Jump to content

 அரசியலுக்குள் பலியாகமாட்டேன்: சிறிதரன் எம்.பி


Recommended Posts

article_1427436335-Sritharan.JPG

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டாலும்  அரசியலுக்குள் பலியாக நாங்கள் விரும்பவில்லை. இதனால், பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளின் என்னையும் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரிக்கிறேன் என்று  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வெள்ளிக்கிழமை (27) தெரிவித்தார்.

 

யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றார். அந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு யாழ். மாவட்டச் செயலகம் ஊடாக சிறிதரன் எம்.பி.க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கு தலா 2,000 ரூபாய் பெறுமதியான போஷாக்குப் பொதிகளை வழங்கும் நிகழ்வு, பிரதமர் தலைமையில் சற்றுமுன்னர் நடைபெற்றது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

இருப்பினும், அந்நிகழ்வில், சிறிதரன் எம்.பி கலந்துகொள்ளவில்லை. இது தொடர்பில் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து தொடர்ந்து கூறிய அவர், 'பிரதமர் விக்கிரமசிங்க கலந்துகொள்ளும் எந்தவொரு நிகழ்வுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் நானும் அந்நிகழ்வுகளுக்கு செல்லவில்லை' என்றார்.

 

 http://www.tamilmirror.lk/142760#sthash.6WpaVV41.dpuf

Link to comment
Share on other sites

எங்கள் முதல்வருக்கு மதிப்புத்தராத ஒருவர் அவர் யாராயிருந்தால் என்ன? நாங்கள் மதிப்புத்தர வேண்டுமா..??  நன்றி தமிழ் மகனே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவை இப்ப.. சிங்களவங்க முன்னால.. நல்லா கூனிக்குறுக வெளிக்கிட்டிட்டார். :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணத்தின் முதல் குடி மகனுக்கு அழைப்பு கொடுக்காமால் விட்டத்தின் முக்கிய காரணம்.....ஒற்றையாட்ச்சியை விரும்புகின்றார்கள் என்பதற்க்கு எடுத்துக்காட்டு......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உணர்ச்சி அரசியல் செய்யும் ஒரு புலத்து புலிவலாகத்தான் இவர் இருக்க முடியும்.
இதனால் இவர் சாதித்தது என்ன ???
 
மக்களுக்கு போசாக்கு மா கிடைப்பதை புறனிக்கிறார் 
முன்பு புலிகள் யாழ்தேவியை மறித்தார்கள் ......
இவர் போசாக்கு மாவை மறிக்கிறார் ....
 
மக்களுக்கு இப்போது தேவை போசாக்கு மா மட்டுமே 
பிரதமர் கொண்டுவந்தும் 
இவர்களால் மக்களுக்கு கிடைக்காது போவது அநியாயம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்ச்சி அரசியல் செய்யும் ஒரு புலத்து புலிவலாகத்தான் இவர் இருக்க முடியும்.
இதனால் இவர் சாதித்தது என்ன ???
 
மக்களுக்கு போசாக்கு மா கிடைப்பதை புறனிக்கிறார் 
முன்பு புலிகள் யாழ்தேவியை மறித்தார்கள் ......
இவர் போசாக்கு மாவை மறிக்கிறார் ....
 
மக்களுக்கு இப்போது தேவை போசாக்கு மா மட்டுமே 
பிரதமர் கொண்டுவந்தும் 
இவர்களால் மக்களுக்கு கிடைக்காது போவது அநியாயம்.

 

நீங்களே எங்கன்ட கருத்தை எழுதினால் நாங்கள் எப்படி மாற்று கருத்து வைக்கிறதாம்..:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உணர்ச்சி அரசியல் செய்யும் ஒரு புலத்து புலிவலாகத்தான் இவர் இருக்க முடியும்.
இதனால் இவர் சாதித்தது என்ன ???
 
மக்களுக்கு போசாக்கு மா கிடைப்பதை புறனிக்கிறார் 
முன்பு புலிகள் யாழ்தேவியை மறித்தார்கள் ......
இவர் போசாக்கு மாவை மறிக்கிறார் ....
 
மக்களுக்கு இப்போது தேவை போசாக்கு மா மட்டுமே 
பிரதமர் கொண்டுவந்தும் 
இவர்களால் மக்களுக்கு கிடைக்காது போவது அநியாயம்.

 

சிறீதரனின் இந்த அறிக்கையிலும் ஒரு அரசியல் உண்டு

மக்கள் விக்கி ஐயாவின் நடவடிக்கைகளால் அவரது பக்கம் நிற்கிறார்கள்...

சிறீதரன் அதை வைத்து அரசியல் செய்கிறார்

நமக்கு எவர் குற்றினாலும அரிசியானால் சரி...

Link to comment
Share on other sites

 

உணர்ச்சி அரசியல் செய்யும் ஒரு புலத்து புலிவலாகத்தான் இவர் இருக்க முடியும்.
இதனால் இவர் சாதித்தது என்ன ???
 
மக்களுக்கு போசாக்கு மா கிடைப்பதை புறனிக்கிறார் 
முன்பு புலிகள் யாழ்தேவியை மறித்தார்கள் ......
இவர் போசாக்கு மாவை மறிக்கிறார் ....
 
மக்களுக்கு இப்போது தேவை போசாக்கு மா மட்டுமே 
பிரதமர் கொண்டுவந்தும் 
இவர்களால் மக்களுக்கு கிடைக்காது போவது அநியாயம்.

 

 

 

 

வட மாகாண முதலமைச்சரை புறக்கணிக்கும் 
ரணிலை 
உண்மையான தமிழன் யாரும் சந்திக்க போக மாட்டான்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் ரணிலுக்கு... முதல்வர் விக்னேஸ்வரனை கண்டால் பிடிக்காது என்றும்,
தமிழர் சம்பந்தமான பிரச்சினைகளை... சம்பந்தன், சுமந்திரன் வகையறாக்களிடம் கேட்டு அறிந்து கொள்வதாகவும்,
"தந்தி தொலைக்காட்சிக்கு" அளித்த பேட்டியில் குறிப்பட்டதை, யாழ் களத்தில்... யாரோ.. இணைத்திருந்தை பார்த்தேன்.
பிதமர் ரணிலை பார்க்க... "கிண்டர் கார்டன்"  பிள்ளைகள், எவ்வளவோ திறம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு சிறிதரன்.

இந்த விக்கி - ரணில் பூசலுக்கு யாராவது முடிவு கட்டினால் தேவலை. Unnecessary distraction.

ரணில் வேண்டும் என்றே சிங்கள வாக்குகளுக்காக செய்யுறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் வழங்கும் போசாக்கு பொதிகளை முதலில் பகுப்பாய்வு செய்ய அனுப்பவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு சிறிதரன்.

இந்த விக்கி - ரணில் பூசலுக்கு யாராவது முடிவு கட்டினால் தேவலை. Unnecessary distraction.

ரணில் வேண்டும் என்றே சிங்கள வாக்குகளுக்காக செய்யுறார்.

 

முதல்வர் விக்னேஸ்வரன், முன்பு நீதிபதியாக இருந்த போது...

ரணிலுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கவில்லை போலுள்ளது.....

அது தான்... ரணில், இப்ப.. பிரதமராக வந்து.... எமது முதல்வரை பழிவாங்குகிறார். :D  :lol:  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு சிறிதரன்.

இந்த விக்கி - ரணில் பூசலுக்கு யாராவது முடிவு கட்டினால் தேவலை. Unnecessary distraction.

ரணில் வேண்டும் என்றே சிங்கள வாக்குகளுக்காக செய்யுறார்.

முதல்வர் சி வி யின் நகர்வு எமக்கு சாதகமாக அமையாது என்று வேறு ஒரு திரியில் எழுதினேன்.
 
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றும் வினவினேன்.
 
அவரை தள்ளிவிட்டு சிங்களம் பயணிக்கும். 
இதுதான் இன்றைய செய்தி . (மேலே இருக்கு)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் மருது இப்போதான் இந்த திரியை கண்டேன்.

சீவி கொஞ்சம் வெளிபடையான, மனதில் தோன்றுவதை சொல்லும் டைப். அவர் ரணிலிடம் சிங்களவர்களுக்கு உண்மையை சொல்லும் நியாய அரசியலை எதிர்பார்கிறார்.

ரணில் இப்போ செய்வது தேர்தலை மனதில் வைத்து செய்யும் positioning . தன்னை ஒரு சிங்கள காவலனாக strong man ஆக காட்ட வேண்டியே மீனவரை சுடுவோம் எனும் பேச்சு மற்றும் சீவியுடன் முரண்பாடு எல்லாம்.

சீவியும் இனக்கொலை தீர்மானத்தை கொஞ்சம் விட்டுப் பிடித்திருக்கலாம். ரணிலை கடுப்பேற்றியதை தவிர அந்த தீர்மானம் ஒன்றையும் அடைய போவதில்லை.

இவர்கள் முரண்டு பிடிப்பதால் நீண்ட நோக்கில் இருவரும் எமக்கும் ஒரு லாபமுமில்லை. தேர்தலுக்கு பின் சுமூகம் ஆவார்கள் என்றே தெரிகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.