Jump to content

திஸ்ஸவின் பதவி தப்பியது; உயர்நீதிமன்றம் தீர்ப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திஸ்ஸவின் பதவி தப்பியது; உயர்நீதிமன்றம் தீர்ப்பு

arrest1-300x198.jpg

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்காவின் கட்சி நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து நீக்கியமை சட்டத்துக்குப் புறம்பானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

ஐ.தே.கவின் முன்னாள் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக முடிவெடுத்து பிரிந்துசென்றிருந்தார்.  கடந்த தேர்தல் பரப்புரைக் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கையெழுத்துக்களைப் பயன்படுத்திப் போலி ஆவணமொன்றை தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற உத்தரவிற்கமைய கடந்த பெப்ரவரி மாதம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

 

 

அதனைத் தொடர்ந்து ஐ.தே.கவின் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். கட்சி நாடாளுமன்ற உறுப்புரிமை பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிராக திஸ்ஸ அத்தநாயக்க தொடர்ந்த வழக்கின் பிரகாரம் இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போதே திஸ்ஸ அத்தநாயக்க கட்சியின் நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்கியது சட்டத்துக்குப் புறம்பானது எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 

http://www.colombomirror.com/tamil/?p=4367

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.