Jump to content

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் 4


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழ்   படிப்போம் தமிழ் படிப்போம் 4

வணக்கம் வணக்கம் வணக்கம்

தமிழ்மொழி எத்தனை முறை படித்தாலும் கசக்காது.
ஒவ்வொருமுறை படிக்கும்போதும் நாங்கள் புதிதாக எதாவது கற்றுக்கொள்ளலாம்.
இன்றிலிருந்து நாலாவது பகுதி ஆரம்பிக்கின்றது.

இப்போது நாங்கள் விரிவாக ஆராய்ந்து படிக்க இருப்பது வினைச்சொற்கள்.
வினைச்சொற்கள் எப்போதும் ஒரு செயலை அல்லது தொழிலை அல்லது இயக்கத்தை  உணர்த்தி நிற்கும்.

அதாவது வினைச் சொற்கள் ஒரு பொருளின் இயக்கத்தை உணர்த்தி நிற்கும்என்றும் கூறலாம்.

அடுத்து வினைச்சொற்கள் காலத்தை உணர்த்தி நிற்கும்.

இந்த வினைச்சொற்கள் ஒருபோதும் வேற்றுமை உருபை ஏற்காது.
 வினைச்சொற்களின் இயல்புகள் இவை.

வினைச்சொற்களும் பலவகைப்படும்.

இயற்கையாக ஒரு பொருளை உணர்த்தி, படிப்பவர்களுக்கு இலகுவாக விளக்கம் தரும் சொல்லை  வினை இயற்சொல் என்பர்.
உதாரணமாக வந்தான், சிரித்தான், படித்தாள், பறந்தது என்னும் வினைச்சொற்கள் இலகுவாக எல்லோராலும் விளங்கக்கூடிய  சொற்கள் ஆகும்.

ஆனால் சில வினைச்சொற்களை எல்லோராலும் இலகுவில் விளங்கிக்கொள்ள முடியாது.

விளித்தான் என்பது ஒரு வினைச்சொல், இதன் பொருளை உடனடியாக எல்லோராலும் விளங்கிக்கொள்ள முடியுமா என்றால் இல்லையென்றே சொல்லலாம். ஆகவே பொருள் விளங்காதவர்கள் அதன் பொருள் விளங்கியவர்களைக் கேட்டு அறிந்து கொள்ளவேண்டும்.
விளித்தான் என்பதன் பொருள் அழைத்தான் என்பதாகும்.

அதேபோல புசித்தாள் என்பதும் ஒரு வினைச்சொல். இதன் பொருளும் எல்லோருக்கும் உடனே விளங்காது.அதன் பொருள் உண்டாள் என்பதேயாகும் .
இப்படி எல்லோராலும் உடனே விளங்கிக்கொள்ள முடியாத வினைச்சொல்லை வினைத் திரிசொல் என்பர்.

இந்த வினைத் திரிசொல் இரண்டு வகைப்படும்

1.ஒரு பொருள் குறிக்கும் பல வினைத் திரிசொல்

உதாரணம்
உணவை உண்டான்  என்பதற்குப்  பல வேறு வினைச் சொற்கள் உள்ளன.
அயின்றான்,மாந்தினான்,புசித்தான் என்பன அவையாகும்.
இவற்றையும் எல்லோராலும் எளிதா விளங்கிக்கொள்ள முடியாது.

2. பல பொருள் குறிக்கும் ஒரு வினைத் திரிசொல்

ஒரு வினைச் சொல் சில சந்தர்ப்பங்களில் பல பொருளை உணர்த்தி நிற்கும்.
உதாரணம் வரைந்தாள் என்ற வினைச்சொல்லுக்கு எழுதினாள், திருமணம் செய்தாள், மாற்றினாள், உறுதி செய்தாள் எனப் பொருட்கள் உள்ளன.


முற்றுப்பெற்ற வினைச் சொற்களை வினைமுற்று என்பர்.
உதாரணம்
வந்தான்,வருவான்,வருகின்றான்என்பன.

முற்றுப்பெறாத வினைச்சொற்களை வினையெச்சம் என்பர்.
உதாரணம் வந்து, சென்ற, வீழ்ந்த என்பன.

முதலில் வினைமுற்றுக்களைப்  பற்றிப் பார்ப்போம்




1.தெரிநிலை வினைமுற்று  
2.குறிப்பு வினைமுற்று  


வினை, குறிப்பு என்று தொல்காப்பியர் குறிப்பிட்ட இருவகை வினைச்சொற்களைப் பிற்கால இலக்கண ஆசிரியர்கள் முறையே தெரிநிலை வினை, குறிப்பு வினை என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

 காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது தெரிநிலை வினைமுற்று .
உதாரணம்
நடந்தான், நடக்கின்றான், நடப்பான்  

பொருளை அல்லது பண்பை வெளிப்படுத்தும் பெயர்ச்சொற்களை ஆரம்பமாகக் கொண்டு தொழிலையும் காலத்தையும் வெளிப்படையாகக் காட்டாமல்  குறிப்பால்  காலத்தைக் காட்டும் வினைகளை
குறிப்பு வினைமுற்று  என்பர்.

உதாரணம்

 

அவன் இனியன் என்ற தொடரில் இனியன் என்பது வினைச்சொல். ஆனால் இங்கு காலமோ தொழிலோ வெளிப்படையாகத் தெரியவில்லை.
அவன் இனிய பண்பை உடையவனாக வாழ்ந்தான் , வாழ்கின்றான் வாழ்வான் எனக் குறிப்பால் மட்டுமே காலத்தைக் காட்டுகின்றன.

பொருளையோ பண்பையோ உணர்த்தாத குறிப்பு வினைகளும் உண்டு.
இலன்,  அல்லன்,  இலர் போன்றவை அதற்கு உதாரணம்.

வினைச் சொற்களை இன்னும் விரிவாக அடுத்த பகுதியில் படிப்போம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழ்   படிப்போம் தமிழ் படிப்போம் 4

வணக்கம் வணக்கம் வணக்கம்

1.தெரிநிலை வினைமுற்று  

2.குறிப்பு வினைமுற்று 

 

வணக்கம். உள்ளேன் ஐயா!

 

 

'முற்று' என ஏன் குறிக்கிறார்கள் ஐயா? :huh:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முற்றுப்பெற்ற வினைச் சொற்களை வினைமுற்று என்பர்.

 

உதாரணம்
வந்தான்,வருவான்,வருகின்றான்என்பன.

முற்றுப்பெறாத வினைச்சொற்களை வினையெச்சம் என்பர்.
உதாரணம் வந்து, சென்ற, வீழ்ந்த என்பன.

முதலில் வினைமுற்றுக்களைப்  பற்றிப் பார்ப்போம்
 

Link to comment
Share on other sites

வணக்கம் ஐயா.. நானும் வந்துவிட்டேன்..! :D

வினைச்சொற்களில் திணை, பால், எண், இடம், காலம் என்று இருக்கே.. இவற்றையும் படிப்பிப்பீர்களா ஐயா?? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழையவர்கள் பலரைக் காணவில்லை. குழப்படி செய்யும் புதிய மாணவர்கள் வருகிறார்கள் போல. சகாரா எங்கே?வாரும் வகுப்புக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஐயா.. நானும் வந்துவிட்டேன்..! :D

வினைச்சொற்களில் திணை, பால், எண், இடம், காலம் என்று இருக்கே.. இவற்றையும் படிப்பிப்பீர்களா ஐயா?? :D

 

திணை , பால், இடம் இல்லாமல் ஏதையா தமிழ்மொழி.

இருக்கு இருக்கு..  கட்டாயம் வரும் :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழையவர்கள் பலரைக் காணவில்லை. குழப்படி செய்யும் புதிய மாணவர்கள் வருகிறார்கள் போல. சகாரா எங்கே?வாரும் வகுப்புக்கு.

 

இந்த வகுப்பில் புதிய மாணவர்களைப் பழைய மாணவர்கள்

பகிடி வதை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

அப்படி ஏதும் நடந்தால் மேசை மீது முழங்காலில் நிற்க வேண்டும். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வகுப்பில் புதிய மாணவர்களைப் பழைய மாணவர்கள்

பகிடி வதை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

அப்படி ஏதும் நடந்தால் மேசை மீது முழங்காலில் நிற்க வேண்டும். :D:lol:

 

பெண்களுக்கு ஏதும் சலுகை உண்டா ???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வகுப்பில் புதிய மாணவர்களைப் பழைய மாணவர்கள்

பகிடி வதை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

அப்படி ஏதும் நடந்தால் மேசை மீது முழங்காலில் நிற்க வேண்டும். :D:lol:

 

முழங்கால் ஆபரேசன், செய்த முதியவர்களுக்கும்..... இந்த தண்டனை உண்டா... ஐயா ? :o  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் ஏற்கனவே வீட்டுப்பாடம் செய்யேல்லை என்று நீங்கள் தலைமை ஆசிரியரிடம் அனுப்பியபோது அவர் என்னை முழங்காலில் நிற்கவைத்து தண்டனை கொடுத்தார் அதனால் என் முழங்கால்கள் இரண்டும் கருமை படர்ந்து காய்த்துப்போயுள்ளன. இமமுறை எங்கள் அழகு குலையாமல் வேறு ஏதாவது தண்டனை தாருங்கள்... சேர் எங்களால் பகிடி பண்ணாமல் இருக்கமுடியாதே...என்ன செய்ய?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.தெரிநிலை வினைமுற்று

 

காலத்தைத் தெளிவாகக் காட்டுவது தெரிநிலை வினைமுற்று என்று படித்தோம்.
இன்னும் சற்று ஆழமாக நோக்கினால் தெரிநிலை வினைமுற்று காலத்தை மட்டும் உணர்த்தாமல் செய்யப்படும் செயலின் பல முதல் நிலைகளைக் காட்டும்.

 

இந்த முதல் நிலைகள் எட்டுவகைப்படும்.

 

அதாவது உழவன்  வயலை உழுதான் என்ற தொடரில் உழுதான்  என்பது தெரிநிலை வினைமுற்று.

இங்கே
1.வினை
2. வினை முதல்
3. செயப்படுபொருள்
4.நிலம்
5. காலம்
6.கருவி
7.இன்னதற்கு
8. பயன்
ஆகிய எட்டு முதல் நிலைகளையும் உழுதான் என்ற வினை முற்றுக் காட்டி நிற்கின்றது.

எப்படி எனக் கேட்டால்
உழுதான் என்ற தெரிநிலை வினைமுற்றை கேள்விக்குள்ளாக்க வேண்டும்.

 

1. உழுதல் ஒரு செயல் அதாவது வினை
2.உழுபவன் யார்?  உழவன் -  செயலைச்  செய்பவன்-அதாவது  வினைமுதல்
3.என்ன செய்யப்படுகின்றது - மண் பதப்படுகின்றது இது செயப்படுபொருள்
4.எங்கே உழப்படுகின்றது ? வயலில்- இது நிலம்
5.  உழுதான் என்றால் இறந்த காலம் உழுவான் என்றால் எதிர்காலம் -காலம்  
6.  எதனால் உழுதான்?  கலப்பை அதற்கு உதவியாக எருதுகள் - ஆகவே கருவி
7.எதற்காக உழுதான் - பயிர் செய்வதற்காக உழுதான் - இன்னதற்காக
8. உழுவதால் என்ன பயன் - கூலி கிடைக்கும் அல்லது  வருமானம் கிடைக்கும் அதாவது  பயன்

 

இப்படி உழுதான் என்ற தெரிநிலை  வினைமுற்று பல விளக்கங்களைத் தருகின்றது.

ஆகவே உங்களுக்கு இப்போது தெரிநிலை வினைமுற்று எந்தளவிற்கு
ஒரு செயலை விளக்கமாக உணர்த்தி நிற்கும் என விளங்கியிருக்கும்
என நினைக்கின்றேன்.

 

 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் வாத்தியார்,
இடம் பெயர்ந்து வந்தோர் பட்டியலில் இருந்து இன்னும் ஒரு புதிய மாணவன்.
கடைசி பென்ஜில் ஒரு இடம் கிடைத்திருக்கிறது, நன்றி.
வகுப்பை 'கட்' பண்ணாமல் வருவதற்கு முயற்சி செய்கிறேன்...
 
வந்த முதல் நாளே உங்களிடம் இரு கேள்விகள். (உதவிகள்)
 
1. புலம் பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் (தமிழ் பேச மாட்டாத) குழந்தைகள் அடிப்படையாக தெரிந்து வைத்து இருக்கவேண்டும் என நீங்கள் நினைக்கும் (தமிழ் மூலம் உரையாடல்) கேள்விகள் , பதில்கள் எவை? Basic Tamil.
உதாரணம் - உங்கள் பெயர் என்ன? நீங்கள் எந்த பாடசாலையில் படிக்கிறீர்கள்? உங்கள் அப்பா எங்கே வேலை செய்கிறார்? இன்று என்ன கிழமை?... 
(பரீ ட்சார்த்தமாக என் குழந்தைகளுக்கு இவற்றை சொல்லிதர நினைக்கிறேன்) உங்கள் உதவி தேவை.
 
2. இங்கு வளரும் தமிழ் பேச முடியாத குழந்தைகள் (அடிப்படையாக) தெரிந்து வைத்து இருக்க வேண்டிய சொற்கள், சொற்றொடர்கள் எவை?
உதாரணம் - பால், பாடசாலை, உறவு முறைகள், ...
 
என்னுடைய கேள்விகளுக்கு இந்த வகுப்பில் ஆர்வத்தோடு வந்து பயிலும் மூத்த மாணவர்களும் பதில் தராளாம் ... வாத்தியார் கோவிக்க மாட்டார்.
 
(வாத்தியார் உங்கள் வகுப்பை குழப்பியதாக நினைக்க வேண்டாம் தமிழ் பயில்வது சம்மந்தமான கேள்விகள் என்றபடியினாலும் நீங்கள் எங்கள் வாத்தியார் என்ற  உரிமையிலும் இங்கே இதை பதிந்துள்ளேன்)
 
  
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோரே பிள்ளையுடன் தினமும் உரையாடுவதன் மூலம் தமிழைப் பயிற்றுவிக்கலாம். பிள்ளையுடன் சேர்ந்து ஒவ்வொன்றையும் செய்யும் போது அது எதுவானாலும் சரி தாயோ தந்தையோ பிள்ளையுடன் தமிழில் உரையாடுவது  முதல் பாடமாகிறது. வீட்டில் உள்ள பொருட்களை, அந்தப் பொருட்களுக்குரிய நிறங்களை, அதன் எண்ணிக்கையை என்று காட்சியுடன் நாம் அறிமுகம் செய்யும் போது அது பிள்ளையின் மனதில் இலகுவாகப் பதிந்து விடும். எடுத்துக்காட்டு மரக்கறிகள், பழங்கள், பொருட்கள், தளபாடங்கள், உணவுகள், செயல்கள், உறவுமுறை,  எல்லாமே பிள்ளையிடம் இலகுவாகச் சென்றடையக் கூடியன.

 

ஆரம்பத்தில் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, அகரமேறிய உயிர்மெய் எழுத்துக்கள் 18, ஆய்த எழுத்து 1 - மொத்தம் 49 எழுத்துக்களை மாத்திரம் அறிந்திருந்தால் போதுமானது. இவற்றை மட்டும் தனித்தனியாகவோ அல்லது சேர்த்தோ அட்டவணையாகத் தயாரித்துப் பிள்ளையின் கண்முன்னே படும்படி வைத்தாலே அவை பிள்ளையின் மனதில் பதிந்துவிடும்.

 

முக்கியமாகப் பிள்ளைக்கு ஒரு சொல்லையோ அல்லது எழுத்தையோ அறிமுகம் செய்யும் போது சரியான பலுக்குதல் அவசியம்.

 

ஆரம்பத்தில் ட ப ம போன்ற இலகுவான எழுத்துக்களை அறிமுகம் செய்து படிப்படியாக மற்றைய சொற்களை அறிமுகப்படுத்தலாம். தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினரின் நூல்களை வாங்கிப் பயன்படுத்தினால் அவை உங்களுக்கு இலகுவாகவே வழிகாட்டக் கூடியது. 


வாத்தியார்! தெரிநிலை வினை முற்றை அறிந்து கொள்வதற்கு கட்டாயம் இந்த எட்டு நிலைகளையும் அறிந்திருக்கத்தான் வேண்டுமா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்! தெரிநிலை வினை முற்றை அறிந்து கொள்வதற்கு கட்டாயம் இந்த எட்டு நிலைகளையும் அறிந்திருக்கத்தான் வேண்டுமா ??

 

இல்லை, யாரும்  தெரிந்திருக்காவிட்டாலும்  தெரிநிலை வினைமுற்று அவைகளைக் காட்டி நிற்கும்

வகுப்பிற்கு வருகை தந்த தமிழ் சிறி அண்ணை, வல்வை அக்கா

(சரி முழங்கால் தண்டனை வாபஸ்)   :D

மற்றும் சசி அனைவருக்கும் வணக்கம்.

 

Link to comment
Share on other sites

இல்லை, யாரும்  தெரிந்திருக்காவிட்டாலும்  தெரிநிலை வினைமுற்று அவைகளைக் காட்டி நிற்கும்

வகுப்பிற்கு வருகை தந்த தமிழ் சிறி அண்ணை, வல்வை அக்கா

(சரி முழங்கால் தண்டனை வாபஸ்)   :D

மற்றும் சசி அனைவருக்கும் வணக்கம்.

 

 

நான் பாஞ் உள்ளேன் ஐயா....  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாபஸ்சை வாபஸ் வாங்குங்கோ வாத்தியார்,.. விசயம் புரியாமல் ஆபத்துக்களுடன் (பன்மை) விளையாடாதையுங்கோ...! பிறகு வருத்தப் படுவீங்கள்...!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ, வாத்தியார்..

குறிப்பு வினைமுற்று பற்றிய விளக்கம் எப்பொழுது வரும்? :o

 

 

("ஸ்.ஆ..! வாத்தியார், பின் வாங்கிலிருந்து யாரோ நுள்ளுறாங்கள்..!!  யாரென்று கவனியுங்கள்." :( .)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பு வினைமுற்று

பொருளை அல்லது பண்பை வெளிப்படுத்தும் பெயர்ச்சொற்களை ஆரம்பமாகக் கொண்டு தொழிலையும் காலத்தையும் வெளிப்படையாகக் காட்டாமல்  குறிப்பால் காலத்தைக் காட்டும் வினைகளை
குறிப்பு வினைமுற்று  என அழைப்பர்  என முன்னர் படித்தோம்.

உதாரணமாக
 ஓவியன் இனியன் என்ற தொடரில் இனியன் என்ற சொல் குறிப்பு வினைமுற்றாகும். இங்கே காலம் வெளிப்படையாகத் தெரியவில்லை.
தொழிலும் தெரியவில்லை.இனிமை என்ற பண்பு தெரிகின்றது.

 

ஆனால் ஓவியன் ஒருகாலத்தில் இனியவனாக இருந்தான். அல்லது இப்போது இனிமையானவனாக இருக்கின்றான் அல்லது  இனிமேலும் இனிமையானவனாக   இருப்பான் என்று சற்றுப் பின்னர் எங்களால் விளங்கிக்கொள்ள முடிகின்றது. இப்படிச் செய்பவனை முன்னிறுத்தி மற்றையவற்றைக் குறிப்பால் உணர்த்துகின்றது.


இவை ஆறுவகையான பெயர்களின் அடிப்படையில் உருவாக்கப்படும்.

1. பொருட்பெயர்- அவன் அமுதன்
2. இடப்பெயர்-  முருகன் கதிர்காமத்தான்
3. காலப்பெயர்- வேலன்  கார்த்திகையான்
4. சினைப்பெயர்- தலைவன்  செங்கண்ணன்
5. பண்புப்பெயர்- எழிலன் இனியன்
6. தொழிற்பெயர்- கமல் நடிகன்

இவ்வாறு குறிப்பு வினைமுற்று ஆறு வகையான பெயர்களை முன்னிறுத்திப் பிறக்கின்றன.

Link to comment
Share on other sites

வினை தீர்ப்பவன் முருகன், வினை அறுப்பவன் வேலன் என்றுதான் சைவப்பள்ளிக்கூடத்தில் வாத்தியார் சொல்லித்தந்தவர். ஆனால் வாத்தியார்... நீங்கள் முருகவேலன் வினையை முற்றவைப்பதாகச் சொல்லித்தருகிறீர்கள். வினையை முற்றிப் பழுக்கவைத்தால் இனிக்குமா...??  :D  :lol:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வினை தீர்ப்பவன் முருகன், வினை அறுப்பவன் வேலன் என்றுதான் சைவப்பள்ளிக்கூடத்தில் வாத்தியார் சொல்லித்தந்தவர். ஆனால் வாத்தியார்... நீங்கள் முருகவேலன் வினையை முற்றவைப்பதாகச் சொல்லித்தருகிறீர்கள். வினையை முற்றிப் பழுக்கவைத்தால் இனிக்குமா...??  :D  :lol:  

 

பழுக்க வைச்சுப் பாக்கிறதுதானே பாஞ்ச

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச்தான் வன்னியனை பிஞ்ச் பண்ணியிருக்கின்றார். அதுதான் இடக்கு முடக்காய் கேள்வி கேட்டு சமாளிக்கின்றார்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோர் வரவிற்கும் நன்றியும் வணக்கமும் உரித்தாகுக


அடுத்து நாங்கள் படிக்க இருப்பது வியங்கோள் வினைமுற்று


வியங்கோள் வினைமுற்று

வினைமுற்றுக்களில் இன்னொன்று வியங்கோள் வினைமுற்று
இவை வாக்கியங்களில் நான்கு விதமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

 பொருள் ஒன்றை  
1)வாழ்த்தும் போதும்
2)திட்டும்போது

பொருள் ஒன்றிற்குக்
3)கட்டளையிடும் போதும்

எதாவதை யாரிடமாவது
4)வேண்டி அல்லது
யாசித்து நிற்கும் போதும்
வியங்கோள் வினைமுற்றை வாக்கியங்களில் பயன்படுத்தலாம்.

உதாரணமாக
மன்னன் வாழ்க
குடி உயர்க
தலைவன் வெல்க
என்ற தொடர்களில்  வாழ்க, உயர்க, வெல்க ஆகிய வியங்கோள் வினைமுற்றுக்கள் 

மன்னனையும் குடியையும் தலைவனையும் வாழ்த்தி நிற்கின்றன.

இதேபோல
வீழ்க, ஒழிக, அழிக போன்ற சொற்கள் திட்டுவதற்கு அல்லது

யாரையாவது வையும் போது பயன்படுத்தப்படுகின்றன.

உண்க , அமர்க ,வருக , அருந்துக , போன்ற சொற்கள்

யாருக்காவது கட்டளையிடும் போது பயன்படுத்தப்படுகின்றன.

தருக , புரிக , இடுக போன்ற சொற்கள் எதையாவது 

வேண்டி நிற்கும்போதும் பயன்படுத்தப்படுகின்றன.

ஆகவே வியங்கோள் வினைமுற்றுக்கள்
வாழ்த்தல், வைதல் , விதித்தல் , வேண்டுதல் என்ற நோக்கில்

வாக்கியங்களில் பயன்படுகின்றன.

 
 

Link to comment
Share on other sites

பாஞ்ச்தான் வன்னியனை பிஞ்ச் பண்ணியிருக்கின்றார். அதுதான் இடக்கு முடக்காய் கேள்வி கேட்டு சமாளிக்கின்றார்...! :)

 

'விநாயகனே வினை தீர்ப்பவனே!' சுவி, நீங்கள் வாத்தியாரையும் தெய்வத்திற்குச் சமமாக மதிக்கவேண்டும். வாத்தியாரும் எங்கள் வினைதீர்க்கவே வினைபற்றிப் பாடம் நடத்துகிறார். குழப்படி கூடாது. கைகட்டி, வாய்பொத்திப் பக்குவமாக பக்தியோடு கேட்கவேண்டும். இல்லையென்றால் வகுப்புக்கு வெளியே வெயிலில் நிறுத்திவிடுவேன். நான்தான் மொனிற்றர். நினைவிருக்கட்டும். <_<  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வகுப்பில இருக்கிறன் வாத்தியார். ஆனால் என்னைக் கேள்வி மட்டும் கேட்டுவிடாதைங்கோ வாத்தியார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்... இஞ்ச பாருங்கோ....
என்ரை மேசையில, ஆரோ... "ஐ லவ் யூ"  என்று எழுதியிரிக்கினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.