Jump to content

ஸ்பரிசத்தால் தன் தாயைக் கண்டுபிடிக்கும் குட்டீஸ்: ஒரு கோடி பேரின் இதயத்தை இதமாக்கிய யூ-டியூப் வீடியோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பரிசத்தால் தன் தாயைக் கண்டுபிடிக்கும் குட்டீஸ்: ஒரு கோடி பேரின் இதயத்தை இதமாக்கிய யூ-டியூப் வீடியோ
அம்மா என்றால் அத்தனை பேருக்கும் உயிர்தான். ஆனால், அந்த உயிரை குழந்தைகளாக இருந்த போது நாம் எப்படி அடையாளம் கண்டோம்?. அவளைத் தொட்டு உணரும் ஸ்பரிசத்தால் தானே!!, எப்படியோ, வளர வளர அம்மாவுக்கென்று பிரத்தியேகமாக இருந்த வாசனையை, தொடு உணர்வை, அவளது ஸ்பரிசத்தை நாம் தவறவிட்டு விட்டோம். 

இப்படி நாம் தவறவிட்ட சில அற்புதங்களை நமக்கு நினைவூட்டி நம்மை நேசத்தால் திக்கு முக்காடச் செய்வதாலே ’தி யுனிக் கனெக்சன்’ என்ற வீடியோவை, வெளியான இரண்டு வாரத்திற்குள் யூ-டியூபில் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்து நெகிழ்ந்துள்ளனர். 

பதட்டமும் பரவசமும் ஒன்று சேர்ந்த ஒரு கலவையான உணர்ச்சியில் 6 அம்மாக்கள் நின்று கொண்டிருக்க, கண்கள் கட்டப்பட்டிருக்கும் அவர்களின் குழந்தைகள், ஒவ்வொருவராக வந்து ஒவ்வொரு அம்மாவின் முகத்தையும் தொட்டுப்பார்த்து,  தன் அம்மாவை, உணர்ந்து கட்டி கொள்ளும் அழகை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, என்பதை உணர்ந்தே கீழே அந்த வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளி, எமது மனதையும்... நெகிழச் செய்தது. :rolleyes:  :)

நன்றி பெருமாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை... அருமை... அருமை....! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா எனக்கு இது தமிழில் உள்ள மூன்று எழுத்துக்கள் மட்டுமே.அதுக்கு மேல் இதை உச்சரிக்கும் போது எந்தவித உணர்வும் ஏற்படுவதில்லை எனக்கு,நான் பிறந்தவுடன் அம்மாவுக்கு சீரியசாகி வேறு வார்ட்டுக்கு மாற்றிவிட்டார்கள்.என்னை வீட்டுக்கு கொண்டு போன பின்பும் தொடர்ந்து ஆறு மாதம் வைத்தியசாலையில் இருந்து அப்படியே மேலே போய்விட்டார்.எனக்கு நினைவு தெரிந்த காலங்களில் சுவரில் தொங்கியபடியேதான் அம்மா அறிமுகமானர்.

எனக்கு அம்மா இல்லையே என்ற உணர்வு ஒருகாலமும் ஏற்பட்பதேயில்லை.பெரியக்கா அந்த இடத்தில் இருந்து ஒரு குறையுமில்லாமல் பார்த்துக்கொண்டார். இப்போது பிள்ளைகள் அவர்களின் அம்மாவுடன் இருக்கும் நெருக்கத்தை வைத்தே அம்மா என்றால் என்னவென்பதை புரிந்து கொள்ள முயற்சிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

அம்மா எனக்கு இது தமிழில் உள்ள மூன்று எழுத்துக்கள் மட்டுமே.அதுக்கு மேல் இதை உச்சரிக்கும் போது எந்தவித உணர்வும் ஏற்படுவதில்லை எனக்கு,நான் பிறந்தவுடன் அம்மாவுக்கு சீரியசாகி வேறு வார்ட்டுக்கு மாற்றிவிட்டார்கள்.என்னை வீட்டுக்கு கொண்டு போன பின்பும் தொடர்ந்து ஆறு மாதம் வைத்தியசாலையில் இருந்து அப்படியே மேலே போய்விட்டார்.எனக்கு நினைவு தெரிந்த காலங்களில் சுவரில் தொங்கியபடியேதான் அம்மா அறிமுகமானர்.

எனக்கு அம்மா இல்லையே என்ற உணர்வு ஒருகாலமும் ஏற்பட்பதேயில்லை.பெரியக்கா அந்த இடத்தில் இருந்து ஒரு குறையுமில்லாமல் பார்த்துக்கொண்டார். இப்போது பிள்ளைகள் அவர்களின் அம்மாவுடன் இருக்கும் நெருக்கத்தை வைத்தே அம்மா என்றால் என்னவென்பதை புரிந்து கொள்ள முயற்சிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன பெரிய விசயம்.. கோழிக்குஞ்சு.. தாயை கண்டுபிடிக்குது. நாய்க்குட்டி தாயை கண்டுபிடிக்குது. ஆட்டுக்குட்டி அப்படி. உம்பா குட்டி அதுதாங்க கன்றுக்குட்டி அப்படி.. இதில மனிசக் குட்டி மட்டும் தான் நெஞ்சை உருக்கும் காரியம் பண்ணிட்டுதா..?! :o:lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதென்ன பெரிய விசயம்.. கோழிக்குஞ்சு.. தாயை கண்டுபிடிக்குது. நாய்க்குட்டி தாயை கண்டுபிடிக்குது. ஆட்டுக்குட்டி அப்படி. உம்பா குட்டி அதுதாங்க கன்றுக்குட்டி அப்படி.. இதில மனிசக் குட்டி மட்டும் தான் நெஞ்சை உருக்கும் காரியம் பண்ணிட்டுதா..?! :o:lol::icon_idea:

 

இப்படி ஒரு நாய்க்குட்டியோ அல்லது மாட்டுக்குட்டியோ யூடியூப் வீடியோவில் சொன்னால் ஒரு அர்த்தம் உள்ளது. ஆனால், இன்னொரு மனுசக்குட்டி இப்படி சொல்லக்கூடாது.   :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழவி.. குட்டி போடுற எல்லா உயிரினத்திலும்.. அது அது தன் தாயை கண்டுபிடிக்கும். அது ஒன்றும் பெரிய விசயமில்லை. மனிதர்கள் மட்டும் ஏன் இதனை பெரிசாக்கினம். மனிசக் குட்டிகளுக்கு தாயை தகப்பனை கண்டுபிடிக்கிற இயல்பு குறைஞ்சிட்டு வருகுதா.. இல்ல.. குழந்தைக்கு யார் அப்பா.. அம்மா என்ற பிரச்சனையே வருகுதா..?!  என்று தான் டவுட்டா இருக்குது. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பரிசம் / இயற்கையின் மாற்றங்களை  முன் கூட்டி அறிதல் என்பது ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு இயல்பாகவே அதிகம் இருக்கின்றது. இது ஆறறிவு படைத்த மனிதர்களிடம் அறவே இல்லை.  :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழவி.. குட்டி போடுற எல்லா உயிரினத்திலும்.. அது அது தன் தாயை கண்டுபிடிக்கும். அது ஒன்றும் பெரிய விசயமில்லை. மனிதர்கள் மட்டும் ஏன் இதனை பெரிசாக்கினம். மனிசக் குட்டிகளுக்கு தாயை தகப்பனை கண்டுபிடிக்கிற இயல்பு குறைஞ்சிட்டு வருகுதா.. இல்ல.. குழந்தைக்கு யார் அப்பா.. அம்மா என்ற பிரச்சனையே வருகுதா..?!  என்று தான் டவுட்டா இருக்குது. :lol::D

 

உண்மை தான் நெடுக்கு..

 

எதை எதை பரீட்சிப்பது என்றில்லாமல் போய்விட்டது

தற்செயலாக அந்தப்பிள்ளை 

இன்னொருவரைக்காட்டிவிட்டால்

எவ்வளவு குளப்பங்களும்

மனச்சங்கடங்களும் தாய்க்கும் அந்தப்பிள்ளைக்கும் வரும்... :(  :(  :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.