Jump to content

குடிநீரில் கழிவு எண்ணெய் மாசு தொடர்பான ஊடக அறிக்கை - அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம்:-


Recommended Posts

யாழ் குடாநாட்டின் சில பகுதிகளில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை தொடர்பினில்; அமைச்சர்களான ஜங்கரநேசன் மற்றும் சத்தியலிங்கம் தரப்பு வெளியிட்ட அறிக்கையினை மருத்துவ அதிகாரிகள் சந்தேகம் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளன.

இது தொடர்பினில் அவ்வமைப்பு இன்று விடுத்துள்ள அறிக்கையினில்

குடிநீரில் எண்ணெயானது வெற்றுக் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும் நிலையில நிபுணர் குழுவின் அறிக்கையை அடிப்படையாக வைத்து பல்வேறு செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இது பொதுமக்களை பாரிய அளவில் குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்ந நிலையில் பொதுமக்களின் சுகாதார விடயங்களில் அக்கறையுடன் செயற்பட்டு வரும் அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கமானது 27.03.2015 அன்று இவ்விடயம் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு விசேட கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தது. அதில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

2012ம் ஆண்டு முதல் 2014 ம் ஆண்டு வரை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் நடாத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளில் சுன்னாகம் பிரதேசத்தில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் மாசானது குடிநீரிற்கான நியம அளவினை விடவும் பல மடங்கு அதிகளவில் காணப்பட்டது. மேலும் மனித உடலிற்குப் பாரிய தீங்குகளை ஏற்படுத்தும் பார உலோகங்களும் சில கிணறுகளில் கண்டு பிடிக்கப்பட்டன. ஆனால் அண்மையில் நிபுணர் குழுவினரின் முறையான முழுமையான ஆய்வுகள் முடிவடையும் முன்னரே வெளியிடப்பட்ட அறிக்கையில் குடிநீரில் மாசுகள் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளமையானது விஞ்ஞான ரீதியாக குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.

நிபுணர் குழுவினரால் நடமாடும் சிறிய இயந்திரம் மூலம் நடாத்தப்பட்ட பரிசோதனை மாதிரிகள் எந்தப் பிரதேசத்தில் எந்தக் கிணறுகளில் எடுக்கப்பட்டன என்பது அப்பிரதேச சுகாதார அதிகாரிகள் அறிந்திருக்கவில்லை. நீர் வழங்கல் அதிகாரசபையினரின் ஆய்வின் மாதிரி எண்ணிக்கையை விடவும் மிகக் குறைந்த அளவிலான மாதிரிகளே இப்பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளன.

2012ம் ஆண்டின் ஆய்வின் முடிவுகளின் படி குடிநீரில் உண்மையில் மாசுக்கள் கலந்திருக்குமாயின் அது மக்களுக்கு பாரிய சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடும். சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள், புற்று நோய், மலட்டுத்தன்மை, பிறப்புக் குறைபாடுடைய குழந்தைகள் பிறத்தல் என்பன அவற்றுள் சிலவாகும். குடிநீரின் மாசு தொடர்பாக சந்தேகம் உள்ள நிலையில் பாரதூரமான சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடடிய அவ்வகையான குடிநீரை பொதுமக்கள் குடிக்கவோ சமைக்கவோ பயன்படுத்த வேண்டாம் என அரச வைத்தியர்களாகிய நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

இப்பிரச்சினை தொடர்பாக உரிய அதிகாரிகளால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் நம்பகத் தன்மையானது எமக்குத் தருப்திகரமானதாக இருக்கவில்லை. எனவே எதிர்வரும் காலங்களில் பிரதேசத்தில் நடாத்தப்படும் ஆராய்ச்சிகளை அவற்றின் முக்கியத்துவம் மற்றும் நம்பகத் தன்மையைக் கருத்தில் கொண்டு பிரதேச வைத்திய அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்துமாறும் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம். மேலும் ஆய்வுகளானது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய முறையிலும் உலக சுகாதார நிறுவனத்தினரின் நியமங்களிற்கு அமைவாகவும் தொடர்ச்சியான முறையில் நடைபெற்றதன் பின்னரே அது தொடர்பான அறிக்கைகள் வெளியிடப்படவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

மேலும் பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பது தொடர்பாகவும் தவறான தகவல்களால் மக்கள் தீங்கு விளைவிக்கும் குடிநீரை அருந்துவதைத் தடுப்பது தொடர்பாகவும் அரச வைத்தியர்களாகிய நாம் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். பொது மக்கள் மருத்துவ ரீதியாக தொடர்ந்து பாதிக்கப்பட்டு அதற்கு உரிய அதிகாரிகள் நம்பகத் தன்மையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறும் பட்சத்தில் நாம் பாரிய அளவிலான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குத் தள்ளப்படக் கூடும் என்பதனை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோமென தெரிவிக்கப்பட்டு;ள்ளது.

report.jpg

http://www.pathivu.com/news/38818/57//d,article_full.aspx

மூலம்: http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/118130/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு ஐங்கரநேசன் மற்ரும் திரு சத்தியலிங்கம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்,

 

அண்மையில் ஜப்பானின் புஹுசீமா பகுதியில் நடந்த சுனாமி அனர்த்ததின் பின்னர் ஜப்பானிய மக்கள் அக்கடற்க்கரைப்பகுதியில் பிடிக்கப்படும் மீன்களை உண்பதை நிறுத்திவிட்டார்கள், அதன்காரணமாக ஜப்பானியப்பிரதமர் அக்கடற்கரைப்பகுதியில் பிடிக்கப்பட்ட மீனை தானே உணவாக உண்டு மக்களது பயத்தினை நீக்கியதுமட்டுமில்லாது அப்பகுதியில் வாழும் மீனவர்களது பிரச்சனையையும் முடிவுக்குக்கொண்டுவந்தார்.

 

 

 மேற்குறிப்பிட்டது செய்தி,

 

இப்போது உங்கள் இருவருக்கும் சவால் விடுகிறேன் ஏழாலை வடக்கில் எனது குடியிருப்பை ஒதுக்கி நீங்கள் வாழ்வதற்காக அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்கிறேன், முடியுமாகவிருந்தால் அங்குவந்து ஒருவாரம் தங்கியிருந்து எனது வளவின் கிணத்துநீரில் குளித்து முகம்கழுவி, அக்கிணற்றுநீரில் சமையல் செய்து அதையே குடிநீராகப்பயன்படுத்தி எமது அச்சத்தைப் போகச்செய்ய முடியுமா?

 

இங்கு கூத்தமைப்புக்காக வக்காலத்துவாங்கும் அவர்களது அடிப்பொடிகளே இச்செய்தியை அவர்களுக்குச் சொல்லமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவை வரமாட்டினம் இளகின இரும்பு எங்கு உள்ளதோ அங்குதான் கூட்டமைப்பின் வாலுகள் நிற்பினம், சுமன்திரனை லண்டன் கொண்டு வருவன் எண்டு சொன்ன கனடா வாலு இப்ப அடக்கி வாசிக்குது.ஐங்கரநேசன் நான் நம்பி இருந்த ஆள் பிழை என  வரும்போது தெளிவு படுத்த வேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை இதை இதைத்தான் இவ்வளவு காலமும் நான் எதிர்பார்த்தன். இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் நான் வேறொரு திரியில் எழுதியதை இங்கு மீண்டும் பதிவிடுகிறேன்: தண்ணீரை மனிதன் குடிப்பதற்கு பயன்படுத்துவதாயின் அதில் எவ்வித எண்ணெய் பொருளும் கலந்திருப்பது சர்வதேச நியமங்களில் ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லை. வேண்டுமானால் உலக சுகாதார மையத்தின் குடிதண்ணீர் தர நியமத்தை (WHO standardisation for drinking water) இதற்கு ஆதாரம் காட்டலாம். இருப்பினும் முன்னேறிய நாடுகள் தத்தமது தரத்துக்கு ஏற்ப இந்த நியமங்களை மீள் பரிசீலித்து மேம்படுத்தி பாவனை செய்து வருவது வழக்கம். குடிநீரில் எண்ணெய் கலந்து இருப்பின் அது நீண்டகால தாமத சுகாதார கேடுகள் (long term and delayed health hazards) தமிழினத்துக்கு ஏற்படுத்தும் சாத்திய கூறுகள் அதிகம் உண்டு. எண்ணையின் அளவை இலங்கை அரசு லிட்டருக்கு 1 மி.கி இல் இருந்து 2 மி. கி உயர்த்தியதாக நிபுணர்குழு தனது அறிக்கையில் தெரிவித்தபோது எமது புத்திஜீவி விவசாய அமைச்சர் ஐந்கரநேசனும் அங்குதான் இருந்தார். எண்ணெய் பொருட்கள் தண்ணீரில் லிட்டருக்கு 0,001 மில்லி கிராம் இருந்தாலே அது அதிகம் என்று உலகம் சொல்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுஞாயிறு விடுத்திருக்கும் சவால் வரவேற்புக்குரியது. ஜனநாயக விழுமியங்களை வலுவடையச்செய்யும்.

கூடவே இதில் முதல்வரின் நிலைப்பாடு என்ன?

ஐங்கரநேசன் பொதுவாக ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் அவரே இப்படி ஏன் பல்டி அடிக்கிறார்?

அல்லது அவர்கள் சொல்லுவதுதான் உண்மையா ?

Link to comment
Share on other sites

யாரைத்தான் நம்புவதோ ஏழை ( தமிழர் ) நெஞ்சம் .

யாரைத்தான் நம்புவதோ ஏழை ( தமிழர் ) நெஞ்சம் .

Link to comment
Share on other sites

பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தான் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள். ஐங்கரநேசன் அல்ல. 
 
அதேநேரம் ஜனவரி பெப்பிரவரி மாதங்களில் மாரியில் பெய்த மழைகாரணமாக நிலக்கீழ் நீர் அதிகளவில் காணப்படும். இதுவும் மாசுக்களின் செறிவை மிக மிக அதிகமாகக் குறைத்து விடலாம். இந்த நிபந்தனையையும் ஆய்வாளர்கள் கருத்தில் எடுத்தார்களா தெரியவில்லை.
 
இது சம்பந்தமாக மேலும் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்பது அவசியம். குறிப்பாக கோடை காலப்பகுதியில். 
 
யாழ் மருத்துவர்கள் ஆய்வின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் படி தான் கேட்கிறார்கள். 
 
செய்தியின் பிரகாரம் ஐங்கரநேசன் எந்த இடத்தில் வருகிறார் என்பது புரியவில்லை.    :huh:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல நீரோ கெட்ட நீரோ கிடைக்கின்ற நீரைத்தானே சனங்கள் பயன்படுத்தமுடியும்? இல்லாவிட்டால் தண்ணீர் தேவைக்கு போத்தல் வாங்கி பயன்படுத்த எல்லாருக்கும் வசதிகள் உள்ளதா? பல்வேறு தேவைகளிற்கு அந்த தேவைகளை பொறுத்து தண்ணீரை துப்பரவு செய்து பயன்படுத்தும் வழிவகைகள் பற்றி ஆராயவேண்டும். குடிப்பதற்கு, சமைப்பதற்கு தேவையான நீரை தாங்கிகளில் தினமும் மக்களிற்கு சப்ளை செய்யலாம். குளிப்பதற்கு, கழுவல், துவையலுக்கும் இந்த நீரினால் பிரச்சனை வருகின்றதா? தோலில் அழற்சி ஏதும் ஏற்படும் என்றால் குளிப்பதற்கும் குறிப்பிட்ட நீரை பயன்படுத்த முடியாது. கால்நடைகள், விவசாயத்துக்கு நீருக்கு எங்கே போவது? நீரை பாரிய அளவில் துப்பவரவு செய்து பயன்படுத்தும் முறை அல்லது உபகரணங்கள் தேவை. இது எல்லாம் போரினால் அழிந்த, பொருளாதார கட்டமைப்புக்கள் நிலைகுழைந்த பூமியில் இப்போது சாத்தியமா? மக்கள் பிரதேசங்களில் அடாவடியாய் நிலைகொண்டுள்ள சொறி லங்காவின் படைத்தரப்பினர் எவ்வண்ணம் தமது தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கின்றார்கள்? இவர்கள் இதுபற்றி ஏதும் அக்கறைகாட்டி, தமது ஆய்வுகள் எதையாவத் மேற்கொண்டு உள்ளார்களா? ஏன் என்றால் சொறி லங்காவில் தமிழ் மக்களை விட படைத்தரப்பின் சுகவாழ்வில் அதிக கவனம் செலுத்தப்படுவதால் படைத்தரப்பு பயன்படுத்தும் நீர் நல்ல நீராக அதிக கவனத்தை அரசு செலுத்தி இருக்கும்.

Link to comment
Share on other sites

”அம்பலமாகின்றது ஜங்கரநேசன்,சத்தியலிங்கம் தகிடுதங்கள்”

இந்த அநாகரீகமான வார்த்தைப் பிரயோகத்தை நீக்கிவிடுமாறு யாழ் இணையத்திடம் கேட்டுக்கொள்கிறேன். 

0000நாட்டில் மிகுந்த நெருக்கடிகளூக்குள் பணிபுரிகிர்aவர்களோடு பண்பொடு கலந்துரையாடுவது பிழைகள் என கருதுபவற்றை சுட்டிக்காட்டி விளக்கம் கேட்பது நியாயமானது,புலம்பெயர்ந்த நாடுகளீல் வாழும் எமக்கு அவர்களைக் கொச்சைப்படுத்த உரிமை யார் தந்தது?. 

என் மதிப்புக்குரிய எழுஞாயிறு செய்தியின் கொச்சைப் படுத்தலை கண்டித்துவிட்டு தனது கேழ்வியை முன்வைதிருக்கவேணும்.

Link to comment
Share on other sites

பதிவு தளத்தில் இருந்து இணைக்கப்பட்ட செய்தியின் உள்ளடக்கத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எவரையும் நேரடியாகக் குற்றம் சுமத்தவில்லை என்பதால் தவறான பார்வையைத் தரும் தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.

அத்துடன் செய்தியின் மூலமான உலக தமிழ்ச் செய்திகள் தளத்தின் நேரடி இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

திரு ஐங்கரநேசன் மற்ரும் திரு சத்தியலிங்கம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்,

 

இப்போது உங்கள் இருவருக்கும் சவால் விடுகிறேன் ஏழாலை வடக்கில் எனது குடியிருப்பை ஒதுக்கி நீங்கள் வாழ்வதற்காக அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்கிறேன், முடியுமாகவிருந்தால் அங்குவந்து ஒருவாரம் தங்கியிருந்து எனது வளவின் கிணத்துநீரில் குளித்து முகம்கழுவி, அக்கிணற்றுநீரில் சமையல் செய்து அதையே குடிநீராகப்பயன்படுத்தி எமது அச்சத்தைப் போகச்செய்ய முடியுமா?

 

இங்கு கூத்தமைப்புக்காக வக்காலத்துவாங்கும் அவர்களது அடிப்பொடிகளே இச்செய்தியை அவர்களுக்குச் சொல்லமுடியுமா?

 

எழுஞாறு   Hats off
 
நியாயமான உங்கள் கேள்வியை உங்களுக்கு யாராவது ஊடகவியலாளர்களைத் தெரிந்திருந்தால் அனுப்பி விடுங்கள். இக்கேள்வி நிச்சயமாக கேட்கப்பட வேண்டியது. இதை யாழ்களத்தில் விவாதிப்பதை விட ஊடகவியலாளர் சந்திப்பில் விவாதிப்பதே சரி.
 
கள உறவுகளிற்கு ஊடகவியலாளர் தொடர்பு இருப்பின் இக்கேள்வியை அனுப்பி விடவும்.
 
பதிவிற்கு நன்றி.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.