Jump to content

யாழ்.வீரர்களுக்கு வளப் பற்றாக்குறை - சரவணபவன் எம்.பி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.வீரர்களுக்கு வளப் பற்றாக்குறை - சரவணபவன் எம்.பி Untitled-3.jpg

வடமாகாண வீரர்களிடத்தில் தேசிய ரீதியாகவோ அல்லது சர்வதேச ரீதியாகவோ சாதிப்பதற்குரிய திறமைகள் உள்ளன. 

 
அந்தத் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் ஆர்வமும் அவர்களிடத்தில் உள்ளன. திறமைகளும் ஆர்வமும் இருந்த போதிலும் அவற்றை மேலும் வளர்த்துக்கொள்ளத் தேவையான வளங்களின் பற்றாக்குறையே எமது வீரர்கள் மாகாணத்துடன் தமது விளையாட்டுப் பயணங்களையும் சாதனைகளையும் முடித்துக்கொள்ள பிரதான காரணமாக உள்ளது.
 
இவ்வாறு தெரிவித்தார் யாழ், கிளிநொச்சி மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
 
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் 'ஹோப்' திட்டத்தின் கீழ் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அங்கு அவர் மேலும் உரையாற்று கையில்,
கடந்த கால அரசை விட தற்போதுள்ள அரசு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாகப் பிரதேச வாரியாக விளையாட்டுக் கழகங்களை வளர்த்தெடுப்பதற்காக மேற் கொண்ட இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். 
 
ஆனால் இந்த அரசுக்கு நாம் செய்த உதவிக்கு அரசால் எமக்குச் செய்யப்படும் உதவி போதாது. எமது இளைஞர்கள் வேறு சிந்த னைகளில் கவனத்தைச் சிதற விடுவதை விட விளையாட்டில் கவனம் செலுத்தி தொடர்ந்து சாதித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.
 
'ஹோப்' திட்டத்தின் கீழ் 15 பிரதேச செயலகங்களில் இருந்தும் மொத்தமாக 466 கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. 
நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை, நல்லூர், யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலகங்களில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு யாழ்.மத்திய கல்லூரி மைதானத்திலும், கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி, சாவகச்சேரி, கோப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்திலும், காரைநகர், உடுவில், தெல்லிப்பழை, சங்கானை, சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்திலும் வைத்து குறிப்பிட்ட உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
 

நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்கள் த.சித்தார்த்தன்,  க.விந்தன் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

http://onlineuthayan.com/News_More.php?id=759234017505504828

Link to comment
Share on other sites

அந்தத் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் ஆர்வமும் அவர்களிடத்தில் உள்ளன. திறமைகளும் ஆர்வமும் இருந்த போதிலும் அவற்றை மேலும் வளர்த்துக்கொள்ளத் தேவையான வளங்களின் பற்றாக்குறையே எமது வீரர்கள் மாகாணத்துடன் தமது விளையாட்டுப் பயணங்களையும் சாதனைகளையும் முடித்துக்கொள்ள பிரதான காரணமாக உள்ளது.

 

இவ்வாறு தெரிவித்தார் யாழ், கிளிநொச்சி மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.

நீங்கள் சப்ரா பினான்ஸ் நிறுவனம் மூலம் மக்களிடம் ஆட்டையை போட்ட, JHC விளையாட்டு உபகரணங்களை Arun Sports மூலம் வித்து ஆட்டையை போட்ட பணத்திலை கொஞ்சத்தை கொடுகிறது. :icon_idea:

 

அதுக்கு மனம் வராதே. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.