Jump to content

மீண்டும் அரசியலுக்கு வருவாரா மகிந்த ராஜபக்ச? – கேணல் ஹரிகரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் அரசியலுக்கு வருவாரா மகிந்த ராஜபக்ச? – கேணல் ஹரிகரன்

col-hariharan-1-300x200.jpeg

மகிந்த ராஜபக்சவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக சுமத்தப்படும் ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் நிரூபிக்கப்படாவிட்டால், ராஜபக்சவை ஆதரிக்கும் 5.8 மில்லியன் வாக்காளர்களும் அவரை ஒரு அதிகாரத்துவ ஆட்சியாளராக நோக்குவதை விட, ஒரு அரசியல் தியாகியாகவே கருதுவார்கள்.

இவ்வாறு, ‘சிலோன் ருடே’ நாளிதழில், இந்திய ஆய்வாளரான ‘கேணல் ஆர்.ஹரிகரன்’ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’.

ஜனவரி 2015ல் இடம்பெற்ற சிறிலங்கா அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, பிரதமராக வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கிறாரா?

சிறிலங்காவில் தற்போது செயற்படும் தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் நகர்வுகளும், ராஜபக்சவுக்கு ஆதரவான அரசியற் சக்திகளின் செயற்பாடுகளையும் விரிவாக நோக்க வேண்டும். சிறிலங்காவின் அரசியற் சூழ்ச்சிகளின் தலைவராக விளங்கும் ராஜபக்ச மீண்டும் பிரதமராகலாம் என்கின்ற சந்தேகம் ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களின் ஊகமாகக் காணப்படுகின்றது.

மகிந்த ராஜபக்ச பத்து நாட்களுக்கு முன்னர் ‘தி ஹிந்து’ ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கூட தான் மீண்டும் அரசியலுக்கு உள்நுழையவுள்ளதாக நேரிடையாகக் கூறவில்லை. இதற்குப் பதிலாகத் தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் மோசடி விசாரணை தொடர்பாக முறைப்பாடு செய்ததன் மூலம் தன்னை ஒரு ‘தியாகியாகச்’ சித்தரிப்பதற்கு இவர் முயற்சி செய்துள்ளார்.

mahinda.jpg

‘நான் இந்த அரசாங்கத்திற்கு எனது ஆதரவை வழங்குகிறேன். ஆனால் அவர்கள் எம்மீது மோசடிக் குற்றச்சாட்டை முன்வைத்து எம்மைச் சிறையிலடைக்க விரும்புகிறார்கள். எங்களுடைய கடவுச்சீட்டுக்களை எவ்வித சாட்சியமுமின்றி எடுத்துள்ளனர். இவ்வாறான ஒரு சூழலில் நான் எவ்வாறு அரசியலிலிருந்து ஓய்வுபெற முடியும்? நான் ஓய்வுபெறப் போகிறேன் என ஒருபோதும் கூறவில்லை. தற்போது நான் ஓய்வெடுக்கிறேன்’ என ராஜபக்ச நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே ஏப்ரல் 2015ல் சிறிலங்காவில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் ராஜபக்ச போட்டியிட விரும்புகிறார் என்பது உறுதியாகிறது.

நிச்சயமாக, ராஜபக்ச மற்றும் அவரது உறவினர்களுக்கு எதிராக நாள்தோறும் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், முன்னாள் அதிபர் தனது தீர்மானத்தை மிக விரைவாக எடுக்க வேண்டியுள்ளார். ராஜபக்சவாலும் அவரது உறவினர்களாலும் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் போன்றன இவர்களின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

ஆனால் இக்குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் நிரூபிக்கப்படாவிட்டால், ராஜபக்சவை ஆதரிக்கும் 5.8 மில்லியன் வாக்காளர்களும் ராஜபக்சவை ஒரு அதிகாரத்துவ ஆட்சியாளராக நோக்குவதை விட இவரைத் தொடர்ந்தும் ஒரு அரசியல் தியாகியாகவே கருதுவார்கள்.

மக்களின் மனநிலையைத் தனக்குச் சாதகமாகத் தக்கவைத்துக் கொள்வதில் ராஜபக்ச மிகவும் எச்சரிக்கையுடன் செயற்படுவது போல் தெரிகிறது. அரசியல் போட்டியில் மீண்டும் குதிப்பதற்கு முன்னர் சிங்கள மக்களின் ஆதரவை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கான நகர்வுகளிலும் ராஜபக்ச ஈடுபடுகிறார்.

இவரது ஆதரவாளர்களாலும் தேசிய சுதந்திர முன்னணி போன்ற சிறிய கட்சிகளாலும் ஒழுங்குசெய்யப்பட்ட இரண்டு ஆர்ப்பாட்டப் பேரணிகள் மிகவும் சிறப்பாக நடந்தேறின. இப்பேரணியில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ராஜபக்ச பொதுத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் ஆட்சிப்பீடத்தில் அமரவேண்டும் என உந்துதலளிப்பதாகக் காணப்பட்டது.

ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என சிறிய கட்சிகள் விரும்புவதில் தனிப்பட்ட நலன் உள்ளடங்கியுள்ளது. இவர் மீண்டும் ஆட்சியைப் பிடிக்காவிட்டால் தேசிய சுதந்திர முன்னணி, தொழிற்கட்சி மற்றும் மகாஜன எக்சத் பெரமுன போன்ற கட்சிகள் அரசியலிலிருந்து விலக வேண்டிய நிலையேற்படலாம். ஏனெனில் இவை அனைத்தும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பல்வேறு நலன்களைப் பெற்றிருந்தன.

ராஜபக்சவோ அல்லது இவரால் பல ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியோ ஆர்ப்பாட்டப் பேரணிகளில் பங்கெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவ்விரு ஆர்ப்பாட்டப் பேரணிகளும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவில் தலைமையிலேயே மேற்கொள்ளப்பட்டது.

பொய்யான காரணத்தை முன்வைத்து விமல் வீரவன்சவின் மனைவியார் இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் தற்போதைய சிறிலங்கா அரசாங்கத்தைத் தனிப்பட்ட ரீதியில் விமல் வீரவன்ச எதிர்த்து நிற்கிறார். இதனால் இவர் ராஜபக்சவுடன் இணைந்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.

ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால் மூன்று முக்கிய விடயங்களைத் தாம் இழந்து விடுவோமோ என சிங்கள மக்களும் அரசியற் கட்சிகள் சிலவும் கருதுகின்றன.

ராஜபக்ச இல்லாதவிடத்து அரசியல் நிலைத்தன்மை பாதிக்கப்படும் எனவும், நாட்டில் தொழில்வாய்ப்பு மற்றும் அபிவிருத்தி வாய்ப்புக்களை வழங்கும் சீனாவின் பாரிய திட்டங்கள் தடைப்படலாம் எனவும் புலிகள் மீண்டும் தலையெடுக்கலாம் எனவும் சிங்கள மக்களும் அரசியற் கட்சிகள் சிலவும் அச்சம் கொள்கின்றன.

இப்பரப்புரையில் இடதுசாரிக் கட்சிகளின் பங்களிப்பானது சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை தடுப்பதற்கான ஒரு பயனுள்ள விடயமாகக் காணப்படலாம்.

19வது திருத்தச் சட்டத்தின் முக்கியத்துவத்தை சிறிலங்கா அரசாங்கம் அரசியல் யாப்பில் அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்த போது இதில் நாடாளுமன்றின் பிரதான எதிர்க்கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் கலந்துகொண்டது. 19வது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றில் முன்வைப்பதன் மூலம் இதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான சிறிசேனவின் தந்திரோபாய நகர்வாக இது இருக்கலாம்.

தற்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு சிறிசேன தலைமை தாங்குகின்ற போதிலும், கட்சிக்குள் உள்ள ராஜபக்சவின் ஆதரவாளர்களின் நகர்வுகளை முறியடித்து ராஜபக்சவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் தடைப்படுத்தி ராஜபக்சவுக்கும் அவரது உறவினர்களுக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தண்டனை வழங்குவதை நோக்காகக் கொண்டிருக்கலாம்.

19வது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றின் ஊடாக அரசியல் யாப்பில் இணைப்பதற்கான முயற்சிகளை தேசிய ஐக்கிய அரசாங்கம் விரைந்து முன்னெடுப்பதானது ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்கான நகர்வாகும். ராஜபக்சவுக்கு எதிராக சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட தேர்தல் பரப்புரையின் போது நிறைவேற்று அதிகார முறைமை நீக்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது தேர்தல் ஆணையம், சுயாதீன காவற்துறை ஆணையம், பொதுச்சேவைகள் ஆணையம், அரசியல் சீர்திருத்தப் பேரவை போன்ற ஆணைக்குழுக்களை மீளவும் நிறுவுவதன் மூலம் நிறைவேற்று அதிபர் கொண்டுள்ள முக்கிய அதிகாரங்களைக் குறைப்பதற்காகவே 19வது திருத்தச் சட்டம் தொடர்பாக ஆராயப்படுகிறது.

நிறைவேற்று அதிபர் முறைமையை ஒழிப்பதற்கான ஒப்புதலை நாடாளுமன்றம் வழங்கியிருந்தாலும் கூட, இந்த விடயத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வலதுசாரி ஜாதிக ஹெல உறுமய நிறைவேற்று அதிபர் முறைமையை ஒழிப்பதை எதிர்த்து நிற்கிறது.

எனினும், சிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்ற பின்னர் அமைக்கப்படும் புதிய நாடாளுமன்றின் கீழ் மேலும் முழுமையான அரசியல் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கொழும்பிலிருந்து வெளிவரும் ‘டெய்லி நியூஸ்’ ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.

ஆகவே ராஜபக்ச அரசியற் களத்தில் இறங்குவதற்கு முன்னர் நன்றாக ‘ஓய்வெடுக்கின்ற போதிலும்’ இவர் சிறிதளவு, ஆனால் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது போலவே தெரிகிறது.

http://www.puthinappalakai.net/2015/03/29/news/4827

Link to comment
Share on other sites

மைத்திரி அரசாங்கம் பதவிக்கு வந்ததே ரோ சி ஐ ஏ இன் தயவினால். 
மைத்திரி ரணிலின் நரி விளையாட்டு நீண்ட நாள் பவுத்த சிங்கள பேரினவாதத்தின் 
முன்னாள் தாக்கு பிடிக்க முடியாது. மகிந்தவை மீண்டும் கொண்டு வருவதற்கு சீனன் 
எதையும்  செய்ய தயார் நிலையில் இருக்கிறான். சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் 
சேர்ந்து ஒற்றுமையாக ஆட்சியமைத்ததாக சரித்திரம் இல்லை. விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர 
பிடுங்கு பாடுகள் ஆரம்பமாகும். மஹிந்த மீண்டும் பாரளுமன்ற தேர்தலில் 
வெற்றியீட்டி பிரதமராகி அதிகாரத்தை கைப்பற்றி சீனனை மீண்டும் வரவழைப்பார். 
இந்தியனின் சில்லறை விளையாட்டுகள் நீண்ட நாட்களுக்கு சீனனுடன் எடு படாது. 
மகிந்தவை முழுமையாக அகற்ற ஒரே ஒருவரால்தான் முடியும். அவர்தான் மகிந்தவை 
இருதடவையும் ஜனாதிபதியாக்கியவர். அவர் மீண்டும் வரும் வரை மகிந்தவை இந்தியாவின் 
சில்லறை விளையாட்டுகளால் அசைக்க முடியாது. 
ரணில் வந்தால் போர் குற்ற அறிக்கை வெளிவராது. சர்வதேச புலித்தடை நீங்காது. 
ரணிலின் குள்ள நரி விளையாட்டுகளை விட மஹிந்த எவ்வளவோ பெட்டர்.  :D  :icon_idea:
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.