Jump to content

பரிவு மிக்க இணையம் வேண்டும் - 'கிளிண்டன் புகழ்' மோனிகா லெவின்ஸ்கி உருக்கம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Bill-ClintonMonica-Lewinsky-210315-400-s

மோனிகா லெவின்ஸ்கி மீண்டும் இணையத்தின் முன் வந்திருக்கிறார். மோனிகா லெவின்ஸ்கி என்றதும் அவர் வெள்ளை மாளிகை பணிப் பெண்ணாக இருந்ததும், முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனுட னான தொடர்பு விவகாரத்தில் சிக்கி தலைப்பு செய்திகளாக நின்றதும் தான் நினைவுக்கு வரும். ஆனால் லெவின்ஸ்கி பற்றிய அறிமுகத்தில் இது ஒரு பாதிதான். இந்த விவகாரத்தால் அவர் எந்த அளவுக்கு வேதனைக்கும் மன உளைச்சலுக் கும் இலக்கானார் என்பதை பலரும் அறியவில்லை. அது மட்டுமல்ல, இணையத்தின் வீச்சால் மாபெரும் அவமானத்திற்கு இலக்கான முதல் நபராகவும் அவர் வலியை அனுபவித்ததையும் பெரும்பாலானோர் அறியவில்லை.

   

பல ஆண்டுகள் மவுனத்தை கலைத்து, கடந்த ஆண்டு போர்ப்ஸ் மாநாட் டில் உருக்கமாக தனது கதையை எடுத்துரைத்தபோதுதான் இணையம் மூலம் அவமானத்திற்கு ஆளாகும் வேதனையின் தீவிரத்தை உலகம் உணர்ந்தது. இணையத்தின் மூலை முடுக்கெல்லாம் லெவின்ஸ்கி- கிளிண்டன் நட்பு பேசப்பட்டு அவர் தலைகுனிந்து நின்றார். இந்நிலையில் மோனிகா லெவின்ஸ்கி, அமெரிக்காவில் டெட் அமைப்பின் சார்பிலான மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். பார்வையாளர்களை எழுந்து நின்று கைத்தட்டி ஆர்ப்பரிக்க வைத்த இந்த உரையில், அவர் இணைய கலாச்சாரம் மற்றும் போக்கு தொடர்பாக கவலை தரும் பல விஷயங்களை சுட்டிக்காட்டி, பரிவு மிக்க இணையத்தின் அவசியம் பற்றி உருக்கமாக வேண்டுகோள் வைத்திருக்கிறார்,

 

இப்போது இணையச்சீண்டல் என அறியப்படும் பிரச்னையின் முதல் உதாரணம் தான் என்று கூறியவர், "22 வயதில் எனது மேலதிகாரியுடன் நான் காதலில் விழுந்தேன். 24 வயதில் அதன் மோசமான பாதிப்பை அனுபவித்தேன்” என்று குறிப்பிட்ட அவர், தன்னுடைய தனிப்பட்ட அவமானத்தை இணையம் பன்மடங்கு மோசமாக்கியதாக தெரிவித்தார். இந்த விவகாரம் டிஜிட்டல் புரட்சியால் ஊதிப்பெரிதாக்கப்பட்டதாக குறிப்பிட்டவர், தனிப்பட்ட நபராக இருந்த நிலை மாதிரி உலகம் முழுவதும் அவமானத்திற்கு இலக்காக்கப்பட்டு இணையம் முழுவதும் கல்வீச்சுக்கு தான் ஆளானதாகவும் தெரிவித்தார். உலகிலேயே மோசமான பெண்ணாக முத்திரை குத்தப்பட்டு, மதிப்பை இழந்து, கவுரவத்தை இழந்து கிட்டத்தட்ட வாழ்க்கையையும் இழந்துவிட்டதாக அவர் உருக்கமாக குறிப்பிட்டது பார்வையாளர்களை அழ வைப்பதாக இருந்தது. அவமானத்தின் உணர்வை தொழில்நுட்பம் பன்மடங்காக்கி இருப்பதாக வேதனை தெரிவித்தவர், முன்பு நண்பர்கள் வட்டம் , குடும்பத்தினரோடு முடிந்த விஷயம் இப்போது முழு இணைய சமூகத்திற்கும் பரவி இருப்பதாக தெரிவித்தார்.

 

இணையம் மற்றவர்களின் வலி மற்றும் தவிப்பு குறித்து உணர்ச்சியற்று போகச்செய்திருப்பதாக கூறியவர் , அவமானப்படுத்தும் கலாச்சாரத்தில் இருந்து விலகி பரிவு மற்றும் அக்கறை கொண்ட இணையம் உருவாக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, “பரிவான பின்னூட்டம், எதிர்மறையான கருத்துக்களை வெல்ல உதவும்" என்ற மோனிகா லெவின்ஸ்கி, பரிவு எல்லோருக்கும் நலன் பயக்கும் என்றார். மற்றவர்கள் தலைப்புச்செய்தியில் ஒரு மைல் தூரம் பயணித்து பாருங்கள் என்றும் கூறியவர், இணையம் மூலம் அவமானத்திற்கு ஆளாகும் எவரும் இதை தாக்கு பிடித்து எழுந்து நிற்பது சாத்தியம் என உணரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

http://seithy.com/breifNews.php?newsID=128729&category=Puthinam&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.