Jump to content

வடக்கில் 252 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கில் 252 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்
78ef2928d3753096b8a6e43785059f1d.JPG
வடக்கு மாகாணத்தில், ஆங்கிலம், கணிதம்,விஞ்ஞானம், விவசாயம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்களாக 252 பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். 
 
 
 
இன்று  காலை யாழ்.இந்து; மகளிர் கல்லூரியில், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் இந்த நியமனம் வழங்கப்பட்டது. 
 
ஏற்கனவே இடம்பெற்ற நேர்முகப் பரீட்சைகளின் அடிப்படையில் வட மாகாண கல்வி அமைச்சினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன. 
 
இதன்படி ஆங்கில பாடத்துக்கு 67 பேருக்கும், கணித பாடத்துக்கு 57 பேருக்கும், விவசாய விஞ்ஞானப் பாடத்துக்கு 35 பேருக்கும், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் பாடத்துக்கு 69 பேருக்கும்,தகவல் தொழில்நுட்பத்துக்கு 24 பேருக்குமாக 252 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது.
 
 
மேலும் இந்த நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும், சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்வி  அமைச்சர் த.குருகுலராஜாவும் கலந்து கொண்டனர்.
 
வட மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், பதில் தலைவர் அன்ரனி ஜெகநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், து.ரவிகரன், இ.ஆர்னோல்ட், மு. பரஞ்சோதி, த.சிவயோகன் மற்றும் கல்வி வலய அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

http://onlineuthayan.com/News_More.php?id=811503949030756811

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்..! இதே மகிந்த ஆட்சி என்றால்.. மகிந்த வழங்க டக்கிளஸ் பக்கத்தில குரங்கு மாதிரி குந்திக்கொண்டிருந்திருப்பார். அரசியல் நிகழ்ச்சியாக மாற்றப்பட்டிருக்கும். 

 

நியமனங்கள் அரசியலுக்கு அப்பால் மக்களின் தேவைக்கு ஏற்ப உள்ளூர் பட்டதாரிகளுக்கு முதன்மை அளித்து அளிக்கப்படுவது உண்மையில் வரவேற்கத்தக்க விடயம்.  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மைத்திரி வெல்லவே கூடாது, மகிந்த மீண்டும் ஜனாதிபதியாவது தமிழர் விடுதலையை விரைவு படுத்தும்,

மைத்திரியும் மகிந்தவும் ஒண்டுதான். ஆட்சிமாற்றத்தால் தமிழருக்கு ஒரு சிறு நன்மையுமில்லை".

இதெல்லாம் போன மாசம்.

"நல்ல விடயம்..! இதே மகிந்த ஆட்சி என்றால்.. மகிந்த வழங்க டக்கிளஸ் பக்கத்தில குரங்கு மாதிரி குந்திக்கொண்டிருந்திருப்பார். அரசியல் நிகழ்ச்சியாக மாற்றப்பட்டிருக்கும்".

இது இந்த மாசம்.

கொள்கை விளக்கம் (அல்லது சடையல்): ஒரு அரசியல்வாதி பாதை மாறும் போது இடித்துரைப்பதும், நல்வழி போகும் போது தட்டிக்கொடுப்பதும் ஒரு நல்ல குடிமகனின் கடைமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கொள்கை விளக்கம்: ஒரு அரசியல்வாதி பாதை மாறும் போது இடித்துரைப்பதும், நல்வழி போகும் போது தட்டிக்கொடுப்பதும் ஒரு நல்ல குடிமகனின் கடமை. 

 

 

இதைப் புரிய வைக்க எத்தினை வகையா பேச வேண்டி இருக்குது. அந்தளவுக்கு இருக்குது புரிதல் மட்டம்..!  :icon_idea:  :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.