Jump to content

28வது ஆண்டு கந்தன் கருணை படுகொலை நினைவு நாள்


arjun

Recommended Posts

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரின் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிப்பின் பின்னர்.

புலிகளின் தளபதி கிட்டு இரண்டாம் குறுக்குத் தெருவில் அகமுரண்பாட்டில் கிறனைட் தாக்குதலில் காலை இழந்த போது(1987 மார்ச்) யாழில் ஒரு வீட்டில் அமைந்திருந்த சித்திரவதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த

57 க்கு மேற்பட்ட ஏதுமறியா அப்பாவி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி போராளிகள் உட்பட மற்றும் புளொட், ரெலோ போராளிகள் ஆதரவாளர்கள் பலர் அன்றிரவே தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான அருணாவால் (செல்வசாமி செல்வகுமார்) சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

அந்த படுகொலை “கந்தன் கருணை” படுகொலை என அழைக்கப்பட்டது

கந்தன் கருணை படுகொலை நினைவு நாள்

.

1987ம் ஆண்டு பங்குனி 30 இல் யாழ்ப்பாணத்தில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிறைப்படுகொலையே கந்தன்கருணை படுகொலை

1983 யூலை மாதத்தில் இல் வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 53 பேர், பாதுகாப்பு தரப்புக்களின் ஒத்துழைப்புடன் சிறை வைக்கப்பட்டிருந்த சிங்கள கைதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகினர். இலங்கை தமிழ் மக்களும் இன்னும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் இந்த நாளையே கறுப்பு யூலை என வருடம் தோறும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இதனை ஒத்த ஒரு படுகொலையை புலிகள் 1987 பங்குனி 30 இல் நிகழ்த்தினார்கள். அவர்களால் சிறை வைக்கப்பட்டிருந்த 60 இற்கும் மேற்பட்டவர்கள் இதன்போது கொல்லப்பட்டார்கள். இந்த படுகொலைகள் இடம்பெறுவதற்கு சுமார் 3 மாதங்களுக்கு முன்பாக 1987 மார்கழி 13 இல் புலிகள் ஈ.பி.ஆர்.எல்.எவ். மீது தாக்குதல் நடாத்தி கைது செய்து தடுத்து வைத்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் அநேகருடன், புளொட் ரெலோ இயக்கப் போராளிகள் சிலரும் பொதுமக்களும் கூட இந்த படுகொலை சம்பவத்தில் பலியாகினர். பணத்திற்காக கடத்தி வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண வர்த்தகர்கள் இருவரும் இதில் பலியானது பலரும் அறிந்த சங்கதியாகும்.

நல்லூர் கோவிலுக்கு பின் புறமாக கோவில் வீதியில் கந்தன் கருணை என்ற பெயரை கொண்டிருந்த இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சம்பவம் நடப்பதற்கு முன்னரே யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு சமீபமாக ஒரு வீட்டிற்கு இடம் மாற்றப்பட்டிருந்தனர். அங்கேயே இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற போதும் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கந்தன் கருணை இல்லத்தின் பெயரே இந்த படுகொலையுடன் ஒட்டிக்கொண்டது.

புலிகளின் அப்போதைய யாழ் மாவட்ட தளபதி கிட்டு என்கின்ற சதாசிவம் கிருஷ்ணகுமார் யாழ்ப்பாணம், 2ம் குறுக்குத் தெருவில் வழங்கமாக சென்றுவரும் தனது பெண் சிநேகிதி ஒருவரது வீட்டிற்கு சென்று திரும்பும் வேளையில் அவரது காருக்கு கைக்குண்டு வீசப்பட்டு படுகாயமடைந்தார். தம்மால் தடைசெய்யப்பட்ட மேற்படி இயக்கங்களை சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என்ற ஊகத்தின் அடிப்படையில் புலிகளால் சிறை வைக்கப்பட்டிருந்த இந்த கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஆனால், தமது தடுப்புக்காவலில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதிகள் 18 பேர் தமது தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஒரு கட்டுக்கதையை ஊடகங்களுக்குத் தெரிவித்து வெலிக்கடை படுகொலையை போன்றே மிருகத்தனமான இந்தப் படுகொலையை புலிகள் மூடி மறைத்தனர்.

இந்த கொடூரச் செயலை கண்டிக்கவோ, விமர்சிக்கவோ யாரும் முன்வரவில்லை. அத்தகைய வல்லமையுடைய மனித உரிமை செயற்பாட்டாளர்களையோ, ஊடகவியலாளர்களையோ அக்காலத்தில் காணமுடியவில்லை. புலிகளின் துப்பாக்கிகளுக்கு முன்னால் அவர்கள் குரல் ஒடுங்கிப் போனது விளங்கிக் கொள்ளப்படக் கூடியதே. ஆனால், புலிகளின் அராஜகப் போக்கிற்கெதிராக சக தோழர்களை போராடுமாறு வழிநடத்தியதுடன், அதற்கு ஆதரவளிக்குமாறு மக்களை கோரியவர் இப்போது “தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை கொலை செய்த சந்தர்ப்பங்கள் ஒரு போதும் நிகழ்ந்திருக்கவில்லை” என்று கூறி தமது பிள்ளைகளை, குடும்ப அங்கத்தவர்களை புலிகளின் பாசிசப் போக்கிற்கு பறிகொடுத்து நிற்கும் அனைவரது முகத்திலும் ஓங்கி அறைந்திருக்கிறார். இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு யுத்தக் குற்றங்கள் தொடர்பில் இரண்டு தரப்புக்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்தை ஐ.நா மன்றத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதுடன். வன்னியில் பொதுமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பாக பலர் தமது கருத்துக்களை அச்சம் நீங்கி வெளியிட்டு வரும் நிலையில் இவ்வாறு கூறப்பட்டிருப்பது பலரையும் விசனப்பட வைத்திருக்கிறது.

புலிகளால் நிகழ்த்தப்பட்ட இந்த “கந்தன் கருணை” சிறைப்படுகொலையின் போது உயிரிழந்தவர்களில் பலர் புலிகளிடம் சரணடைந்தவர்கள். அவர்களை சுட்டுக்கொன்ற புலிகள் முள்ளிவாய்க்காலில் வெள்ளைக்கொடியுடன் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடையச் சென்றார்கள். வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை ஸ்ரீலங்கா இராணுவம் சுட்டுக்கொன்றுவிட்டது, யுத்தக் குற்றம் இழைத்திருக்கிறது என்று கூறி நீதி கேட்பவர்கள் சரணடைந்தவர்களை புலிகள் சுட்டுக்கொன்றதையிட்டு எந்தக்காலத்திலும் வாய் பேசவில்லை.

கந்தன் கருணை படுகொலை இடம்பெற்று 27 வருடங்கள் கடந்திருக்கிறது. இதன் பின்னரும் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பலர் பல இடங்களில் தனித்தனியாகவும், கூட்டாகவும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடியும் வரை தடுத்துவைக்கப்பட்ட யாரையும் எந்த இடத்திலும் புலிகள் விடுவிக்கவில்லை. ஸ்ரீலங்கா இராணுவமும் யாரையும் மீட்கவில்லை. ஆனால் விதம் விதமான சிறைக் கூண்டுகளுடன் புலிகளின் பல சிறைச்சாலைகளை இராணுவம் கைப்பற்றியது அனைவருக்கும் தெரியும். எனவே, இதன் மறு பகுதியை ஊகிக்க முடியாதவர்கள் யாருமிருக்க முடியாது.

புலிகளால், ஜனநாயக விழுமியங்கள், மனித உரிமைகள் மீறப்பட்ட சந்தர்ப்பங்களில் அதற்கெதிராகப் பேசப்பட்டிருந்தால் இன்று ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தீர்மானத்திற்காக காத்திருக்கும் நிலை தோன்றியிருக்காது. இந்தப் படிப்பினைகள் தமிழ் மக்களின் எதிர்காலம் செம்மையுறப் பயன்பட வேண்டும். தமது உயிர்களை அர்ப்பணித்து எமக்குக் கற்றுத்தந்தவர்களின் வரிசையில் “கந்தன் கருணை” சிறைப்படுகொலையில் மாண்டவர்களும் அடங்குவர். அவர்களை இந் நாளில் நினைவு கூருவோம்.

www.eprlfnet.com
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிக்கையை விட்ட பெட்டைப்பயல் யாரு ,அகமுரண்பாட்டில் குண்டு வீசப்படவில்லை.எறிந்தவர்கள் யாரென்பது அர்ஜூன் அண்ணாவுக்கு நிச்சயமாக தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு படுகொலை.. ஊதிப் பெருப்பிக்கப்பட்டது.. ஒட்டுக்குழுக்களால்.

 

இதில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஒட்டுக்குழு ஆயுததாரிகள். அப்பாவி பொது மக்கள் கிடையாது.

 

அப்பாவி பொது மக்களை முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்ததையும்.. இதனையும் ஒப்பிடும்.. முட்டாள்களை என்னென்பது. 

 

ஒட்டுக்குழுக்கள்.. புளொட் உட்பட ரகசியமாகப் போட்டு புதைத்தவையை நினைவு கூற வெளிக்கிட்டால்.. தினமும் நினைவு கூறலாகவே இருக்கும்.  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை

மக்களுக்காக மரணித்த மாவீரர்களுக்கு ஒருமுறை தானும் அஞ்சலி செய்யாத அர்யூன் அவர்கள்

இவர்களுக்கு அஞ்சலி செய்வது

வெறும் பழிவாங்கலின் இன்னொரு சாட்சி  மட்டுமே...

Link to comment
Share on other sites

இதுவரை

மக்களுக்காக மரணித்த மாவீரர்களுக்கு ஒருமுறை தானும் அஞ்சலி செய்யாத அர்யூன் அவர்கள்

இவர்களுக்கு அஞ்சலி செய்வது

வெறும் பழிவாங்கலின் இன்னொரு சாட்சி  மட்டுமே...

முதலில் எமது போராட்டத்தில் நாம் விட்ட பிழைகளை அனைவரும் ஒப்புக்கொண்டு  அனைத்து போராளிகளுக்க்கும் நாம் அஞ்சலி செலுத்தும் நாள் வரட்டும் ..

 

மண்ணுக்காக அவர்கள் மட்டும் மரணிக்கவில்லை .

உங்களை மாதிரி படம் காட்ட எனக்கு தெரியாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் எமது போராட்டத்தில் நாம் விட்ட பிழைகளை அனைவரும் ஒப்புக்கொண்டு  அனைத்து போராளிகளுக்க்கும் நாம் அஞ்சலி செலுத்தும் நாள் வரட்டும் ..

 

மண்ணுக்காக அவர்கள் மட்டும் மரணிக்கவில்லை .

உங்களை மாதிரி படம் காட்ட எனக்கு தெரியாது .

 

 

அப்படி  உண்மையிலேயே விரும்பினா?

ஊரெழுவில் புதைக்கப்பட்டவர்களிலிருந்து தொடங்கணும் அண்ணை.....

உந்தப்படம் காட்டுதல் யாழில் வேகாது

வேறு எங்காவது முயற்ச்சிக்கவும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி எழுதிய ஆயுத எழுத்து நூலில் இந்தப்படுகொலையைப் பற்றி ஒரு எழுத்துதானும் வரவில்லை. புளட்காரர்களும் ஒரத்தநாட்டில் சவுக்குத் தோப்பில் கொன்று புதைத்தவர்களைப் பற்றி நினைவுநாளும் கொண்டாடுவதில்லை. இன்னும் பத்து வருடத்தில் எல்லாக்கொலைகளும் புலிகளால்தான் மேற்கொள்ளப்பட்டன என்று வரலாறு எழுதப்படவும்கூடும்.

Link to comment
Share on other sites

கிருபன் ,

 

போராட்டத்தில் விட்ட பிழைகளை ஒப்புகொண்டு  அனைத்து போராளிகளுக்கும் அஞ்சலி என்றால் அதற்குள் ஒரத்தநாட்டில் நாட்டில் புதைக்கப்படவ்ர்களும் அடக்கம் .

 

நான் பேசுவது "தமிழ் மக்கள் " செய்ய வேண்டியது பற்றி, நீங்கள் சொல்வது உருவழிந்து புளொட் என்ற பெயரில் இருக்கும் நாலு ஆட்கள் பற்றி .

எஞ்சி இருக்கும் அந்த நாலு பெயர்களால் புதியதோர் உலகம் எழுதப்படவில்லை .அவர்கள் தாம் விட்ட பிழைகளை ஒப்புக்கொள்ளபோவதும் இல்லை .

அனைத்து இயக்கங்ககளில் இருக்கும் அந்த நாலு பேர்கள் பற்றி அக்கறைப்படதேவையில்லை .


அண்ணை ஊரேழுவில் என்ன நடந்து ?

 

யாழில நீங்கள் தான் பருப்போ ?

Link to comment
Share on other sites

மண்ணுக்காக அவர்கள் மட்டும் மரணிக்கவில்லை 

 

 

புளட் நிச்சயமாக மரணிக்கவில்லை.

 

 நாலு ஆட்கள் பற்றி 

 

 

இதை தானே அண்ணைக்கு பல மாதிரி விளங்கப்படுத்தியாச்சு. புலிகளில் உள்ள நாலு பேரால் செய்யப்பட்டவைகளுக்கு மிகுதிப்பேர் பொறுப்பு ஏற்ற முடியாது.

 

மேற்படி செய்தியை இணைத்த செய்தியின் மூலம் என்ன? அல்லது உங்களின் ஆக்கமா? செய்தி மூலம் குறிப்பிடப்படாத செய்திகள் நீக்கப்படும் என்பது களவிதிகளில் ஒன்று. நீங்கள் அறியாததும் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அண்ணை ஊரேழுவில் என்ன நடந்து ?

 

யாழில நீங்கள் தான் பருப்போ ?

 

வேண்டுமென்று தான் எழுதினேன்

உண்மையைப்பேசும் அக்கறையிருந்தால்

அது உரும்பிராய் என்றிருப்பீர்கள்

அதை விடுத்து

என்னைக்கேலி  செய்வதனூடாக

தப்பிலிருந்து ஒழிக்கப்பார்ப்பீர்கள்

திசைதிருப்பப்பார்ப்பீர்கள் என்பது தெரியும்... :(  :(  :(

Link to comment
Share on other sites

வேண்டுமென்று தான் எழுதினேன்

உண்மையைப்பேசும் அக்கறையிருந்தால்

அது உரும்பிராய் என்றிருப்பீர்கள்

அதை விடுத்து

என்னைக்கேலி  செய்வதனூடாக

தப்பிலிருந்து ஒழிக்கப்பார்ப்பீர்கள்

திசைதிருப்பப்பார்ப்பீர்கள் என்பது தெரியும்... :(  :(  :(

நாட்டில் பிரச்சனை என்றவுடன் ஓடி வந்து வியாபாரம் தொடங்கிய அண்ணைக்கு போராட்டத்தில் நடந்த விடயங்கள் தெரிய நியாயம் இல்லை .யாழில் நீங்கள் வைக்கும் பதிவுகள் வாசித்துக்கொண்டே தான் வருகின்றேன் .

 

தேசியம் என்று படம் போட்டு பிழைக்கும் பல பேரை பார்த்துவிட்டோம் .

 

தெரியாது அல்லது பிழையாக எழுதிவிட்டேன் என்று உண்மை எழுதும் பக்குவம் முதலில் வரவேண்டும் .

அண்ணைக்கு உரும்பிராயும் தெரியாது ஊரேழுவும் தெரியாது என்றும் தெரியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தன் கருணைப் படுகொலைகள் புலிகளின் தலைமைப் பீடத்தால் திட்டமிடப்பட்டோ அல்லது தலைமைபீடத்திற்குத் தெரிந்தோ நடந்ததாக அறியவில்லை. உங்கள் பதிவிலும் அப்படியில்லை. கிட்டுவின் மேலான விசுவாசத்தால் அருணா அவசரப்பட்டுச் செய்தது என்பதுதான் பொதுவான தகவல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் பிரச்சனை என்றவுடன் ஓடி வந்து வியாபாரம் தொடங்கிய அண்ணைக்கு போராட்டத்தில் நடந்த விடயங்கள் தெரிய நியாயம் இல்லை .யாழில் நீங்கள் வைக்கும் பதிவுகள் வாசித்துக்கொண்டே தான் வருகின்றேன் .

 

தேசியம் என்று படம் போட்டு பிழைக்கும் பல பேரை பார்த்துவிட்டோம் .

 

தெரியாது அல்லது பிழையாக எழுதிவிட்டேன் என்று உண்மை எழுதும் பக்குவம் முதலில் வரவேண்டும் .

அண்ணைக்கு உரும்பிராயும் தெரியாது ஊரேழுவும் தெரியாது என்றும் தெரியும் .

 

 

முதலில் ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள்

போராட்டத்தில் ஆயுதத்தை தூக்கிவர்கள் மட்டும் தான் என்றில்லை

அவர்களுக்கு உதவியாக இருந்தவர்கள்

பங்களித்தவர்கள்

சாதாரண மக்கள் என்று பல பகுதிகளுண்டு

ஒரு போராட்டத்தை மதிப்பீர்களாக

ஒரு விடுதலை வேட்கையை மதிப்பவராக இருந்தால்..

இதனைப்புரிந்து நடப்பீர்கள்

இவ்வகையானவர்களையுமம் சேர்த்த நடக்கமுயல்வீர்கள்...

 

இவ்வாறு 30 வருடங்களுக்கும  மேலாக உழைத்தவர்களை 

தமது இன்னல்இகளுக்கும் நடுவில் போராட்டத்துக்கு துணையாக நின்றவர்களை

போற்றாது விட்டாலும் கேவலப்படுத்தமாட்டீர்கள்

இது தான் ஆகக்குறைந்த விடுதலை உணர்வு

அது என்னிடம் தாராளமாக உண்டு

நீங்கள் பூச்சியம்..

இப்பவாவது அது சுழிபுரம் அண்ணை என்றிருக்கலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தன் கருணைப் படுகொலைகள் புலிகளின் தலைமைப் பீடத்தால் திட்டமிடப்பட்டோ அல்லது தலைமைபீடத்திற்குத் தெரிந்தோ நடந்ததாக அறியவில்லை. உங்கள் பதிவிலும் அப்படியில்லை. கிட்டுவின் மேலான விசுவாசத்தால் அருணா அவசரப்பட்டுச் செய்தது என்பதுதான் பொதுவான தகவல்.

இந்த கொலைவெறியாட்டத்தை நடத்தியவருக்கு அமைப்பு என்ன தண்டனை கொடுத்தது? மேஜர் எனும் பட்டத்தை தவிர? சந்தேகம் வந்தாலே கட்டித்தூக்கும் இயக்கம், தண்ணுள் இருந்த கறுப்பாட்டை ஏன் விட்டு வைத்தது.

இதற்கும் இலங்கை பொன்சேகாவை பீல்ட் மார்சல் ஆக்கி அழகு பார்பதற்க்கும் என்ன வித்தியாசம்?

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது போல பதவி உயர்ந்திருக்கலாம் ஆனால் நிச்சயமாக கூலி கிடைத்திருக்காது

சரி கோசான் பொன்னருக்கு பீல்மாஷல் குடுத்தது ஏன் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தன் கருணைப் படுகொலைகள் புலிகளின் தலைமைப் பீடத்தால் திட்டமிடப்பட்டோ அல்லது தலைமைபீடத்திற்குத் தெரிந்தோ நடந்ததாக அறியவில்லை. உங்கள் பதிவிலும் அப்படியில்லை. கிட்டுவின் மேலான விசுவாசத்தால் அருணா அவசரப்பட்டுச் செய்தது என்பதுதான் பொதுவான தகவல்.

 

இந்த தாக்குதல் நடத்திய அருணாவுக்கு தண்டனை கொடுத்ததாக அறிந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொலைவெறியாட்டத்தை நடத்தியவருக்கு அமைப்பு என்ன தண்டனை கொடுத்தது? மேஜர் எனும் பட்டத்தை தவிர? சந்தேகம் வந்தாலே கட்டித்தூக்கும் இயக்கம், தண்ணுள் இருந்த கறுப்பாட்டை ஏன் விட்டு வைத்தது.

இதற்கும் இலங்கை பொன்சேகாவை பீல்ட் மார்சல் ஆக்கி அழகு பார்பதற்க்கும் என்ன வித்தியாசம்?

அருணாவுக்கு மேஜர் பதவி கொடுக்கப்பட்டது 1986ல் இந்தியாவில் இருந்து திரும்பி வரும்போது இலங்கை கடற்படையுடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவடந்ததாக நம்பப்பட்டு இப்பதவிநிலை கொடுக்கப்பட்டது.ஆனால் இவர் கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ் கோட்டை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.1987ல் கைதிகள் கைதிகள் பரிமாற்றத்தின் போது அருணாவுடன் காமினி என்ற போராளியும் விடுதலை செய்யப்பட்டனர்.காமினி சிறிது காலத்தில் இராணுவத்துடனான மோதலில் வீரச்சாவடைந்தார்.இதன் பின்னரான காலத்திலேயே கந்தன்கருணை சம்பவம் இடம்பெற்றது.இந்திய இராணுவத்தடனான மோதலில் இவர்கொல்லப்பட்டபோது.புலிகளால் எந்த பதவி நிலையும் வழங்கப்படவில்லை ,மாவீரர் பட்டியலிலும் இவரது பெயர் இல்லை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கத்துக்கு நன்றி நந்தன். இது நீங்கள் சொல்வதால் உறுதிப்படுத்த பட்ட தகவல் என கருதுகிறேன்.

ஆத்திர மிகுதியால் 59 கைதிகளை கொன்றவருக்கு பதவி இறக்கம் மட்டும் போதுமான தண்டணையாக எனக்குத்தெரியவில்லை.

நாளைக்கு சவேந்திர சில்வாவை மற்றும் தளபதிகளை ஒரு சிப்பாய் என்று அறிவித்து விட்டால் - நாம் போர்குற்ற விசாரணையை கைவிட்டு விடுவோமா?

சேவயர் - இதில என்ன இருக்கு எல்லாம் அரசியல் பம்மாத்து. பொன்னருக்கு சிங்கப்பூர் ஒப்பரேசனிலயே எல்லா பதக்கங்களையும் கழட்டியாச்சு. இனி செத்த கிழிக்கு சிங்காரம் பண்ணும் கதைதான் :)

Link to comment
Share on other sites

சேவயர் - இதில என்ன இருக்கு எல்லாம் அரசியல் பம்மாத்து. பொன்னருக்கு சிங்கப்பூர் ஒப்பரேசனிலயே எல்லா பதக்கங்களையும் கழட்டியாச்சு. இனி செத்த கிழிக்கு சிங்காரம் பண்ணும் கதைதான் :)

சரியாக சொன்னீர்கள், என்னும் உள்ளே சென்று பாத்தால் அவரை தொடர்ந்தும் சாகடிப்பது விளங்கும்

Link to comment
Share on other sites

கிட்டுவிற்கு குண்டு எறிந்ததற்காக (தீப்பொறி ) அறுபது கைதிகளாக இருந்த அறுபது பேர்கள் வரை கொன்றவருக்கு மாவீரர் பட்டம் கொடுக்கவில்லையாம் ,

 

விபுசாவின் தாயாரை அரசு விடுதலை செய்ததற்கு இங்கு பலர் கொடுத்த வியாக்கியானம் தான் நினைவு வருகின்றது .

 

கந்தன் கருணை நான் எழுதிய கிரிக்கெட் பைத்தியம் வரும் பயிற்சியாளரின்(அத்தான் )  தம்பியின் வீடு .அந்த மேல்வீட்டை அடாவடித்தனமாக எடுத்து வைத்திருந்தார்கள் .அருணா அறுபது பேரை சுட்டது அந்த வீட்டில் இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் அர்ஜூனின் கோபத்தை நாம் புலி எதிர்ப்பாகப் பார்க்காமல் நியாயமான ஒன்றாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்பது என் கருத்து! ஒரு ரூபாய் கணக்கில் குறைந்தாலே பங்கரில் போடும் அளவு கட்டுப் பாடு கொண்ட புலிகள், அருணாவுக்கு இந்த ஈனச் செயலுக்காகத் தண்டனை கொடுக்காதது தவறு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் அர்ஜூனின் கோபத்தை நாம் புலி எதிர்ப்பாகப் பார்க்காமல் நியாயமான ஒன்றாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்பது என் கருத்து! ஒரு ரூபாய் கணக்கில் குறைந்தாலே பங்கரில் போடும் அளவு கட்டுப் பாடு கொண்ட புலிகள், அருணாவுக்கு இந்த ஈனச் செயலுக்காகத் தண்டனை கொடுக்காதது தவறு!

அருணா புலிகளால் தண்டிக்கபட்டார் தளபதி நிலையில் இருந்தவரை போராளியே இல்லாது ஆக்கினார்கள்.
அருணா மாவீரர் பட்டியலிலேயே சேர்க்க படவில்லை.
அவரையும் சுட்டிருக்க வேண்டும் என்று நீங்கள் கூறலாம் ....
ஆம் சுடிருக்கலாம் ....... உங்களை எப்போதும் உங்கள் அம்மா பாதுகாக்கத்தான் செய்வார்.
 
இதை மாற்றி மாற்றி பேசிக்கொண்டே இருக்கலாம்.
 
அங்கே 28 பேர் இருந்தார்கள் எனபதை புலிகள்தான் வெளிபடுத்தினார்கள்.
அது ஒரு அவாமான செயல் என்பது புலிகள் ஏற்றுக்கொண்டார்கள்.
 
 
ஓநாய்களின் ஊளையிடுவது .....
இதுதான் முதல் தடவை அல்ல 
அவர்களுக்கு இவர்கள் உயிர் முக்கியமல்ல .... இவர்கள் உயிரை மதித்திருந்தால் இந்திய இராணுவத்துடன் வந்து அப்பாவி இளைஞர்களை 
கேவலாமாக கொன்று இருக்க மாட்டார்கள்.
இவர்களுக்காக் கடந்த 28 வருடத்தில் இந்த ஓநாய்கள் செய்தது என்ன ?
 
இந்த ஓநாய்களின் கவனம் எல்லாம் மாவீரர் நாளில்தான் 
அதை எய்த்துபோக செய்து ஒரு விஷ நாளை உருவாக்க வேண்டும் என்பதுதான் 
ஓநாய்களின் நீலி கண்ணீர்.
கார்த்திகை 27இல் தாயக கனவுடன் இறந்த அனைத்து போராளிகளையும் மக்களையும் நினைவு கூறிய தமிழன் வருகிறான்.
1989இல் தலைவர் யாவருக்குமகவே பொதுநாளாக அதை அறிவித்து மாவீரர் அறிக்கையும் விட்டார்.
எனது சகோதரர் ஒருவரின் (டெலோ) நினைவாகவே நான் மாவீரர் நாளுக்கு செல்வதுண்டு 
பின்பு போர்தொடர பல உறவுகள் ஒன்றாக படித்த நண்பர்கள் என்று இப்போ பல நூறு பேர்கள். 
 
முதலில் ஓநாய்கள் ......
உமாமகேஷ்வரன் தாட்டவர்கள்  உமாவை தாட்டவர்கள்  உமாவை தாட்டவர்களை தாட்டவர்கள் 
எல்லோருக்குமாக முதலில் ஒரு பொது அஞ்சலியை செய்ய சொல்லுங்கள்.
அந்த பட்டியலை முதலில் வெளியிட்டு பகிரங்கமாக அறிவிக்க சொல்லுங்கள்.
மற்றதை மக்கள் செய்வார்கள்.
 
மக்களுக்கு நாட்டில் என்ன நடந்தது என்பது தெரியும்.
மக்கள் சோபா சுத்தியின் புத்தகம் படித்து தெரிந்துகொள்ள தேவையில்லை 
எல்லாம் அவர்கள் கண்முன்தான் நடந்தது.
புலிகள் விட்ட பிழைகள் காரணங்கள் மக்களுக்கு தெரியும் 
ஓநாய்கள் ஊளையிட்டு யாரும் ஏதும் அறிந்ததாக 30 வருடத்தில் ஒன்றும் இல்லை.
 
நாளைக்கு இன்னொரு திரியில் ஓநாய்கள் வந்து எழுதும் ...
மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள் மக்கள் முடிவெடுப்பார்கள் என்று.
அப்ப பொத்திக்கொண்டு இருக்கலாமே ......?
மக்கள் முடிவு எடுப்பர்கள்தானே.
 
40 ஆயிரம் தன்னலமற்ற தமிழ் உயிர்கள் தங்கள் உதிரத்தால் வரைந்த 
புலிக்கொடியையும் ........
அவர்கள் நினவு நாளையும் இல்லாது போக செய்ய இந்த ஓநாய்கள் ஊளையிடுவது.
உங்களுக்கு புரியாமல் இருப்பது வேடிக்கை.
 
இந்த ஓநாய்களை நாங்கள் பக்கத்தில் படுத்திருந்து பார்த்தவர்கள்.
ஊளை இடுவது  தமிழனிடம் சுட்டு பறிப்பது தவிர்த்து 
இதுவரை செய்தது என்று ஏதும் இல்லை.
வவுனியா மண்ணில் தமிழின் இரத்த வாசம் இன்னமும் உறைந்து கிடக்கிறது. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மருது

நான் நேரத்தை மிச்சப்படுத்த உதவியமைக்கு......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஓநாய்கள் ஊளையிட போகுது என்றால் 
ஒரு 8 ஓநாய் கூடும் ......
முகத்திற்கு நேரே வந்து கேட்கிறது என்று முகம் சுழிக்காமல் ஒன்னுமொரு 4 பேர்கள் போவார்கள் 
14 பேர்கள் மேல் கூடி இதுவரை ஓநாய்கள் ஊளையிடுதலை கேட்க யாரும் போனதில்லை.
 
16 பேருக்கு மேல் என்றால் ...
அங்கே புலிக்கொடி வேண்டும்.
இது நிதர்சனம்.
இதை ஓநாய்கள் புரிந்து கொள்ள இன்னும் 60 வருடம் தேவை.
 
சுவிசில் வீரமக்கள் தினத்திற்கு நண்பர்களுடன் 5 பேருடன் 
3வருடங்கள் போயிருக்கிறேன்.
நல்ல ரோல்  டீ குடிக்க.
எல்லாம் ப்ரீ (நல்ல கஸ்டமர் செர்விஸ் )
 
(பாவி புலிகள் மாவீரர் நாளுக்கு போனால் எல்லாம் காசு)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D தலை இடிக்குது மருது வாசிச்சு! மேலே கோசான் கூறியிருக்கும் ஒப்பீட்டைப் பார்த்தீர்களா? புலிகளின் மற்றைய தண்டனைகளைக் கருத்தில் எடுத்தால் அருணாவுக்குக் கிடைத்தது மயிலிறகால் அடிப்பது போல இல்லையா? சில சமயங்களில் தவறுகளை ஏற்றுக் கொள்வது தான் நாற்பதினாயிரம் பேருக்குச் செய்யும் கௌரவமாக அமையும் என நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.