடிச்சுவடிகளைப் பின்பற்றித் தொடர்கின்றன' எனும் தம்மபதத்தின் யமக வர்க்க ஸ்லோகம்போல அங்கு அவன் மனைவி நின்றிருப்பாள்.
 
அவன் அங்குவந்து சேர்வதற்கு முன்பாகவே அந்த இளங்காலையில் அவன் மனைவி அங்கு குதிரையில் வந்து காத்துக்கொண்டிருப்பாள். அவளைக் கண்டதும் பேச்சின்றி நின்றுவிடுவான். அவள் அவன் அருகில் வந்து அவனைச் சுற்றிவந்தவாறே பேச முற்படுவாள்.
 
சித்தார்த்தன் நள்ளிரவில் மனைவியை விட்டுச் சென்ற கதையைத்தான் அப்போது அவள் சொல்வாள். யசோதரா நிலை அதற்கப்புறம் என்ன ஆனது என்று யாராவது இதுவரை யோசித்திருக்கிறார்களா என்றும் கேட்பாள். அல்லது அதன்பிறகு மனைவி யசோதராவும் குழந்தை ராகுலும் என்ன ஆவார்கள் என்று புத்தனாவதற்கு முன் அந்த சித்தார்த்தன் அதை யோசித்தாரா என்றும் அவள் கேள்விகள் தொடரும். நோய்வாய்ப்படும்வரையில் துன்பம் என்றால் என்னவென்று அறியாதவர்தானே அந்த புத்தர். அவருக்கு எல்லா பணிவிடைகளும் செய்து அவரை உயிர்ப்பிழைக்க வைத்த யசோதராவுக்கு அவர் செய்த நன்றி என்ன? என்றும் தொடரு ம் பீமாவின் கேள்விகள் தாக்ஷியின் மனதைக் குத்திக் கிழிக்கும்.
 
மேலும் ஒரு ஆணுக்கு இது செல்லுபடியாகும். இதையே ஒரு பெண் செய்திருந்தால்? யசோதரா நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறி இருந்தால் இந்த உலகம் அதை ஏற்றுக்கொண்டிருக்குமா? என்று அவள் கேட்பாள். மேலும் ஒவ்வொரு நாளும் அவன் வெளியே கிளம்பும்போதும் அவனுக்கு அந்த காவித்துணிக்குள் கட்டித்தரும் சாப்பாட்டுக் கிண்ணத்தை இப்பொழுதும் கொண்டுவந்து அவன் முன் தரையில் வைப்பாள். அதைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்படுவான்.
 
சித்தார்த்தன் ஞானம் பெற காட்டுக்குப் போன பின்பு யசோதரா வாழ்ந்த வாழ்க்கைக்கு உலகம் கொடுக்கும் பட்டம் என்ன தெரியுமா? வாழாவெட்டி. உண்மையில் தவறு யாருடையது? என மேலும் அவள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் பதில் தரமுடியாமல் அவன் மெல்ல நிலைகுலைந்து மண் தரையில் உட்கார்ந்துவிடுவான். கடைசியாக இன்னொன்றையும் அவள் கேட்பாள்.
 
அப்படி புத்தனாகப் போவது என முடிவெடுத்துவிட்டது சரிதானென்றால் இதுவரை என் வாழ்க்கையிலும் என் உடலிலும் நீங்கள் ஆட்சிசெலுத்தியதற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்பாள். நிலைகுலைந்து ''பீமா பீமா'' என மண் புழுதியில் விழுந்து அழற்றுவான். வாழ்வியல் அனுபவமற்ற தியான யோகநிலைகள் எதுவும் சாரம் அற்ற சக்கையாக வீழ்ந்ததுபோலாகிறது. ''நான் வீட்டுக்கு திரும்ப வர்றேன்.'' என்பதை இரண்டுமுறைகூறுவான். அவள் சடுதியில் அங்கிருந்து மறைந்துவிடுவாள்.
 
அவன் வானத்தைப் பார்ப்பான். அப்போது படத்தின் ஆரம்பத்தில் காட்டப்பட்ட கழுகு ஒன்று வானில் சுற்றிக்கொண்டிருக்கும். வரையாட்டின் மீது அது காலில் கவ்வி எடுத்துவந்த கல்லை வானிலிருந்து அதன் தலையில் போட்டு கொன்றுவிடும். ஒரு வினைப்பயனை உணர்த்தும் அக்காட்சியின் தொடர்ச்சியாகவே அங்கிருந்த கல்லடுக்குகளின் மதில் மீது கிடக்கும் அந்தக் கூழாங்கல்லைக் கையில் எடுப்பான். அதில் எழுதப்பட்டிருக்கும் ''விழுந்த மழைத்துளி பிறகு என்னவானது'' எனும் வாசகத்தை படித்தவாறே மனதின் ஊசலாட்டத்தோடு நின்றுவிடுவான்.
 
எண்ணங்களே முக்கியமானவை. அவை மனத்தினாலே உண்டாக்கப்படுபவை.. ஒருவன் தூய எண்ணங்களோடு அல்லது தீய எண்ணங்களோடு காணும் எந்தக் காட்சிக்குமான விளைவுகள் நிழல்போல அவனைத் பின்தொடரும் எனும் புத்தரின் போதனையை இயக்குநர் பால் நலின் ஒரு தைலவண்ண ஓவியம் போல தீட்டிக்காட்டிவிட்டார்.
 
குஜராத்தில் பிறந்து வளர்ந்த இப்படத்தின் இயக்குநர் பான் நலின் இத்தாலிய புகழ்பெற்ற இயக்குநர் பெர்னாண்டோ பெட்டலூர்சியிடம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதனால்தானோ என்னவோ உலகின் மிகப்பெரிய மதத்தின் பிதாமகனான புத்தரின் செயல்பாட்டை விமர்சிக்க அறிவுத்துணிவோடு ஒரு கதையை உருவாக்க முடிந்திருக்கிறது அவரால். மேலும், 'வாழ்வியல் அனுபவம் சாராத எந்த கல்விக்கும் மதிப்பில்லை' என்ற அரிய செய்தியையும் இத்திரைக்கதைக்குள் பொதிந்து வைத்திருப்பதற்கு பெட்டலூர்சியிடம் இவர் பெற்ற பயிற்சி கைகொடுத்திருக்கிறது எனலாம்.
 
இதில் நடித்த கலைஞர்களின் உணர்வுப்பூர்வமான பங்களிப்பும் சிறந்த ஒளிப்பதிவும் சிறந்த கலைஇயக்கமும் சிறந்த இசையும்கூட இப்படத்தை காலத்தின் பெட்டகமாக நிலைபெற்றுவிட்டதற்கான முக்கிய காரணிகள்.
 
இத்திரைப்படத்துக்கு முப்பதுக்கும் மேற்பட்ட உலகத் திரைப்படவிழாக்களின் விருதுகளை கிடைத்துள்ளன. அதில் முக்கியமானது, மெல்போர்ன் உலகத் திரைப்படவிழாவில் பெற்ற பார்வையாளர் சிறப்பு விருது.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.