Jump to content

இடம்பெயரியிடம் இருந்து...


Recommended Posts

தடங்களில் இருந்து எழுகின்ற

கரியநாகம் பின்னந்தலையில்

சுருண்டு கொள்ள,

வெளியேறும் எலிகள்

தலையணை விளிம்புகளை முகரத்தொடங்குகின்றன...

 

எலிகளும் நாகங்களும் இல்லாத

நாளொன்றில்

நான் என்னவாக இருப்பேன்.

 

அத்துமீறி இந்த இரவுகளில்

உலவுகின்ற வண்ணத்துப்பூச்சியை

கொன்றொழிக்க வேண்டும்,

இல்லையேல்

நான் மலர்ந்துவிடவேண்டும்.

 

சாத்தியமில்லாத போதிலும்

உயரித்தென்னையின் பொந்தில்

இறுதியாக பார்த்த கிளி

அறையின் சட்டகத்தில் வந்துவிடுகிறது.

 

காலமுள்ளில் சிக்கிய

மீனின் கண்களில் இருந்த கடல்

வறண்டுபோக,

ஆதியில் பெயர்தெரியாத ஒருவனின்

வளர்ப்பு மிருகங்களின் எச்சங்கள் தோன்றத்தொடங்கின.

 

"ஆழிசூழ் உலகில்" இருந்து இறங்கிய

சூசையும் சுந்தரிரீச்சரும் வசந்தாவும்

கோத்தராப்பிள்ளையும்

ஊரில் யாராக இருக்ககூடும்....

 

பாரிஸின் நிலக்கீழ் தொடரூந்துகளில்

அவசரகதியில் முத்தமிட்டு பிரிந்துசெல்லும்

உதடுகளின் துடிப்பினால் தொடரூந்து அதிர்வதை,

ஆட்களற்ற இருக்கைகளில்

அந்த முத்தம் நிரம்பிவிடுவதை,

எப்படிதான் கடந்துபோவது...

 

உனக்கு என்னதான் பிரச்சனை...

என்று கேட்கிறாயா?

 

என்னைக் கடந்துபோகும்,

நாடிழந்த பலஸ்தீனனை

வீடிழந்த குர்திஷ்யனை

நாடு நகர் மொழி நாகரீகம்

அனைத்துமிழந்த ஆபிரிக்கனை கேள்.

 

நிராகரித்துவிடுவதெனில் 

எனக்கும் கவிதைக்கும் இடையில்

உனக்கு எதுவுமே இல்லை.

Link to comment
Share on other sites

அன்புகள் சேயோன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்துமீறி இந்த இரவுகளில்

உலவுகின்ற வண்ணத்துப்பூச்சியை

கொன்றொழிக்க வேண்டும்,

இல்லையேல்

நான் மலர்ந்துவிடவேண்டும்.

 

 

மலர்ந்து விடு, கவிஞனே!

 

நீ சிந்தும் மகரந்தங்கள்...!

 

கூம்பிய முகங்களுடன்,

ஏக்கம் சுமந்து.....,

அஸ்தமிக்கும் சூரியனில்,

விழி குத்தி நிற்கும்,

மலர்களிடம் செல்லட்டும்!

 

 

வாழ்த்துக்கள் நெற்கொழுதான்!

 

 

Link to comment
Share on other sites

 எல்லாக் கவிதைகளையும் விழுங்கி விடும் அவசர கதியில் நகரும்போது... உங்களது கவிதைகள் எனது தொண்டையில் சிக்கிக் கொள்கிறது ... என் செய்வேன் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 எல்லாக் கவிதைகளையும் விழுங்கி விடும் அவசர கதியில் நகரும்போது... உங்களது கவிதைகள் எனது தொண்டையில் சிக்கிக் கொள்கிறது ... என் செய்வேன் !!

 

எனக்குந்தான் நானும் என் செய்வேன்? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகரந்தங்கள் மலர்களிடம் செல்வதற்கு வண்ணத்துப்பூச்சிகள் தேவையல்லவா? எனக்கும்தான் ஏதோ தொண்டையில் சிக்கிஇருக்கிறது.

Link to comment
Share on other sites

மலர்ந்து விடு, கவிஞனே!

 

நீ சிந்தும் மகரந்தங்கள்...!

 

கூம்பிய முகங்களுடன்,

ஏக்கம் சுமந்து.....,

அஸ்தமிக்கும் சூரியனில்,

விழி குத்தி நிற்கும்,

மலர்களிடம் செல்லட்டும்!

 

 

வாழ்த்துக்கள் நெற்கொழுதான்!

மிக்க அன்பு  புங்கை அண்ணை 

 எல்லாக் கவிதைகளையும் விழுங்கி விடும் அவசர கதியில் நகரும்போது... உங்களது கவிதைகள் எனது தொண்டையில் சிக்கிக் கொள்கிறது ... என் செய்வேன் !!

மிக்க அன்பு ஆதித்ய இளம்பிறையன், 

 

"உங்களது கவிதைகள்" ...... சட்டென்று எதோ உடைந்துவிடுகிறது. 

சிக்கல்களை உருவாக்கவில்லை தானே வந்துவிடுகிறது  :(

நானும் என்ன செய்வேன் அண்ணை 

எனக்குந்தான் நானும் என் செய்வேன்? :wub:

அக்கா  :icon_idea:

மகரந்தங்கள் மலர்களிடம் செல்வதற்கு வண்ணத்துப்பூச்சிகள் தேவையல்லவா? எனக்கும்தான் ஏதோ தொண்டையில் சிக்கிஇருக்கிறது.

 

மகரந்தம் வலி(ழி)யும் தருகிறது

 

மிக்க அன்பு அக்கா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஏன் இப்படியான கவிதைகள் உங்களுக்கு வருகின்றன என்று என்ன யோசித்தும் விடை கிடக்கவே இல்லை :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.