Jump to content

எனது மகனுக்கு குடியுரிமை இல்லையா? கனடா அரசின் மீது வழக்கு தொடுக்கும் தந்தை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனது மகனுக்கு குடியுரிமை இல்லையா? கனடா அரசின் மீது வழக்கு தொடுக்கும் தந்தை [ சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015, 11:44.47 மு.ப GMT ] father_001.jpgகனடா நாட்டில் வசித்து வரும் சிறுவனுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவருடைய தந்தை அந்த அரசின் மீது வழக்கு தொடர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கனடாவில் உள்ள Ontario மாகாணத்தை சேர்ந்தவர் பால் காம்ப்டன் (Paul Compton, 45). இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2009ம் ஆண்டு கனடா அரசு குடியுரிமை சட்டத்தில் சில திருத்தங்களை நடைமுறைப்படுத்தியது.

இதன் மூலம், 2009ம் ஆண்டிற்கு பிறகு வெளிநாட்டை சேர்ந்த பெற்றோர்களுக்கு பிறக்கும் இரண்டாவது குழந்தைக்கு கனடா குடியுரிமை கிடைக்காது என அரசு அறிவித்திருந்தது.

இந்த புதிய சட்டம் Paul Compton குடும்பத்தை பெரிதும் பாதித்துள்ளது. பால் காம்ப்டனின் முதல் மகன் 2009ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்ததால், அவருக்கு கனடா குடியுரிமை கிடைத்தது.

ஆனால், காம்ப்டனின் இரண்டாவது மகனான Mateo (5), 2009ம் ஆண்டிற்கு பிறகு இரண்டாவது வாரிசாக பிறந்ததால், அவருக்கு கனடா குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து தற்போது Ontario மாகாண அரசின் மீது வழக்கு தொடர்ந்து அதனை நீதிமன்றத்திற்கு கொண்டுவர காம்ப்டன் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதன் முதற்கட்டமாக, குடியுரிமை மற்றும் புலம்பெயர்தல் துறை அமைச்சரான கிரிஸ் அலெக்ஸாண்டருக்கு (Chris Alexander) தனது வழக்கறிஞர் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ’தனது இரண்டாவது மகனின் குடியுரிமை தொடர்பாக அமைச்சர் விளக்கம் அளிக்க 10 நாட்கள் அவகாசம் அளிக்கிறேன் என்றும், அமைச்சர் அதற்குள் பதில் அளிக்கவில்லை என்றால், அரசின் மீது வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வரவழைப்பேன் எனவும் அதிரடியாக கூறியுள்ளார்.

காம்ப்டனின் வழக்கறிஞரான Cecil Rotenberg கூறுகையில், இந்த குடியுரிமை விவகாரத்திற்கு உரிய பதில் அளிப்பது அமைச்சரின் கடமை.

ஒருவேளை, அவர் தகுந்த பதில் அளிக்காவிட்டால், நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்.

மேலும், காம்ப்டனின் மூத்த மகன் குடியுரிமையுடனும், இளைய மகன் குடியுரிமை இல்லாமல் இருக்கும் நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் காம்ப்டனின் வழக்கறிஞர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காம்ப்டனின் கனடிய பெற்றோர்கள் ஸ்காட்லாந்தில் இருந்தபோது, அந்நாட்டில் காம்ப்டன் பிறந்ததாலும், பணி நிமித்தமாக பெரு நாட்டிற்கு சென்றிருந்தபோது அங்கே இளைய மகன் பிறந்த காரணத்தினாலும் அவருக்கு குடியுரிமை வழங்க கனடா அரசு மறுத்துள்ளது.

இதனை தொடர்ந்து, கனடாவிற்கு திரும்பிய காம்ப்டன் தனது பெரு நாட்டை சேர்ந்த மனைவிற்கும், இளைய மகனிற்கும் நிரந்தர குடியுரிமை கோரி அரசிடம் விண்ணப்பித்தார்.

அரசிடம் விண்ணப்பம் செய்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தற்போது அரசின் மீது வழக்கு தொடக்க காம்ப்டன் முடிவு செய்துள்ளார்.

கனடா அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து பேசிய அரசு செய்தி தொடர்பாளரான Kevin Menard கூறுகையில், காம்ப்டனின் கோரிக்கை விண்ணப்பத்தை விசாரிக்கும் நாள் நெருங்கி விட்டதாகவும், கனடா நாட்டின் குடியுரிமை என்பது சலுகை மட்டுமே தவிர அது ஒருவரின் உரிமை அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

father_001.jpg

தமிழ்வின்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் குடியுரிமைச் சட்டம் சிக்கலானது போல் இருக்கின்றது.
இருந்தாலும் இத்தனை குடியேற்றவாசிகளை அனுமதிக்கும் கனடா
தனது சொந்த நாட்டுக் குடியானவனின் பிள்ளைக்குக் குடியுரிமையை மறுப்பது அபத்தமானது :o:D

Link to comment
Share on other sites

ஒரு குடும்பத்தில் இரண்டாவது தலைமுறைப் பிள்ளையும் வெளிநாட்டில் பிறந்திருந்தால் தானாகவே அப்பிள்ளைக்கு கனேடிய குடியுரிமை கிடைக்காது என்று 2009 இல் சட்டத்தை மாற்றியுள்ளார்கள்.

இந்த காம்ப்டன் ஸ்கொட்லாந்தில் பிறந்துள்ளார். இவரது பெற்றோர்கள் அங்கே படித்துக் கொண்டிருந்தபோது இது நடந்துள்ளது.. (ஹ்ம்ம்.. படிப்பை மட்டும் கவனித்திருக்கலாம்.. :D )

பிற்பாடு கனடாவில் வளர்ந்து ஒரு குழ்தைக்குத் தந்தையாகிவிட்ட விட்ட காம்ப்டன் பெரு நாட்டுக்கு சென்றுள்ளார்.. அங்கு ஏன் சென்றார் என்று தெரியவில்லை.. ஆனால் அங்கே ஒரு பெண்ணைக் கண்டுபிடித்து தனது இரண்டாவது பிள்ளையைப் பெற்றுள்ளார். :o

இந்தப் பிள்ளையின் குடியுரிமை விண்ணப்பத்தை பரிசீலித்துக் கொண்டுள்ளது கனடா அரசாங்கம். ஆனால் இவர் குடியுரிமை அமைச்சரை ஏதாவது சொல்லு என்று அவசரப்படுத்துறார்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காம்டன்.... போற இடமெல்லாம், விதை போட்டுக் கொண்டு போகின்றார். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காம்டன்.... போற இடமெல்லாம், விதை போட்டுக் கொண்டு போகின்றார். :D

 

முதல் குழந்தையின் தாயும், இரண்டாவது குழந்தையின் தாயும் வேறு வேறா? :o:D

 

அப்படி செய்தியில் இல்லையே?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் குழந்தையின் தாயும், இரண்டாவது குழந்தையின் தாயும் வேறு வேறா? :o:D

 

அப்படி செய்தியில் இல்லையே?

 

-----

பிற்பாடு கனடாவில் வளர்ந்து ஒரு குழ்தைக்குத் தந்தையாகிவிட்ட விட்ட காம்ப்டன் பெரு நாட்டுக்கு சென்றுள்ளார்.. அங்கு ஏன் சென்றார் என்று தெரியவில்லை.. ஆனால் அங்கே ஒரு பெண்ணைக் கண்டுபிடித்து தனது இரண்டாவது பிள்ளையைப் பெற்றுள்ளார். :o

 

செய்தியை மட்டும் வாசித்து விட்டு, சிவனே.... என்று இருக்கப் படாது வன்னியன். :rolleyes: 

பின்னூட்டங்களையும்.... உன்னிப்பாக வாசிக்க வேண்டும். :D 

இப்படியான... செய்திகளின், பின்னூட்டங்களில் தான்... சுவராசியமான தகவல் கிடைக்கும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியை மட்டும் வாசித்து விட்டு, சிவனே.... என்று இருக்கப் படாது வன்னியன். :rolleyes: 

பின்னூட்டங்களையும்.... உன்னிப்பாக வாசிக்க வேண்டும். :D 

இப்படியான... செய்திகளின், பின்னூட்டங்களில் தான்... சுவராசியமான தகவல் கிடைக்கும். :lol:

 

நல்ல யோசனை.. !

 

நேரமிருக்கும்போது இப்படியான பின்னூட்டங்கள் அனைத்தும் வாசிக்கிறேன்.  :lol: 

 

நன்றி சிறி.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.