Jump to content

தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை உடைக்க ரணில் வியூகம்? அதிர்கின்றது வடக்கு!! -Video in


Recommended Posts

muhamad_01.pngவட-கிழக்கு தமிழர் தாயகத்தில் தன்னெழுச்சியாக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டங்களை முடக்க ரணில் அரசு சதி முயற்சிகளை அரங்கேற்றத் தொடங்கியுள்ளது. அத்துடன் அம்முயற்சியில் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியினையும் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்:-

இலங்கைப் புலனாய்வுக் கட்டமைப்பின் அதிகாரி மட்டத்தில் முகமட் எனும் பேரில் நபர் ஒருவர் தற்போது களமிறக்கப்பட்டுள்ளார். அந்நபர் முன்னணி செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து மூளைச்சலவை செய்துவருவதாக தெரியவருகின்றது. எனினும் அவர் உண்மைப் பெயர் மற்றும் பதவி நிலை பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்கவில்லை.

குறிப்பிடத்தக்க சில மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளென இலக்கு வைத்துள்ள அந்நபர் அதில் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அண்மையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் சிலர் தனிப்பட்ட ரீதியில் இரகசியமாக புதிய ஆளுநர் பாளிகக்காரவை சந்தித்துள்ளதாகவும் அதற்கும் குறித்த முகமட் எனும் நபரே ஏற்பாடுகளை செய்து வழங்கியுள்ளதும் அம்பலமாகியுள்ளது. அத்துடன் நாடாளுமன்றத்தில் வைத்து சில அமைச்சர்களை சந்திக்கவும் ஏற்பாடுகளை செய்து வழங்கியமையும் அம்பலமாகியுள்ளது.

மக்களிற்கான உதவி திட்டங்களை பெற்றுத்தருவதாக கூறியே இவ்வாறு அரச உயர்மட்டங்களுடன் உறவை பேண வழிவகுக்கப்பட்டதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

இத்தகைய நெருக்கமான தொடர்பாடல்களையடுத்து காணாமல் போனோர் விவகாரம் உள்ளிட்ட மக்களது பிரச்சினைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்துவதை இந்நபர் தடுத்துவருவதாகவும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தரப்புக்களையும் இத்தகைய தரப்புக்களினை கொண்டு தடுத்துவருவதாகவும் தெரியவருகின்றது.

குறிப்பாக அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலில் வட-கிழக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கணிசமான வாக்குகளை திரட்டுமென புலனாய்வு அறிக்கைகள் அரசிற்கு அறிக்கையிட்டுள்ளன.

கூட்டமைப்பின் மீதான கடுமையான விமர்சனங்களை முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அது வாக்குவங்கியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இந்நிலையில் கடும் போக்கு அரசியல் நிலைப்பாட்டை கொண்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அபரிதமான வளர்ச்சி இலங்கை அரசிற்கு அப்பால் இந்தியாவையும் கவனத்தை செலுத்த வைத்துள்ளது.

இந்நிலையில் கூட்டமைப்பிலுள்ள கடும் போக்கு செயற்பாட்டாளர்களை கைக்குள் போட்டு அதன் தலைமையினை தக்க வைக்கவே இம்முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளென தனது இரகசிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் நபர் யாழில் கொக்குவிலிலுள்ள படைத்தளமொன்றில் தங்கியுள்ளதுடன் தனது சொகுசு வாகனத்தில் திரிந்தே செயற்பட்டுவருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்நபரது நடவடிக்கைகள் தமிழ் தேசிய நிலைப்பாடுடைய ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியினை தோற்றுவித்துள்ளது.

http://www.pathivu.com/news/39340/57//d,article_full.aspx

 

Link to comment
Share on other sites

தமிழகத்தில்தான் தமிழனோடு தெலுங்கன், மலையாளி, கன்னடன் என்று கலந்திருந்து தமிழனுக்குக் குழிபறிக்கிறார்கள் !!.  :(
 
ஈழத் தமிழனோடு அப்படி எவர் கலந்திருந்து தமிழனுக்குக் குழிபறிக்கிறார்கள்.....??  :o
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழகத்தில்தான் தமிழனோடு தெலுங்கன், மலையாளி, கன்னடன் என்று கலந்திருந்து தமிழனுக்குக் குழிபறிக்கிறார்கள் !!.  :(
 
ஈழத் தமிழனோடு அப்படி எவர் கலந்திருந்து தமிழனுக்குக் குழிபறிக்கிறார்கள்.....??  :o

 

 

ஒட்டுக் குழுக்கள்.

Link to comment
Share on other sites

வரதராஜபெருமாள் இந்திய துணை தூதரகத்தில் ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறாராம்.

Link to comment
Share on other sites

சொந்த புத்தி இல்லாவிட்டால் சீரழியவேண்டியத்துதான் .

 

மூளை சலவை செய்ய அது முதல் இருக்கவேண்டும் . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

முகமட்டிடம் பலியான முக்கியஸ்தர்கள்!!

வட- கிழக்கு தமிழர் தாயகத்தினில் தன்னெழுச்சியாக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டங்களை முடக்க ரணில் அரசு சதி ஆரம்பித்திருப்பதாக கூறப்படும் சதி முயற்சிகளில் வடமாகாணசபையின் அமைச்சர்கள் மற்றும் பேரவை முக்கியஸ்தர் ஆகியோர் பலியாகியிருக்கலாமென்ற சந்தேகம் வலுப்பெறத்தொடங்கியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்:-

இலங்கை புலனாய்வு கட்டமைப்பின் அதிகாரி மட்டத்தில் முகமட் எனும் பேரில் நபர் ஒருவர் தற்போது களமிறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பதிவு ஏற்கனவே அம்பலப்படுத்தல்களை செய்திருந்தது. அந்நபர் முன்னணி செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து மூளைச்சலவை செய்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவர் உண்மைப் பெயர் மற்றும் பதவி நிலை பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்காத போதும் சர்ச்சைக்குரிய சுன்னாகம் குடிநீர் விவகாரத்துடன் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் பேரவை முக்கியஸ்தர் ஆகியோருடன் அவர் தொடர்புபட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் பற்றியும் தெரியவருகின்றது. அவர்கள் தொடர்பான புகைப்பட ஆதாரங்களும் பதிவு வசம் சிக்கியுள்ளது.

எனினும் அவர்கள் எத்தகைய தொடர்பாடல்களை கொண்டிருந்தனர் என்பது பற்றி தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை.

அண்மையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் சிலர் தனிப்பட்ட ரீதியில் இரகசியமாக புதிய ஆளுநர் பாளிகக்காரவை சந்தித்துள்ளதுடன் யாழிலுள்ள இந்திய துணைதூதரக அதிகாரிகளையும் சந்தித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

இதனிடையே குறித்த புலனாய்வு அதிகாரி பற்றிய தகவல்கள் அம்பலமானதையடுத்து மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளென தொடர்பு கொண்டு நேரடியான சந்திப்புக்களில் தான் ஈடுபடப்போவதில்லையென அறிவித்துள்ளார்.

தனது இரகசிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் கொக்குவிலிலுள்ள படைத்தளமொன்றினில் தங்கியிருந்த குறித்த நபர் இப்போது அதனை மாற்றியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

 

http://www.pathivu.com/news/39371/57//d,article_full.aspx

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.