Jump to content

"அல்கெமிஸ்ற்"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"தி அல்கெமிஸ்ற்" (தமிழ்: "ரசவாதி")

 

 

அமெரிக்காவில் பிரபலமான "சிபோற்லே" (Chipotle) எனும் மெக்சிகோ நாட்டு உணவகம் கனடாவில் பரவலாக இல்லையென அண்மையில் விஜயம் செய்த கனேடிய உறவுகளிடமிருந்து அறிந்து கொண்டேன். சோறு, இறைச்சி, கறுப்பு பீன்ஸ், அவகாடோப் பழம் என்பவற்றைக் குழைத்து ஒரு ரோரிலாவில் சுற்றித் தரும் "புறிற்றோ" (Burrito) தான் இந்த உணவகங்களின் விசேட தயாரிப்பு. இந்த உணவகத்தில் எனக்குப் பிடித்த இன்னுமொரு விடயம், உணவை வாங்கி எடுத்துச் செல்லும் கடதாசிப் பைகளில் சுவாரசியமான தகவல்களைப் பதிப்பித்திருப்பார்கள். சில சமயங்களில் மனதுக்குப் புத்துயிர் தரும் கதைகளும் வந்து சேர்ந்து அந்த நாளைத் திசை மாற்றி விடும். அப்படி என் ஒரு நாளை வெளிச்சமாக்கிய கதை ஒன்று இதோ:

 

"ஒரு கிராமவாசி தினமும் நீண்ட தூரம் சென்று குடி தண்ணீர் அள்ளி வருவான். இதற்காக இரண்டு தண்ணீர்க் குடங்கள் அவனிடம் இருந்தன. ஒன்று பள பளக்கும் புதிய குடம். இரண்டாவது சிறிய ஓட்டைகளால் தண்ணீர் வழிந்து விடும் பழைய குடம். இரண்டு குடங்களையும் தன் தோளில் ஒரு குறுக்குத் தடியின் முனைகளில் கட்டித் தொங்க விட்டு அவன் தண்ணீர் கொண்டு வருகையில், ஒட்டைகள் நிறைந்த பழைய குடத்திலிருந்து தண்ணீர் வெளியேறி வீட்டை அடைகையில் பாதி தான் எஞ்சியிருக்கும். இது பற்றிப் பழைய குடத்திற்கு பெரும் கவலை. "நான் எனக்குரிய பணியைச் செவ்வனே செய்ய முடியாமல் இருக்கிறேனே? இன்னும் ஏன் என்னை இந்த மனிதன் காவித் திரிகிறான்?" என்று வருந்திய பழைய குடம் ஒரு நாள் தன்னைத் தூக்கி வரும் கிராமத்தவனிடமே இந்தக் கவலையைச் சொல்கிறது. "இன்று நான் உன்னை என் தோளில் காவி வருகையில், நீ இருக்கும் பக்கத்தில் என்ன தெரிகிறது என்று கவனமாகப் பார்த்துக் கொண்டே வா!" என்று புன்னகையுடன் சொல்கிறான் கிராமத்தவன். பழைய குடம் இப்போது தான் தொங்கும் பக்கத்தில் கவனிக்கிறது. அங்கே, பாதையோரத்தில் அழகிய பூக்கள் பூத்துக் குலுங்கும் பூஞ்செடிகள் ஏராளமாக வளர்ந்திருக்கின்றன. பழைய குடத்தில் இருந்து வழியும் தண்ணீர் விரயமாகாமல் அந்தச் செடிகள் குடித்து வளர்கின்றன என்பது பழைய குடத்திற்குப் புரிகிறது. "நீ கொடுக்கும் தண்ணீர் விரயமாகாமல் பாதையோரம் நானே செடிகள் வைத்தேன். என் குடமே! உன் பணி வீணாணதல்ல, மாறாக நீ ஒரு தோட்டத்தைப் போசிக்கும் உயரிய பணி செய்கிறாய், கவலையை விடு!" என்று விளக்கினான் கிராமத்தவன்.

 

இந்தக் உவமானக் கதையை எழுதிய  பவுலோ கியுலோ (Paulo Coelho) தான் "தி அல்கெமிஸ்ற்" (The Alchemist) எனும் உலகப் புகழ் பெற்ற நாவலை 1988 இல் எழுதினார். ரொம் கிளான்சியோ அல்லது டானியல் ஸ்டீலோ எப்போது அடுத்த கதை எழுதி வெளியிடுவார்கள் என்று காத்துக் கிடக்கும் உலகில், பவுலோவின் போர்த்துக்கீசிய மொழி அல்கெமிஸ்ற் உடனே சக்கை போடு போடவில்லை. ஆனால் அடுத்த பத்து வருடத்திற்குள் மெதுவாக பிரேசிலை விட்டு அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் இந்த நாவல் பரவிய போது, அல்கெமிஸ்ற் எல்லை தாண்டிய ஒரு அதிசயமாக வளர ஆரம்பித்தது. இன்று உலகின் எண்பது மொழிகளில் பெயர்ப்புச் செய்யப் பட்ட ஒரு நாவலாக அல்கெமிஸ்ற் இருப்பதன் காரணம் ஒன்றே ஒன்று தான்: உலகின் எந்தக் கலாச்சார, மத, இன அடிப்படை கொண்ட வாசகருக்கும் ஒரு எல்லை கடந்த செய்தியை இந்த நாவல் சொல்வதே அந்தக் காரணம்!.

 

அல்கெமிஸ்ற் அடிப்படையில் ஒரு ஆடுமேய்க்கும் சிறுவன் ஸ்பெயினில் இருந்து எகிப்து நோக்கி கனவில் தான் கண்ட புதையல் பொக்கிஷமொன்றைத் தேடிப் பயணிக்கும் கதை. இங்கே ஆடு மேய்த்தல், கனவு, புதையல், எகிப்தை அடைய அவன் கடக்கும் பாலைவனம், அவன் பயணத்தில் சந்திக்கும் "அல்கெமிஸ்ற்" அல்லது ரசவாதி, எல்லாமே உவமானங்கள். இந்த உவமானங்களை எங்கள் வாழ்க்கையில் நாம் பொருத்திப் பார்த்தல் மிகவும் இலகு (இதைத் தான் இந்த நாவலை வாசித்த/வாசிக்கப் போகும் யாரும் தவறாமல் செய்வார்கள் என்றும் நம்புகிறேன்!). ஒவ்வொரு நாளும் நாம் தவறாமல் காணும், ஆனால் உன்னிப்பாகக் கவனிக்கத்தவறும் நிகழ்வுகள், சில சமிக்ஞைகளை எளிய வாக்கியங்களால் அரிய தத்துவங்கள் போல உணர்த்துவதும் அல்கெமிஸ்ற் நாவலில் காணப்படும் ஒரு பிரமிக்கத் தக்க அம்சம். பவுலோவின் எல்லாப் புனைவுகளுமே, நான் அறிந்த வரை, தனி மனித முயற்சியாலும் தெய்வீக வழி நடத்தலாலும் ஒருவர் தான் வேண்டியதை எல்லாம் அடைய முடியும் என்ற செய்தியையே அடிநாதமாகக் கொண்டவை. இங்கே தெய்வ வழி நடத்தல் என்பதை எந்தக் கடவுளோடும் மதத்தோடும் தொடர்பு படுத்தாமல் சில சமயங்களில் இயற்கைச் சக்திகளோடு தொடர்பு படுத்தியிருப்பதன் மூலம் தெய்வ நம்பிக்கையற்ற வாசகர்களும் பவுலோவின் எழுத்துகளைத் தீவிரமாக மறுதலிப்பதில்லை.

 

"ஒருவன் ஒரு ஆசையைக், கனவை மிகவும் நேசித்து நாடும் போது. முழு அகிலமும் ஒன்று கூடி அவனுக்கு உதவுகிறது!" என்பதே அல்கெமிஸ்ற்றில் எதிரொலிக்கும் அடிநாதமாக இருக்கிறது. இந்த அவதானிப்பை வெவ்வேறு மொழிகளில் கலாச்சாரங்களில் வெவ்வேறு வழிகளில் நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். "அதிர்ஷ்டம் தயாராக இருக்கும் ஒருவரையே நாடி வரும்!" ("luck comes to the prepared") என்பது மேற்கு நாடுகளில் பொதுவாக சொல்லப்படும் இப்படியான ஒரு கருத்து.

 

கனவு என்பதால், ஒன்றை விரும்புகிறோம் என்பதால் அது எங்களுக்கு இலகுவாகக் கிடைத்து விடும் என்ற கருத்தை மறுதலிப்பதன் மூலம், "வெற்றிக்கான பத்து வழிகள்" என்ற தோரணையில் மேற்கு நாடுகளில் எழுதப் படும் pop psychology ஆலோசனைப் புத்தகங்களில் இருந்தும் அல்கெமிஸ்ற் வேறு படுகிறது. நாவலில் வரும் இந்தப் பரிமாற்றம் பலரின் அனுபவத்தோடு பொருந்தும் என நம்புகிறேன்:

 

ஆடுமேய்ய்க்கும் சிறுவன்: "என் இதயம் அஞ்சுகிறது! என் கனவுகளைத் தேடிப் பயணிப்பதால் துன்பம் வருமோ என என் இதயம் அஞ்சுகிறது!

 

அல்கெமிஸ்ற்:  உன் இதயத்திடம் சொல்: "துன்பத்தை விடக் கொடுமையானது துன்பம் வரும் முன்னே அத்துன்பம் பற்றி அஞ்சுதல் என்று உன் இதயத்திடம் சொல்!"

 

அல்கெமிஸ்ற் ஆலோசனையாக அல்லாமல், ஒரு கதை சொல்லியாகச் சொல்லும் செய்திக்கு விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. சுற்றியிருக்கிற சமூகத்தின் உதவிகள் ஆதரவையே பெற முடியாமல் இருக்கும் கோடிக்கணக்கான உலக மக்களிடம் "முழு அகிலமும் உன் துணைக்கு வரும்!" என்ற செய்தி என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்? இந்த விளிம்பு நிலை மக்கள் எப்படி இந்தச் செய்தியை ஏற்றுக் கொள்வர்? என்ற கேள்விகள் இணையத்தில் உலவுகின்றன. எனக்கும் பதில் தெரியவில்லை! ஆனால் ஒவ்வொருவரது அனுபவத்தையும் ஒவ்வொரு தனி நூலாகக் காட்டும் அல்கெமிஸ்ற்றின் அணுகுமுறை என்னைக் கவர்ந்தது! உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று வாசித்துப் பாருங்கள் நண்பர்களே!

 

நன்றி.

 

பிற்குறிப்பு: "தி அல்கெமிஸ்ற்",  "ரசவாதி" என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டிருப்பதாக அறிந்தேன். எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை! தெரிந்தவர்கள் இங்கே பதிவிடுங்கள். ஆங்கில மூலம் 10 டொலருக்குள் தான், இலத்திரனியல் புத்தகம் அச்சுப்புத்தகத்தை விட மலிவு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம் கனவுகளை நாம் அடைவத்ற்குத் தடையாக இருக்கும் நான்கு விஷயங்களை The Alchemist எடுத்துக்காட்டுகிறது,

1.    நாம் சின்ன வயதிலிருந்தே, யாரும் தங்கள் கனவுகளை நனவாக்குவதில்லை, என்று சொல்லியே வளர்க்கப்படுகிறோம். அதனால் நம் கனவுகள் ஆழப் புதையுண்டு, நாம் அவற்றை மறந்தே போகிறோம் – எனினும் அவை அங்குதான் இருக்கின்றன

2.   பிறர் மீது நாம் வைக்கும் அன்பு, கனவை நாம் அடைவதற்கு தடையாக இருக்கிறது. 

3.   தோல்வியைக் கண்டு பயப்படுவது  நம் கனவை நாம் பின் தொடரவிடாமல் செய்கிறது.

4.   நமது கனவு நிறைவேறுவதற்கு இன்னும் ஒரு அடி தான் எடுத்து வைக்க வேண்டியிருக்கும், அப்போது நமக்கு தோன்றும் – நானெல்லாம் இத்தகைய வெற்றிக்குத் தகுதியில்லாதவன் என்று, அங்கேயே நமது கனவு நிறைவேறாமல் நின்று போகிறது.

 

ஆடு மேய்க்கும் சிறுவனின் வாழ்வில் இந்த நான்கு தடைகளும் வெவ்வேறு காலகட்டங்களில் வருகின்றன. அவன் அவற்றைத் தாண்டிச் சென்று தன் கனவை அடைகிறான்.

 

கனவு காண்பவர்கள், லட்சியங்களைப் பின் தொடர்பவர்கள் ஒவ்வொருவரும் படிக்க  வேண்டிய நாவல்.

 

-சேயோன் யாழ்வேந்தன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துகளுக்கும், புத்தகத்தையே கொண்டு வந்து இணைத்து விட்டதற்கும் நன்றி உடையார், சேயோன்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துகளுக்கும், புத்தகத்தையே கொண்டு வந்து இணைத்து விட்டதற்கும் நன்றி உடையார், சேயோன்! :)

 

பிள்ளைகளிடம் படிக்க கொடுத்தேன், மிகவும் ஆர்வமாக வாசித்தார்கள், நன்றி பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.