Jump to content

சாப்பாட்டு கடைகள்


Recommended Posts

நான் கடந்த வருடம் ஊருக்கு போனபோது, எனது நண்பன் ஒருவனின் ஆலோசனைப்படி வல்வெட்டிதுறையில் உள்ள ஒரு கொத்து ரொட்டி கடைக்கு இரவு சாப்பிட போனோம். வல்வெட்டிதுறை சந்தியில் இருந்து ஊறணி போற கடற்கரை வீதியில் ஒரு 100 மீட்டர் போனால் வலது கை பக்கமா ஒரு ஒழுங்கை (வல்வெட்டிதுறை சந்தியில் இருந்து 2வது ஒழுங்கை என நினைக்கிறன்) போகுது, அந்த ஒழுங்கைகை ஒரு 20 அல்லது 30 மீட்டர் போனால் இடது பக்கமா அந்த கடை இருக்குது. மிக சிறிய கடைதான் ஆனாலும் எமக்கு இடம் கிடைக்க ஒரு 20 நிமிடம் காத்து இருக்க வேண்டியிருந்தது. அவ்வளவு கூட்டம். சிக்கன் கொத்து, முட்டை கொத்து மற்றும் மரக்கறி கொத்து மட்டும் தான் கிடைக்கும். வேறு ஒரு சாப்பாடும் இல்லை. இங்கை ஒரு விசேடம் என்னவென்றல், மரக்கறி கொத்து தனி அடுப்பு வைத்துதான் போடுகின்றார்கள் என்வே சைவம் மட்டும் சாப்பிடுகிறவர்களும் நம்பி சாப்பிடலாம். சூப்பர் டெஸ்ட். விலையும் அதிகம் இல்லை. ஒரு சிக்கன் கொத்து 160/= தான். கடை 4PM க்கு தான் திறப்பார்கள்.
நீங்களும் யாழ்ப்பாணம் போனால் ஒருகால் ட்ரை பண்ணி பாருங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேவையர்,

யாழ்ப்பாணம் போனால்......??

யாழ்ப்பாணம் எங்க இருக்கு, VVT எங்க இருக்குது?

Link to comment
Share on other sites

சேவையர்,

யாழ்ப்பாணம் போனால்......??

யாழ்ப்பாணம் எங்க இருக்கு, VVT எங்க இருக்குது?

நாதம் அண்ணை,

நான் உந்த வடமராட்சி தென்மராட்சி என்றெல்லாம் பிரிச்சு பார்பதில்லை

இப்ப போக்குவரத்து வசதிகளும் முந்தி மாதிரி இல்லை மோட்டார்சைக்கிளில் இலகுவாக செல்லலாம்

உங்களுக்கு அப்படி சிரமம்மெனில் சாப்பிடாமலும்விடலாம்

நாதம் அண்ணை... கொத்து செமக் கொத்து

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்துக்கிள்ளையே இவ்வளவு பிரிவு. பிறகெங்க நீங்க தமிழ் ஈழம் காணுறது ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்துக்கிள்ளையே இவ்வளவு பிரிவு. பிறகெங்க நீங்க தமிழ் ஈழம் காணுறது ?

இங்கே,

இவர், கொத்து ரொட்டிக்க, அரசியலப் போட்டுக் கொத்துறார்.  :rolleyes: 

சேவையர் மாமு, நீங்கள், யாழ்ப்பாணம் வசு ஸ்ராண்டில இருந்து, ரூட்டை போட்டிருந்தியல் எண்டால், VVT பக்கம் போகாத எங்களுக்கு, கொத்து அடிச்ச மாதிரி இருக்குமெல்லே.?. :D

Link to comment
Share on other sites

நாதம் அண்ணை,

நீங்கள் யாழ்ப்பாண பஸ் ஸ்டாண்ட்ல 751ம் இலக்க பஸ்ல (இ.போ.ச   or மினி பஸ்) ஏறி பஸ் நடத்துனரிடம் வல்வெட்டிதுறை சந்தி என சொன்னால் அங்கை இறக்கி விடுவினம். அங்கை இருந்து நீங்கள் நடந்தும் போகலாம். வல்வெட்டிதுறை சந்தியில் இருந்து ஊறணி போற கடற்கரை வீதியில் ஒரு 100 மீட்டர் போனால் வலது கை பக்கமா ஒரு ஒழுங்கை (வல்வெட்டிதுறை சந்தியில் இருந்து 2வது ஒழுங்கை என நினைக்கிறன்) போகுது, அந்த ஒழுங்கைகை ஒரு 20 அல்லது 30 மீட்டர் போனால் இடது பக்கமா அந்த கடை இருக்குது.

 
போய் சாப்பிட்டு பார்த்துவிட்டு சொல்லுங்கோ எப்படி எண்டு :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

போய் சாப்பிட்டு பார்த்துவிட்டு சொல்லுங்கோ எப்படி எண்டு :)

 

உங்கண்ட பேரைச் சொன்னால், ஏதும் டிஸ்க்கவுன்ட் ?
 
ஒரு 12 பேர் போக இருக்கிறம்..... ஹி... ஹீ.. உங்கண்ட ரெகோமேண்டேசனை நம்பி....
 
முந்தி யாழ்பாணம் இருந்து போகேக்கை, தின்னவேலி சந்தி தாண்டி, இடது பக்கமா ஒரு கடை இருந்தது. அந்த மாதிரி பேமஸ்.  :wub:
 
பிறகு கொழும்பில ஒரு முஸ்லிம் கடைகாரரிடம், முட்டை ரொட்டி கேக்க, அவை, வீச்சு ரொட்டிக்குள் முட்டையை உடைச்சு ஊத்தி, அதுதான் முட்டை ரொட்டி எண்டு தந்திச்சினம்.
 
இல்லை வாப்பா, இப்படி போடுங்க எண்டு, நம்ம  தின்னவேலி கடை மெதேட்டை சொல்லிக் கொடுக்க, அவையிண்ட கடை பிறகு பேமஸ். 
 
நான் போனால், ப்ரீ முட்டைக் கொத்து.  :lol:
Link to comment
Share on other sites

திருநெல்வேலி சந்தி தாண்டி இடது பக்கமா ஷாலினி கபே தானே, அங்க புட்டும் ரோசும் சும்மா அந்தமாதிரி இருக்கும், கொத்தும் சுப்பர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருநெல்வேலி சந்தி தாண்டி இடது பக்கமா ஷாலினி கபே இருக்கும், கொத்தும் சுப்பர்

ஷாலினி கபே இப்பவும் இருக்குதோ?

Link to comment
Share on other sites

அந்த கடை இப்பவும் இருக்குது. ஆனால் முந்தினமாதிரி சாப்பாடு தரம் இல்லை, சுவையும் குறைவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருநெல்வேலி சந்தி தாண்டி இடது பக்கமா ஷாலினி கபே தானே, அங்க புட்டும் ரோசும் சும்மா அந்தமாதிரி இருக்கும், கொத்தும் சுப்பர்

 

அந்த கடை இப்பவும் இருக்குது. ஆனால் முந்தினமாதிரி சாப்பாடு தரம் இல்லை, சுவையும் குறைவு

 

ஷாலினி கபேயில்.... அப்ப, புட்டு அவிச்சவர் தான்.... இப்பவும் அவிக்கிறார்.

பிறகெப்படி.... சுவை குறையும்.? சேர்வயர்.... உங்கடை, நாக்கிலை தான் பிரச்சினை. :D  :lol:

Link to comment
Share on other sites

ஷாலினி கபேயில்.... அப்ப, புட்டு அவிச்சவர் தான்.... இப்பவும் அவிக்கிறார்.

பிறகெப்படி.... சுவை குறையும்.? சேர்வயர்.... உங்கடை, நாக்கிலை தான் பிரச்சினை. :D  :lol:

உண்மையிலேயே நீங்கள் சொன்னவாறே சாப்பிட்டுவிட்டு நினைத்தேன்

முந்தி தகப்பனும் மகன் மாரும் தான் நிண்டவர்கள், இப்போ ஒரு மகன் மட்டும் தான் நிக்குறார் எண்டு நினைக்குறேன்

அப்ப நீங்கள் TYMHA பக்கம் வந்ததுண்டோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

TYMHA பக்கம் வந்ததுண்டோ?

அங்க தானே பொழுது போனது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே நீங்கள் சொன்னவாறே சாப்பிட்டுவிட்டு நினைத்தேன்

TYMHA பக்கம் வந்ததுண்டோ?

அங்க தானே பொழுது போனது.

சேவையரின்ற கதையை நம்பி, VVT பஸ் பிடிக்கலாமோ, சிறியர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமராவதி எண்டு கே கே எஸ் ரோட்டில இந்து தாண்டி போக ஒரு கடை வரும். மதியம் ஆட்டுச் சாப்பாடு அந்த மாரி.

நெல்லியடியில் - காகில்ஸ் எதிர்க்க இருக்கும் கடை

மலாயன் கபே தெரிந்ததுதான்

காகில்ஸ் ஸ்குவேர் -ஆஸ்பத்திரி வீதி - இங்கே பூட் கோர்ட்டில் இருக்கும் பீஸா கடை உண்மையிலேயே - இத்தாலிய தரத்தில் பீசா செய்கிறார்கள். ஆனால் கே எப் சி - குப்பை - ஒரே உப்பு. பிரெசர் வந்து செத்துப்போவியள்.

மானிப்பாய் தினேஸ் பேக்கரி - நல்ல மிருதுவான பேஸ்ரி கிடைக்கும்

சுன்னாகம் கே கே எஸ் வீதியிலும், ஸ்டேசன் வீதியிலும் காத்தான் குடி காக்காமார் ரெண்டு பேர் கடை போட்டிருகீனம்.

நயினை அன்னதானம் இன்னும் அடிக்க முடியாது யாராலும், சன்நிதியும் அப்படியே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நாதம் அண்ணை,

நீங்கள் யாழ்ப்பாண பஸ் ஸ்டாண்ட்ல 751ம் இலக்க பஸ்ல (இ.போ.ச   or மினி பஸ்) ஏறி பஸ் நடத்துனரிடம் வல்வெட்டிதுறை சந்தி என சொன்னால் அங்கை இறக்கி விடுவினம். அங்கை இருந்து நீங்கள் நடந்தும் போகலாம். வல்வெட்டிதுறை சந்தியில் இருந்து ஊறணி போற கடற்கரை வீதியில் ஒரு 100 மீட்டர் போனால் வலது கை பக்கமா ஒரு ஒழுங்கை (வல்வெட்டிதுறை சந்தியில் இருந்து 2வது ஒழுங்கை என நினைக்கிறன்) போகுது, அந்த ஒழுங்கைகை ஒரு 20 அல்லது 30 மீட்டர் போனால் இடது பக்கமா அந்த கடை இருக்குது.

 
போய் சாப்பிட்டு பார்த்துவிட்டு சொல்லுங்கோ எப்படி எண்டு :)

 

நாதமுனிக்கு ஒழுங்கேக்கை வைத்து இருட்டடி இருக்கு போல.

 

பிறகென்ற முனிக்கு பேயடித்து விட்டது என்று சொல்லிக் கொண்டு போக வேண்டியான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்க தானே பொழுது போனது.

சேவையரின்ற கதையை நம்பி, VVT பஸ் பிடிக்கலாமோ, சிறியர்?

 

சேவையர் எத்தனையாம் ஆண்டு அந்தக் கடையிலை....

கொத்து ரொட்டி சாப்பிட்டவர் என்று, முதல்லை... கேளுங்கோ முனி.

25 வருசத்துக்கு... முதல்ல சாப்பிட்டவர் என்றால்....

அப்ப, கொத்து ரொட்டி போட்ட ஆள்... பென்சன் எடுத்துக் கொண்டு போயிருக்கும். :D

Link to comment
Share on other sites

சேவையர் எத்தனையாம் ஆண்டு அந்தக் கடையிலை....

கொத்து ரொட்டி சாப்பிட்டவர் என்று, முதல்லை... கேளுங்கோ முனி.

25 வருசத்துக்கு... முதல்ல சாப்பிட்டவர் என்றால்....

அப்ப, கொத்து ரொட்டி போட்ட ஆள்... பென்சன் எடுத்துக் கொண்டு போயிருக்கும். :D

சிறி அண்ணோய் நான் அந்த கடையில் கொத்து சாப்பிட்டது 2014ம் ஆண்டு ஆனி மற்றும் ஆடி மாதம். 2014ம் ஆண்டு மார்கழி மாதமும் அந்த பக்கம் போனனான். அனால் நேரம் இன்மையால் சாப்பிட முடியவில்லை.

 

நாதம் அண்ணோய், நீங்கள் எந்த காலப்பகுதியில் TYMHA க்கு வந்து போறனீங்கள்?

Link to comment
Share on other sites

கவனம் அண்ணன்களே . இதையும் ஒருக்கா பார்த்திட்டு கொத்து சாப்பிட போங்கோ  :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவனம் அண்ணன்களே . இதையும் ஒருக்கா பார்த்திட்டு கொத்து சாப்பிட போங்கோ  :lol:

 

 

முழுக்க பார்க்க நேரம் இருக்கவில்லை.
 
இருந்தாலும், அங்க இருக்கும் போது, இது எல்லாம் சாதரணம்மப்பு.
 
உங்கையே, உதிலும் பார்க்க மோசமாக இருக்குது, சில இடங்களிலில்...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழுக்க பார்க்க நேரம் இருக்கவில்லை.

 

கவனம் அண்ணன்களே . இதையும் ஒருக்கா பார்த்திட்டு கொத்து சாப்பிட போங்கோ  :lol:

https://www.youtube.com/watch?v=uvsyqsmxSL4

 

வீடியோவை, முழுக்கப் பார்க்காதது, நல்லது நாதமுனி. :D 

முழுக்கப் பார்த்தால்... "கொத்து ரொட்டி" ஆசையே போய்விடும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோவை, முழுக்கப் பார்க்காதது, நல்லது நாதமுனி. :D

முழுக்கப் பார்த்தால்... "கொத்து ரொட்டி" ஆசையே போய்விடும். :lol:

வேண்டும் என்றே, அருவருக்கும் வகையில் எடுத்ததாக தெரிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நாதமுனி கூறுவதையே நினைத்தேன்...! இது ஒரு செட்டப் கேம்...!!

Link to comment
Share on other sites

இது ஒரு செட் அப் வீடியோ. நான் இதை முந்தியே முகநூல் ல பார்த்தனான். இது முழுக்க முழுக்க நடித்து எடுக்கப் பட்ட படம்.

Link to comment
Share on other sites

நான் கடந்த வருடம் ஊருக்கு போனபோது, எனது நண்பன் ஒருவனின் ஆலோசனைப்படி வல்வெட்டிதுறையில் உள்ள ஒரு கொத்து ரொட்டி கடைக்கு இரவு சாப்பிட போனோம். வல்வெட்டிதுறை சந்தியில் இருந்து ஊறணி போற கடற்கரை வீதியில் ஒரு 100 மீட்டர் போனால் வலது கை பக்கமா ஒரு ஒழுங்கை (வல்வெட்டிதுறை சந்தியில் இருந்து 2வது ஒழுங்கை என நினைக்கிறன்) போகுது, அந்த ஒழுங்கைகை ஒரு 20 அல்லது 30 மீட்டர் போனால் இடது பக்கமா அந்த கடை இருக்குது. மிக சிறிய கடைதான் ஆனாலும் எமக்கு இடம் கிடைக்க ஒரு 20 நிமிடம் காத்து இருக்க வேண்டியிருந்தது. அவ்வளவு கூட்டம். சிக்கன் கொத்து, முட்டை கொத்து மற்றும் மரக்கறி கொத்து மட்டும் தான் கிடைக்கும். வேறு ஒரு சாப்பாடும் இல்லை. இங்கை ஒரு விசேடம் என்னவென்றல், மரக்கறி கொத்து தனி அடுப்பு வைத்துதான் போடுகின்றார்கள் என்வே சைவம் மட்டும் சாப்பிடுகிறவர்களும் நம்பி சாப்பிடலாம். சூப்பர் டெஸ்ட். விலையும் அதிகம் இல்லை. ஒரு சிக்கன் கொத்து 160/= தான். கடை 4PM க்கு தான் திறப்பார்கள்.

நீங்களும் யாழ்ப்பாணம் போனால் ஒருகால் ட்ரை பண்ணி பாருங்கோ.

நான் 2013 ஊர் போன போது இங்க தான் வேண்டி சாப்பிட்டிருக்கன் பக்கத்து ஊர் தானே அடிக்கடி வேண்டி சாப்பிட்டிருக்கன் மிகவும் சுவையானது தான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.