Jump to content

காகித ஓடம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காகித ஓடம்
 
நீடித்த மழைக்குப் பின் வானம் வெளுக்க ஆரம்பித்தது.
சிலு சிலு வென்ற காற்று உடலை வருடி சிலிர்ப்பூட்டியது.
மரத்திலிருந்து சொட்டும் நீர்த்துளிகளின் அழகை ரசித்தபடி அமர்ந்திருந்தாள் அருந்ததி.
நட்பு, காதல், திருமணம், குடும்பம், உரசல், மோதல், கசப்பு, பிரிவு, வெறுமை..
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் எத்தனையோ அனுபவங்களுக்கு பழக்கப்பட்டுவிட்ட அருந்ததிக்கு தன் உணர்வுகளை நிதானமாகக் கையாள்வது இலகுவாக இருந்தது.

 

சென்ற வாரம் நடைபெற்ற ஒன்றுகூடலின் பின் சலனமுற்ற மனம் சமநிலைக்கு வந்திருந்தது.
பல வருடங்களின் பின் பழகிய பல நண்பிகளும் நண்பர்களும் ஒன்றுகூடிய அந்த தருணம் அற்புதமானது.
பசுமை நிறைந்த நினைவுகளை மனதில் விதைத்து பொத்திப் பொத்திப் பாதுகாத்த அந்த இனிய பொழுதுகள் அனைவர் மனக்கண்ணின் முன்னும் மந்தகாசமாய் மணம் பரப்பிக்கொண்டிருந்தது.
மனஅரங்கில் காட்சிகள் துல்லியமாகப் பதிவாகி இருந்தன.
வாலிப வயதில் காணப்பட்ட இளமையின் துள்ளல், துறுதுறுப்பு அனைத்தும் ஓய்ந்து ஆளுமையுள்ள ஆண்களாக பெண்களாக பொறுப்புள்ள பெற்றவர்களாக உரையாடிக்கொண்டிருந்தனர்.
அன்று கனவுகள் மிதந்த கண்களில் இன்று கடமை உணர்வுகள் குடும்பப் பொறுப்புக்கள்
அநேகரை அடையாளங் காண்பதே அபூர்வமாக இருந்தது.
அங்கு அருந்ததியைச் சுற்றி நண்பிகள் சரோ, வதனி, யோகா, சகுந்தலா, ஜனனி, கவிதா இன்னும் பலர்.
'என்ன அருந்ததி உன்ர ஆள் வந்திருக்கிறேர் போல' குறும்புச் சிரிப்புடன் சகுந்தலா தொடங்கினாள்.
'ஏய் சகுந்தலா நீ இன்னும் அண்டைக்கு இருந்தது போலத்தான். இன்னுமா அதையெல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறாய்'
'ஓகோ அப்ப நீ மட்டும் மறந்திற்றியாக்கும்'
'மறந்தோம் மறக்கவில்லை என்பதெல்லாம் இருக்கட்டும். அதெல்லாம் பள்ளிக்கால பருவக் குறும்புகள். பழைய கனவுகள்.             
'அப்ப கனவில பழைய கனவு புதிய கனவு என்றெல்லாம் இருக்கும்போல.' சகுந்தலா குறும்பில் குழந்தையாக அருந்ததியைச் சீண்டினாள்
புன்னகைக்க முயன்றாள் அருந்ததி.

சிரிப்பு செயற்கையாக இருந்தது.
ஜனனி மட்டும் சகுந்தலாவை முறைத்தாள்.

'ஏய் சகுந்தலா நீ இன்னும் அருந்ததியைக் காயப்படுத்தாத.'
'ஏன் ஜனனி சகுந்தலாக்கு என்ன?' சகுந்தலா கேள்வியுடன் ஜனனியை ஏறிட்டாள்.

ஜனனி என்ன சொல்லி சகுந்தலாவை சமாளிக்கலாம் என்று தடுமாற அவளது மனநிலைக்கு இசைவாக மற்றைய தோழிகள் சகுந்தலாவை தமது அரட்டைக்குள் அழைத்துக் கொண்டனர்.

 

ஜனனி அருந்ததியின் உயிர்த்தோழி. அவளுக்கு அருந்ததியின் வாழ்க்கையின் அனைத்து விபரங்களும் தெரியும். ஆனாலும் அடுத்தவரிடம் தன் நண்பியின் அந்தரங்கங்களை அலசுபவள் அல்ல அவள்.
அருந்ததிக்கு திருமணம் நிச்சயமாகி வெளிநாடு வந்ததும், அங்கு வந்து அரவிந்தைத் திருமணம் செய்ததும், அதன் பின் நடந்த அத்தனை நிகழ்ச்சிகளும் ஜனனிக்குத் தெரியும்.
அருந்ததியும் ஆயிரம் கனவுகளுடன்தான் இல்வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தாள்.
ஆனால் அத் திருமண பந்தம் ஏற்படுத்திய காயம் மிகப் பெரிது.
ஆறிய காயம் பெரிய வடுவாக இதயத்தில் விழுந்திருந்தது.
வாழ்க்கை அவ்வப்போது உத்வேகங்களினால் அலைக்கழிக்கப்படுகிறது.
உறவுகளினால் வழிநடத்தப்படுகிறது.
இதில் உண்மை, பொய், நன்மை, தீமை என்று கோடுபோட்டு பிரித்துக் கொண்டிருப்பது சாத்தியமில்லை.
கனடா வந்திறங்கிய அருந்ததியை அரவிந்தன் விமான நிலையம் சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றதும் அருந்ததி புல்லரித்துப் போனாள்.

படத்தில் பார்த்ததை விட நேரில் அரவிந்தன் எடுப்பாகவே காணப்பட்டான்.
அருந்ததிக்கு இங்கு நெருங்கிய உறவுகள் இல்லாதபடியால் அரவிந்தன் தனது வீட்டிற்கே அருந்ததியை அழைத்துச் சென்றான்.
பழகுவதற்கு இனிமையான பண்பு.
ஆதரவான பேச்சு.
அழகான புன்னகை.
பரிவான பார்வை.
அருந்ததி மனநிறைவடைந்தாள்.

பெற்றவரைப் பிரிந்த சோகத்தில் இருந்த மனம் இலேசாகி இருந்தது.
திருமண நாள் வரும்வரை அருந்ததியை அவளது உணர்வுகளை மதிப்பவனாக அவளுடன் கண்ணியமாக நடந்து கொள்வது அருந்ததிக்கு திருப்தியாக இருந்ததுடன் அரவிந்தனில் தனி மதிப்பையும் ஏற்படுத்தியது.
அவனது தொடுகை, காதல் பேச்சுக்கள், சின்னச் சின்ன ஸ்பரிசங்கள் மனம் உற்சாகத்தில் துள்ளியது.

அரவிந்தனுக்குள் ஆயிரம் போராட்டங்கள்.

விபரம் தெரிந்த காலம் தொட்டு இதுவரை காலமும் தனக்குள் பூட்டி வைத்த தனக்கு மட்டுமே தெரிந்த அந்த ரகசியம் பூதாகாரமாய் அவனை பார்த்து கை கொட்டிச் சிரித்தது.
அந்த பொல்லாத விடயத்தை இனியும் பூட்டி வைப்பது சாத்தியமா?
அதுவும் அருந்ததியிடம்.

மனம் சஞ்சலப்பட்டாலும் ஏதோ ஒரு அசட்டுத் துணிச்சல்.
சில வேளை அருந்ததியின் அருகாமை அவளது அரவணைப்பு தனக்குள் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தாதா என்ற நப்பாசை.
மனதைத் திடப்படுத்தியபடி தெய்வத்திடம் பாரத்தைப் போட்டுவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஆயத்தமானான்.
தனது சந்தோசங்களெல்லாம் திருமணம் முடிந்து தாம்பத்திய வாழ்க்கை ஆரம்பிக்கும் வரைதான் நீடிக்கும் என்று அருந்ததி கனவிலும் நினைக்கவில்லை.

 

அன்றுதான் தனிமையில் அரவிந்தனும் அருந்ததியும் தம் வாழ்வின் முக்கியமான நாளான முதல் உறவின் ஆரம்பம்.
அரவிந்தனின் அன்பிற் கட்டுப்பட்டு அவனது அணைப்பின் ஆளுமைக்குள் கிறங்கிய அருந்ததி மயங்கினாள். மனதுக்குள் மத்தாப் பூக்கள் பூக்க ஆரம்பித்த தருணங்கள் அவை.
அருந்ததியின் உடலை அணைக்க முடிந்த அரவிந்தனால் அவளது உணர்வுகளை அணைக்க முடியவில்லை.
இயங்கமுடியாத இயலாமையில் அரவிந்தன் துவண்டுபோன தருணத்தில் அங்கு வெறுமைகள் மிஞ்சின.
ஆரம்பத்தில் அருந்ததியால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.
முடிவில் அரவிந்தனின் இயலாமை தெரிய வந்தபோது அருந்ததி உள்ளுக்குள் உடைந்து போனாள்.
இருந்தும் அருந்ததி அரவிந்தனில் வைத்திருந்த பிரேமை காரணமாக இதைப்பற்றிய எந்த விபரமும் யாருக்கும் தெரியாமல் தனக்குள் புதைத்துக் கொண்டாள்.
தொடர்ந்து வந்த நாட்கள் அருந்ததியின் வாழ்வில் துயரமானவை.
சில நாட்களிலேயே அரவிந்தனின் இயலாமை அவனை மனஅழுத்தத்துக்கு உள்ளாக்கிளது.
அவன் தேவையின்றி அருந்ததியை குறை கூறினான்.
எடுத்ததெற்கெல்லாம் எரிந்து விழுந்தான்.

 

அவனது இயலாமையே ஒரு வெறியாக மாறி அவனை இனம் புரியாத எரிச்சல் ஆட்கொண்டது.
ஒரு நல்ல தோழியாகக் கூட அவளை ஏற்றுக் கொள்ள அவனது மனம் இடம் கொடுக்க மறுத்தது.
அருந்ததியின் மனதில் கோபம் வேகம் எல்லாம் குறைந்து சலிப்பும் வெறுமையும் குடி கொள்ளத் தொடங்கியது.
எல்லாம் பழகி விட்டதால் எதிலும் புதுமை தெரியவில்லை.
கண்களில் ஒளியின்றி காட்சி தெளிவற்றதாகி விடுவதுபோல் ஒரே படகில் பயணத்தை ஆரம்பித்த அரவிந்தனும் அருந்ததியும் இறுதியில் இல்லறம் என்ற பிணைப்பில் இருந்து விடுதலை பெற்று வௌ;வேறு பாதையில் பயணப்பட ஆரம்பித்தனர்.
மனக் கண்ணில் நிழலாக வந்துபோன நினைவுகளை கலைத்தாள் அருந்ததி.
சுற்றி இருந்தவர்களின் கலகலப்பான பேச்சும் உற்சாகமும் அருந்ததியையும் தன்னிச்சையாக் தொற்றிக் கொண்டது.
அருண் அருந்ததியை நோக்கி வருவதை ஜனனி அவதானித்தாள்.
'அருந்ததி அருண் உன்னோட கதைக்கத்தான் வாறான். நீ கதைத்துக்கொண்டிரு. நான் சரோவோட கதைத்துப் போட்டு வாறன்' சொல்லியபடி ஜனனி விலகிச் சென்றாள்.
'என்ன அருந்ததி என்றும் பதினாறா? உங்கள் இளமையின் ரகசியம் என்னவோ'? பாதி கேலியும் மீதி கிண்டலுமாக அருந்ததியை சீண்டினான்.
'அருண் இந்தக் கேலிதானே வேணாம் என்கிறது. இளமைக்காலம் எங்கோ ஓடி மறைந்து விட்டது. இப்ப திரும்ப வா என்றால் வரவா போகுது.'
அருணின் வாழ்வில் ஏற்பட்ட இழப்பு பற்றி ஜனனி மூலம் அருந்ததி அறிந்திருந்தாள்.
அருண் தன் ஒரே மகனின் திருமணத்தின் பின் தனியாகத்தான் வாழ்ந்து வருகிறான்.
வசதி வாய்ப்புக்கும் குறையில்லை.
அவனும் தன் துயரங்களை வெளியே காட்டாமல் மனதுக்குள் போட்டு மூடி மறைத்திருந்தான்.
'அருந்ததி நீர் எப்படி இருக்கிறீர்?'
'நான் ஓகே நீங்க எப்படி?'
'எனக்கு அந்த பசுமையான காலங்கள் திரும்ப வராதா என்று ஏக்கமா இருக்கு' விழிகளில் கனவுகளுடன் அருண் அருந்ததியை ஏறிட்டான்.
அருந்ததி அவனது பார்வையை சந்திக்க திராணியற்று பார்வையை பக்கத்திலிருந்த பூங்கொத்தை ரசிப்பதாக பாவனை செய்தாள்.
'அருந்ததி உங்கட வாழ்க்கை எப்படி போகுது'
'அருண் எனக்கு இப்ப இந்த வாழ்க்கை பழகிப்போச்சு. வேலை வீடு நட்பு என்று எனது உலகம் பரந்தது.'
'அப்படியென்றால்?' அருணின் மனதில் சிறு சலனம்.
இளமைக்காலத்தில் இழந்த உறவு முதுமையிலாவது தொடராதா என்ற ஏக்கம்.
நான்கு சுவர்களுக்குள் தனிமையில் தன் வாழ்வின் எதிர்காலம் பற்றிய பயம் அருணையும் இப்பொழுதெல்லாம் அச்சுறுத்த ஆரம்பித்திருந்தது.

 

அருந்ததிக்கு அருணின் மனதில் ஓடும் எண்ணங்கள் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்த,
'என்ன அருண் கடுமையான யோசனை?'
'அருந்ததி...'ஏதோ சொல்ல முயன்றவன் தன் மனஉணர்வுகளை தொடர முடியாமல் அருந்ததியை ஏறிட்டான்.
'அருண் நட்பு நட்பாகவே இருக்கும்வரை எந்த பிரச்சனையும் இல்லை.'
அருண் புரிந்து கொண்டான்.
நட்பு தன் எல்லைகளைத் தாண்டி உரிமையை எடுத்துக் கொள்ளும்போது அங்கு சலனங்களும் சபலங்களும் ஏற்படும் என்று எங்கோ படித்தது ஞாபகத்தில் வந்தது.
அருந்ததி தெளிந்த மனதுடன் பேசிய பேச்சு அருணின் மனதில் சிறிது ஆசுவாசம் தந்தது.
சிட்டுக்குருவி தன் இறக்கைகளை உதிர்க்க என்றுமே விரும்புவதில்லை.
நினைவுகளில் இருந்து விடுபட்ட அருந்ததி சாளரங்களை திறந்து வைத்தாள்.
மெல்லிய காற்று இதமாக உடலை வருடியது.

 

-- xxx --- xxx --- xxx ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகாக கதை சொல்லியுள்ளீர்கள்...!

 

அருந்ததி தனக்கேற்ற பிறிதொரு துணையைத் தேடி அடைந்தால் கூடத் தப்பில்லை..., அரவிந்தன் தன் இயல்பு தெரிந்தே அப்பெண்ணை ஏமாற்றியுள்ளார். அது தப்பு...!

அடுத்து அருந்ததியைச் சந்திக்கும்போது சொல்லுங்கள்...! டேக் இட் ஈசி .. யா , கெட் வன் பியான்சி ... யா...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நேரத்தை ஒதுக்கி வாசித்து கருத்தெழுதியமைக்கு நன்றிகள் சுவி. அருந்ததி வாழ்க்கையில் மீண்டம் வசந்தம் வர வேண்டுமென்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பும் ஆனால் அருந்ததி விரும்ப வேண்டுமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நேரத்தை ஒதுக்கி வாசித்து கருத்தெழுதியமைக்கு நன்றிகள் சுவி. அருந்ததி வாழ்க்கையில் மீண்டம் வசந்தம் வர வேண்டுமென்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பும் ஆனால் அருந்ததி விரும்ப வேண்டுமே?

 

அருந்ததி தன் வசந்ததை தானே தேடிக் கொள்ள வேண்டும் ...எனையோரால் கொடுக்க முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் மனதை தொட்டுவிட்டது கதை . உண்மை கதையாக இருக்க கூடாது என்பதே என் பிரார்த்தனை .

அழகாக சொல்லியிருக்கிறீர்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கும் பாடல் பதிவுக்கும் நன்றிகள் புத்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மைச் சுற்றி எத்தனையோ கதைகள் இப்படி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு புரியாத பல விடயங்களை வைத்து பெண்ணையோ ஆணையோ குறைகூறுவோம் அல்லது விட்டுக்கொடுத்து வாழத்தெரியாது புரிந்துணர்வு இல்லை என்று புறம் பேசுவோம். எத்தனையோ பெண்கள் இப்படியான நிகழ்வுகளை எதிர்கொள்வதை நான் அறிந்திருக்கிறேன். அருந்ததிகள் பலர் இன்றும் எம்முடன் வாழ்கிறார்கள். வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள் மீரா குகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கதை சொல்லி நீங்கள் அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றிகள் சுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருந்ததி அருணை ஏற்க மறுக்கும் நிலைக்கு வரக் காரணங்கள் எவை?

 

அருந்ததியின் கடந்த காலக் கசப்பான வாழ்க்கையின் பட்டறிவா?

 

அல்லது காலம் கடந்தும் எமது சமுதாயம் கட்டிக்காத்து வைத்திருக்கும் சம்பிரதாயம் என்ற மாயையா?

 

வீடு, வேலை, நட்பு, பரந்த உலகம் எனத் தங்களையே ஏமாற்றிக்கொள்ளும்
பெண்களின் பிற்போக்குச் சிந்தனையா?

என உங்களின் கதை பல கேள்விகளையும் விட்டுச் செல்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரணங்கள் பலவாக இருந்தாலும் காலம் கடந்து விட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். சமுதாய வேலிகளைத் தாண்டுவது எல்லோருக்கும் இலகுவாக இருப்பதில்லை. இன்றைய காலக்கட்டத்தில் விவாக ரத்துக்களும் மறுமணமும் இலகவாக நடைபெற்றுக்கொண்டிருந்தாலும் அவரவர் சுய விருப்புக்களை மதிக்கத்தான் வேண்டியுள்ளது. படித்து கருத்தெழுதியமைக்கு நன்றிகள் வாத்தியார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுகதையாக எழுதி முடித்துவிட்டு கதைக்கான முடிவைக் கொடுத்துவிட்டதாக நினைக்கிறீர்கள். இந்தக்கதையைப் பொறுத்தவரையில்

1. அருணின் இயலாமை

2. அருந்ததியின் தனிமை வாழ்வு

3. அரவிந்தனின் மனவிருப்பு

இந்த 3 விடயங்களுக்கும் கதாசிரியர் முன்வைத்த முடிவு எனக்குள் கேள்விகளாக முளைக்கின்றன. அருணின் இயலாமை அதற்கான தீர்வு இறக்கும்வரையில் குடும்ப சுகம் இன்றியே தனக்குள் அருண் மனநோயாளியாக வாழ்வதா? அருந்ததி வசந்தமான வாழ்வின்றி தனிமை வெறுமை சூழ முதுமையில் பேச்சுத்துணைக்குக்கூட ஆட்கள் அற்ற  தனிமைக்குள் மருகுவதா?  அரவிந்தன் வாழ்கையை ஓரளவுக்கு கடந்திருந்தாலும் அங்கும் தனிமையே குடி கொண்டிருக்கிறது. ஆக இந்த முக்கோணத்தில்  மூவரும் தனிமையுடனும் வெறுமையுடனும் முதுமை எனும் பருவத்தை கடக்கவேண்டிவர்களாக இருக்கிறார்கள். மனங்களில் சலனங்கள் என்பது முதுமையில் வெறுமைக்குப்பயந்தும் மீளத் தோன்றுவதில் பிழை இருப்பதாகத் தெரியவில்லை. இங்கு புறக்காரணிகளே உயிர்களின் தேடலை மறுக்கிறது. தனிமை முதுமை வெறுமை இவற்றோடு வாழ்ந்து முடிக்க கண்களுக்குப் புலப்படாத சமூகக்கட்டுகள் இறுகிக்கிடக்கின்றன. கட்டவிழ்த்துவிட கதாசிரியர் தயாராக இல்லை. வந்தா வாசித்துவிட்டு போக வேண்டியதுதானே இப்படியெல்லாம் கேள்வி வைக்கக்கூடாது என்று ஆசிரியர் எண்ணமாட்டார் என்பதாலேயே நன்றாக இருக்கிறது என்பதற்கு அப்பால் கொஞ்சம் எழுதி உள்ளேன் கி கி.^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா நீங்கள் பாத்திரங்களின் பெயர்களை மாற்றி விட்டீர்கள். அரவிந்தனும் அருணும் உங்கள் பதிவில் ஆள்மாறாட்டம் பெற்றுள்ளனர். அதைவிட கதாசிரியர் கதையைச் சொல்லலாம் முடிவுகளை நிர்ணயித்து வரையறைக்கள் அடைக்க முடியாது, முடிவுகள் சிலசமயம் சமுகுக் கட்டுக்குள் முடங்கித்தான் கிடக்கின்றன. கட்டவிழ்த்துவுிட கதாசிரியர் தயாராக இரந்தாலும் கதையின்முடிவு பல சமயங்களில் எங்கள் எதிர்பார்ப்பக்களையும் பொய்யாக்கிவிட வாய்ப்புள்ளது, நன்றிகள் சகாரா.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஓ.... பெயரை மாற்றிவிட்டேனா...?!!!! மன்னிக்கவும்.

இப்படிப்பட்ட பல விடயங்கள் செப்பனிடப்பட்டு தோல்வியில் முடிந்திருக்கின்றன. காரணம் சரியான புரிதல்களோடு மீள்வாழ்க்கைக்குள் நுழையாமல் வாழ்க்கை அமைக்கப்பட்டால் போதும் என்பதாலாக இருக்கலாம் அத்தோடு பழிவாங்கும் அவசரம் அல்லது பருவக்கிளர்ச்சி இப்படியாக வகைப்படுத்தலாம் அல்லது உறவுகளின் அழுத்தம் இதில் ஏதோ ஒன்றாக இருக்கலாம் அத்தகைய வாழ்வு நீண்டகாலத்திற்குப்பயணிக்காமல் சின்னாபின்னப்பட்டவிடும். எங்கள் சமூக அமைப்பும் சரியான ஒருவரைத் தேர்ந்தெடுக்க அவகாசம் அளிப்பதில்லை என்பதே கசப்பான உண்மை.அந்தரங்கத்திற்குள் பாரிய தோல்விகளைச்சந்தித்து சகித்து வாழ்ந்து முடித்தே பழகிப்போனவர்கள் மனம்விட்டு பேச வாய்ப்புகள் கிடைத்தாலும் மறுத்து உள்ளொடுக்கம் கொண்டு வாழ்பவர்கள்......... இப்படியாக வெளியே தெரியாமல் வாழ்கிறவர்களுக்கு தோல்விகளை வெற்றிகளாக்க வாய்ப்புகள் கிடைத்தாலும் பயன்படுத்தும் திறன் குறைவே..இவ்விடயத்தில் மட்டுந்தான் வெற்றிபெறுபவர்களைப்பற்றி எவரும் பேசுவதில்லை தோல்வி அடைபவர்களையே எப்போதும் உதாரணமாக எடுத்து எதிர்காலம் என்ற அச்சத்தை பெரிய அளவில் உருவாக்கி விடுகிறார்கள் :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         KKR 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Riyan Parag 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         KKR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Singh Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         CSK 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Jos Buttler 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Jasbirsingh Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK
    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
    • "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்"    மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக  7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாசிக்கக் கூடியவை அல்ல. இவை கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது புத்தாகம்  சாதாரண சமையல்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்காது. இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக இருக்கலாம். இங்கு சமையல் குறிப்பு விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக, அதாவது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதமாக, சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக  இருக்கலாம்.  ஆகவே இன்றைய உலகின் மிகப் பழமையான சமையல் குறிப்பு, பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆய்வின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் முழுவதும் அறியவில்லை. அதிலுள்ள சமையல் முறையில் -  சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும் போது, அவை கை தேர்ந்த சமையல்காரருக்காக  தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.மேலும் உயிரியல்,விஞ்ஞானம் , தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன.  அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் முதலாவது, கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப் படும், YBC 4644, என அழைக்கப்படும் வில்லையாகும். இது 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் இல்லை.  இரண்டாவது வில்லை YBC 8958, ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது. வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges] இருக்கலாம்?  அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி சொல்கிறது: "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை,  பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும்  தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம். சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது: "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட லீக்ஸ், உள்ளி, மற்றும் ரவை, மற்றும் தேவைக்கு மட்டும் அளவான வெங்காயம் சேர்த்து கொள்," "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire" It does not mention whether fat or water is added -- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising, the recipe continues  "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)" இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை  பரிமாறுதலுக்கான ஆயுத்தம் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் இப்ப இப்படி அதன் பின் போகிறது: "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி -, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப் பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை வேகவைத்த ரொட்டியின் இரண்டாவது வெட்டிய பகுதியால் மூடு, அதை பரிமாறலுக்கு அனுப்பு."  "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" [to the table.] என்கிறது. மூன்றாவது வில்லை 3 சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இந்த வில்லை உடைந்து காணப்படுவதுடன் இது ஒரு பானையில் பறவை, அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?], இறைச்சி போன்றவையை  சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும், சுமேரியர்களின் பியர் மது தயாரிக்கும் முறையைப்பற்றி, வரிசையில் பாடப்பட்ட  கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தாகமாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் அதன் என் மொழிபெயர்ப்பும் என் "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" என்ற கட்டுரையில் இங்கு நாவூற வாயூற பகுதியில் 18  / 04 / 2024  தந்துள்ளேன்.   இறுதியாக,  இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை  கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடு கிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? என கேட்பவர்களும் உள்ளார்கள்.  அவர்களுக்கு  அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால 'யேல் சமையல் பலகைகள்' இன்று எடுத்துகாட்டு கின்றன.  இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. இதற்கு முன்பு பொதுவாக,  நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு  அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த  நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம்? அப்படி என்றால் நீராவிச் சமையல் ?? உங்கள் கேள்வி என் காதில் ஒலிக்கிறது . விரைவில் உங்களுக்கு சமர்ப்பிப்பேன்    நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • போட்டியில் இணைந்துகொண்ட @வாதவூரான் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 4 மணித்தியாலங்களே உள்ளதால் தாமதிக்காமல் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன்
    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.