Jump to content

சர்ச்சைக்குரிய சிங்கக்கொடிக்கு மன்னிப்புக் கோரினார் டலஸ் அழகப்பெரும


Recommended Posts

சர்ச்சைக்குரிய சிங்கக்கொடிக்கு மன்னிப்புக் கோரினார் டலஸ் அழகப்பெரும APR 24, 2015 | 16:47by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

flag-3-300x200.jpgகோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்பாக நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், சர்ச்சைக்குரிய சிங்கக்கொடியை ஏந்தியதற்காக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப் பெரும மன்னிப்புக் கோரியுள்ளார்.

நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற டலஸ் அழகப்பெரும உள்ளிட்டவர்கள் ஏந்தியிருந்த கொடிகள், சிறிலங்காவின் தேசியக் கொடியில் உள்ள சிறுபான்மையினங்களைக் குறிக்கும் அடையாளங்கள் நீக்கப்பட்ட- தனியே சிங்கள இனத்தின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது.

இதுகுறித்து கொழும்பில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “இது ஒரு தீவிரமான விவகாரம். இரண்டு பகுதிகள் நீக்கப்பட்ட கொடிகளைப் பயன்படுத்தியதற்காக நான் மன்னிப்புக் கோருவதுடன் கவலையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இந்தக் கொடி எவருக்கேனும், அல்லது குழுவினருக்கேனும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருகிறோம்” என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, நீதிமன்றத் தடையை மீறி நேற்றைய போராட்டத்தில் பங்கெடுத்த, நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்காக, வரும் மே 8ம் நாள் நீதிமன்றில் முன்னிலையாக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப் பெரும, பந்துல குணவர்த்தன, காமினி லொக்குகே,  ஜயந்த கேத்தாகொட, சரத் வீரசேகர, மற்றும் உதய கம்மன்பில, பிரசன்ன ரணதுங்க ஆகியோருக்கும் ஏனைய 26 பேருக்குமே நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

http://www.puthinappalakai.net/2015/04/24/news/5539

 

 

 
கொடியை அச்சிடும் போதும் உபயோகப் படுத்தும் போதும் புத்த சமயமும் சிங்களவரும் தான் பிரதிபலித்தது.ஆகவே சிங்களவருக்கு மட்டும் தான் சிறிலங்கா. செய்ய முதல் சரிபார்க்காது செய்தபின் மன்னிப்பு கேட்பது மகா கேவலம்
 
Link to comment
Share on other sites

இது 1915ம் ஆண்டு முஸ்லிம் விரோத இனக்கலவரம் நடந்த 100வது ஆண்டு.

அதவாது 2015 குறுகிஅ சிங்கள தேசியவாதத்தின் - சிங்கள இனவாத எழுச்சியின் நூற்றாண்டு.

 

2013 நவம்பரில் கோத்தபாயாவின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நான் கைது செய்து தடுத்து வைக்கப் பட்டிருந்தபோது சில அதிகாரிகள் "இனி முஸ்லிம்கள்" என்பதுபோல பேசினார்கள்.அவர்கள் கோத்த பாய சக பொதுபல சேன அணியினர் , அவர்கள் 2015ஐ வகாபி முஸ்லிம்களின் இரத்ததில் கொண்டாடும் முனைப்பில் இருப்பதை இனம்கண்ட்டேன். விடுதலையானதும் இதுபற்றி எழுதினேன். 

 

ஆட்ச்சி மாற்றம் ஏற்பட்டது. நிலமையில் தற்காலிகமாகவேனும் சில மாற்றங்கள் ஏற்ப்பட்டது. இதுவரைக்கும் 2015ம் ஆண்டு பிரச்சினை இல்லாமல் நகர்கிறது.

 

சர்ச்சைக்குரிய இலங்கை தேசியகொடி படத்தைக் கூர்ந்து கவனியுங்கள். தமிழர் இனி நிமிர முடியாது. தமிழர்களுக்கு செய்தததுபோல முஸ்லிம்களுக்கும் செய்வோம் என்கிற இனவாத அச்சுறுத்தல்தான் அந்த படம். சம்பந்த பட்ட நிறுவனங்களை தடை செய் சகலரையும் கைது செய் என்பதே கோசமாக வேணும். இலங்கை தீவிலும் சர்வதேச நாடுகளிலும் உள JDS போன்ற சிங்கள ஜனநாயக சக்திகளும் ஒட்டுமொத்த தமிழ் முஸ்லிம் அரசியல் சமூக சக்திகளும் இதனை எதிர்த்து போராட வேணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2013 நவம்பரில் கோத்தபாயாவின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நான் கைது செய்து தடுத்து வைக்கப் பட்டிருந்தபோது சில அதிகாரிகள் "இனி முஸ்லிம்கள்" என்பதுபோல பேசினார்கள்
நான் மத்திய கிழக்கில் பணிபுரியும் பொழுது சில சகசிங்கள தொழிலாளிகள் கொட்டியை(தமிழனை)அழிச்ச பின்பு" தம்பியா"தமாய்....(முஸ்லிம்களை சிங்களவர்கள் தம்பியா என்று அழைப்பார்கள்....)முஸ்லிம்கள் தான்,,,, என சர்வசாதாரணமாக சொல்வார்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மன்னிப்பு கோருகிறார்.

ஆனால் இந்த திரியில் அந்த கொடிக்கு வக்காலத்து

http://www.yarl.com/forum3/index.php?/topic/156641-மெதமுலன-ராஜபக்ஸக்களும்-பரிவார/

அவங்க தேசிய கொடியைதான் கொண்டு வந்தார்கள் என்று எப்படி சொல்ல முடியும்?

அதுதான் பொடு பல சேனா வின் கொடி.

Link to comment
Share on other sites

கவிஞர் ஐயா சொன்னதுபோல முஸ்லிம்களும் போராட வேண்டும்.. அதற்கு ஆட்சியில் தீவிரமாக பங்குபற்றுவது ஒரு வழி. :icon_idea:

Link to comment
Share on other sites

இவர் மன்னிப்பு கோருகிறார்.

ஆனால் இந்த திரியில் அந்த கொடிக்கு வக்காலத்து

http://www.yarl.com/forum3/index.php?/topic/156641-மெதமுலன-ராஜபக்ஸக்களும்-பரிவார/

 

இது உங்களுக்கு வக்காலமா தெரியுதா? 

 

கொஞ்சமாவது நாட்டு நடப்பையும் தெரிஞ்சு வைக்கிறது. 

 

 

இந்த கொடியைத்தான் போடு பல சேனா தமது கொடியாக கொண்டு திரிந்தது. 

 

உங்கட அறிவுக்கு போடுபல சேனாவின் கொடிதான் இலங்கையின் கொடியா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.