Jump to content

படையினரின் அச்சுறுத்தல்களையும் மீறி இறந்தவர்களை நினைவுகூர வீரத்துடன் திரண்ட மக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படையினரின் அச்சுறுத்தல்களையும் மீறி இறந்தவர்களை நினைவுகூர வீரத்துடன் திரண்ட மக்கள்

MVKL2-300x175.jpg

அருட்தந்தை எழில் இராஜேந்திரம்

 

மே 18, 2009 ஐ நினைவு கூர்வதற்கு ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்வது என்பது அச்சமும், அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பும், நிச்சயமற்ற முடிவும் கொண்ட ஒரு திகில் கதையைப் போன்ற அனுபவத்தைத் தந்தது.

 

இலங்கையில் போர் முடிந்த இந்த ஆறு ஆண்டுகளில் இது போன்று நடக்கும் முதல் நிகழ்வு இது என்பதால் எவரேனும் துணிந்து நிகழ்வுக்கு வருவார்களா என்பது குறித்து கடைசி நொடி வரை எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை.

 

நிகழ்வை ஒருங்கிணைக்கும் பொறுப்பை நான் ஏற்றிருந்ததால், நிகழ்வுக்கு 3 நாட்கள் முன்னதாக ஏற்பாடுகளைச் சரி பார்க்க நான் முள்ளிவாய்க்கால் தேவாலயத்திற்குச் சென்றேன். செல்லும் வழியில், அங்கு சூழல் இறுக்கமடைவதை என்னால் உணர முடிந்தது.

 

2009இல் இலட்சக்கணக்கான தமிழ் பொது மக்கள் – எங்கள் மன்னார் ஆயர் அவர்களின் கணிப்பின் படி ஏழே மாதங்களில் ஏறத்தாழ 146,679 பேர் – கொல்லப்பட்ட இடமான முள்ளிவாய்க்காலை நோக்கிய சாலை நெடுகிலும் காவல் துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

 

MVKL10.jpgMVKL12.jpg

 

நினைவு நாள் நெருங்க நெருங்கக் கண்காணிப்பும், நிறுத்தப்படும் காவல்துறையினரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று மக்கள் நினைப்பதை நான் உணர்ந்தேன். அதனால், நிகழ்வுக்கு முதல் நாளே நான் தேவாலயத்திற்குச் சென்று விடத் தீர்மானித்தேன். நான் ஒரு சிங்களப் பாதிரியார் ஒருவருடன் அங்கு சென்றேன்.

 

எனது சிங்கள மொழியறிவு குறித்து எனக்குப் பெரிய நம்பிக்கை இல்லை. அதனால், பாதுகாப்புப் படையினருடனான சூழல்களை அவரால் சமாளிக்க முடியும் எனக் கருதினேன். நாங்கள் வாழ்வதற்காக சிங்கள மொழியை கற்க வேண்டி இருந்தது. ஆனால், தமிழ் பேசும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணியாற்றும் சிங்கள அதிகாரிகள் எங்களுடன் தொடர்பாட தமிழ் கற்க வேண்டிய கட்டாயம் இல்லை.

 

எங்களுடைய வாகனம் வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டுள்ளதை அறிந்ததும், காவல் துறையினரும் இராணுவ உளவுத் துறையினரும் உடனடியாக தங்கள் இருப்பை உணர்த்தினர். மாலை இருளும் நேரத்தில் நாங்கள் கிளம்பிய போது குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும் இராணுவ உளவுப் பிரிவு அதிகாரிகள் நால்வர் எங்களை நிழற்படம் எடுத்துக் கொண்டனர். நான் ஒரு பாதிரியாக இருந்த போதிலும், அவர்கள் இதனை செய்த போது நான் அச்சமடைந்தேன். ஏனெனில், இலங்கையின் அடையாளம் குறிக்கப்படாத வெள்ளை வான் கடத்தல்கள் குறித்த வரலாறை நாங்கள் அனைவருமே அறிவோம்.

 

அதே நாளில் தமிழ் மக்கள் விடுதலை முன்னணி முள்ளிவாய்க்காலில் ஏற்பாடு செய்திருந்த நினைவு நாள், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்று காரணம் காட்டி நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டு இருந்தது. மற்றுமொரு பெண்கள் அமைப்பு மே 18 அன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்விற்கும் அதே போன்று நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

 

ஒரு குடும்பம் என்னைச் சந்திக்க வந்தது. நாங்கள் ஏற்பாடு செய்திருந்த பிரார்த்தனைக் கூட்டத்திற்கு முள்ளிவாய்க்காலில் இருந்து எவரும் வர துணிய மாட்டார்கள் என்று கூறவே அவர்கள் வந்திருந்தனர். குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் உள்ளூரில் சிலரை சந்தித்துப் பிற நிகழ்வுகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். இதனால், அந்த அறிவுறுத்தல் எங்கள் நிகழ்வுக்கும் பொருந்தும் என அம்மக்கள் கருதி உள்ளனர்.

 

மே 18 அன்று காலை தேவாலயத்திற்கு அருகில் வாழ்ந்த மக்கள் என்னை வரச் சொல்லி அழைத்தனர். குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றம் இராணுவ உளவுத் துறை அதிகாரிகள் வழக்கத்திற்கு மாறாக அங்கு அதிகமாக நிறுத்தப்பட்டிருந்தது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. சிங்கள பாதிரியாரையும் என்னுடன் வருமாறு நான் அழைக்க நேர்ந்தது. உள்ளூர் பாதிரியார் வந்த உடன், குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரி அவரை அணுகி அவர் என்ன ஏற்பாடு செய்கிறார் எனக் கேட்டுள்ளார். முழு நாளும், காலை முதல் மாலையில் பிரார்த்தனைக் கூட்டம் முடியும் வரை, சாதாரண உடையில் இருந்த அதிகாரிகள் இரண்டு பேர் மரத்தடியில் அமர்ந்து முழு நிகழ்வையும் பதிவு செய்து தங்கள் மேலதிகாரிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்.

 

Army-int1.jpg Army-int2.jpg

 

அப்பகுதி மக்களின் துணிவை நான் பாராட்டுகிறேன். காவல்துறை மற்றும் இராணுவக் கண்காணிப்பு குறித்து அவர்களுக்கு இருந்த உண்மையான அச்சத்தைக் கடந்தும் அவர்கள் இந்த பிரார்த்தனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்ய எனக்கு உதவினர். ஒரு பாதிரியாக நானே இவ்வளவு மன உளைச்சல்களுக்கு ஆளாக வேண்டியிருந்தது என்றால் அவர்களின் போராட்டத்தினை என்னால் கற்பனை மட்டுமே செய்து பார்க்க இயலும்.

 

அன்றைய நாளில் பெரும் நிச்சயமற்றத் தன்மை நிலவியது. உண்மையில் குழப்பத்தை ஏற்படுத்தவும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் அது திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருந்தது. நான் அறிந்த வரையில் முல்லைத்தீவு மற்றும் கொக்கிளாயைச் சேர்ந்தவர்கள் நிகழ்வுக்கு வராததற்கு காரணம் நிகழ்வு நடக்கிறதா இல்லையா என்பது குறித்து அவர்களுக்கு குழப்பமான தகவல்கள் சென்றதும், அதனால் அவர்கள் மிகவும் அச்சமடைந்ததும்தான்.

 

மற்றொரு உள்ளூர் பாதிரியார் என்னை அழைத்து, பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்க வருவதாக இருந்த மக்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்து உரிமையாளர், பிரார்த்தனைக் கூட்டத்திற்கு பேருந்தை அனுப்ப முடியாது என்று தெரிவித்து விட்டதாகக் கூறினார். அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை தொலைபேசியில் அழைத்து பேருந்தை இயக்கக் கூடாது என்றும், அப்படி இயக்கினால் எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை அவர் சந்திக்க நேரும் என்றும் அச்சுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

 

அதே உள்ளூர் பாதிரியார் அதன் பிறகு 7 பேருந்து உரிமையாளர்களைச் சந்தித்து போக்குவரத்திற்கு உதவும்படி கேட்டுள்ளார். அவர்கள் அனைவருக்கும் இப்படியான அடையாளம் தெரியாத தொலைபேசி அழைப்புகள் வந்ததனால் அனைவருமே மறுத்து விட்டனர். நான் போக்குவரத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது. ஆனாலும், பேருந்து உரிமையாளர்களுக்கு அடையாளம் தெரியாத தொலைபேசி அழைப்புகள் வந்த செய்தி பரவியிருந்ததால் எவரும் நிகழ்வுக்கு வரவில்லை.

 

அன்று நடக்கவிருந்த மற்றய நினைவுகூரல் நிகழ்வுகளைப் போல எங்கள் நிகழ்வுக்கும் இடைஞ்சல் வருமோ என்று இறுதி நொடி வரை நாங்கள் பரபரப்பாக இருந்தோம். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏறத்தாழ 500 பேர் நிகழ்வுக்கு வந்த போது, அவர்களில் பெரும்பாலானோர் இறந்துபோன தங்கள் உறவுகளுக்காகப் பிரார்த்திக்க வந்த பெண்களாக இருந்தனர். தங்கள் துக்கத்தை வாய்விட்டு அழ அவர்களுக்கு கிடைத்த முதல் வாய்ப்பு இது என நான் நம்புகிறேன்.

 

தாய்மார்களும், குழந்தைகளும் தாங்கள் இழந்த உறவுகளுக்காக கதறி அழுதனர். அக்காட்சி இதயத்தைப் பிளப்பதாக இருந்தது. கூட்டத்தில் இருந்த அனைவருமே அழுதனர். ஆதரவற்ற சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த சிறுமிகள் குழு ஒன்று இறந்து போன தங்கள் பெற்றோரை நினைத்து கதறி அழுத போது நான் எனதுஅழுகையைக் கட்டுப்படுத்த மிகவும் போராட வேண்டியிருந்தது.

 

MVKL6.jpg MVKL7.jpg

 

பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அழையா விருந்தாளிகள், அங்கு பங்கேற்ற அனைவரையும் படம் எடுத்தனர். அவர்களில் பெரும்பாலோர் ஆகப் பெருந்துயரத்தில் இருந்த பெண்கள். இலங்கை அரசுக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலையும் அவர்களால் ஏற்படுத்த இயலாது. முதல் முறையாக கூட்டத்தில் இருந்த மக்கள் வீரம் மிகுந்து செயற்பட்டதை நான் கண்டேன்.

 

தங்களை படம் எடுத்த சாதாரண உடை உளவு அதிகாரிகளை அவர்கள் படம் எடுக்கத் தொடங்கினர். பிரார்த்தனைக் கூட்டத்தின் முடிவில் அங்கு இருந்த இரண்டு வெளிநாட்டுக்காரர்கள் அவர்கள் ஏன் அங்கு இருந்தனர் என்று காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டனர்.

 

தெற்குப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டையும் போல இவ்வாண்டும், “போர் நாயகர்கள் நினைவு நாள்” என்று அவர்கள் அழைக்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக இராணுவ அணிவகுப்பு ஒன்றினை அரசு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், வடக்கில் ஆறு நீண்ட ஆண்டுகள் மௌனத் துன்பத்திற்கு பின் போர்ப் பகுதியைச் சேர்ந்த சில தமிழர்கள் தங்கள் மௌனத்தை உடைத்து இறந்தவர்களுக்காக பொது வெளியில் தங்கள் துக்கத்தை வெளிக்காட்டினர். ஆனால், இதனை அவர்கள் பாதுகாப்புப் படையினரின் விருப்பத்திற்கு மாறாகவே செய்தனர்.

 

அவர்களின் வீரத்திற்காக நான் அவர்களை உண்மையாகவே வணங்குகிறேன். இறந்தவர்களுக்காக அழ அவர்களுக்கு வீரம் தேவைப்படாத ஒரு நாளைக் காணக் காத்திருக்கிறேன்.

 

(அருட்தந்தை எழில் இராஜேந்திரம் எழுதி எமது ஆங்கில இணையமான Colombo Mirror இல் “Tamils brave harassment, threats to mourn their dead” என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கத்தினை மாற்றம் இணையத்தளம் பிரசுரித்திருக்கிறது. தமிழாக்கம் – பூங்குழலி).

 

http://www.colombomirror.com/tamil/?p=4651

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கட்டுரை வாசிக்கும் போது இதயம் கணக்கின்றது, கண்கள் பணிகின்றன.  :(
புகைப்படங்கள் மன உணர்வுகளை அப்படியே காட்டுகின்றது.
இதையும் கூட அம்மக்களால் செய்ய முடியாவிட்டால் அவர்கள் இதயம் கணத்து, மன அழுத்தத்தாலேயே 
மடிவார்கள். இனி வரும் காலங்கள் இறந்த உறவுகளுக்கு மன நிறைவோடு, அச்சங்கள், மனக் கிலேசங்கள் இன்றி மரியாதை செலுத்தும் காலங்களாக அமையட்டும்.
இழந்தவர் மனதிலும் சாந்தி நிலவட்டும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத ஆட்சியாளர்களாகவே சிங்களத்தின் பேரினவாத வெறி அவர்களை கட்டி வைத்துள்ளது. இல்ல மாவீரர்களின் மக்களின் நினைவிடங்களை அவற்றின் பெறுமதி மனித உணர்வியல் தர்மம் விளங்காமல் அழிப்பார்களா..?!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.