Jump to content

பால்ராஜ் அமரனுக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன் EDITTED


Recommended Posts

 

தளபதி பால்ராஜ் ஈழப்போர் வரலாற்றின் மாதண்டநாயக்கன் ஜெனரல் என கொண்டாடப்பட வேண்டிய மாவீரனாவார். அவரது மரணச் செய்தி கேட்டவுடன் எழுதிய அஞ்சலியை இப்போ மீழ செம்மைப் படுத்தி எடிற் பணி பதிவு செய்கிறேன்

 

 

பால்ராஜ் அமரனுக்கு

 

...ஜெயபாலன்

அமரா                                                                                                     எங்கள் விடுதலைபோரின் மாதண்ட நாயக்கா

நீ மீட்ட ஆனையிறவுக் கடற் கழியில்

தரை இறங்கும் செங்கால் நாரைகளாய்

வன்னியெங்கும் 

தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே.                                                                                                                                        *என கவிதையிலே நீ வாழ

ஈழம் கதறியழும் நியாய மென்ன.

 

 

இந்த மணலாற்று அகதிகளின் புதையலை

ஆழப் புதைக்காதீர்

ஆலயங்கள் கட்டாதீர்.

நாளை அவர்கள் மணலாற்றை மீட்டு                                                                            *வாழ திரும்புகையில்

மசிரை விட்டுதுகள் தம்

மனம் நிறைந்த நாயகனை.

 

நீயோ முடங்கிய காலில் 

மூண்டெரிந்த விடுதலைத் தீ.

தீவெட்டியாக

சுமந்து சென்ற தோழருக்கு 

'இத்தாவில்' போர் இருளில்  

வெற்றியின் பாதை விளங்க வைத்த மாவீரா.

உன்னை எழுதாமல் இந்தத் தமிழ் எதற்கு.

 

 

களம் களமாய் உன்னைத் தோழர் சுமந்ததுபோல்

காலங்கள்  ஊடே 

என் கவிதை இனிச் சுமக்கட்டும்            

 

 

WRITTEN 2008 MAY

 

EDITTED  2015 MAY

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரனின் காணொளியையும் (திண்ணையில்)  உங்கள் கவிதையையும் கண்டு நெகிழ்ந்தேன். நன்றி.

Link to comment
Share on other sites

நன்றி செந்தமிழாளன். இது மீழ் பதிவு மட்டுமல்ல. 20.மே.2008ல் கவிதை எழுதி எடிற்பண்ணும் மனநிலை இல்லாமல் பிரசுரித்தேன். பின்னர் 07,ஜுன்.2008ல் மேலோட்டமாக எடிற் பணீயிருக்கிறேன். இப்ப முழுமையாக எடிற்பணி திருத்தி பிரசுரிதிருக்கிறேன். கவிதை எடிற்பண்ணும் உத்திகள் பற்றி தெரிந்துகொள்ள இது உதவும்

மூல வடிவம் காண

http://www.yarl.com/forum3/index.php?/topic/39036-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-corrected-%E0%AE%B5%E0%AE%90%E0%AE%9A%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவையான  நேரத்தில் தங்கள் மீள் பதிவிற்கு நன்றி தோழர்..

Link to comment
Share on other sites

நநன்றி விசுக்கு, இது மீழ்பிரசுரமல்ல. கவிதையை செப்பனிட்டு மீழ எடிற் பண்ணி பதிவேற்றி உள்ளேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் போயற்!

 

எனக்கென்னவோ ஒரு கவிதையை வாசிக்கும் போது.. மூலக்கவிதை மனதில் இடம் பிடித்து விடுகின்றது!

 

பின்பு அதற்கு மெருகூட்டப்படும் போதும்.. அந்த மூலக்கவிதை மட்டும் நினைவிலிருந்து அகல்வதில்லை!

 

பொதுவாக நான் கவிதையின் 'கருப்பொருளை' மனதில் உள்வாங்கிக் கொள்வதனால்.. மெருகூட்டல்கள் அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை!

 

இந்த மணலாற்று அகதிகளின் புதையலை
ஆழப் புதைக்காதீர்
ஆலயங்கள் கட்டாதீர்.
நாளை அவர்கள் மணலாற்றை மீட்டு                                                                            *வாழ திரும்புகையில்
மசிரை விட்டுதுகள் தம்
மனம் நிறைந்த நாயகனை

 

மேலுள்ள பந்தியில்.. மசிரை விட்டுதுகள்..தம்..மனம் நிறைந்த நாயகனை.. என்னும் வரிகள் 'மக்களின் உணர்வை' அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றன!

 

இப்படியான 'வரிகள்' மெருகூட்டல் என்னும் பெயரில்.. விடுபட்டுப் போகக்கூடாது என்பது எனது பணிவான கருத்து!

 

இப்படியான வரிகள் நீக்கப்பட்டால்.. கவிதை செத்துப்போகும் என நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

உண்மைதான் புங்கையூரான்,

மெருகூட்டுவதும் எடிற்பண்னணுவதும் இலகுவான பணியல்ல. ஆனால் உணவுக்குப்போடும் உப்புக்கு மட்டுமல்ல சர்க்கரைக்கும் சுவை சேர்க்கும் அளவு இருக்கல்லா? கவிதை அம்சங்களும் அப்படித்தான். ஆனால் மூலத்தின் வீரியம் மிக்க வரிகல் விடுபடாமல் பார்க்க வேண்டும். கவிதைக்கு வெளியே நின்றால், அற்புதமான அடி என்றாலும் அவை வேறொரு கவிதைக்கான அடிகள்  என்பதை ஏற்ருக்கொள்ள வேணும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
    • பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்றது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முற்பகல் 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். மலையகப் பகுதிகளிலிருந்து தோட்டத்தொழிலாளர்கள் கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். https://thinakkural.lk/article/299640
    • Published By: NANTHINI   19 APR, 2024 | 01:12 PM   1974 கச்சதீவு தொடர்பில் இலங்கையிலும் இந்தியாவிலும் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்றன. கச்சதீவு யாருக்கு சொந்தமானது என்பது பற்றிய பல்வேறு விதமான கருத்துக்கள் இன்றைய நவீன உலகில் குறிப்பாக சமூக ஊடகங்களில் வைரலாக (trending) காணப்படுகிறது. கச்சதீவு வைரலாவதற்கு (trending) பல காரணங்கள் பலராலும் கூறப்படுகின்றன. ஆனால், வரலாற்றை மீட்டுப் பார்க்கும்போது “கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது! 45 வருடகாலத் தகராறு தீர்ந்துவிட்டது!!” என்ற தலையங்கத்துடன் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி வெளியான வீரகேசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் இவ்வாறு உள்ளது. https://www.virakesari.lk/article/181449
    • எப்படியோ இனி நீங்கள் யாழுக்கு வர ஒரு வருசம் எடுக்கும்…. நீங்கள் இப்படி எழுதியதை எல்லாரும் மறந்து விட்டிருப்பார்கள் என்ற தைரியத்தில் உருட்டவில்லைத்தானே? ஒன்றின் பெயர் மிர்சேல் ஒபாமா என நினைக்கிறேன். ஏனையவற்றின் பெயர்கள் என்னவாம்? அம்பானிக்கும் தெரியாதாம்
    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.