Jump to content

தமிழ்நாட்டு அரசின் தமிழ்ப்புத்தாண்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றையத் தமிழக அரசு 14.04.2015-ல் கொண்டாடிய தமிழ்ப் புத்தாண்டு

 

     பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சித்திரை முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டு, அரசு விடுமுறை, மக்கள் வரிப் பணத்தில் பரிசுகள், விழாக்கள், விருதுகள் என்று இவ்வாண்டின் தமிழ்ப் புத்தாண்டினைச் சட்டப்படி கொண்டாடியிருக்கிறது இன்றையத் தமிழக அரசு.

 

     அதனை நம்புகிறவர்கள் மகிழ்ந்திருப்பார்கள். மறுப்பவர்கள் கறுவிக் கொண்டு இருக்கிறார்கள். அறிஞர்கள் அழகாக அமைதி காத்து வருகிறார்கள். ஊடகங்கள் இது பற்றிக் கூச்சல் எழுந்து விடாமல் பார்த்துக் கொள்கின்றன. திராவிடக் கழகத்தினர் தாலியை முன் வைத்து மக்களைத் திசை திருப்பி, சித்திரை மீது கல்விழாமலும் எக்குத்தப்பாகச் சொல்விழாமலும் காத்து வருகின்றனர்.

 

     வாழ்த்துச் சொன்னவர்களைச் சித்திரைக் கூட்டணியாகவும், வாய்மூடி இருந்தவர்களைத் தைக் கூட்டணியாகவும் ஒதுக்கிப் பிரித்து வைக்க முடியாது. ஆரிய வைதிகச் சார்பும் எதிர்ப்பும் துருவ அரசியலை மட்டுமே செய்து வரும் இவ்வேளையில், தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழ்த் தேசியக் கருத்தியலை முன் வைக்கிறது என்பது இருவருக்குமே தலைவலி.

 

     தமிழர்கள் என்றுமே ஆரிய வைதிக வாழ்வியலை ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை. ஆரிய வைதிகர்கள் விரும்பும் பாதையில் அவர்கள் செல்வதைத் தமிழர்கள் குறுக்கே விழுந்து தடுத்ததும் இல்லை. அப்படி இருக்க ஆரிய வைதிக நம்பிக்கைகளைப் பொதுமைப்படுத்துவதும், அரசியல் வலிமையைப் பயன்படுத்திச் சட்டமாக்குவதும் தமிழர்களை முட்டாள்களாக்கும் செயல்கள்.

 

     அம்பலம் மளிகைக்கடையில் கண்ணன் வேலை செய்தார். ஓலைப் பெட்டியில் இருந்த புளியை வெள்ளிப் பெட்டியில் வைக்கச் சொன்னார் என்று கதை சொல்லிவிட்டு, அதனைத் தொழில் இரகசியம் என்று குறிப்பிட்ட முன்னாள் முதல்வர் அம்மையார் அவர்கள் சித்திரை முதல் நாளை முதன்மைப் படுத்திய சட்டம் ஒன்றை இயற்றி முறையாக நடைமுறைப் படுத்திக் கட்டிக் காப்பாற்றி வருகிறார்.

 

     நக்கீரன் சொல்லியிருக்கிறார் மேழ ராசி பற்றியென்றார் விவேக சிந்தாமணியில் உள்ளது சித்திரை என்றார். ஒவ்வொரு முழு நிலவிலும் ஒரு நட்சத்திரம் பொருந்திவரும் என்றார். அவருக்கு எடுத்துச் சொல்ல எவரும் முன்வரவில்லை போலும்!. ஆரிய வைதிகக் கட்டுக் கதைகளைப் புதுப்பித்துக் கொண்டு தன்னையும் ஏமாற்றிக்கொண்டு அடுத்த தலைமுறையைத் தவிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்.

 

     தமிழ்ப்பல்கலைக் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், செம்மொழித் தமிழாய்வு நிறுவனம், இணையத் தமிழ்க் கல்விக் கழகம், தமிழ் வளர்ச்சித் துறை இவற்றின் வரிசையில் தமிழில் உயர் ஆய்வு மேற்கொள்ளும் அனைத்து நிறுவனங்களும் இந்தச் சட்டத்தை மறுப்பின்றி ஏற்றுக் கொள்ளுமா? வல்லுநர்களைக் கொண்டு அலசலாமா? கருத்துக் கணிப்பு நடத்தலாமா? உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களைக் கேட்கலாமா?

 

     எது எப்படியோ ! இன்றைய இளைஞர்கள் அடுத்த தலைமுறைக்கு உரியவர்கள். முறையாக ஆய்வு செய்த பிறகே எதனையும் ஏற்றுக் கொள்வர்.

 

     தமிழ்ப் புத்தாண்டு பற்றிய புரிதல் என்பது தமிழ்த் தேசியக் கருத்தாளர்களை மிக நெருக்கமாக ஒன்றிணைக்கும் கோட்பாட்டு அடிப்படை கொண்டது என்ற உண்மையானது கூர்த்த உயர் ஆய்வின் வழியே வெளிப்படும். அறிவுக்கு முதன்மை தரும் இக்காலம், அறிவால் இதனை வென்றெடுக்கும்.

 

     மற்றையோர் எவருக்கும் அச்சவுணர்வு இருந்தால் விருப்பத்தின் அடிப்படையில் தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளலாம். தெலுங்குப்புத்தாண்டு, மலையாளப்புத்தாண்டு, கன்னடப்புத்தாண்டு வரிசையில் ஆரியவைதிகப் புத்தாண்டு, திராவிடப் புத்தாண்டு இந்த வரிசையில் வராது.

 

     வானவியல் அடிப்படையில் உரிய நாளைக் கணித்துத் தைத்திங்கள் முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடினால், தமிழ்த்தேசியக் கருத்தியல் வலிமை பெறும் என்பது தமிழ்த் தேசியர்களின் நம்பிக்கை.

 

     தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ் இளைஞர்கள் காலூன்றும் முதற் படிக்கட்டே தமிழ்ப் புத்தாண்டுதான். தமிழ்த் தேசியம் குரல் உயர்த்தும் போது தமிழ்த் தேசியம் குடை பிடிக்கும். அது தமிழர்களுக்கு மிகவும் பிடிக்கும். அறிவு மோசடி செய்யும் கூட்டத்தார்க்கெல்லாம் கிறுக்குப் பிடிக்கும்.

 

     தமிழ் குடும்பத்துப் பெற்றோர் அனைவரும் தத்தம் பிள்ளைகள் தமிழ்த் தேசியப் புரிதல் உடையவர்களாக விளங்க உதவி செய்து பாருங்கள்!. வேலை பார்க்கும் இளைஞர்கள் யாவரும் படிக்கும் இளைஞர்களுக்கு உதவிடுங்கள்!. தமிழ்த் தேசியம் என்ற கருத்தியல், தனி நபர்களை உரசிப் பார்த்து ஒன்றிணைக்கும்! குழுக்களைக் கட்டி உருட்டி ஒன்றிணைக்கும்! இனம் கூவி அழைக்கும்.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.