Jump to content

போதைப் பொருள் விற்பவர்கள் யார் என்பது தெரிந்தும் முறையிட பயப்படுகிறார்கள் : ஜெயசேகரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
போதைப் பொருள் விற்பவர்கள் யார் என்பது தெரிந்தும் முறையிட பயப்படுகிறார்கள் : ஜெயசேகரம்
6a5fa2a2bd2481408b79c0e1251e9d5f.jpg

கிராமிய மட்டத்திலும் போதைப்பொருள் அதிகரித்துள்ளது. இதனை யார் விற்கின்றார்கள், எங்குள்ளது என்பது பற்றி கிராமிய மட்ட அமைப்புக்களுக்கு தெரிகின்றது. ஆனால் அவர்கள் முறைப்பாடு செய்வதற்கு பயப்படுகின்றார்கள் என்று, யாழ். வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார்.

 
அவ்வாறு முறைப்பாடு செய்து குற்றம் சுமத்தப்பட்டவர் பிணையில் வெளிவந்து, தன்னை யார் காட்டிக்கொடுத்தார்கள் என்பதை அறிந்துகொள்கின்றார். இதனால் முறைப்பாடு செய்தவருக்கு பாதிப்புக்கள் ஏற்படுகின்றது.
 
இதனால் தகவல்கள் தருபவரின் பாதுகாப்பு பேணப்பட்டு, அவரது இரகசியமும் பேண பொலிஸ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
 
இதற்கு வடமாகாணப் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்க பதிலளிக்கையில்,
 
போதைப்பொருள் தொடர்பில் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான தகவல்களை தருபவர்கள் பயப்படக்கூடாது. கீழ்மட்ட அதிகாரிகளை விடுத்து எனக்கு நேரடியாக தெரியப்படுத்த முடியும். அதன்மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கும், முறைப்பாட்டாளர்களின் பாதுகாப்பும் பேணப்படும்.
 
071 8591005 என்ற எனது தொலைபேசி இலக்கத்துடனும், anjala1961@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவும் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடு தெரிவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

http://onlineuthayan.com/News_More.php?id=377654018605413049

Link to comment
Share on other sites

வடமாகாணப் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்க தனக்குக்கீழே வேலைபார்க்கும் அதிகாரிகள்மேல் கொண்டுள்ள நம்பிக்கையை நினைக்கும்போது புல்லரிக்கிறது.  :D  :lol:  :icon_mrgreen: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.