Jump to content

சுரேசும் அனந்தியும் இணைந்து நடத்திய அஞ்சலி- அரசியலிலும் இணைய திட்டம்?


Recommended Posts

Published on May 19, 2015-11:24 am   ·   No Comments
suresh-7-150x150.jpgதமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், வல்வெட்டித்துறை நகரசபையின் முள்ளாள் தலைவர் அனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு இடத்தில் நேற்றுமாலை நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் பெற்ரோர், உறவினரை இழந்த பிள்ளைகள் வாழும் ஒரு இல்லத்தில் அவர்களுடன் சேர்ந்து இறுதிப் போரில் உயிர் நீத்த அனைவருக்கும் சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வு தனியே முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி என்ற செய்தியை மட்டுமல்ல எதிர்கால அரசியல் செய்தி ஒன்றையும் சொல்கிறது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பம் கொண்டுள்ள அனந்தி சசிதரனுக்கு தமிழரசுக்கட்சி வேட்பாளர் பட்டியலில் இடம்கொடுக்கா விட்டாலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஊடாக பொதுத்தேர்தலில் போட்டியிட அனந்தி திட்டமிட்டுள்ளார். அதற்கான உத்தரவாதத்தை சுரேஷ் பிரேமச்சந்திரன் வழங்கியுள்ளார். அது போல முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் அனந்தராஜ் அவர்களும் அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பாக இவர் போட்டியிட உள்ளார் என தெரியவருகிறது.
இந்நிகழ்வில் உரையாற்றிய சுரேஷ் பிரேமச்சந்திரன் முள்ளிவாய்க்காலில் நாம் தோற்றுப் போகவில்லை அது தற்காலிகப்பின்னடைவுதான் என தெரிவித்தார்.
எமது உறவுகளை நினைத்துப் பார்ப்பதற்குக் கூட சுதந்திரமில்லாத மக்களாக எமது உறவுகளுக்காக ஒரு தீபமேற்றுவதற்கு கூட சுதந்திரமில்லாத மக்களாகத்தான் நாங்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். போர் முடிந்து ஆறு வருடங்கள் கடந்தும் முள்ளிவாய்க்காலில் தீபமேற்றுவதற்கு அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டிருந்தது. தடைகளை மீறித்தான் தீபமேற்றவேண்டிய சூழலுமேற்பட்டிருந்தது. ஆகவே எமது மண்ணில் ஆட்சிகள் மாறியிருந்தாலும் அவர்களின் மனங்களும் குணங்களும் மாற்றம் பெறவில்லை.ஆகவே நாங்கள் எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ளாத வரையில் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஆழுகின்ற சூழல் ஏற்படாத வரையில் அது எந்தவிதமான ஆட்சியாக இருந்தாலும் கூட அந்த ஆட்சியானது தமிழ்மக்களுக்கு சாதகமாக இருக்கமாட்டாது என்பதனை தான் ஆட்சியாளர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றார்கள்.
ஆனாலும் கூட சர்வதேசரீதியாக எமது உறவுகள் எமக்காக போராடியவர்கள் எம்மை நடுத்தெருவில் விட்டுச்செல்லவில்லை சர்வதேச அளவில் எமது மக்களது பிரச்சினைகள் பேசப்படுகின்ற பிரச்சினைகளாக எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்ற சிந்தனையை சர்வதேசத்திற்கு தெரிவித்தவர்களாக அதனை உணர வைத்தவர்களாக எமது போராட்டத்தை விட்டுச்சென்றிருக்கிறார்கள்
அந்தவகையில் இன்னுமொரு மூலையில் நம்பிக்கை ஒளிக்கீற்று இருக்கின்றது நாங்கள் அந்த ஒளிக்கீற்றைப் பற்றிப்பிடித்து எமது மக்களுக்கான ஒரு முழுமையான விடிவினை ஏற்படுத்தவேண்டிய பொறுப்பும்,கடமையும் எங்கள் எல்லோருக்குமிருக்கிறது. ஆறு வருடம் கடந்தும் கூட எமது பெற்றோர்கள் வீதிவீதியாக அலைகின்றார்கள். காணாமல் போன தமது உறவுகளை பார்ப்பதற்காக தமது உறவுகள் எங்கெங்கோ இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டவர்களாக இன்னும் அவர்கள் தமக்கு கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையில் அலைந்து திரியக்கூடிய ஒரு அவலமான சூழலில் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் அரசாங்கமோ அதற்கு தகுந்த பதிலை வழங்காமலிருக்கின்றது.
ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் நாங்களும் இந்த அரசாங்கத்திற்கு கூறிவருகின்றோம் எங்கு எங்கெல்லாலம் எமது பிள்ளைகள் அடைத்து வைக்கப்பட்டார்கள்,யாரால் அடைத்து வைக்கப்பட்டார்கள் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் கண்டறியவேண்டும் என்று கேட்கின்றோம் சர்வதேசரீதியாக அவர்களுக்குச் சொல்லியும் வருகின்றோம்.
ஆகவே நான் இங்கிருக்கக் கூடிய குழந்தைகளுக்கு சொல்லுகின்றேன் நாங்கள் நம்பிக்கையுடன் முன்நோக்கிச் செல்வோம் நிட்சயமாக நான் சொல்ல வேண்டிய பல விடயங்களை நீங்கள் உங்களின் பாடலின் மூலம் சொல்லிவிட்டீர்கள் நாங்கள் ஒண்றும் தோற்றுப்போனவர்களல்ல ஒரு தற்காலிகமான பின்னடைவைத் தான் சந்தித்திருக்கின்றோம் நீங்கள் எல்லோரும் சுதந்திரமான மண்ணில் சுதந்திரமான பிள்ளைகளாக இந்த நாட்டை முன்னேற்றுபவர்களாக தமிழ் மக்களை முன்னேற்றுபவர்களாக நீங்கள் இருப்பீர்கள் அதற்கான கடமைகளை தொடர்ந்து நாங்கள் செய்யவேண்டும் செய்வோம் என்றார்.suresh.jpgsuresh-1.jpgsuresh-2.jpgsuresh-3.jpgsuresh-4.jpgsuresh-5.jpgsuresh-6.jpgsuresh-7.jpg
 
 
 
 
 
http://www.thinakkathir.com/
 
 
 
சனி,ஞாயிறு மட்டும் கருத்தெழுதும் போலி தமிழ்த் தேசியவாதிகளுக்கு இத்திரி சமர்ப்பணம் திட்டுகின்றவர்கள் திட்டலாம் ,வாழ்த்துகின்றவர்கள் வாழ்த்தலாம் எவையும் gari யை மாற்றாது ,மாற்றவும் முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீரிமலையில் ஐக்கிய தேசிய கட்சி யாழ்மாவட்ட அமைப்பாளருடன் சிவி அனந்தி இணைந்தது இவைக்கு தெரியவில்லை.

கடந்த வடமாகாண சபை தேர்தலில் தமிழரசுக்கட்சி இடம் கொடாத பலர் புளட் சார்பிலும்,ஈபிஆர்ல்எவ் சார்பிலும் தேர்தலில் நின்றது கனபேருக்கு மறந்திட்டுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த மக்களுக்கு அஞ்சலி செய்யக் கூட முடியாத சம்பந்தன்.. சுமந்திரனை விடக் கேவலமான அரசியல்வாதிகள் இந்த உலகில் இல்லை. சிங்களவன்.. எல்லாம் தன் இனத்துக்காக அஞ்சலி செய்தான்.. கூடவே வெற்றி விழாவும் செய்தான். இதுங்க.. :icon_idea:

 

இப்போது மக்களுக்கான.. அஞ்சலியையும் அரசியலாக்கி செய்தி ஒட்டி வருதுங்க.. சில ச.சு வால்பிடிகள்.

 

இதுகளின் அநாகரிகத்துக்கு பலியாகப் போவது அந்த அப்பாவி பிள்ளைகள். அதுதான் வேதனை. நாளை விபுசிகாக்கங்கள் இங்கிருந்து பிறப்பிக்கப்பட்டால் அதற்கு இந்த கீழ்த்தரமான ச.சு கும்பலே காரணம். :icon_idea::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கூட்டுத்தான்!

கொஞ்சம் பிள்ளையப் பிடியுங்கோ எண்டு சத்தம் கேக்கிது. ஓ அது பக்கத்து வீட்டு முன்னாள் பிகர் தன்ட புருசனிட்ட கைக் குழந்தையைப் பிடிக்கச் சொல்லுற சத்தம் வேற ஒண்டும் இல்லை! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கூரையேறிக் கோழி பிடிக்க முடியாதவர்கள் வானமேறி வைகுண்டம்போகப்போவதாகக் கூறுவதுபோலுள்ளது, சம்பந்தன் ஐயா சுமந்திரன் அப்புக்காத்து அவர்களது அடிப்பொடிகளது கருத்துக்கள்.

 

முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்களுக்குப் பொதுவான ஒரு அஞ்சலி நிகழ்ச்சியையே செய்ய சரியான திசையில் மக்களை வழிநடத்த, அன்றேல் ஒரு அதற்கான சந்தர்ப்பத்தை மக்களுக்கு எதுவித இடைஞ்சலுமிலாது ஒழுங்குபடுத்திக்கொடுக்க வக்கில்லாத தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு.

 

எதிர்வரும்காலங்களில் தமிழர்களது உரிமைகளைப்பெறுவதற்கான சரியான பாதையில் செல்லும் என்பதை எப்படி அறுதியிட்டுக்கூறலாம்.

 

அதிசரி நான் கடந்த காலங்களில் கேட்டதுபோல் இப்போதும் கேட்கிறேன்,

 

தந்தை செல்வாவால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியது செயல்பாடுகள் , ஆனந்தசங்கரி எனும் ஒரு தனிநபரால் நீதிமன்ற ஆணைமூலம் முடக்கப்பட்டுள்ளதே, உங்களது அப்புக்காத்து மூளைகளைப் பயன்படுத்தி, வருடங்கள் பலவாக முடக்கப்பட்ட அக்கட்சியை  இதுவரை மீட்கவில்லையே.

 

இவர்கள்தான் கடந்தகாலங்களில் கூட்டமைப்புடன் முரண்பட்டு, சிங்களத் தலைமையுடன் காட்டிக்கொடுப்பில் ஈடுபட்ட மட்டக்களப்பு முன்னைநாள் பா உ இராஜதுரையை யாழில் தந்தை செல்வாவது நினைவு நிகழ்வில் பங்குகொள்ள அனுமதித்தவர்கள்.

Link to comment
Share on other sites

Published on May 19, 2015-11:24 am   ·   No Comments

 

 

 

http://www.thinakkathir.com/

 

 

 

சனி,ஞாயிறு மட்டும் கருத்தெழுதும் போலி தமிழ்த் தேசியவாதிகளுக்கு இத்திரி சமர்ப்பணம் திட்டுகின்றவர்கள் திட்டலாம் ,வாழ்த்துகின்றவர்கள் வாழ்த்தலாம் எவையும் gari யை மாற்றாது ,மாற்றவும் முடியாது

 

சனி, ஞாயிறு மட்டும் கருத்து எழுதுபவர்கள் வேலைக்கு போகிறவர்கள். மற்றயவர்கள் கரி போல வெட்டியில்லாதவர்களாக இருக்கலாம் என்பது கரியின் கருத்து.   கரியை மாற்ற மற்றயவர்கள் வேலை வெட்டி இல்லாதவர்களா? எப்போதும் சம்பந்தன் சுமந்திரன் பேர்வழிகளை  போன்றவர்களை தலையில் காவித்திரியும் அதேவேளை  மற்றயவர்கள் மீது  எப்போது பார்த்தாலும் வெறுப்பையும் காழ்புணர்வையும் கொட்டி திரிவதே வேலையாகி போச்சு. சம்பந்தன் சுமந்திரனில் சரியும் இருக்கலாம் பிழையும் இருக்கலாம். மற்றயவர்களின் கருத்துகளில் அதேபோல் சரி பிழை இருக்கலாம். சம்பந்தன் ஒன்றும் தந்தை செல்வா அல்ல. எல்லா தமிழ் சிங்கள முஸ்லீம்  அரசியல் வாதிகளை போலஒரு சாதாரண  சுயநல அரசியல்வாதி. அவ்வளவு தான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினக்கதிர் புலனாய்வு அறிக்கை அந்தமாதிரித்தான் உள்ளது. தமிழர்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்துக்கு நான் முந்தி, நீ முந்தி என்று பலர் போட்டியிடமுனைகின்றார்கள் போலுள்ளது. அதனால் இப்பவே ஊகங்களையும், அவதூறுகளையும், சேறுகளையும் அள்ளிவீசி எதிராளிகளை இயலுமானவரை ஒடுக்கத் தினக்கதிர் திட்டம் போட்டுச் செயற்படுகின்றது. இது அச்சுப் பத்திரிகையாக வந்தால் தாயகத்தில் உள்ளவர்கள் வாசித்துக் குழம்பக்கூடும்.

ஆனால் இணையப்பத்திரிகையாகத்தான் வருகின்றது. எனவே, சிரங்கு தொத்திய ஒரு சிலர்மட்டும்தான் ஆசையும் அரிப்பும் தீருமட்டும் சொறிந்துகொள்ளுவார்கள் :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.