Jump to content

கண்ணகி பிரார்த்தனையில் அ.தி.மு.க.,வினர்: ஜெயலலிதாவுக்காக வேண்டுதல்


Recommended Posts

கண்ணகி பிரார்த்தனையில் அ.தி.மு.க.,வினர்: ஜெயலலிதாவுக்காக வேண்டுதல்

 

'கண்ணகி சிலையை அகற்றியதால்தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழக்கு ரீதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது; அதனால், கண்ணகி கோவிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு' என, ஜோதிடர்கள் சிலர் சொல்ல, வரும் மே 4ம் தேதி, சித்ரா பவுர்ணமி நாளில், அ.தி.மு.க.,வினர், கண்ணகி கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டு கள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

 

இதனால், முதல்வராக இருந்த அவர், உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுபடுவதற்காக, கட்சியினர் அனைவரும் கோவில் கோவிலாக சென்று தீச்சட்டி ஏந்துவது, கோ - தானம் செய்வது, பால் குடம் எடுப்பது, அன்னதானம் செய்வது, யாகம் வளர்ப்பது என, ஆன்மிகப் பணிகளில் தீவிரம் காட்டி பரிகாரங்களை செய்தனர். பெங்களூரு உயர் நீதிமன்றத்தில், ஜாமின் மனு மறுக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டு, ஜெ.,வுக்கு ஜாமின் கிடைத்தது. இருந்தாலும், அவர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்.

 

பதற்றம்:

காரணம், வழக்கில் இருந்து அவர் முழுமையாக விடுபடாததுதான். பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நடக்கும் மேல் முறையீட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வராததால், கட்சியினர் பதற்றம் அடைந்து உள்ளனர். தங்கள் தலைவி, வழக்கில் இருந்து முழுமையாக விடுபட்டு, மீண்டும் முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக, அமைச்சர்கள் முதற் கொண்டு கட்சியினர் அனைவரும் அங்கப்பிரதட்சணம், காவடி எடுத்து கடவுள்களிடம் வேண்டி வருகின்றனர். இந்நிலையில் தான், தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கேரள எல்லையில் மலைப் பகுதியில் இருக்கும் கண்ணகி கோவிலுக்குச் சென்று இந்தாண்டு, சித்ரா பவுர்ணமி நாளில் வழிபட அ.தி.மு.க.,வினர் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

 

இது குறித்து, அ.தி.மு.க., வினர் சிலர் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஜோதிடர்கள் சிலர் சொன்ன அறிவுரையின் படி, சென்னை கடற்கரை சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்ணகி சிலையை அரசு தரப்பில் இரவோடு இரவாக அகற்றினர். உக்ர தெய்வமாக கண்ணகியை வழிபட்டு வருகின்றனர், கேரள எல்லையில் உள்ள மலை கிராம மக்கள். கண்ணகி சிலை அகற்றப்பட்டதற்கு, அந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அந்த குரல் அப்போது எடுபடவில்லை. சமீப காலமாக, கண்ணகியை தெய்வமாக வழிபடுவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்க, ஜோதிடர்களும் கண்ணகி தெய்வத்தை வைத்து பரிகாரமும் சொல்ல ஆரம்பித்து உள்ளனர்.

விரைந்து நடவடிக்கை:

இப்படித்தான், சமீபத்தில் ஜெ., குறித்து ஜோதிட ஆலோசனை கேட்டபோது, சிலர், 'கண்ணகியின் கோபத்தை குறைக்க வேண்டும்; அதற்கு பரிகாரமாக, கண்ணகி கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்' என, வலியுறுத்தினர். அதனால் இந்தாண்டு, ஜெ.,வின் நலனுக்காக, வரும் மே 4ம் தேதி, சித்ரா பவுர்ணமி நாளில், கண்ணகி கோவிலுக்கு சென்று வழிபடவிருக்கிறோம். கண்ணகி கோவில் கேரள அரசு கட்டுப்பாட்டில் இருப்பதால், கண்ணகி கோவிலை ஆண்டு முழுக்க திறக்காமல், சித்ரா பவுர்ணமி நாளில் மட்டும் திறக்கின்றனர். இந்த நடைமுறைகளை மாற்றவும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1238832

Link to comment
Share on other sites

அய்.. அயயே.. இது என்ன கலாட்டா????!!!

 

சென்னை: "அம்மா" ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. என்பதற்கு இது ஒரு தம்மாத்தூண்டு உதாரணம். திருமணமான, சுமங்கலிப் பெண்கள் மட்டுமே நடத்தக் கூடிய விளக்கு பூஜையை ஆண்களை வைத்து நடத்தி புதிய வரலாறே படைத்துள்ளனர் அதிமுகவினர். எல்லாம் கோவையில் நடந்த கூத்துதான்.

 

அம்மா மீண்டும் முதல்வராக வேண்டும், அவர் வழக்கிலிருந்து விடுதலையாக வேண்டும், மீண்டும் அரியணை ஏற வேண்டும் (இந்த மூன்றுமே அதிமுகவினரின் வழிபாடுகளில் Default கோரி்க்கைகள் ஆகும்). ஆகியவற்றை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கோவில்களில் பூஜைகள், யாகங்கள் களை கட்டியுள்ளன.

 

கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களே பயந்து போகும் அளவுக்கு அதிமுகவினரின் பக்தி முத்திப் போயுள்ளது. இந்த முத்தலில் அவர்கள் சில "குண்டாங்குறை குழப்பங்களையும்" அரங்கேற்றத் தவறுவதில்லை. இப்படித்தான் கரூரில், முருகனுக்கு எடுக்க வேண்டிய காவடியை, மாரியம்மனுக்கு எடுத்து அசத்தினர் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையிலான அதிமுகவினர். இந்த நிலையில் கோவையில் ஒரு காமெடி கலாட்டா நடந்தேறியது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, கோவை கோனியம்மன் கோயிலில் 16ம் தேதியன்று மாலை 6.30க்கு 670 பெண்கள் கலந்துகொள்ளும் விளக்கு பூஜை நடைபெறும் என்று விளம்பரம் செய்திருந்தார் கோவை மாநகர் மாவட்டச் செயலாளரும், மேயருமான கணபதி ராஜ்குமார்.

 

 

ஆனால் கோவிலில் கூட்டத்தையே காணோம். விரல் விட்டு எண்ணி விடும் அளவிலேயே பெண்களைக் காண முடிந்தது. இதனால் மேயர் டென்ஷனாகி விட்டார். தனது ஆதரவாளர்களிடம் வருத்தப்பட்டார். ஆள் பிடிக்கப் போயிருக்காங்கண்ணே, வந்துருவாங்க என்று அவர்கள் மேயரை அமைதிப்படுத்தினர். ஆனாலும் பெண்கள் வந்தபாடில்லை. நல்ல நேரம் வேறு கடந்து கொண்டிருந்தது. பார்த்தார் மேயர்.. ஆன்மீக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு புதிய வரலாற்றை எழுதினார். அதன்படி, தனது கட்சி ஆண்களையே, இருக்கும் பெண்களுக்குப் பின்னால் குத்து விளக்குகளோடு அமர வையுங்கள் என்று உத்தரவிட்டார

 

அதன்படி வந்திருந்த பெண்களுக்குப் பின்னால் ஆண்களும் குத்து விளக்கைப் பிடித்துக் கொண்டு மறைவாக உட்கார்ந்தனர். புரோகிதர் பூஜைகளை நடத்தியபடி, எல்லாரும் அவங்க அவங்க திருமாங்கல்யத்தில் சந்தனமும் குங்குமமும் வச்சுக்கோங்க என்று கூறவே, பெண்கள் பயபக்தியுடன் குங்குமத்தையும், சந்தனத்தையும் எடுத்து தாலியில் வைத்துக் கொண்டனர். ஆனால் ஆண்களின் நிலைதான் ரொம்பக் கொடூரம்...எங்கு வைப்பது என்பது தெரியாமல் குத்து விளக்கையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனராம்...! அனேகமாக, இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற காமெடி களேபரம் இதுவாகத்தான் இருக்கும்!

 

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-s-vilakku-poojai-creates-laughter-coimbatore-225826.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்.. அயயே.. இது என்ன கலாட்டா????!!!

 

:icon_mrgreen:  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு விளங்கின மாதிரிதான் .........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியால்... செய்ய முடியாத, சட்டமன்றத் தீர்மானங்களை,

ஜெயலலிதா தமிழக சட்ட மன்றத்தில் கொண்டுவந்தவர் என்ற முறையிலும்,
துணிந்து... தனது கருத்தை சொல்லத் தயங்காதவர் என்பதிலும்... ஜெயலலிதாவை, எனக்குப் பிடிக்கும்.
அவரின்... தொண்டர்கள், ஆர்வத்தால் செய்யும்.... இப்படியான வேலைகள்,

ஜெயா அம்மையாரின் புகழை.. களங்கப் படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
    • இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். https://thinakkural.lk/article/299654
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.