Jump to content

மட்டு யுவதி உதயசிறிக்கு பொது மன்னிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசியல்வாதியும் அமைச்சருமான ரஞ்சன் நாமநாயக்க விரைவில் ஜனதிபதி சிறிசேனா உதயசிறியை விடுவிக்கும் பொது மன்னிப்பை வழங்குவார் எனச் சொல்லியுள்ளார்.

இதற்குப் பெரிதும் உதவிய நீதி அமைச்சர் ராஜபக்சேவுக்கும் நன்றி கூறியுள்ளார் ராமநாயக்க.

http://www.asianmirror.lk/news/item/7964-president-pardons-batticaloa-girl-who-scribbled-on-mirror-wall

Link to comment
Share on other sites

நல்ல செய்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி.
அந்தச் சிறுமி, அறியாமல் செய்த வேலைக்கு... சிறையில் வைத்திருந்து அவரின். பாடசாலை நாட்களை வீணடிப்பது அழகல்ல.
விரைவில்.. பொது மன்னிப்பு, வழங்கப்பட்டு, தனது கல்வியை தொடர வேண்டும்.

Link to comment
Share on other sites

பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி, சிகிரியா பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் 2 வருடம் சிறைத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இப்பொழுது அனுராதபுரம் சிறையில் வாடும் உதயசிறிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கும் பத்திரத்தில் 1ஆம் திகதி புதன்கிழமை இரவு கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை யுவதியான உதயசிறி, அனுராதபுரம் சிறையிலடைக்கப்பட்டு இப்பொழுது ஒன்றரை மாதம் கழிந்து விட்டது.

சிகிரியா குன்றிலுள்ள சுவரோவியத்தில் தனது பெயரை எழுதியமையினால் இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள உதயசிறிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அனுராதபுரம் சிறையில் வாடும் உதயசிறிக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பல அமைப்புக்கள், மற்றும் அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் இன மத பேதமில்லாது வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் இவருக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான பத்திரத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன புதன்கிழமை இரவு கையொழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இணைப்பு- http://www.tamilcnnlk.com/archives/360694.html

Link to comment
Share on other sites

சீகிரியாவில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட மட்டு யுவதிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்


சீகிரிய குன்றில் இருக்கும் கிறுக்கல் பாக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 27 வயதான மட்டக்களப்பு யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த சின்னத்தம்பி உதய ஸ்ரீ என்ற இந்த பெண் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி அவர் தொழில் புரியும் ஆடை தொழிற்சாலையின் ஊழியர்களுடன் சுற்றுலாப் பயணம் சென்றிருந்தார். சீகிரிய குன்றுக்கு சென்ற போது அங்கிருக்கும் கிறுக்கல் பாக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட யுவதிக்கு நீதிமன்றம் இரண்டு வருட சிறை தண்டனையை விதித்தது. தனது மகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை மீள்பரிசீலனை செய்யுமாறு அவரது தாய் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், யுவதிக்கு ஜனாதிபதியின் மன்னிப்பு கிடைத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சீகிரிய குன்றுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள ஓவியங்கள் மற்றும் பாக்களை சேதப்படுத்த வேண்டாம் அறிவுறுத்தும் அறிவிப்பு சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் சீகிரிய சிறுக்கல் பா மீது எழுத முயற்சித்த போது கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


http://www.tamilwin.com/show-RUmtyETWSUkp4A.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி. 

 

இதுவும் நம்மை முட்டாளாக்கும் முட்டாள் நாள் செய்தியில்லை என நம்புவோம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி...!

Link to comment
Share on other sites

சிறையில் வாடும் உதயசிறிக்கு ஒப்பமிட்டார் ஜனாதிபதி.

கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி, சிகிரியா அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு, தம்புள்ளை நீதிமன்றத்தால் 2 வருடம் சிறைத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இப்பொழுது அனுராதபுரம் சிறையில் வாடும் உதயசிறிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கும் பத்திரத்தில் புதனிரவு கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை யுவதியான உதயசிறி, அனுராதபுரம் சிறையிலடைக்கப்பட்டு இப்பொழுது ஒன்றரை மாதம் கழிந்து விட்டது.

சிகிரியா குன்றிலுள்ள சுவரோவியத்தில் தனது பெயரை எழுதியமையினால்
இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள உதயசிறிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அனுராதபுரம் சிறையில் வாடும் உதயசிறிக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பல அமைப்புக்கள், மற்றும் அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் இன மத பேதமில்லாது வேண்டுகோள் விடுத்திருந்தனர்
இந்த நிலையில் இவருக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான பத்திரத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன புதனிரவு கையொழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://www.jvpnews.com/srilanka/103631.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.