Jump to content

பிரித்தானியாவின் களத்தில் இலங்கைப் பெண்.


Recommended Posts

பிரித்தானியாவின் களத்தில் இலங்கைப் பெண்.

 

இலங்கை பரப்பளவில் ஒரு சிறிய நாடாக இருந்தபோதும், உலகளாவிய ரீதியில் மக்கள் கவனத்தை ஈர்த்த ஒரு நாடாக கருதப்படுகிறது.

கிரிகெட் வெற்றி மற்றும் யுத்த வெற்றி போன்ற பல்வேறு துறைகளில் இலங்கை உலகில் அனைவராலும் போற்றப்படும் ஒரு நாடாகும்.



அந்த வகையில் இலங்கை யுவதி ஒருவர் பிரித்தானியாவில் முன்னணி அரசியல் வாதியாக காணப்படுவது இலங்கையின் கௌரவத்தை மேலும் ஒருபடி உயர்த்துவதாக காணப்படுகிறது.
சமலி பெனாண்டோ, 1973 ஆண்டு பிறந்த இவருக்கு தற்பொழுது 36 வயதாகிறது.

அவரது தாய் வனீதா பெனாண்டோ ( தாதி ), தந்தை சுமல் பெனாண்டோ (சட்டத்தரணி)
சமலி பெனாண்டோ தற்பொழுது பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் அதேவேளை, இம்முறை இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில், கேம்பிரிட்ஜ் நகரில் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

பிரித்தானியாவின் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

சட்டத்தரணியான சமலி பெனாண்டோ பிரித்தானியாவின் பாரிஸ்டர் பட்டதாரியும் ஆவர்.

சட்டத்தரணி தொழிலுக்கு மேலதிகமாக மன நேயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தும் அவர், மன நேயாளர்களுக்கு கையுறை ஒன்றையும் அணிவிக்க வேண்டும் எனவும் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

சமூகத்தில் மன நேயாளர்களுக்கு தேவையான உபசரிப்புக்கள் கிடைக்கப்பெறவேண்டும் என்ற ஒரு காரணத்தினாலேயே அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார். அதேவேளை அவர் தற்பொழுது பிரித்தானியா அரசியல் மேடைகளில் பேசப்படும் ஒரு பெண்ணாகவும் காணப்படுகிறார் .

தனது உயர்கல்விக்காக அரசியலை தெரிவு செய்த காலம் தொட்டு, அரசியலில் அதிக ஆர்வம் ஏற்பட்டதாக சமலி பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

http://www.jvpnews.com/srilanka/105561.html

 

chamali.jpg?resize=337%2C418

 

http://www.jvpnews.com/srilanka/105561.html

 

 

இனப்படுகொலையிலும் முன் நிற்கும் நாடு சிறிலங்காவே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இவர் போட்டியிடும் கட்சியைச்  சார்ந்திருக்கும் ஈழத்தமிழர்கள் நிலை என்ன என்பதை அறிய ஆவலாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

ஏற்கனவே ஐரோப்பிய யூனியனுக்கு ஒரு சிங்களவர் தேர்ந்தெடுக்கப்பட்டு.. அதனால் தமிழர்கள் நாறிப்போனார்கள்.

Link to comment
Share on other sites

அதெப்படி 1973 இல் பிறந்த பெண்ணுக்கு இப்போது தான் 36 வயதாகிறது. அதை விட ஒரு உமா குமாறன் என்ற தமிழ் பெண்ணும் கேட்குறார் ஆனால் தமிழருக்காக இயங்கும் ஒரு தளத்திற்கு அது தெரியவில்லை,ஆனால் ஒரு சிங்களத்தி கேட்பதி தெரிந்திருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Chamali Fernando

Chamali Fernando, the Conservative parliamentary candidate for Cambridge, has provoked a furious backlash after appearing to suggest that people with mental health problems should wear wristbands indicating the nature of their condition. Varsity Online

Born: 1979, East Midlands

Education: University College London

Parents: Wanitha Fernando, Sumal Fernando

Siblings: Chandila Fernando

https://www.google.co.uk/#q=chamali+fernando

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.