Jump to content

ரணில் இந்தியாவுக்கு திடீர் விஜயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

ranil-0.jpg?resize=330%2C299இலங்கையில் அரசியல் சர்ச்சைகள் சூடுபிடித்துள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை திடீரென இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றதாக, கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும், இன்னமும் அரசாங்கத்தினால் வெளியிடப்படவில்லை.

இன்று காலை 7.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, கேரள மாநிலத்தில் உள்ள கொச்சினுக்குப் புறப்பட்ட சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம் மூலம், ரணில் விக்கிரமசிங்க, புறப்பட்டுச் சென்றதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமருடன் மேலும் நான்கு பேர் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. எனினும், ரணில் விக்கிரமசிங்கவின் இந்த திடீர் இந்தியப் பயணம் நோக்கம் குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

இருந்தபோதிலும் நாளைய தினமே அவர் கொழும்பு திரும்புவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

http://tamilleader.com/?p=48322

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
குருவாயூர் ஆலயத்தில் 8 இலட்சம் பெறுமதியான சந்தனக் கட்டைகளை தட்சனை வழங்கிய ரணில்
[ சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015, 10:28.45 AM GMT ]
kuruvayur_ranil.jpg

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார்.

இன்று காலை இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்தை தனது மனைவியுடன் சென்றடைந்த அவர், அங்கிருந்து நேரடியாக குருவாயூர் ஆலயத்திற்கு சென்றார்.

அங்கு அவர் பூஜையில் கலந்து கொண்டு  தனது எடைக்கு ஏற்ப 77 கிலோ சந்தனக் கட்டைகளை தட்சனையாக கொடுத்து வழிபட்டார். இதன் பெறுமதி எட்டேமுக்கால் இலட்சம் ஆகும்.

பிரதமர் ரணிலுடன் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனும் சென்றிருநந்தார். அவர்களுக்கு அங்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.

மீனவர்கள் குறித்து ரணில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களால், அவருக்கு எதிராகப் போராட்டங்கள் வெடிக்கலாம் என்று மத்திய, மாநிலப் புலனாய்வுப் பிரிவுகள் எச்சரிக்கை விடுத்திருந்தன.

இதனிடையே, குருவாயூரில் வழிபாடுகளை முடித்தபின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ரணில், தான் இந்தியாவுக்கோ, சீனாவுக்கோ சார்பானவன் அல்ல என்றும், இலங்கையின் நலன்களை உறுதிப்படுத்த வேண்டிய ஒரு பிரதமராகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ranil_kurvaayoor_001.jpg

தமிழ்வின் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர போக்கில டிப்ளொமட் பாஸ்போர்ட் இல்லாமலே உவையள் இந்தியாவுக்கு செல்ல வேண்டிய நிலை வரும்போலகிடக்கு.....(இந்திய மாநில முதலமைச்சர்கள் போன்று)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கோவிலை உடைப்பது அங்கு போய் கும்பிடுவது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தர் ஆந்திராவில போய் வழிபட்டார் மற்றவர் கேரளாவில வழிபடுகிறார்......சிங்களவர்கள் தாங்களும் இந்துக்கள் என்று இந்தியாவுக்கு காட்ட இந்த விளையாட்டோ.....வடமாகாணத்தில் இந்துகோவிலை உடைத்து புத்த விகாரை .....இந்திய இந்துக்கோவில்களுக்கு யாத்திரைகளும் தட்சனைகளும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வடமாகணத்தில் இந்து கோவில்களை 
அழித்து புத்த கோவிலை சிறிலங்கா சிறப்பு படையினர் கட்டுகிறார்கள் 
என்று செய்திபரப்பி வரும் புலம்பெயர் முன்னாள் புலிகளுக்கு 
நெத்தியடி !
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.