Jump to content

நல்லவனாக இருப்பதால் எனக்கு இடையூறு செய்கிறார்கள் : கமல்ஹாசன் ஸ்பெஷல் பேட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவனாக இருப்பதால் எனக்கு இடையூறு செய்கிறார்கள் : கமல்ஹாசன் ஸ்பெஷல் பேட்டி

kamal-press-meet.jpg

உச்சி வெயில் மண்டையைப் பிளக்க நிருபர்களை தனது ‘உத்தம வில்லன்’ படத்துக்காக சந்தித்தார் நடிகர் கமல். ‘உத்தம வில்லன்’ எப்படிப்பட்ட படம்? கே.பாலச்சந்தர் உடனான நினைவுகள், லிங்கா பிரச்சனையில் ரஜினி நடந்து கொண்ட விதம் என பல விஷயங்களை மனம் திறந்து பேசிய கமல் சென்சார் போர்டின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்க வகையில் இருக்கிறது என்று ஆதங்கப்பட்டார்.

இதோ இனி கமல் உங்களோடு பேசுவார்

‘உத்தம வில்லன்’ உங்களுடைய சொந்தக் கதையா? இதில் யார் உத்தமன் யார் வில்லன்?

இது ஒரு நட்சத்திர நடிகனின் கதை. என்னுடைய எல்லா படங்களிலும் எனது வாழ்க்கையின் ஒரு சிறு பகுதி இருக்கும். ஜெயகாந்தன் எழுதிய எல்லா கதைகளிலும் அவருடைய ஒரு பகுதி இருக்கத்தான் செய்யும். அது எங்கே, எப்படி என்பதுகூட நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும். இப்படத்தை எந்த இந்திய நடிகர் பார்த்தாலும் அவர் தனது வாழ்வை ஒப்பிட்டுக் கொள்ள முடியும். மற்றபடி, இது சினிமாவை கிண்டல் செய்து எடுக்கப்பட்ட படமில்லை. ஒரு நடிகனின் வாழ்க்கை அவ்வளவு தான்.

உத்தமன் வில்லன் ரெண்டுமே ஒரே ஆள் தான். வில்லன் என்ற வார்த்தையை ஆங்கிலச் சொல்லாகவே எடுத்துக் கொள்கிறோம். வில்லன் என்பது தமிழ்ச்சொல்லும் கூடத்தான். வில்லுக்கு விஜயன் என்று சொல்வோமே அந்தமாதிரி. வில்லுப்பாட்டு இப்படத்தில் ஒரு சிறுபகுதியாக இடம்பெற்று இருக்கிறது. இரண்டு காலகட்டத்தில் நடக்கும் கதையை இணைப்பது கே.பி சார் தான் என்று வைத்துக் கொள்ளலாம். முன் ஜென்மம் கதையெல்லாம் இப்படத்தில் இல்லை.

நீங்களே ஒரு இயக்குனராக இருக்கும் போது ஏன் கதை, திரைக்கதை மட்டும் நீங்கள் எழுதிவிட்டு இயக்குனராக ரமேஷ் அரவிந்த்தை போட்டீர்கள்?

அதற்கு காரணம் நாங்கள் இரண்டு பேருமே ஒரே குருவிடம் சிஷ்யர்களாக இருந்தவர்கள். இருவருமே ரொம்ப நாளாக படம் பண்ண வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நிறைய கதைகள் பேசும்போது அவர் தேர்ந்தெடுத்த கதை இது. என்னிடம் எப்போதுமே 30 கதைகள் வைத்திருப்பேன். என்னிடம் நீங்கள் செய்ய நினைக்கும் பாத்திரம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்கும்போது எனக்கு சிரிப்புத் தான் வரும். கதையே 30 வைத்திருக்கிறேன். அதே மாதிரி ரமேஷ் அரவிந்திடம் நிறைய கதைகள் பேசும்போது, அவர் இது நல்லாயிருக்கும் என்று தேர்ந்தெடுத்தார். அவரது தேர்வு எனக்கு பிடித்திருந்தது, அது தவிர எனக்கும் இப்படத்தில் வேறு வேலைகள் இருந்தது.

ரமேஷ் அரவிந்த் என்னுடன் பல கதை விவாதங்களில் கலந்து கொண்டவர். அதை அவரது சொந்த பயிற்சியாக எடுத்துக் கொண்டிருக்கிறார். ‘தசாவதாரம்’, ‘விருமாண்டி’ இப்படி பல கதைகள் அவருக்கு தெரியும். ஏனென்றால் வேறு ஒருவர் பார்த்து குற்றம் கண்டுபிடிப்பதற்கு முன்னால், பாசமாக இருக்கும் ஒருவர் குற்றம் கண்டுபிடித்தால் தவறில்லை. என்னிடம் இருக்கும் 30 கதைகளில் 20 கதைகள் ரமேஷ் அரவிந்திற்கு தெரியும். நீங்கள் இப்படத்தை இயக்குங்கள் என்று சொன்னபோது வியப்பு ஏதுமில்லை, சந்தோஷம் இருந்தது. என்றைக்காவது ஒரு நாள் நான் சொல்வேன் என்பது அவருக்கு தெரியும்.

கே.பாலசந்தரின் கடைசிப் படத்தை நாம் இயக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கிறதா?

கே.பாலசந்தரை நான் இயக்கவில்லை என்று நான் வருத்தமடையவில்லை. இதை பல இயக்குநர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். நான் பாலசந்தருடைய பள்ளியில் பயின்றவன். பல சமயங்களில் தன்னுடைய உதவி இயக்குநரைக் கூட இயக்க விட்டுவிடுவார். அந்த மாதிரி நிறைய நேரம் அனுபவித்தவன் நான். ஏண்டா அவன் ரெண்டு பொருளை தூக்கிட்டு வர்றானே? அதுல ஒண்ணை நீ வாங்கிட்டு வாடாம்பார். எங்கே அவர் வாங்கிவிடக் கூடாதே என்று நான் தூக்கி கொள்வேன். இந்த மாதிரி நான் வியந்த விஷயங்கள் நிறைய இருக்கிறது. ஆகையால், நான் இயக்கவில்லை என்ற வருத்தம் எல்லாம் இல்லை.

”நான் சொந்தமாக பட நிறுவனம் ஆரம்பித்தபோது, அதன் முதல் படத்தை இயக்கும் பொறுப்பை கே.பி ஏற்க வேண்டும் என்று கேட்டேன். உடனே அவர், எல்டாம்ஸ் ரோட்டிலுள்ள என் வீட்டுக்கு வந்து அட்வான்ஸ் தொகைக்கான செக் வாங்கிக்கொண்டு சென்றார். நானே உங்கள் வீட்டுக்கு வந்து தருகிறேன் என்று சொன்னபோது, அதை ஏற்றுக்கொள்ள மறுத்த ஜாம்பவான் அவர். ஆனால், கடைசிவரை அவர் என் நிறுவனத்துக்கு படம் இயக்கும் வாய்ப்பு அமையவில்லை. அதுபோல், ‘ராஜபார்வை’ படத்தில் நடிப்பதற்காக சாவித்திரிக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். ஏனோ அந்த சந்தர்ப்பமும் அமையவில்லை.

திரையுலகில் நான் இந்தளவு வளர்ந்திருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் கே.பி மட்டும்தான். நான் முதன்முதலாக அவரை சந்தித்தது ஞாபகத்தில் இருக்கிறது. ஒருமுறை அவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. உதவி இயக்குனராகத்தான் சேர்த்துக்கொள்ளப் போகிறார் என்று, எல்டாம்ஸ் ரோட்டில் இருந்து வாடகை சைக்கிளில் அவர் வீட்டுக்கு சென்றேன். அதற்கு முன் என் தாயார், ‘போறதுதான் போற… கையில் ஒரு போட்டோவை எடுத்துக்கிட்டு போடா’ என்றார். அவர் எதிர்பார்த்தது என்னவென்றால், பாலசந்தர் என்னை நடிக்க வைக்கப் போகிறார் என்று.

ஆனால் நான் போட்டோ எடுக்க மறுத்து விட்டேன். உடனே அம்மா, வலுக்கட்டாயமாக ஒரு போட்டோவை என் கையில் திணித்தார். அதை வேண்டாவெறுப்பாக என் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன். அப்போது நான் மிகவும் இறுக்கமான பேண்ட், சர்ட் அணிவேன். பேண்ட்டில் பாக்கெட் கிடையாது. அதனால், கிடைத்த இடத்தில் அந்த போட்டோவை நான்காக, எட்டாக மடித்து வைத்துக்கொண்டு, கடுமையான வெயிலில் வியர்க்க, விறுவிறுக்க வாடகை சைக்கிளில் பாலசந்தர் வீட்டுக்கு சென்றேன். என்னைப் பார்த்த அவர், ‘போட்டோ எடுத்துக்கிட்டு வந்தியா?’ என்று கேட்டார். அப்போது என் அம்மாவை மனதிற்குள் திட்டினேன். மடங்கி கசங்கிப் போயிருந்த போட்டோவை பாலசந்தரிடம் கொடுத்தேன்.

என்னை உதவி இயக்குனராக தேர்வு செய்யாத அவர், திடீரென்று நடிகனாக்கி விட்டார். அந்த போட்டோவில் இரண்டு கைகளையும் பலசாலி போல் தூக்கியபடி போஸ் கொடுத்திருப்பேன். அதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டோ என்னவோ, அவர் இயக்கிய ‘அரங்கேற்றம்’ படத்தில், அதுபோல் நான் போஸ் கொடுத்து நடித்த ஒரு காட்சியைப் படமாக்கினார். பாலசந்தர் இல்லை என்றால், கமல்ஹாசன் இல்லை. அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, ‘உத்தம வில்லன்’ படத்தில் அவரை நடிக்க வைத்திருக்கிறோம்.

இவ்வளவு நாளும் ஏன் கே.பி சாரை நடிக்க கூப்பிடவில்லை?

நான் ரொம்ப நாளாக கேட்டுக் கொண்டு தான் இருந்தேன். மாட்டேன் மாட்டேன் என்று அவர் தான் விலகிப் போய் கொண்டிருந்தார். நான், சிவாஜி, பாலசந்தர் மூவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்று நண்பர் பிரதாப் போத்தனிடம் இருந்து ஒரு டைட்டிலை எல்லாம் வாங்கி வைத்திருந்தேன். கடைசியில் அந்தப்படம் நடக்காமலே போய் விட்டது. பிறகு அந்த டைட்டிலில் பாலா படமெடுத்தார். அதுதான் ‘பிதாமகன்’. முன்பெல்லாம் அவர் வேண்டாம் என்று சொன்னால் பதில் பேசாமல் போய் விடுவேன். ஆனால் இந்த முறை அவரை நடிக்கக் கூப்பிட்ட போது வீம்பு பிடித்து, நடித்தே ஆக வேண்டும் என்றேன். அதட்டி சொன்னால் பதில் பேசாமல் வந்துவிடுவேன். இந்த முறை வாதாடி செய்ததால் நடித்துக் கொடுத்தார். நல்லவேளையாக நான் வீம்பு பிடித்தேன்.

நீங்கள் பார்த்த படங்களும், படித்த இலக்கியங்களின் பாதிப்பும் உத்தம வில்லன் படத்தில் இருக்கிறதா? இந்தக் கதை எதன் இன்ஸ்பிரேஷன்?

என்னுடைய எல்லா படங்களுமே நான் பார்த்த படங்களின் சாயலும், கேள்விப்பட்ட படங்களின் சாயலும் தான். நான் வந்து ஒரிஜினல் ஆள் கிடையாது. நான் என் அம்மா அப்பா மாதிரி இருக்கிறேன் என்று சொன்னாலே நான் ஒரிஜினலாக இல்லை என்று தானே அர்த்தம். என் நண்பர்கள் நல்லவார்த்தைகள் பேசும்போதும் கெட்டவார்த்தைகள் பேசும் போதும் அதை நானும் பின்பற்றுகிறேன். உங்களைப் போல நானும் ஒருவன் தான். சிரிப்பதா, அழுவதா தெரியவில்லை என்பார்கள் இல்லையா. அப்படி ஒரு ஆள் தான் ‘உத்தம வில்லன்’. இப்படத்தில் என்ன இல்லைவெல்லாம் இல்லை என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். அதாவது கார்கள் தலைக்குப்புற விழுந்து வெடிப்பதும், ஒருவர் மீது ஒருவர் கால் கொண்டு பலமாக தாக்குவதும், மூன்று குட்டிக்கரணங்கள் அடிப்பதும் இதில் கிடையாது. இந்தப்படம் வன்முறை அற்ற ஒரு படமாக வாய்த்துவிட்டது.

நீங்கள் என்ன படம் எடுத்தாலும் அதற்கு இடையூறு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறதே?

உண்மைதான். ‘பாபநாசம்’ படத்தின் கதை என்னுடைய கதை என்று ஒருவர் வழக்கு தொடுத்தார். இப்போது வரைக்கும் அவர் எழுந்து நிற்கவில்லை. எங்கிருந்து வந்து கேஸ் கொடுத்தார், எதற்காக கொடுத்தார், எல்லாமே தெரியும். அதேபோல தான் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ பெயர் வைக்கக்கூடாது என்றார்கள். ரயில்வே நிலையத்தில் செய்ய வேண்டிய விஷயத்தை படத்தில் செய்ய சொன்னார்கள். விரைவு வண்டி என்று யாரும் சொல்வது இல்லையே. மும்பைக்கு எப்படி தமிழ் பெயர் கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை. அதே போல பல விஷயங்கள் இருக்கிறது. அதேபோல சண்டியர் படம் எடுத்தபோது பிரச்சனை செய்தார்கள். அதே பெயரில் சமீபத்தில் ஒரு படம் வந்தபோது அமைதியாக இருந்தார்கள். ஒருவேளை இந்த வண்டி நல்லவண்டி என்பதால் டிக்கெட்டே எடுக்காமல் ஓசியில் பயணம் செய்ய ஆசைப்படுகிறார்கள் போல…

சமீபகாலமாக தணிக்கைக் குழுவின் தலையீடு படங்களில் அதிகரித்து விட்டது. இது ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தை பறிப்பது போல் ஆகி விடாதா?

உண்மை தான். இப்போதுள்ள தணிக்கை குழு ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தை தேசம் முழுவதும் பாதிக்கும் அளவிற்கு தணிக்கை குழுவாக இருக்கிறது. அது வெறும் சான்றிதழ் அளிக்கக் கூடிய குழு தான். ஆனால் அதையும் தாண்டி சில விஷயங்களை செய்கிறார்கள். அது வன்மையாக கண்டிக்க கூடிய ஒரு விஷயம். நீ யார் கண்டிப்பது என்று கேட்டால், நான் கலைஞன். நான் ஒரு விஷயத்தைச் சொல்லத் துடிப்பவன். மொழியும், கலையும் என் கைவசம். அதைச் சொல்ல உரிமையும், கடமையும் எனக்கு இருக்கிறது. மீண்டும் ஒரு பிரிட்டிஷ் ஆட்சி போல, என்ன சொல்ல இருக்கிறேன் என்பதை எழுதி காட்டிவிட்டு முத்திரை வாங்கிக் கொண்டு படம் எடுக்கும் அவசியம் என் பேச்சு சுதந்திரத்தில் கால் பதித்து விட்டதாக நான் நினைக்கிறேன்.

‘மருதநாயகம்’ எடுக்கப்போவதாக செய்திகள் வருகிறதே?

ஆமாம் என் நண்பர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களை எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறேன். இது தமிழ்ப்படம் அல்ல. ஒரு ஆங்கிலப்படத்துக்கு நிகரான தமழிப்படம். இந்தப் படம் எவ்வளவு பெரியது என்றும் கூறியிருக்கிறேன். உலகப் படம், ஆங்கிலப் படம், பிரெஞ்சு படம் என்றெல்லாம் நினைவில் கொள்ளும்படி கூறியிருக்கிறேன்.

‘உத்தம வில்லன்‘, ‘பாபநாசம்‘, ‘விஸ்வரூபம் 2′ என தொடர்ச்சியாக உங்களது படங்கள் வெளிவர இருக்கிறதே?

விஸ்வரூபம் படத்துக்குப் பிறகு நான் இடைவெளி விட்டதால் நிறைய படங்கள் சேர்ந்து விட்டது. என்னால் சும்மா இருக்க முடியாது. எனக்கு இருக்கும் கால நேரத்தை கணக்கில் கொண்டு ஏதாவது செய்து கொண்டே இருப்பேன். ரசிகர்கள் இருக்கிறார்கள், ஆசை இருக்கிறது, திறமை ஓரளவிற்கு இருக்கிறது என்பதால் களத்தில் இறங்கி விட்டேன். இப்போது ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ முடியும் தருவாயில் இருக்கிறது. ‘விஸ்வரூபம் 2′ அதற்குப் பிறகு வரும். அதுக்கு மேலும் ஆஸ்கார் பிலிம்ஸ் தாமதித்தால் இன்னொரு புதிய படம் வரும்.

சினிமா கலையா? வியாபாரமா?

அது என்னைப் போன்ற கலைஞனுக்கு கலை. ஒரு தயாரிப்பாளருக்கு அது வியாபாரம் தான்.

அப்படியானால் ஒரு படம் தோல்வி அடையும் பட்சத்தில், அந்த நஷ்டத்தை விநியோகஸ்தர்கள் பணத்தை திருப்பி கேட்பது பற்றி உங்களது கருத்து?

யாருக்குத் தான் பண ஆசை இல்லை. உங்களுக்கு எனக்கு எல்லோருக்குமே இருக்கிறது. ரஜினியைப் பொருத்தவரை அவர் வினியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்திருக்கக் கூடாது. ஆனால் அந்த ஆசை படம் பார்க்கும் ரசிகருக்கும் வந்துவிடக் கூடாது என்பது தான் முக்கியம். நாளைக்கே அவன், பாதி படம் தான் எனக்குப் பிடித்திருக்கிறது. மீதி பிடிக்கவில்லை. அதனால் பாதி காசை திருப்பிக் கொடு என்று கேட்டால் என்ன செய்வது? இப்போது வருகின்ற பெரும்பாலான படங்கள் அப்படித்தான் இருக்கின்றன.

‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்துக்குப் பிறகு இளையராஜாவுடன் நீங்கள் மீண்டும் இணையவில்லை ஏன்?

அவரையும் என்னையும் ஏன் இணையவில்லை என்றெல்லாம் கேட்க முடியாது. ‘சிங்காரவேலன்’ படத்துக்குப் பிறகு ஏன் அவர் என்னை வைத்து படம் எடுப்பதில்லை என்று கேட்பது இருக்கிறது. ஆனால் அவரை தேவைப்படும் சமயங்களில் என் படங்களில் பயன்படுத்த எப்போதுமே தயாராக இருக்கிறேன். அது என் விருப்பமும் கூட.

சேரனின் ‘சி டூ ஹெச்’ உட்பட டிஜிட்டல் சினிமா வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்?

மெத்தனமாக இருந்து விட முடியாது. பல நேரங்களில் ஒப்புக் கொள்ளாமல் போன விஷயங்கள் எல்லாம், இப்போது நினைவில் இல்லாமல் போய்விட்டது. டிஜிட்டல் சினிமாவின் வரவு கிட்டதட்ட 15 வருடங்கள் தாமதமாக வந்திருக்கிறது. ‘அதை வெள்ளைக்காரன் முடிவு பண்றான், நாம எப்படி சார் முடிவு பண்ண முடியும்’ என்று நாம் நினைக்கிறோம். 1000 சினிமாக்கள் உருவாகும் ஒரு மாமல்லன் இந்திய சினிமா. சீன சினிமா இந்த இரண்டு நாட்டு சினிமாக்களும் இணைந்து ஒரு முடிவு எடுத்தால் அதை உலக சினிமா கேட்டுக் கொள்ள வேண்டும். இது தான் வியாபார நிஜம். இதை சீனா புரிந்து கொண்ட அளவிற்குக் கூட இந்தியா புரிந்து கொள்ளவில்லை.

சமீபகாலமாக மாற்றுமொழிப்படங்களை அப்படியே திருடி படமெடுப்பது அதிகமாகி விட்டதே? இது சரியா?

முன்பை விட இப்போது தான் கதை திருட்டு குறைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். முன்பு சுட்டிக் காட்டுவதற்கு நிறைய பேர் இல்லை.

தேங்காயும் கையுமாக காஸினோ தியேட்டருக்குப் போய் தேங்காயை உடைத்து இது என்னுடைய கதை என்று சொன்னவர்களை எனக்குத் தெரியும். ஏனென்றால் அங்கேயே உடைத்து விட்டதால், கதை அவருடையது ஆகிவிடும் என்று எண்ணம். இப்போது இதுவெல்லாம் மாறி, ஒரு சின்ன கர்வம் தமிழனுக்கு வந்திருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது. நல்ல விஷயம் ஒரு ஊரில் இருக்கிறது என்றால், அதை நம்ம ஊருக்கு எடுத்து வருவதில் தப்பில்லை என்று நினைக்கிறேன். எல்லாம் கம்பன் செய்த வேலை தான். என்றார் கமல்.

http://www.soundcameraaction.com/hot-news/kamal-speech-at-uththama-villain-press-meet/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவன் என்பதற்கு கமலிடம் உள்ள வரைவிலக்கணம் என்ன..?! :lol:  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.