Jump to content

ஆடை களையும் எக்ஸ்- ரே சென்டர்கள் : ஒரு பகீர் ரிப்போர்ட்!


Recommended Posts

ஆடை களையும் எக்ஸ்- ரே சென்டர்கள் : ஒரு பகீர் ரிப்போர்ட்!

hopital%20leftttt.jpgநோயின் பிடியிலிருந்து மீண்டு வரும்போது மக்கள், கடவுளையும் கூட இரண்டாவதாகத்தான் நினைப்பார்கள். அவர்கள் நா தழுதழுதழுக்க முதலில் நன்றி சொல்வது மருத்துவர்களுக்குத்தான்.

கடவுளுக்கு நிகராக மதிக்கப்படும் அவர்களிடையேயும் கருப்பு ஆடுகள் உலவுவது சமீப காலங்களில் அதிகரித்துவருகிறது. அப்படி கருப்பு ஆடு ஒன்றின் தரம்கெட்ட செயலால் நம் தேசம் தலைகுனியும் நிலை ஏற்பட்டிருக்கிறது இப்போது...

சென்னையில் பிரபலங்கள் வசிக்கும் பகுதியில் இயங்கிவருகிறது பிரபலமான அந்த மருத்துவமனை.  இந்த மருத்துவமனையில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நேர்ந்த அவமானம்தான் தேசம் தலைகுனிய காரணம்.

தென் கொரியாவைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணின் பெயர் ஹாவா( பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெங்களுருவில் படித்தவர். அங்கு தன்னுடன் படித்த நண்பர்களை காண வருடத்திற்கொரு முறை சென்னைக்கு வந்துசெல்வதை வாடிக்கையாக கொண்டவர். அவரும் மருத்துவத் துறை சார்ந்த படிப்பை பயின்றவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

6 மாதத்திற்கு அப்படி சென்னை வந்தவர், தன் நண்பர்களை எல்லாம் சந்தித்திருக்கிறார். சொந்த நாட்டிற்கு புறப்பட்டு செல்வதற்கு ஒருநாள் முன்பு அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. விபரம் தெரியவந்த அவரது நண்பர்கள், பிரபலமான அந்த மருத்துவமனையின் பெயரைக் குறிப்பிட்டு மாலையில் அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லலாம் என்றனர்.

நண்பர்களுக்கு சிரமத்தை தர விரும்பாத ஹாவா அதை மறுத்துவிட்டு, அன்று மாலையே நண்பர்கள் குறிப்பிட்ட அந்த மருத்துவமனைக்கு தனியே அப்பாயின்மெண்ட் வாங்கிச் சென்றார். மருத்துவரிடம் தன் பிரச்னையை கூறியதையடுத்து, இதயம் சம்பந்தமான சில பரிசோதனைகளை செய்துவிட்டு தன்னை வந்து சந்திக்கும்படி கூறினார் மருத்துவர். மருத்துவமனையின் இன்னொரு தளத்தில் இயங்கும் பரிசோதனை மையத்தில் மறுதினம் அவருக்கு அப்பாயின்மெண்ட் கிடைத்தது.

மறுநாள், ஹாவா தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பரிசோதனை அறைக்குள் சென்றார். மருத்துவர் பரிந்துரைத்த பரிசோதனை தாளை வாங்கிப் பார்த்த அங்கிருந்த பணியாளர், ஹாவாவை இயல்பான நிலையில் ஒரு எந்திரத்த்தில் படுக்க வைத்து சில சோதனைகள் செய்தார். 10 நிமிடங்கள் கழிந்தபின்னர் அவருடைய மேலுடையை கழட்ட சொன்னார். ஹாவா அதிர்ச்சியடைந்தார். காரணம் பணியாளர் ஒரு ஆண்.

hopital%20500%201.jpg

'இதய பரிசோதனைதானே... இதற்கு உடையை களைய வேண்டுமா?' என ஹாவா அந்த பணியாளரிடம் கேட்க, ஆம் என்ற பணியாளர், "உங்களுக்கு எழுதப்பட்ட பரிசோதனைகள் அதிநுட்பமானது. உடையின்றி பல விதங்களில் சோதனை செய்தால்தான் நோயின் தன்மையை நுட்பமாக மருத்துவர் கணிக்க முடியும்” என ஆங்கிலத்தில் அவரிடம் தெரிவிக்க, ஆரம்பத்தில் சங்கடப்பட்ட ஹாவா, பணியாளரின் நம்பிக்கையான பேச்சால், துணிந்து பரிசோதனைக்கு தயாரானார்.

இருப்பினும் தன்னுடன் ஒரு பெண் பணியாளர் இருக்கவேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்தார். இன்று பெண் பணியாளர் யாரும் டூட்டியில் இல்லை என்ற அந்த பணியாளர், “அதுமட்டுமின்றி குறிப்பிட்ட இந்த பரிசோதனையின்போது வேறு யாரும் இருப்பது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” எனக் கூறியிருக்கிறார். வேறு வழியின்றி நண்பர்கள் பரிந்துரைத்த மருத்துவமனை என்பதால்,  பணியாளர் சொன்னபடி தன் உடையை முற்றாக களைந்து அவர் சொன்ன விதங்களில் பரிசோதனைக்கு உடன்பட்டார்.

சில சமயங்களில் பணியாளர் அவரது மார்பகங்களை தொட்டும் பரிசோதனையை தொடர்ந்தார்.  அரை மணிநேரம் கடந்த நிலையில், பணியாளரின் சில செயல்கள் நெருடலைத்தர, அதற்கு மேல் பரிசோதனையைத் தொடர விருப்பமின்றி அங்கிருந்து வெளியேறினார் ஹாவா.

hopital%20leftt.jpgஒரு பிரபல மருத்துவமனையில் பரிசோதனைக் கூடத்தில் மருந்துக்கு கூட பெண் பணியாளர்கள் இல்லாததும், பணியாளரின் வித்தயாசமான நடவடிக்கையாலும் குழம்பித் தவித்த ஹாவா, மறுநாள் தன்னை சந்திக்க வந்த நண்பர்களிடம் தனக்கு பரிசோதனை செய்யப்பட்ட விதத்தை அவர்களிடம் சொல்ல, அவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

இப்படி ஒரு பரிசோதனை தங்களுக்கு தெரிந்து இல்லை என்ற அவர்கள், ஹாவாவை அழைத்துக்கொண்டு அதே பரிந்துரைக் கடிதத்துடன் வேறு ஒரு மருத்துவமனையின் பரிசோதனை மையத்தினை அணுகி,  ஹாவாவிற்கு பரிந்துரைக்கப்பட்ட சோதனைக்கான முறையை விசாரித்தனர். அவர்கள் சொன்ன தகவல்களைக் கேட்டு ஹாவா அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றார். காரணம் அதிகபட்சம் 5 நிமிடங்களே செலவாகும் அந்த பரிசோதனைக்கு,  உடைகளை கழற்ற வேண்டிய அவசியமே இல்லையாம்.

ஹாவாவிற்கு இந்த தகவல் தெரியவந்தபோது அதிர்ச்சியின் விளிம்பிற்கு சென்றார். மேலும் அந்த அறையில் அந்த ஆண் பணியாளரால் தான் பாலியல் தொல்லைக்குள்ளாகியிருப்பதை உணர்ந்து வெட்கமும், ஆத்திரமும் கொண்டார். கூடவே அந்த அரை மணிநேரத்தில் பணியாளரின் செய்கைகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்தது. காரணம் சில சமயங்களில் அறையில் ஒளிப் பரவியதாக அவர் தெரிவித்தார்.

நண்பர்களுடன் உடனடியாக அந்த மருத்துவமனை நிர்வாகத்தை அணுகினர் அவரது நண்பர்கள். தனக்கு நேர்ந்த அநியாயத்தை மருத்துவமனை நிர்வாகத்திடம் எடுத்துரைக்க அதற்கு எந்த அதிர்ச்சி ரியாக் ஷனும் காட்டாத நிர்வாகம், " அந்த பரிசோதனை மையம் கான்ட்ராக்ட் அடிப்படையில் நடக்கிறது. எங்களுக்கும் அந்த மையத்திற்கும் சம்பந்தமில்லை" என சர்வசாதாரணமாக சொன்னது.

சம்பந்தப்பட்ட பணியாளரை அணுகி ஹாவாவின் நண்பர்கள் ஆத்திரப்பட்டபோது அதை மறுத்த அந்த பணியாளர், ஹாவாவுக்கு பரிசோதனை 5 நிமிடங்கள் மட்டுமே நடந்தது என்றும், அவர் சொன்னதுபோல் எதுவும் நடக்கவில்லை என்றும், அவருக்கு மனநோய் எனவும் கூறி அவர்களை அனுப்பிவைத்தார்.

அசிங்கமும் வெட்கமும் பிடுங்கித்தின்ன நண்பர்களிடம் ஹாவா அழுதார். கொஞ்நேரத்தில் மருத்துவமனையில் இருந்து அவருக்கு போன் வந்தது. இந்த விவகாரத்தை இதோடு விட்டுவிடுமாறும், பிரச்னை எழுப்பாமல் “பத்திரமாக” நாடு திரும்புவது நல்லது என மறைமுகமாக மிரட்டியது அந்தக்குரல்.

hopital%20500%202.jpg

பிரச்னை எழுப்புவது பாதுகாப்பானதல்ல என்ற நண்பர்களின் அறிவுரையையும் மீறி ஹாவா, ஒரு முடிவுக்கு வந்தார். தனக்கு நேர்ந்த அவலத்திற்கு வருத்தம் தெரிவிக்காமல் மறைமுக மிரட்டல் விடுத்த அந்த நிர்வாகத்திற்கு எதிராக போராடுவதென அந்தக் கணத்தில் முடிவெடுத்தார் ஹாவா. உடனடியாக தனது நாட்டு துாதரகத்தின் அனுமதிப் பெற்று காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. ஹாவாவின் புகார் உறுதியானது. புகாரை திரும்பப் பெறக் கூறி, தனக்கு தெரிந்த அரசியல் நண்பர்கள் மூலம்  ஹாவாவை மிரட்டியது மருத்துவமனை நிர்வாகம். கூடவே அந்த பணியாளர் ஆட்களால் பல்வேறு மிரட்டல்களை சந்தித்தார் ஹாவா.

ஆனாலும் புகாரை திரும்பப் பெறுவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருந்தார் அவர்.

சில நாட்கள் விசாரணைக்குப்பின் அந்த ஆண் பணியாளர் மீது வழக்கு பதிந்தது காவல்துறை. உடனடியாக சிறைக்கு அனுப்பப்பட்டான் அந்த கருப்பு ஆடு. வழக்கு இப்போது விசாரணை நிலையை எட்டியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு குறித்து தனது நாட்டிலிருந்து கேட்டறிந்து கொள்கிறார் ஹாவா. தான் ஆஜராகவேண்டிய வாய்தாவிற்கு சிரமம் கருதாமல் வந்துசெல்கிறார் இன்றும்.

ஹாவாவின் நண்பர்களின் உதவியுடன் அவரிடம் பேசினோம். “ உயிரைக்கொடுக்கும் கடவுளுக்கு அடுத்த படியாக மக்கள் தங்கள் உடல் உபாதைகளை தீர்க்கும் மருத்துவர்களைத்தான் கடவுளாக வணங்குகிறார்கள். சமூகத்தில் தங்களுக்குள்ள அந்தஸ்தை தவறாக பயன்படுத்துவோர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள். ஒரு சம்பவத்திற்காக அவர்களை மன்னித்தால் அடுத்த பல சம்பவங்களுக்கு அது உத்வேகம் அளித்து விடும். நான் வேறு நாட்டை சேர்ந்தவளானாலும் என் இந்திய சகோதரிகள் எதிர்காலத்தில் என்னைப்போல் பாதிக்கப்படக் கூடாது. அதனால்தான் வழக்கில் உறுதியாக இருக்கிறேன். வழக்கில் அவன் தண்டிக்கப் படுவது அவனைப்போன்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்” என்றார்.

பாராட்டுக்கள் ஹாவா!

எஸ்.கிருபாகரன்

http://www.vikatan.com/news/article.php?aid=46989&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.