Jump to content

கனடாவில் இசைக்கலைஞன் மீது கொலைவெறித் தாக்குதல்


Recommended Posts

கனடாவில் இசைக்கலைஞன் மீது கொலைவெறித் தாக்குதல்

சித்திரை 15, 2015

கனடாவில் வசித்து (குப்பைகொட்டி) வருபவர் இசைக்கலைஞன் என்பவர். இவர் வேலை, அது இல்லாவிட்டால் வீடு, யாழ்களம் என்று தன்பாட்டுக்கு பொழுதை ஓட்டிக்கொண்டு இருப்பவர். யாருடைய வம்புக்கும் போகாதவர். :huh: இவருக்கு தமிழகத்தின் கோவை நகரில் ஒரு சீடர் மட்டும் உள்ளார். :unsure:

இப்படிப்பட்ட ஒரு அப்பாவியின்மீது அண்மையில் ஒரு பெண் கொலைவெறித் தாக்குதல் ஒன்றை நிகழ்த்தியுள்ள விடயம் கனடாவில் பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. :o

இந்தப் பெண் ஆதி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. நிலையான ஒரு இடத்தில் வாழாமல் அங்கும் இங்கும் சென்றுவரும் நாடோடி வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்.

சம்பவம் குறித்து காவல்துறையினர் அறிந்துகொண்ட விபரங்கள் பின்வருமாறு.

அப்பாவி இசைக்கலைஞன் வீட்டில் புத்தாண்டு தினத்தை கொண்டாட முடிவெடுத்துவிட்டதால் வேறு வழியின்றி மருத்துநீர் பெறுவதற்காக கனடா கற்பக விநாயகர் கோயிலுக்குச் சென்றுள்ளார். :unsure:

templeMain.jpg

அன்று பயங்கரமான மழை கொட்டியதால் அதிக மக்கள் நடமாட்டம் இருக்கவில்லை. மழைக்கு ஒதுங்கி கட்டடத்தின் ஓரமாக சென்றுள்ளார் பாதிக்கப்பட்டவர். அந்த இடத்தில்தான் கொலைவெறித்தாக்குதல் நடத்திய பெண் ஒளிந்துகொண்டு இருந்துள்ளார்.

இதைக் கவனியாது, சித்தன்போக்கு சிவன் போக்கு என்று சென்று கொண்டிருந்த வாலிபரைக் கண்ட சம்பந்தப்பட்ட பெண் தனது குழந்தையை திருட வந்த திருடன் என்று நினைத்து கொலைவெறித் தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளார். :huh:

அருகில் வரும் வரையில் பொறுத்திருந்து நெஞ்சில் மூர்க்கமான ஒரு தாக்குதலை மேற்கொண்டபோது பாதிக்கப்பட்டவர் நிலைகுலைந்து என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் ஒருகணம் விளித்துக்கொண்டு நின்றார். :blink: தாக்குதலை நடத்திய பெண் அந்தப்பக்கமாக நிலையெடுத்து, 'மோதிப்பார்க்கலாம் வரியா..' என்று தலையை ஆட்டியுள்ளார்.

சாதாரணமாக விருந்தாளி வீட்டுக்குள் நுழையவே பத்துத்தரம் யோசிக்கும் இசைக்கலைஞனால் ஊடு கட்டியெல்லாம் அடிக்க முடியுமா? :( நைசாக அந்தப்பக்கமாக தள்ளி 20 அடி சுற்றி அந்தப்பக்கமாகப் போய்விட்டார். முறுகலை தவித்துக்கொண்ட இவரது செயலை காவல்துறை பாராட்டுகிறது.

தாக்குதலுக்கு உள்ளானாலும்கூட மருத்து நீர் பெறுவதில் குறியாக இருந்த இசைக்கலைஞன் :wub: கோயிலுக்குள் சென்று (அங்கு ஏற்கனவே மருத்து நீர் எடுத்துக்கொண்டு நின்ற ஃபிகரை சைட் அடித்து வழிந்துவிட்டு :wub:) வெற்றிகரமாகத் திரும்பிவந்தார். தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பிய இவரின் செயலை காவல்துறை வெகுவாகப் பாராட்டுகிறது.

அதே சமயம் தாக்குதலில் ஈடுபட்ட பெண் தலைமறைவாகியுள்ளார். சந்தேகத்துக்கிடமான பெண் எவரையும் கண்டால் காவல்துறையிடம் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

அண்மையில் திருட்டு வழக்கில் கைதான பெண் ஒருவரின் படம் வெளியானதால் யாழ்களத்தில் பயங்கர கலகம் ஒன்று ஏற்பட்டிருந்தது. அவ்வாறான ஒரு கலகம் மறுபடியும் ஏற்படுவதை ஒன்ராரியோ காவல்துறை விரும்பவில்லை. ஆகவே, சந்தேக நபரின் புகைப்படத்தை மறைத்து வெளியிடுகிறோம்.

Spoiler
article-2327212-19D6C97B000005DC-60_634xbird.gif:wub:
Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சறங் கட்டி அடிக்கிற பெண் என்றால் உடனே காவல்துறை பிடித்திருக்கும். இது ஊடுகட்டி அடிக்கிற பெண் என்றதால் காவல்துறை தேடிக் கொண்டிருக்கு...! :lol::)

Link to comment
Share on other sites

குரு சம்பந்தப்பட்ட பெண் தாக்கும் மூர்க்கத்தை பார்க்க உங்கள் பின் மண்டையில் ஒரு டொக்கு விழுந்திருக்கும் போலுள்ளதே :D

குருவை தாக்கிய குருட்டு பறவையே

உன்னை அடுப்பில் வைத்து எரிக்குமுன்

மன்னிப்புகேள் மானசீகமாக...

இல்லையேல் உன் சந்ததியை வரலாற்று பாடப்புத்தகத்தில் மட்டுமே எம்சந்ததி படிக்க நேரிடும்.

- இங்கனம்

மானசீக சீடன் :D

Link to comment
Share on other sites

சறங் கட்டி அடிக்கிற பெண் என்றால் உடனே காவல்துறை பிடித்திருக்கும். இது ஊடுகட்டி அடிக்கிற பெண் என்றதால் காவல்துறை தேடிக் கொண்டிருக்கு...! :lol::)

ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது.. அதன் வாய் சரியான உரம்.. :unsure: முரட்டுத்தனம் கனக்க இருக்கு. பிரான்சில் இவை இல்லையா? :huh:

குரு சம்பந்தப்பட்ட பெண் தாக்கும் மூர்க்கத்தை பார்க்க உங்கள் பின் மண்டையில் ஒரு டொக்கு விழுந்திருக்கும் போலுள்ளதே :D

குருவை தாக்கிய குருட்டு பறவையே

உன்னை அடுப்பில் வைத்து எரிக்குமுன்

மன்னிப்புகேள் மானசீகமாக...

இல்லையேல் உன் சந்ததியை வரலாற்று பாடப்புத்தகத்தில் மட்டுமே எம்சந்ததி படிக்க நேரிடும்.

- இங்கனம்

மானசீக சீடன் :D

அது தன்னுடைய முட்டையை பாதுக்காக்கிறன் பேர்வழி எண்டு எனக்கு மொட்டை போடப் பார்த்துது.. :o ஆனாலும் அதன் தாய்மை உணர்ச்சியைப் பாராட்டாமலும் இருக்க முடியவில்லை.. :D (முட்டையை பாதுகாக்கவே என்னை தாக்க வந்தது.. :huh: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இசைக்கலைஞன் மீது கொலைவெறித் தாக்குதல்

 

 

அன்று பயங்கரமான மழை கொட்டியதால் அதிக மக்கள் நடமாட்டம் இருக்கவில்லை. மழைக்கு ஒதுங்கி கட்டடத்தின் ஓரமாக சென்றுள்ளார் பாதிக்கப்பட்டவர். அந்த இடத்தில்தான் கொலைவெறித்தாக்குதல் நடத்திய பெண் ஒளிந்துகொண்டு இருந்துள்ளார்.

இதைக் கவனியாது, சித்தன்போக்கு சிவன் போக்கு என்று சென்று கொண்டிருந்த வாலிபரைக் கண்ட சம்பந்தப்பட்ட பெண் தனது குழந்தையை திருட வந்த திருடன் என்று நினைத்து கொலைவெறித் தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளார். :huh:

Spoiler
article-2327212-19D6C97B000005DC-60_634xbird.gif:wub:

 

 

 

உறுதியாக்கூறமுடியும்

இவர் சும்மா போயிருக்கமாட்டார்..

கண்ணை(ல்லை)யாவது அடித்திருப்பார்

பெண் பாவம் பொல்லாதது ராசா....

நான் வரல இந்த விளையாட்டுக்கு.. :lol:  :D  :D

Link to comment
Share on other sites

சனீசுவரனுக்கு விரதமிருந்து விரதஉணவை, ஆதிப் பழங்குடிப் பெண்ணுக்கும் படைத்து, மோட்சமடைய விரும்பும் அடியார்களுக்காகவே அந்தப் பெண்ணையும் அதன் கற்பையும் காப்பதற்குக் கூண்டிலும் அடைத்து வைத்திருந்தனர். அப்படியும் அந்தப் பெண் குஞ்சுத்தாட்சி ஆகி அம்மாவும் ஆகிவிட்டார். எப்படி....???? அந்த மர்மத்தை அப்பாவிபோல் நடித்து இசைக்கலைஞன் தெரிந்துகொண்டதை பழங்குடிப் பெண்ணும் அறிந்துகொண்டதால் வந்த வினை. :o

 

சுவியும், ராசன் விசுவாவும் இதற்குள் மூக்கை நுளைப்பதால் அவர்களுக்கும் இதன் மர்மம் தெரிந்துள்ளதுபோல் தெரிகிறது. விநாயகர் துணை. :(  :huh:  

Link to comment
Share on other sites

உறுதியாக்கூறமுடியும்

இவர் சும்மா போயிருக்கமாட்டார்..

கண்ணை(ல்லை)யாவது அடித்திருப்பார்

பெண் பாவம் பொல்லாதது ராசா....

நான் வரல இந்த விளையாட்டுக்கு.. :lol:  :D  :D

ஒரு அப்பாவியைப் போய் கண்ணால், கல்லால் அடித்திருப்பார் என்று பழி போடுறீங்களே.. நியாயமா? :D

நல்ல காலம் நெஞ்சோடு போச்சுது.

ஏன்யா பீதியை கிளப்புறீங்க? :D

சனீசுவரனுக்கு விரதமிருந்து விரதஉணவை, ஆதிப் பழங்குடிப் பெண்ணுக்கும் படைத்து, மோட்சமடைய விரும்பும் அடியார்களுக்காகவே அந்தப் பெண்ணையும் அதன் கற்பையும் காப்பதற்குக் கூண்டிலும் அடைத்து வைத்திருந்தனர். அப்படியும் அந்தப் பெண் குஞ்சுத்தாட்சி ஆகி அம்மாவும் ஆகிவிட்டார். எப்படி....???? அந்த மர்மத்தை அப்பாவிபோல் நடித்து இசைக்கலைஞன் தெரிந்துகொண்டதை பழங்குடிப் பெண்ணும் அறிந்துகொண்டதால் வந்த வினை. :o

 

சுவியும், ராசன் விசுவாவும் இதற்குள் மூக்கை நுளைப்பதால் அவர்களுக்கும் இதன் மர்மம் தெரிந்துள்ளதுபோல் தெரிகிறது. விநாயகர் துணை. :(  :huh:

அவை இரண்டுபேரும்தான் காரணமோ.. :o இருக்கு சீடனுக்கு.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் வாய் பேசாப் பிராணி..ஒரு பறவை தாக்கியதயா இவ்வளவு பெரிய செய்தியாக்கினீங்கள் இசை அண்ணா.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொண்ணுங்களின் அடி இறகால் வருடியது மாதிரி இருக்கும் என்பது இன்னமும் கனடாவாழ் இசைக்கலைஞனுக்குத் தெரியாதோ! :lol:

Link to comment
Share on other sites

இசை அண்ணோய் இதுதான் சொல்லுறது  ஆகக் குறைஞ்சது மான் கராத்தே எண்டாலும் பழகி இருக்கணும்.  :D

character_animation_running_by_sonic_e-d

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருசக்கடைசியோடை இருந்த கண்டமெல்லாம் போயிட்டுது.
இனி  நாப்பது நாள் வெறும் வயித்தோடை நாகம்மாளுக்குப் பால் ஊத்திக்
கும்பிட்டு வந்தால் ஒரே யோகம் தான் உங்களுக்கு :D :D :lol:

Link to comment
Share on other sites

கனடாவிற்கு வந்தும் மருத்துநீர் வைப்பவர்களை பறவை வைத்து அடிக்க ஏற்பாடு . :lol:

 

 - வருத்தப்படாத தாடிக்கார  சங்கம் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சந்தேகமாய் உள்ளது அதேன் இவரை மாத்திரம் குறி வைத்து தாக்குதல்??? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-------

அருகில் வரும் வரையில் பொறுத்திருந்து நெஞ்சில் மூர்க்கமான ஒரு தாக்குதலை மேற்கொண்டபோது பாதிக்கப்பட்டவர் நிலைகுலைந்து என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் ஒருகணம் விளித்துக்கொண்டு நின்றார். :blink:தாக்குதலை நடத்திய பெண் அந்தப்பக்கமாக நிலையெடுத்து, 'மோதிப்பார்க்கலாம் வரியா..' என்று தலையை ஆட்டியுள்ளார்.

-------

 

அந்த, ஆதி பழங்குடி பெண்.... "மோதிப் பார்க்கலாம் வரியா....." என்று கேட்டதை வைத்து...

கனடா உளவுப் பிரிவு பொலிசார், துப்புத் துலக்கியதில்.....

அவர் இசைக்கலைஞன் மீது தாக்குதல் நடத்த வரவில்லை என்றும், வேறு நோக்கத்துக்காக... வந்துள்ளார் என்று கண்டறிந்துள்ளார்கள்.

அது, என்ன நோக்கம் என்று, புலனாய்வுப் பொலிசார்.... துருவி ஆராய்கிறார்கள். :D  :lol:

Link to comment
Share on other sites

பாவம் வாய் பேசாப் பிராணி..ஒரு பறவை தாக்கியதயா இவ்வளவு பெரிய செய்தியாக்கினீங்கள் இசை அண்ணா.. :lol:

என்ன இப்பிடி சொலலிப் போட்டிங்கள்.. :D அது கொஞ்சம் பலமான தாக்குதல்தான்.. :unsure:

Link to comment
Share on other sites

பொண்ணுங்களின் அடி இறகால் வருடியது மாதிரி இருக்கும் என்பது இன்னமும் கனடாவாழ் இசைக்கலைஞனுக்குத் தெரியாதோ! :lol:

கிருபன் இன்னும் சரியான இடத்தில மாட்டுப்படேல போல இருக்கு.. :unsure:

033112-AJC-girls-wrestling-national-cham

:blink::D

Link to comment
Share on other sites

இசை அண்ணோய் இதுதான் சொல்லுறது ஆகக் குறைஞ்சது மான் கராத்தே எண்டாலும் பழகி இருக்கணும். :D

character_animation_running_by_sonic_e-d

இந்த மான் கராத்தே என்றால் என்ன சேர்வயர்?? ஒரு படம் வந்திருந்தது.. சண்டையை பார்த்து ஓடுறதா?? :D

Link to comment
Share on other sites

வருசக்கடைசியோடை இருந்த கண்டமெல்லாம் போயிட்டுது.

இனி நாப்பது நாள் வெறும் வயித்தோடை நாகம்மாளுக்குப் பால் ஊத்திக்

கும்பிட்டு வந்தால் ஒரே யோகம் தான் உங்களுக்கு :D :D :lol:

இங்கே நாகம்மாள் Snake-icon.png எல்லாம் இல்லை.. நம்மாட்கள் தயவில நாகபூசணி அம்மாள் மட்டும் இருக்கிறா.. :D

கனடாவிற்கு வந்தும் மருத்துநீர் வைப்பவர்களை பறவை வைத்து அடிக்க ஏற்பாடு . :lol:

- வருத்தப்படாத தாடிக்கார சங்கம் .

என்ன செய்யிறது.. அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றினதால பல சிக்கல்கள்.. :o:D

இந்த மருத்து நீரை ஒருக்கால் ஆராய்ச்சிக்கு அனுப்பி எடுக்க வேணும்.. மாட்டு கோமியம் என்று கேள்விப்பட்ட ஞாபகம்.. உண்மையா?? :o

Link to comment
Share on other sites

எனக்கு சந்தேகமாய் உள்ளது அதேன் இவரை மாத்திரம் குறி வைத்து தாக்குதல்??? :D

வசந்தகாலம் வரேக்குள்ளை இவை (canadian geese) கனடாவுக்கு திரும்பி வருவினம்.. இந்த ஒண்டுக்கு அவசரமா முட்டை வந்திட்டுதுபோலை.. :o கோயில் வளவில் மரம் இல்லாத பூச்சாடி ஒண்டுக்குள்ளை முட்டையை போட்டிட்டு மேலே படுத்திருந்திருக்கு.. :huh: நான் என்னத்தை கண்டன்.. பக்கத்தால போக எனக்கு மேல பாய்ஞ்சு விட்டுது சில்லி கூஸ்.. :blink:

அந்த, ஆதி பழங்குடி பெண்.... "மோதிப் பார்க்கலாம் வரியா....." என்று கேட்டதை வைத்து...

கனடா உளவுப் பிரிவு பொலிசார், துப்புத் துலக்கியதில்.....

அவர் இசைக்கலைஞன் மீது தாக்குதல் நடத்த வரவில்லை என்றும், வேறு நோக்கத்துக்காக... வந்துள்ளார் என்று கண்டறிந்துள்ளார்கள்.

அது, என்ன நோக்கம் என்று, புலனாய்வுப் பொலிசார்.... துருவி ஆராய்கிறார்கள். :D:lol:

உண்மையில் அது தலையை ஆட்டிய விதத்தை நினைத்தால் இப்பவும் சிரிப்பாகத்தான் இருக்கு.. :D திரும்பி வரேக்குள்ளையும் அதே இடத்தில் நின்றது.. :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக  தெரியாமல் தான் கேட்கின்றேன்

 

இந்த பச்சை போடுதல்

முகநூலில் லைக் போடுதலில் சிலருக்கு சில சிக்கல்கள் வருவதுண்டு..

 

இந்தத்திரியையும் அதற்கு உதாரணமாக எடுத்தக்கொள்ளலாமா?? :icon_idea:

 

உண்மையில் இசை தாக்கப்பட்டிருந்தால்

நாம் பச்சை குத்தி வரவேற்கின்றோமா?

கொண்டாடுகின்றோமா??.  :o  :o  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் யாரோ பைத்தியம் தாக்கிவிட்டது என்று எண்ணிவிட்டேன். ஒரு சாதாரண பறவையா தாக்கியது. :D

Link to comment
Share on other sites

இந்த மான் கராத்தே என்றால் என்ன சேர்வயர்?? ஒரு படம் வந்திருந்தது.. சண்டையை பார்த்து ஓடுறதா?? :D

ஓம் அண்ணை. மான் கராத்தே என்றால் வேகமா ஓடுறது. இது சும்மா ஊர் பக்கங்கம் பேச்சு வழக்கில பாவிகிறது.     அந்த படத்துக்கும் இந்த மான் கராத்தேக்கும் தொடர்பு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக  தெரியாமல் தான் கேட்கின்றேன்

 

இந்த பச்சை போடுதல்

முகநூலில் லைக் போடுதலில் சிலருக்கு சில சிக்கல்கள் வருவதுண்டு..

 

இந்தத்திரியையும் அதற்கு உதாரணமாக எடுத்தக்கொள்ளலாமா?? :icon_idea:

 

உண்மையில் இசை தாக்கப்பட்டிருந்தால்

நாம் பச்சை குத்தி வரவேற்கின்றோமா?

கொண்டாடுகின்றோமா??.  :o  :o  :o

ஒரு சம்பவத்தை சுவாரஸ்யமாய் யாழில் எழுதியதுக்கு விசுகு சார் உண்மையில் நானும் பச்சை குத்தினான் ஆனால் பச்சை முடிந்து விட்டது சுய ஆக்கங்களுக்கு வரவேற்ப்பு கொடுப்பதில் தப்பில்லையே . 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு! நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/299507
    • Published By: RAJEEBAN    18 APR, 2024 | 03:14 PM   2024ம் ஆண்டு செல்வாக்கு செலுத்திய 100 நபர்களில் ஒருவராக பாலதீன புகைப்படப்பிடிப்பாளர் மொட்டாஸ் அசைசாவை டைம்ஸ் தெரிவுசெய்துள்ளது. இது குறித்து டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 108 நாட்களாக அவரது சொந்த ஊரான காசா குறித்த உலகின் குரலாகவும் பார்வையாகவும் அசைசா விளங்கினார். கமராவுடனும் பிரெஸ் என்ற எழுத்துக்கள்பொறிக்கப்பட்ட ஜக்கெட்டுடனும் அவர் நான்கு மாதங்களாக இஸ்ரேலின் குண்டுவீச்சின் கீழ் வாழ்க்கை வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் நேசத்துக்குரியவர்களை இழந்து கதறும் பெண்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கி உயிரிழந்த நபர் போன்ற விடயங்களை பதிவு செய்தார். காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு சவாலாக அமையக்கூடிய விதத்தில் காணப்பட்ட அவரது படங்கள் காசாவில் என்ன நடைபெறுகின்றது என்பதை உலகிற்கு தெரிவித்தன. அவர் பெரும் ஆபத்தின் மத்தியிலேயே தனது பணியை முன்னெடுத்தார். ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் 98 பத்திரிகையாளர்கள் காசாவில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1992ம் ஆண்டுமுதல் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு பதிவுசெய்ய தொடங்கியது முதல்  பத்திரிகையாளர்களிற்கு மிகவும் ஆபத்தான ஆண்டாக இந்த ஆண்டே காணப்பட்டுள்ளது. காசாவிலிருந்து ஜனவரியில் வெளியேறியது முதல் அவரது பணி இந்த நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதாகவும் மாறியுள்ளது. காசாவில்  நடைபெறுவது உங்களின் ஊடங்களிற்கான ஒரு உள்ளடக்கடம் இல்லை. அங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை நாங்கள் உங்கள் விருப்பங்களை கருத்துக்களை பெறுவதற்காக தெரிவிக்கவில்லை. நாங்கள் நீங்கள் செயற்படுவதற்காக காத்திருக்கின்றோம், இந்த யுத்தத்தை நாங்கள் நிறுத்தவேண்டும் என்கின்றார் அவர். https://www.virakesari.lk/article/181378
    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.