Jump to content

தேசியக்கொடி கற்பிதமும் உண்மையும்


Recommended Posts

தேசியக்கொடி கற்பிதமும் உண்மையும்

இலங்கையின் தேசியக் கொடி பற்றிய சர்ச்சை சமகால அரசியல் அரங்கில் மேலோங்கிவிட்டிருப்பதை இந்த நாட்களில் கவனித்திருப்பீர்கள். இந்த போக்கின் பின்னால் உள்ளார்ந்திருக்கும் அரசியல் நலன்கள், பேரினவாதிகளின் பாசிச நலன்கள், அவர்களின் நீண்டகால குறுங்கால தந்திரோபாயங்கள், அவர்களின் திசைவழி என்பன குறித்து அலட்சியப்படுத்திவிட முடியாது.

தேசியக் கொடி என்பது தமிழர்களைப் பொறுத்தளவில் அவ்வளவு அக்கறைக்குரிய ஒன்றாக இல்லாமல் போய் நெடுங்காலம் ஆகிவிட்டாலும் கூட அரசியல் தளத்தில் தேசியக்கொடியை சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிரான ஒரு வடிவமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை அலட்சியப்படுத்திவிட முடியாது. மேலும் சிங்கள பௌத்த பேரினவாதம் என்பது நிருவனமயப்பட்டது என்று நாம் கூறும் போது அது எப்படி என்று நிறுவுவதற்கு இந்த சம்பவங்களின் போக்குகளே மூலாதாரங்களாக அமைகின்றன. அது தவிர அசியலமைப்பின் மூலம் உறுதிசெய்யப்பட்ட ஒன்றை சவாலுக்குள்ளாக்கும் பேரினவாத அராஜகங்கங்களை நிறுவனமயப்பட்ட பேரினவாத கட்டமைப்பானது திரைமறைவில் அனுசரணை வழங்கவே செய்யும். அத்தகைய போக்கிற்கான சிவில் ஆதரவும் போதுமான அளவு கிடைக்கவே செய்யும். அதைத்தான் “நிருவனமயப்பட்டது” என்கிறோம்.

இலங்கையின் அரசியலமைப்பு, அரசியல் அதிகாரம், கல்வி கட்டமைப்பு, நீதி-நிர்வாகத்துறை, சிவில் நிறுவனங்கள், பௌத்த நிறுவனங்கள், ஊடகத்துறை என அனைத்துத் துறைகளும் சிங்கள பௌத்த பேரினவாதமயப்படுத்தப்பட்டது தான் என்பதை வரலாறு மீள மீள உறுதியாக தெளிவுபடுத்திவந்திருக்கிறது. எனவே தான் அதனை மாற்றியமைப்பதும் அத்தனை இலகுவான காரியமல்ல என்பதை நீதி கோரும் சக்திகள் அனைத்தும் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த அடிப்படை கட்டமைப்பை மாற்றுவதற்கான தொடர் போராட்டம் என்பது சகல வழிகளிலும், சகல வடிவங்களிலும், சகல உத்திகளாலுமே சாத்திப்படுத்தலாம். எனவே தான் தேசிய கொடி விடயத்தையும் ஒரு “விவகாரமாக” அணுகுவது அவசியமாக ஆகியிருக்கிறது.

முன்னெடுத்துள்ள சக்திகள்?

கடந்த மூன்றாண்டுகளுக்குள் பேரினவாதத்தை பட்டை தீட்டியதில் பொது பல சேனாவின் பங்கு பாரியது. சற்று ஓய்ந்திருந்த பேரினவாத சக்திகளை உசுப்பேத்தி வெளிக்கிளரச் செய்ததில் அதன் பங்கு முக்கியமானது. உண்மையை சொல்லப்போனால் இத்தகைய பேரினவாத கிளர்ச்சியை முன்னெடுப்பதற்கான ஓர்மமும், பலமும் ஜாதிக ஹெல உறுமயவிடம் தான் இருந்தது. ஆனால் அதன் பாராளுமன்ற பாதை அதன் வீரியத்தை சற்று ஜனநாயகப்படுத்தியிருந்தது. அந்த இடைவெளியையே பொது பல சேனா நிரப்பியது. அப்படிப்பட்ட பொது பல சேனா மிகக் குறுகிய காலத்தில் இராட்சத பலத்தை அடைந்ததற்கு மகிந்த அரசாங்கத்தின் அனுசரணை முக்கிய காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

பொது பல சேனாவின் அடக்கமுடியாத அடாவடித்தனங்களை அதனை ஆக்கியவர்களால் கூட அடக்க முடியாத நிலை தோன்றியது. சென்ற வருடம் இதே மாதத்தில் அழுத்கமையில் மேற்கொண்ட கலவரம் பொது பல சேனாவின் பலத்துக்கு ஒரு சான்று என்பது மட்டுமல்ல அதன் பலவீனத்துக்கும் சான்றாக அமைந்தது. பொது பல சேனாவுக்கும் தமக்கும் ஓட்டும் இல்லை, உறவும் இல்லையென்று பலர் தப்பியோடினார்கள். ஆனால் பொது பல சேனா தம்மை சிங்கள பௌத்த தரப்புக்கு தலைமையாக்கும் பிரயத்தனங்கள் எதுவும் பலிக்கவில்லை. பல செயற்திட்டங்களை பாரிய அளவில் மேற்கொண்ட போதும் அவை எதுவும் வெற்றிபெறாத நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த தரப்புக்கு ஆதரவை தெரிவிக்க கூட முடியாத நிலை தோன்றியது. எவருக்குமே பொது பல சேனாவின் ஆதரவு தேவையில்லை ஆளை விட்டால் போதும் என்கிற நிலை உருவானது. மகிந்த தரப்பின் தோல்விக்கு பொது பல சேனாவின் பாத்திரமும் முக்கியமானது என்பதை மகிந்த தரப்பே பகிரங்கமாக ஒப்புகொள்ள வேண்டிய நிலை இன்று.

இப்படி கையறு நிலைக்கு தள்ளப்பட்ட பொது பல சேனா 50க்கும் மேற்பட்ட வழக்குகளை தற்போது எதிர்கொண்டபடி இருக்கிறது. வழக்குகளை எதிர்கொள்வதிலும் அதற்கான நியாயங்களை ஊடகங்களுக்கு எடுத்துரைப்பதிலும் அதன் சக்தியை செலவிட வேண்டிய நிலை இப்போது. பொதுபல சேனாவின் வீரியம் இப்படி குறைக்கப்பட்ட நிலையில் தோன்றியது தான் “சிங்களே ஜாதிக பெரமுன” என்கிற அமைப்பு. “சிங்கள ராவய”, “ராவணா பலய” போன்ற அமைப்புகளும் மகிந்த ஆதரவு அணியில் இருந்துகொண்டு இனவாத நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதும் பொது பல சேனாவின் முன்னால் தாக்கு பிடிக்க முடியாமல் போனது. சமீபத்தில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பகிரங்கமாக கூறிய ஒரு தகவலும் முக்கியமானது. தன்னை பல கோடிகளுக்கும், பதவிகளுக்கும் விலைபேசுவதற்காக “ராவணா பலய” அமைப்பையே மகிந்த தரப்பு அனுப்பியிருந்ததாக கூறியிருந்தார். ஆக நேரடியாகவே மகிந்த சார் பேரினவாத போடுதடிகளாக செயற்பட்ட சக்திகள் இவை.

இன்றைய பேரினவாத தலைமை?

ஆனால் இன்றைய இனவாத போக்குக்கு தலைமை தாங்கத் தொடங்கியிருப்பது யார். அது சிங்களே ஜாதிக பெரமுன (சிங்கள தேசிய முன்னணி).

இந்த அமைப்பு கடந்த பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி தம்மை ஒரு சிங்கள பௌத்த அரசியல் அமைப்பாக ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி பிரகடனப்படுத்திக்கொண்டது. இது ஒரு வெறும் சிவில் அமைப்பல்ல. தம்மை அரசியல் கட்சியாக பிரகடனம் செய்திருக்கிறது. அமைப்பின் இலக்கு குறித்து மூன்று பக்கங்களில் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூட “தனிச்சிங்க” தேசியக் கொடியை முகப்பின் தலைப்பில் இட்டிருந்தனர்.

சிங்கள ஜாதிக பெரமுன என்கிற இன்னொரு அமைப்பு இதற்கு முன்னர் இயங்கி வந்தது. தமிழ் அரசியல் கட்சிகள் இனிமேல் “தமிழ்”, தமிழ் தேசியம்”, “ஈழம்” போன்ற பெயர்களை வைக்கக்கூடாது என்று 2012இல் வழக்கு தொடர்ந்திருந்தது இது. அதுபோல 2013இல் வடக்கில் சிங்களவர்கள் மீள குடியேற்றப்படும்வரை மாகாணசபை நடத்தக்கூடாது என்று போராடிய அமைப்பு. ஆனால் அந்த அமைப்பு அல்ல இந்த புதிய அமைப்பு. இரண்டுக்கும் வித்தியாசம் பழையது “சிங்கள”, புதியது “சிங்களே” என்று தொடங்குகிறது.

“நமது நாட்டில் 60 அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ஆனால் இவற்றில் ஒன்று கூட சிங்கள பௌத்த கட்சி இல்லை. தமிழர்களும் மரக்கலகாரர்களும் தேசிய அளவில் எந்த நலன்களுக்காகவும் இருக்க மாட்டார்கள் ஆனால் தமது தேசிய இன நலன்களுக்காக முண்டியடித்துவந்து விடுகிறார்கள். நாட்டின் பொருளாதாரம் குறித்தோ அல்லது மாணவர்களின் போராட்டங்களுக்கு கூட அவர்கள் பங்குபற்றுவதில்லை. இப்போது எங்களுக்கு என்று சிங்கள பௌத்த கட்சியை உருவாக்கியிருக்கிறோம்” என்று அதன் பொருளாளர் திஸ்ஸ பியகுன அறிவித்திருந்தார். “இனி வரும் நாட்களில் எங்களால் பல அரசியல் கதிரைகள் சூடு பிடிக்கும்.” என்று அதன் அமைப்பாளர் ஜினானந்த தேரர் அங்கு அறிவித்திருந்தார்.

இந்த அமைப்பின் ஆரம்பமே தேசியக் கொடி சர்ச்சையிலிருந்து தான் ஆரம்பிக்கிறது. 200ஆண்டுகளுக்கு முன்னர் 1815 மார்ச் 2 அன்று ஏற்றப்பட்ட ஆங்கிலேயர்களின் கொடியை அன்றே இறக்கியவர் வாரியபொல ஸ்ரீ சுமங்கலதேரர். அதன் நினைவாக கடந்த மார்ச் 2ஆம் திகதி அதே இடத்தில் சிங்களக் கொடியை ஏற்றியே தீருவோம் என்று சிங்களே ஜாதிக பெரமுன (சிங்கள தேசிய முன்னணி) பெரிய ஊர்வலமாக கொழும்பிலிருந்து கண்டிக்கு சென்றது. பொலிசாரின் எதிர்ப்பையும் மீறி பிக்குகளின் தலைமையில் அடாவடித்தனமாக ஆவேசத்துடன் நுழைந்து அங்கிருந்த தேசியக்கொடியை இறக்கி விட்டு தமிழ்-முஸ்லிம் இனங்களை பிரநிதித்த்துவப்படுத்தும் பச்சை செம்மஞ்சள் நிறங்கள் அகற்றப்பட்ட சிங்கம் மட்டும் இருக்கின்ற “சிங்கக்கொடியை” ஏற்றினார்கள். தம்மை தீவிர சிங்கள பௌத்த வீரர்களாக சித்திரித்து சர்சைக்குள்ளாக்கிக்கொள்வதன் மூலம் அனைவரதும் கவனிப்பைப் பெறும் கைங்கரியத்தையே அவர்களும் கையாண்டார்கள். அங்கு அவர்களுக்கு கிடைத்த புகழும், கவன ஈர்ப்பும் அவர்களின் அடுத்த நடடிக்கைகளுக்கு மனத்திடத்தை கொடுத்திருந்தது. தொடர்ந்தும் அந்த கொடியையே தேசிய கொடியாக ஆக்கவேண்டும் என்று தொடர் போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.

இவர்களே தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதை எதிர்த்தும் ஆர்ப்பாட்டங்களையும், பிரசாரங்களையும் சமீபத்தில் முன்னெடுத்தவர்கள். மார்ச் 23 அன்று கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னாள் இவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியதுடன் சிங்களத்தில் துண்டு பிரசுரங்களையும் விநியோகித்தார்கள். அங்கும் பகிரங்கமாக தனிச் சிங்கள சிங்கக் கொடியை பலரும் ஏந்தியபடி இருந்தார்கள்.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் மருதானை சமூக சமய நிலையத்தில் (CSR) மனித உரிமையாளர்களால் நடத்தப்படவிருந்த காணாமல் போனோரின் பெற்றோர்களின் கூட்டத்தை நடத்தவிடாமல் கைகலப்பில் ஈடுபட்டு அதனை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்தியதும் இந்த அமைப்பே.

குருகல முஸ்லிம் பள்ளிவாசலை அகற்றும் போராட்டத்தில் தீவிரமாக இருந்த சிங்கள ராவய அமைப்புடன் சேர்ந்து இயங்கியது இந்த சிங்களே ஜாதிக பெரமுன. இறுதியில் அந்த பள்ளிவாசலை அகற்றிவிட அரசாங்கம் தீர்மானம் எடுத்தது. ஆக இந்த வெற்றியில் இந்த அமைப்புக்கு முக்கிய பாத்திரமுண்டு.

மகிந்த மட்டுமே சிங்கள பௌத்த நிகழ்ச்சிநிரலுக்கு வாய்ப்பானவர் என்கிற நம்பிக்கை இவர்களுக்கும் உண்டு. கடந்த மாதம் 23ஆம் திகதி கோத்தபாயவை லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரிப்பதற்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இவர்கள் “தனிச் சிங்கள தேசியக் கொடியை ஏந்தி வந்திருந்தார்கள். அன்றைய தினம் பொது பல சேனா இந்த கொடி விடயத்தில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. ஆனால் சிங்களே ஜாதிக பெரமுன, “ஸ்வர்ண ஹங்ச பதனம” (இந்த அமைப்பு மாகாணசபை முறைக்கு எதிராக போராடிவரும் ஒரு அமைப்பு) மற்றும் “ராவணா பலய” ஆகிய அமைப்புகளே நூற்றுக்கணக்கான தனிச் சிங்கள கொடிகளை விநியோகித்திருக்கிறார்கள். சிங்கள பௌத்தத்தை உறுதி செய்வதற்காக கோத்தபாய உருவாக்கிய அணிகளே இவை.

தேசியக் கொடியின் பயன்பாடு குறித்து சட்டமியற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களே சட்டத்தை மீறும் வகையில் (அதுவும் அரசியலமைப்பில் உறுதிபடுத்தப்பட்ட தேசியக்கொடியை திரித்து) திரிபுபடுத்தப்பட்ட தேசியக்கொடியை பயன்படுத்தியது பாரதூரமானது. டலஸ் அலஹப் பெருமா மாத்திரமே பகிரங்க மன்னிப்பை கோரினார். ஏனையோர் நியாயப்படுத்தினர். சிங்கள ஜாதிக பெரமுன அமைப்பாளர் ஜினானந்த தேரர் 28 நடத்திய ஊடக மாநாட்டின் போது கருத்து தெரிவிக்கையில் “இதுவே எங்கள் தேசியக் கொடி 1951இல் தேசிய கொடியை உருவாக்குவதற்கான குழுவிடம் சாட்சியமளித்த 160 பேரில் 97 பேர், அதாவது பெரும்பாலானோர் இந்த தனிச் சிங்கக் கொடியே தேசியக் கொடியாக அமைய வேண்டும் என்றார்கள். ஆனால் அதனை உதாசீனப்படுத்திவிட்டு சிறுபான்மை இனங்களின் பேச்சைக் கேட்டு கொடியை இப்படி ஆக்கிவிட்டார்கள்” என்றார்.

ஜினானந்த தேரர் திடீரென்று தொன்றியவரல்லர். அவர் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் (Patriotic National Movement) எனும் அமைப்பின் தலைவர். ஜெனிவா போர்க் குற்றச்சாட்டுக்கு எதிராக பெருமளவு போராட்டங்களை முன்னெடுத்து வரும் அமைப்பு அது. கடந்த வருடம் செப்டம்பர் 29 அன்று ஜெயக்குமாரியை விடுவிக்கக் கோரி சிவில் அமைப்புகள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் நடத்திய ஆர்ப்பாட்டத்தை குழப்புவதற்காக அவர்களுக்கு அருகிலேயே அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ததும் இந்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தான். குருகல பள்ளிவாசலை அகற்றுவதற்காக 03.05.2011இல் உருவாக்கப்பட்ட “பொதுஜய இயக்கத்தின்” (Bodujaya Organisation) தலைவரும் இவர் தான். 2008ஆம் ஆண்டு ஜூலை 7 அன்று தலாஹேன பகுதியில் கல்வாரி தேவாலயத்தின் மீது தாக்குதல் தொடுத்த வழக்கின் 13 சந்தேக நபர்களில் ஜினானந்த தேரரும், ஞானசார தேரரும் அடங்குவர். அந்த சம்பவத்தின் போது அங்கிருந்த பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட குற்றச்சாட்டும் இவர்களின் மீது சுமத்தப்பட்டிருந்தது.

சிங்கள பௌத்த கொடி

தமிழர்களைப் பொறுத்தளவில் இது பற்றி 1951இல் நடந்த பாராளுமன்ற விவாதத்தில் பேசிய தந்தை செல்வநாயகம், இலங்கையின் தேசியக் கொடி, சிங்களவர்களின் சிங்கம், தமிழரின் நந்தி, முஸ்லீம்களின் பிறை

என்பவற்றைக் கொண்டதாக அமைய வேண்டும் என்று பிரேரித்திருந்தார் அதனை வட்டுக்கோட்டை எம்.பீ திரு ஜே.கணகரத்தினம் ஆமோதித்திருந்தார். சுதந்திரக் கொண்டாட்டத்தின் போது நாட்டின் எப்பகுதியிலாவது நந்திக்கொடியை ஏற்றக்கூடாது எனவும் சிங்கக்கொடியை ஏற்றுவது பொருத்தமற்றது எனக் கருதினால் ஆங்கிலக் கொடியை ஏற்றலாம் எனவும் அன்றைய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழரசு கட்சி நடத்திய பல நிகழ்வுகளில் நந்திக் கொடியை ஏற்றியதாக பதிவுகள் கூறுகின்றன. யாழ்ப்பாணத்தை இறுதியாக ஆண்ட சங்கிலியன் மன்னனின் கொடியே நந்தி கொடி என்பது தெரிந்ததே.

தென்னிலங்கையில் சிங்கக் கொடி ஏற்றும் போது வடக்கு கிழக்கு மக்கள் தமது தன்னாட்சியை வெளிப்படுத்த நந்திக் கொடி ஏற்றுவர் எனத் தமிழ்த் தலைவர்கள் அறிவித்தனர். அதனால் வடக்கிலும் கிழக்கிலும் சிங்கக் கொடியோ நந்திக் கொடியோ பறக்கவிடக் கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டது. எனினும் தமிழர் பகுதிகளில் சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடிகளே பறக்கவிடப்பட்டிருந்தன.

கொடியில் இரண்டு சிறுபான்மை இனங்களும் சிங்கள தேசத்தின் எல்லைக்கு வெளியே இருப்பதாகவும், அந்த இனங்களைத் தடுத்து நிறுத்தவதற்காக, சிங்கம் தன் கையில் வாளுடன் கண்காணித்து நிற்பதாகவும் உருவகப்படுத்தப்படுகின்றது என தேசியக்கொடி உருவாக்கக் குழுவில் இருந்து அன்று வெளியேறிய செனட்டர் நடேசன் அதனை எதிர்த்திருந்தார். 1951இல் அது ஒரு சிங்களக் கொடியாக ஆனது போல 1972ஆம் ஆண்டில் அது சிங்கள பௌத்த கொடியாக ஆக்கப்பட்டது. 1972ஆண்டு அரசியலமைப்பில் முதன் முறையாக பௌத்த மதம் அரச மதமாக ஆனது மட்டுமல்ல தேசியக் கொடியில் சிங்கம் இருக்கும் கட்டத்தினுள் நான்கு மூலையிலும் பௌத்த மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அரச இலை வைக்கப்பட்டது. அன்றிலிருந்து தேசியக்கொடி சிங்கள பௌத்த தேசியக் கொடியாகவே ஆகிவிட்டது. கண்துடைப்புக்காக இருக்கும் பச்சை, செம்மஞ்சள் கோடுகளையும் கூட நீக்கிவிடும்படி மிரட்டிவருகின்ற பேரினவாதத்தின் தொடர் போராட்டம் இன்னும் பல தசாப்தங்களுக்கு தொடரும் என்றே கணிக்க முடிகிறது.

சிங்கள பேரினவாத சக்திகள் சமீப காலமாக சமூக ஊடகங்களை கையகப்படுத்தி வருகிறார்கள். ஆயிரக்கணக்கான சமூக வலைத்தளங்களை தமது பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருவதுடன் அவர்களின் அரசியல் எதிரிகளின் வாதங்களை முறியடிக்க அவற்றை பாரிய அளவு பயன்படுத்திவருவதை காணக்கூடியதாக இருக்கிறது. தேசியக் கொடி விடயத்திலும் கூட இனவாத தரப்பை நியாயபடுத்தும் பிரச்சாரங்களே இணையங்களில் அதிகம் தேடிப் பெறக்கூடியதாக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. ஓரிரு நாட்களுக்கு முன்னர் சிங்கக் கொடியின் ஆணுறுப்பிலுள்ள இரண்டு பந்துகளையும் செம்மஞ்சள், பச்சை நிறமூட்டி அதையே தேசியக் கொடியாக பரிந்துரைப்பதாக சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது.

நிறுவனமயப்பட்ட பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்கு காலத்துக்கு காலம் மாறி மாறி வெவ்வேறு நபர்களும், அமைப்புகளும் தோன்றி தலைமை தாங்கி வந்திருக்கின்றன. பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரலில் மாற்றங்கள் இருக்காது, அதன் மூலோபாயத்தில் மாற்றமிருக்காது. அதன் வீரியத்தின் அலைவரிசை சற்று மேலும் கீழும் ஏறி இறங்கியிருக்கிறது. அதன் பாய்ச்சலின் வடிவம் மாற்றங்களைக் கண்டிருக்கிறது. ஆனால் அதன் பண்பில் அதன் உறுதியில் மாற்றம் கண்டதில்லை என்பதை வரலாறு நமக்கு கற்றுத் தந்திருக்கிறது.

நன்றி - தினக்குரல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.