Jump to content

பிரான்ஸ் தமிழீழ மக்களின் வெள்ளை தாய் மடம் பவுல் லுயிய் வியோலெத் Mme. Paula Lugi Violette சாவடைந்துள்ளார்.


Recommended Posts

ஈழத்தமிழ் மக்களுக்காகவும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட படுகொலைக் கெதிராகவும் தனது தள்ளாத வயதிலும் குரல் கொடுத்த பிரான்சு ஈழத்தமிழ் மக்களால் வெள்ளை தமிழிச்சி என்று அழைக்கப்பட்ட மடம் பவுல் சாவடைந்துள்ளார்.

france%20amma%204.jpg

நீண்ட காலமாய் தமிழர்களின் உரிமைப்போராட்டங்களுக்கு கால நேரம் பார்க்காமல் முதல் ஆளாய் நிற்பவர். பிரான்ஸ் தொட்டு ஜெனீவா முன்றல் வரை கால் பதியாத இடமே இல்லை. அத்தனை எம் போராட்டங்களிலும் கலந்து கொண்டு எமது விடுதலை பயணத்தில் தன்னை இணைத்துகொண்டவர் மடம் பவுல் லுயிய் வியோலெத் .இவரது நல்லடக்கம் தொடர்பான தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

மேலதிக தொடர்புகளுக்கு : தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு 01 43150421

குறிப்பு - அவரின் இறுதி நிகழ்வில் பிரான்சு வாழ் தமிழீழ மக்களை கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம் .
நன்றி
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

france%20amma%205.jpg

france%20amma%201.jpg

france%20amma%203.jpg

france%20amma%202.jpg

http://www.pathivu.com/news/38915/57/Mme-Paula-Lugi-Violette/d,article_full.aspx

Link to comment
Share on other sites

உங்களை தமிழ்கூறும் நல்லுலகம் என்றுமே நினைவில் கொள்ளும்..! உங்களின் ஆன்மா அமைதி அடைவதாக!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமைக்குரிய தாய்க்கு கண்ணீரஞ்சலி. 

Link to comment
Share on other sites

மாவீரரை வணங்கி, புலிக்கொடியை அணிந்து, தமிழர் தலைவரையும் நெஞ்சில் சுமக்கும் அத்தாயின் இழப்பும் தமிழர்களுக்கு பேரிழப்பு. அந்தத் தாய்க்கு எங்கள் கண்ணீர் அஞ்சலிகள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலி.

எம் சார்பில் இவவுக்கூரிய மரியாதையை மரணச் சடங்கில் பிரான்ஸ் தமிழர் செய்வார்கள் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ

ஐயோ

 

நான் கூட உன் போல் பங்களித்ததில்லை

தமிழர் போராட்டங்களில்உன்னைக்காணாத இடமில்லை

நானோடாத இடமெல்லாம் நீ ஓடியிருக்கிறாய்

நான் தூக்காத பாதாதையெல்லாம் நீ தூக்கி திரிந்தாய்

என்னைவிட

என் கொடிக்கு நீ மரியாதை செய்தாய்

அதை அதைத்தூக்கியதால்

உலகை என்னைப்பார்க்க வைத்தாய் தாயே...

சென்று வருக

தமிழர் வரலாற்றில் உன் பெயரும் பதியப்படும்..

 

ஆத்மா சாந்திக்கு  வேண்டுகின்றேன்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு இவரின் மரணச் சடங்கு சம்பந்தமான தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கங் போவீர்கள் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

france%20amma%204.jpg

 

மாயை உலகத்தின் சடத்துவத்துக்குள்....,

 

புதைந்து போன.. புதைக்கப் பட்ட,,

 

நியாயங்கள் உனக்குப் புரிந்திருக்கின்றன !

 

இன மத பொருளாதார வேலிகளைத் தாண்டி,

 

உனது உணர்வுகளைக் காட்டியிருக்கிறாய்!

 

உனது செயல்கள்...,

 

இன்னொரு 'வெள்ளையை',

 

இன்னுமொரு தடவையாவது...

 

சிந்திக்க வைத்திருக்கும்!

 

ஆழ்ந்த அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ....
அடுத்தவனை அரவணைக்க வேண்டும்.
 
பாலஸ்தீனர்கள் 
ருவாண்டா 
குர்திஸ் 
போன்ற மக்கள் போராடும்போது அவர்களுக்கு எம்மால் முடிந்த அனுசரணையை வழங்க வேண்டும் 
 
உலக ராச்சியம் மாறிக்கொண்டே இருக்கும் 
நீண்ட பயணத்தில் நல் எண்ணங்கள் எப்போதும் கைகொடுக்கும். 
 
போராளிக்கு கண்ணீர் அஞ்சலிகள் !
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு இவரின் மரணச் சடங்கு சம்பந்தமான தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கங் போவீர்கள் என நினைக்கிறேன்.

 

இறுதிக்கிரிகைகள் பற்றி தொடர்பு கொண்டு கேட்டேன்

இன்னும் முடிவாகவில்லை என்றார்கள்

 

நிச்சயம் உறவுகள் சிலருடன் கலந்து கொள்வேன்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.