Jump to content

அவநம்பிக்கையும் அறிவியல் கூறும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவநம்பிக்கையும் அறிவியல் கூறும்-1

நோவா

‘உடைந்த கண்ணாடியை ஏன் பார்க்க கூடாது’

‘இரவானதும் நகம் ஏன் வெட்ட கூடாது’

‘ஒற்றைக் காலில் ஏன் நிற்க கூடாது’

‘இரவில் விசில் ஏன் அடிக்க கூடாது’

‘கொடிக்கம்பிகளுக்கு அடியில் ஏன் நடக்கக்கூடாது’

‘இரவில் உப்பை ஏன் வாங்க கூடாது’

‘கர்ப்ப காலத்தில் கூந்தல் ஏன் வெட்டக்கூடாது’

Black-Cat-Wallpaper-46-200x300.jpg

என் முதல் கட்ட ஆராய்ச்சியை எனது அம்மாவிடமே ஆரம்பித்தேன்.

அடுத்து நண்பர்கள் மத்தியில். அதை அடுத்து எனது மாணவர்களிடையே இந்த ஆராய்ச்சி தொடர்பான கேள்விகள் தொடர்ந்து கேட்க பட்டன.

இதையெல்லாம் நான் கேட்ட போது குறிப்பிட்ட ஒரே ஒரு உணர்வு மட்டும் எல்லாரிடமும் மேலோங்கி இருந்ததை என்னால் உணர முடிந்தது. அதாவது இந்த நம்பிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் ஏதோ ஒரு வகையான திருப்தியை எல்லார் முகத்திலும் காணமுடிந்தது. அது ‘எனக்கு இது தெரிந்ததால் தான் நான் நன்றாக இருக்கிறேன்’ என்பதை பறை சாற்றுவது போல் இருந்தது. ஆனாலும் இவர்களையெல்லாம் இந்த நம்பிக்கைகளின் மேல் நம்பிக்கை கொள்ள வைத்தது என்ன என்பதை அறிந்து கொள்ள்வதில் தான் என்னுடைய அடுத்த கட்ட நகர்வு இருந்தது. பொதுவாகவே ஒரு இடத்தில் இருவர் மூவர் கூடும் போது எப்படியாவது இந்த நம்பிக்கைகள் தொடர்பான உரையாடல்கள் முளைத்து கொண்டே இருக்கும். இந்த நம்பிக்கைகள் யாவை? இவை எப்படி மூடநம்பிக்கைகளாக உருமாற்றம் கண்டன? இங்கிருந்து தான் நமது பகிர்வு தொடர்கிறது.

மூடநம்பிக்கைகள் (Superstitious beliefs) எனபடுவன முன்னொரு காலத்தில் மதம் சார்ந்த அல்லது இறைவனின்/அரசன் பால் பயத்தை ஏற்படுத்தவோ மற்றும் சுயபாதுகாப்புகாகவோ தொடர்ந்து பயன்பாட்டில் இருந்த ஒரு செயல். இது அகம் தொடர்பான சிந்தனையாகவே தான் குறிப்பிட்ட காலகட்டதுக்கு இருந்து வந்துள்ளது. தொடர்ந்து செய்யபட்ட செயல்கள் நாளைடைவில் பழக்கமாக மாறி போக, கால போக்கில் அச்செயல்களின் பயன்பாடு செயல்பாட்டிலிருந்து காணாமல் போனாலும் அவை ஏதோ கடமைக்காக கடைப்பிடிக்க பட்டன. தொடர்ந்து வந்த சந்ததியினர் சிந்திக்க மறந்தனரோ இல்லை பழக்கமாகி போனாதால் விட முடியாமல் விரும்பியே தங்களின் அடையாளமாக மாற்றி கொள்ளவே முற்பட்டு உள்ளனர். இப்படி அடையாளமாகி போன பழக்கவழக்கங்கள் கால நகர்வில் கற்பனை கலந்து மிகை படுத்த பட்டு மூடநம்பிக்கையாக உருவெடுத்து நிற்கின்றன.

மூடநம்பிக்கைகள் ஒவ்வொன்றுக்கும் ஏதோ அறிவு சார்ந்த காரணம் இருக்கத்தான் வேண்டும். அதுமட்டுமின்றி தன்னை சுற்றி நடப்பவைகளுக்கெல்லாம் காரணத்தை அறிவியல் பூர்வமாக கண்டுணர முடியாமல் போனதன் பொருட்டாக சிறுவயதிலிருந்தே ஊட்டப்பட சமய அறிவு மூடநம்பிக்கைகள் உருவாக மிகவும் உறுதுணையாக இருந்திருக்கிறது. இதைதான் செல்பெர்க் என்பவர் ‘Talking Superstitions Seriously’ என்னும் தனது கட்டுரையில் தெளிவாக கூறியிருக்கிறார். தனது சமயத்தை தற்காக்கவும் அதை பிறவற்றிலிருந்து உயர்வாக காட்டவும் பல நேரங்களில் மூடநம்பிக்கைகள் ஆயுதமாக பயன்படுத்த படுகின்றன. மதம் என்று வந்தாலே நம்மில் பெரும்பாலோர் அறிவை கொஞ்ச நேரம் பூட்டி வைத்து விடுகின்றனர் என்பதை இவர் மிக துல்லியமாக எழுத்துரைத்துள்ளார்.

இந்த காரணமாகத்தான் பல பகுத்தறிவாளர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஏன் என்ன எதற்கு என கேள்விகள் கேட்க வேண்டும் என வலியுறுத்துக்கின்றனர். இது தவறான ஒன்று கிடையாது. ஆத்திகத்தை பரப்பும் கருத்தும் கிடையாது. ஆனால் பகுத்தறிவை பயன்படுத்துங்கள் பயன்படாத ஒரு செயலுக்கு உங்கள் விலைமதிகப்பில்லா சக்தி இயக்கத்தை வீணாக்காதீர்கள் என்பதற்கான அறைகூவல். நம்மில் பலரும் பல செயல்களுக்கு காரணம் அறியாமல் நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து கொண்டிருக்கின்றோம். கொஞ்சம் நிதானித்தால் அறிவியல் பூர்வமாக பெரும்பாலானவற்றுக்கு விளக்கம் கண்டுபிடிக்கலாம். இதனால் வருங்காலத்தில் சிந்திக்க தெரிந்த சமுதாயத்தை உருவாக்கலாம்.

பின்வருவன வழக்கமாக கேள்விபடும் ஒரு சில நம்பிக்கைகளும் அவற்றின் பின்புலத்தின் அறிவியல் கூற்றுகள். அவற்றில் முதலாவது

1.வெளியில் புறப்படும் போது குறுக்கே பூனை வந்தால், சகுனம் சரியில்லை.

இது பல்லாண்டு காலமாக சொல்ல பட்டு வரும் ஒரு பழைய வியாக்கானம். இது சொல்ல பட்ட காலம் மிகவும் முக்கியமான ஒன்று. அது மக்கள் இன்னுமும் காட்டை அண்டி அதை சார்ந்து வாழ்ந்து கொண்டிருந்த காலம். இன்னொன்று இதில் சொல்ல பட்ட பூனை உண்மையாகவே பூனையைதான் குறிக்கிறதா என்ற கேள்வி நிறைய பேருக்கு தெரிந்திருக்க நியாயமில்லைதான். அக்கால மக்கள் எதையும் இலைமறை காயாக சொல்லித்தான் இன்பம் புசிப்பார்கள். சரி இப்போது கருத்துக்கு வருவோம்.

அக்கால மக்கள் காட்டை சார்ந்து வாழ்ந்து வந்ததால் சரியான பாதுகாப்பு இன்றி இயற்கை மாற்றங்களையும் சுற்று சூழலில் ஏற்படும் மாற்றங்களியும் வைத்து தான் வாழ்க்கையை ஓட்டி கொண்டிருந்தனர். ஆக பூனை வகையை சார்ந்த புலி, சிறுத்தை என பெரிய பூனைகளின் நடமாட்டமும் இருந்திருக்கிறது. புலி, சிறுத்தை போன்றவை இயல்பாகவே சாலையையோ நடைபாதையையோ அல்லது மனித நடமாட்டங்கள் உள்ள பகுதிகளையோ கடக்க நேரிட்டால் பதுங்கி தாக்க கூடியவை. இப்படி இவை கடந்து போகும் நேரமும் நாம் வெளியில் புறப்படும் நேரமும் எதிர்பாராத வகையில் ஒன்றாக அமைந்து விட்டால் அது உயிருக்கே ஆபத்தை விளைவிக்க கூடும்.

வெளியில் செல்லும் போது குறுக்கே எதிர்படும் இப்பெரிய வகை பூனைகள் நாம் வரும் வரை புதர் மறைவில் காத்திருந்து நம்மை தாக்கலாம் அல்லது நமது இருப்பிடத்தையோ அதில் இருப்போரையோ தாக்கலாம். எனவே இது முழுக்க முழுக்க கெடுதலான ஒரு விஷயம். எனவே ஒட்டு மொத்தமாக சகுனம் என கூறப்பட்டது. எனவே எதிர்பாராத விதமாக வெளியில் போகும் போது இவை அதாவது புலி அல்லது சிறுத்தை போன்ற பெரிய பூனை வகைகள் குறுக்கே எதிர்ப்பட்டால் செல்லும் காரியத்தை ரத்து செய்து விட்டு வீட்டுக்கு சென்று பாதுகாப்பை தேடி கொள்ளுங்கள் என சொல்லாமல் சொல்லப்பட்டது.

இந்த விஷயம் அந்த காலக்கட்டத்தில் சரியான அறிவான சமயோதிதமான ஒரு கருத்து. ஆனால் இன்றைய கால கட்டத்தில் இந்த கருத்து நாம் வாழும் நகர வாழ்வின் நடைமுறைக்கு சரியான ஒன்றா? சிறிது சிந்திக்க வேண்டிய ஒன்று. அன்று பூனை என சொல்லபட்டவை இன்று நாம் காணும் குட்டி பூனைகளும் வீட்டு பூனைகளும் என தவறாக கணிக்க பட்டு விட்டன. எனக்கு தெரிந்து எந்த வீட்டு பூனையும் மனிதனை கொன்றதாக நான் கேள்வி பட்டது இல்லை. ஒரு கால் நாம் வெளியே போகும் போது இந்த குட்டி பூனைகளும் வீட்டு பூனைகளும் எதிர்பட்டால் பாவம் அவற்ருக்கு தான் சகுனம் சரியில்லை. காரணம் காரின் சக்கரங்களில் மிதிபட்டு அவை உயிர் இழக்க கூடும்.

ஆனால் பாருங்கள் நம் மக்களின் சிந்திக்கும் திறனை. பூனை என்று சொன்னதுமே எதையும் யோசிக்காமல் தினசரி காணும் பூனைகளின் மீது பழி போட்டு கொஞ்சம் மூடநம்பிக்கையை நீரூற்றி வளர்த்து வைத்திருக்கின்றனர். இதனால் எவ்வளவு இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு அல்லவா!. எனவே பூனைகள் குறுக்கே போவது ஒன்றும் பாதகமில்லை. ஆனால் கண்முடிதனமாக இதன் உட்கருத்தை அறியாமல் பின்பற்றுகிறோமே இந்த மூடதனத்தால் பெரிய பாதகம். ஆக இனிமேலாவது பூனைக்கு ஹை சொல்லி காரியத்தை தொடங்குவோம்.

தொடரும்

http://vallinam.com.my/version2/?p=1888

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அவநம்பிக்கையும் அறிவியல் கூறும் – 2

நோவா

Magic mirror on the wall, who is the fairest one of all?

mirror32-300x300.jpg

mirror32ஒரு நாள் வீட்டின் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தேன். அந்த அறையில் இரண்டு அலமாரிகள் உள்ளன. ஒன்றில் முழு கண்ணாடி பதிக்க பட்டிருந்தது. இரண்டு அலமாரிகளிலும் சேலைகள்தான் மடித்து வைக்க பட்டிருந்தன. எப்போதும் விடுமுறைக்கு வீட்டுக்கு போனாலும் நான்தான் எல்லா சேலைகளையும் மடிந்து வைப்பேன். ஒரு சேலையை மடித்து வைப்பதற்கு எப்படியும் இரண்டு நிமிடங்கள் பிடிக்கும். அதுவும் ஒரு சேலையை இழுக்கும் போது இன்னொரு சேலை கலையாமல் இருக்க வேண்டும். ஒரு நாள் முழுவதும் இப்படி சேலை குவியலில் மாட்டிக்கொள்வதால் ஏதோ ஒரு இனம் புரியாத அலுப்பு. மரக்கட்டைதானே என நினைத்து அலமாரி கதவு அப்படியே மூடி கொள்ளும் என்னும் நினைப்பில் விட்டு விட்டேன். அழகான முளு நீள கண்ணாடியில் விரிசல்கள் எற்பட்டு விட்டன.

சத்தம் கேட்டு அங்கு வந்த அம்மா “போச்சா, ஒரு கண்ணாடி ஒழுங்கா இருந்தா புடிக்காதே. ஒடிச்சிடனும், இல்லேனா ஒன்னும் முடியாது. முதல்லே இந்தா, இந்த அட்டைய எடுத்து ஒடஞ்ச கண்ணாடியே மூடு. ஒடஞ்ச கண்ணாடிலே முகம் பாக்குறது நல்லதுஇல்லே,’’ என சொல்லி ஒரு கடின அட்டையை எடுத்து என் கையில் திணித்து விட்டு முனுமுனுத்து கொண்டே சென்று விட்டார். மொத்தடி விழும் என நினைத்திருந்த எனக்கு ஒரே குழப்பம். அது எப்படி உடைந்த கண்ணாடி நல்லது நடக்க விடாமல் தடுக்கும்? அதுவும் இதையே ஒரு சிலர் ஆயூள் குறையும் என சொல்லியும் கேட்டு இருக்கிறேன். இந்த நம்பிக்கை உண்மையா என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் மேலிட்டது. எனவே அட்டை அலமாரி மேல் ஒட்டிய பின் விட்ட வேலையை முடித்து பின்னர் கணினி முன்னமர்ந்து விவர வேட்டையை தொடர்ந்தேன்.

கண்ணாடி உண்மையில் மக்களிடையே பல நம்பிக்கைகளுக்கு வித்தாக இருந்திருக்கிறது. கண்ணாடியை மையமாக வைத்தே பல நம்பிக்கைகள் இருந்திருப்பது எனக்கு மேலும் ஆச்சர்யத்தை உண்டாக்கியது. அவை யாவை என இப்போது பார்ப்போம். கண்ணாடி இரண்டு விஷயத்தை தனக்குள் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது. ஒன்று: கெட்டதை கொண்டு வரும். இரண்டு: எதிர்க்காலத்தை காட்டும். இது ஏன் என்று பார்த்தோமானால் கண்ணாடி என்பது பிம்பத்தை பிரதிபலிக்க கூடிய ஒன்று. கண்ணாடி கண்டுபிடிப்பதற்கு முன்பே பிம்பத்தை பிரதிபலிக்க கூடிய நீர்நிலைகள் சூன்யங்களிலும் மந்திரங்களிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கலாம். உதாரணமாக ‘Snow White’ சித்திரபடத்தில் இடம் பெற்ற இந்த “Magic mirror on the wall, who is the fairest one of all? ” என்னும் வசனம் மிகவும் பிரசித்தி பெற்றது மட்டுமில்லாமல் மேற்கூறிய காரணத்தை கொண்டதாகவும் காட்டப்படுகிறது. கண்ணாடியை மைய படுத்தி கடைப்பிடிக்கபட்டு வந்துள்ள சில நம்பிக்கைகள் கீழ்கண்டவாறு:

1.கண்ணாடியை உடைத்தால் ஏழு வருடங்களுக்கு துரதிஷ்டம் ஏற்படும்.

2.வீட்டில் மாட்டப்படிருந்த கண்ணாடி திடிரென்று சொந்தமாக விழுந்து உடைந்தால், அந்த வீட்டில் உயிரிழப்பு ஏற்படும்.

3.ஒருவர் இறந்து விட்டால் அவரின் வீட்டிலோ அல்லது அறையிலோ இருக்கும் கண்ணாடியை துணிகளை கொண்டு மூடி வைக்க வேண்டும். இல்லையெனில் இறந்தவரின் ஆத்துமா வெளியே செல்ல முடியாமல் கண்ணாடியின் பின்னால் மாட்டி கொள்ளும்.

4.மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் ஒருவர் கண்ணாடியை பார்த்தால் அது துரதிஷ்டத்தை தருவிக்கும்.

5.இறந்தவரின் அறையில் உள்ள கண்ணாடியில் ஒருவர் தன் சொந்த பிம்பத்தை கண்டால், அவர் விரைவில் இறந்து விடுவார்.

6.பிறந்த குழந்தைகள் ஒரு வருடத்துக்கு கண்ணாடியை பார்க்க கூடாது.

7.தன் வருங்கால கணவன் யாரென்று தெரிய வேண்டுமாயின், ஒரு பெண் ஆப்பிளை மென்றவாறு கூந்தலை வாரிய படி கண்ணாடியை பார்த்தால் அவளின் வருங்கால கணவனின் முகம் அவள் தோளுக்கு பின்னால் நிற்பது போல கண்ணாடியில் தெரியும்.

8.அம்மை நோயின் போது கண்ணாடியை பார்த்தால் நோய் இன்னும் கொடுரமாகும்.

9.வீட்டு வாசலில் கண்ணாடியை வைத்தால் கெட்ட ஆவிகள் பேய் பிசாசுகள் அண்டா.

இப்படியாக பல நம்பிக்கைகள் கண்ணாடியையே சுத்தி சுத்தி பின்னப்பட்டிருக்கின்றன. இவற்றை எப்படியெல்லாமோ தெரிந்து கொண்ட என் அம்மா எல்லாவற்றையும் ஒன்றிணைத்து நல்லது இல்லை என ஒரே வார்த்தையில் முடித்து விட்டார் போலும். இவற்றின் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஒரு தொடர் எழுத வேண்டும் போல. சரி முதலாவது நம்பிக்கை எதனால் சொல்ல பட்டது என பார்ப்போம்.

1.கண்ணாடியை உடைத்தால் ஏழு வருடங்களுக்கு துரதிஷ்டம் ஏற்படும்.

இந்த கண்ணாடி தொடர்பான நம்பிக்கை கொஞ்சம் லாஜிக் கொண்டதாக இருக்கிறது. பழங்காலத்தில் கண்ணாடி விலையுர்ந்த பொருளாதலால் பெரும்பாலும் அரண்மனைகளிலும் அரசு தொடர்பான அலுவலகங்களிலும்தான் காண கிடைக்குமாம். எனவே கண்ணாடி பொதுவாக ஏழைகளுக்கு எட்டாத ஒன்று. அதுவும் ஏழைகள் அல்லது நடு வர்க்கத்தினர் அலுவலகங்களிலும் அரண்மனைகளிலும் வேலை செய்யும் போது கவனக்குறைவால் விலையுள்ள கண்ணாடி கீழே விழுந்து உடைய வாய்ப்புண்டு. இதனால் அரசருக்கோ அதிகாரிகளுக்கோ கோபம் வந்து தண்டனை காலமாக ஏழு ஆண்டுகள் கஷ்ட பட வாய்ப்பு உண்டு. இதை கருத்தில் கொண்டுதான் கவனக்குறைவாக இருக்க கூடாது என்பதற்காக இந்த வாய்வழி அறிவுரை கால போக்கில் நம்பிக்கையாக உருமாறிவிட்டது.

2.வீட்டில் மாட்டப்பட்டிக்கும் கண்ணாடி திடீரென்று சொந்தமாக விழுந்து உடைந்தால், அந்த வீட்டில் உயிரிழப்பு ஏற்படும்

3.ஒருவர் இறந்து விட்டால் அவரின் வீட்டிலோ அல்லது அறையிலோ இருக்கும் கண்ணாடியை துணிகளை கொண்டு மூடி வைக்க வேண்டும். இல்லையெனில் இறந்தவரின் ஆத்துமா வெளியே செல்ல முடியாமல் கண்ணாடியின் பின்னால் மாட்டி கொள்ளும்.

4.இறந்தவரின் அறையில் உள்ள கண்ணாடியில் ஒருவர் தன் சொந்த பிம்பத்தை கண்டால், அவர் விரைவில் இறந்து விடுவார்.

5.மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் ஒருவர் கண்ணாடியை பார்த்தால் அது துரதிஷ்டத்தை தருவிக்கும்.

இந்த மூன்று நம்பிக்கைகளையும் பார்த்தோமானால் கண்ணாடியில் தெரியும் பிம்பமும் இறப்பையும் சம்பந்தப் படுத்திய நம்பிக்கைகளாக இருக்கின்றன. இவற்றுக்கும் மத நம்பிக்கைகளுக்கும் நெருங்கிய உறவு உள்ளதாகத்தான் தெரிகிறது. அக்காலத்தில் ஆத்மாக்கும் அது உறையும் இடங்களும் இயற்கையின் செயல்பாடுகளும் மனிதனுக்கு மிகவும் புரியாத புதிராகதான் இருந்திருக்கிறது. ஆனாலும் மனிதனுக்கு ஒன்றோடு ஒன்றை சம்பந்தப் படுத்தும் அபார கற்பனா சக்தி மிகவும் அதிகம். அதனால்தான் கெட்ட சக்தி காற்றாக மாறி வீட்டுக்குள் நுழைந்து கண்ணாடியை உடைக்கிறது என நம்ப தொடங்கினான். அறிவியல் ரீதியாக யோசித்தோமானால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி அன்று கிடையாது. இன்று போல நிலநடுக்க அதிர்வுகளையும் இயற்கை பேரிடர்களையும் கண்டு கொள்ள கூடிய அளவைகள் அன்று கிடையாது. இதனால் எதிர்பாராமல் வரும் இயற்கை பேரிடர்களால் உயிரிழப்பு ஏற்பட்டது. இதை தான் சொந்தமாக கண்ணாடி விழுந்து உடைந்தால் யாரவது இறப்பார் என கூறப்பட்டது. இதுக்கு பின்னால் மனிதனின் கற்பனா சக்தியும் மறைந்திருக்கிறது. இதைதான் இறந்தவரின் ஆவி கண்ணாடியின் பின்னால் மாட்டிக்கொள்ளும் என்பது போன்ற நம்பிக்கைகள் உருவாக காரணமாக இருந்திருக்கிறது. அதாவது பிம்பத்தின் பிரதிபலிப்பு எப்படி உருவாகுகின்றது என்பதன் அடிபடை தெரியாமல் இருந்ததன் விளைவாக கண்ணாடிக்கு பின்னால் இன்னொரு உலகம் இருப்பது போன்ற ஒரு கற்பனை நம்பிக்கையாக உருவாகி இருக்கலாம். ஆனால் கண்ணாடி ஒளியை உள்வாங்காத ஒரு பொருள் என்பதுதான் நிஜம். அதாவது ஆங்கிலத்தில் ஓபக் ‘opaque’ எனப்படும். ஒளியலைகள் ஒளி உள்வாங்கா பொருட்கள் மேல் படரும் போது அவை பிரதிபலிப்பாக, ஒளிக்கீற்றுகளாக திரும்ப வெளிப்படும். வெளிச்சமாக இருந்தால்தான் ஒளி என பொருளாகாது. ஒளி எங்கும் பரவி உள்ளது. எனவேதான் கொஞ்சம் மத பூச்சுகளோடு தெளிவு படுத்தமுடியாத நம்பிக்கைகளோடும் இறந்த ஆத்மாவோடு சம்பந்த படுத்தபட்டிருக்கின்றன இந்த நம்பிக்கைகள்.

இந்த நான்கு நம்பிக்கைகளும் வழக்கில் இருந்து வந்திருக்கின்றன. இவை யாவை என ஒவ்வொன்றாய் பார்ப்போமே.

6.பிறந்த குழந்தைகள் ஒரு வருடத்துக்கு கண்ணாடியை பார்க்க கூடாது.

குழந்தைகள் பிறந்ததிலிருந்து ஒரு வருட காலத்துக்கு அவர்கள் கண்ணாடி பார்க்க கூடாது என்பது அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கூறப்பட்டது என சொல்ல படுகிறது. குழந்தைகள் பிறந்து அந்த ஒரு வருட காலக்கட்டம் தவழவது குப்புறவிழுவது, முட்டி போடுவது என ஒவ்வொன்றாக கற்று கொள்ளும் கால கட்டம். கண்ணாடி கையில் கிடைத்தால் என்னாகும்? கீழே விழுந்து உடையும். இதனால் குழந்தைக்கு அபாயம் தானே. எனவே இதை கருத்தில் கொண்டு தான் இப்படி கூறப்பட்டிருக்கலாம்.

7.தன் வருங்கால கணவன் யாரென்று தெரிய வேண்டுமாயின், ஒரு பெண் ஆப்பிளை மென்றவாறு கூந்தலை வாரிய படி கண்ணாடியை பார்த்தால் அவளின் வருங்கால கணவனின் முகம் அவள் தோளுக்கு பின்னால் நிற்பது போல கண்ணாடியில் தெரியும்.

அக்காலத்தில் இங்கிலாந்து நாட்டு வழக்கத்தில் ஹலோவீன் நாளன்று இளம்பெண்கள் கயிற்றில் வரிசையாகக் கட்டப்பட்டிருக்கும் ஆப்பிளின் தோலை வாயால் உரித்து எடுக்க, அது கீழே விழுந்து ஒரு கண்ணாடி மூலமாகப் பார்த்தால் அது எதேச்சையாக ஏதோ ஒரு எழுத்து வடிவத்தை ஒத்திருக்குமாம். அது வருங்கால கணவன் பெயரின் முதல் எழுத்து என நம்பப்பட்டது. அதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தனர். அது நாளாக நாளாக மேற்குறிப்பிட்ட நம்பிக்கையாக உருவெடுத்து உள்ளது.

8.அம்மை நோயின் போது கண்ணாடியை பார்த்தால் நோய் இன்னும் கொடுரமாகும்.

இந்த நம்பிக்கை உருவான விதம் அனுபவத்திலிருந்து எழுந்தது. அம்மை நோயின் போது முகத்திலும் உடலின் மற்ற பாகங்களிலும் கொப்பளங்கள் உருவாகி இருக்கும். அவை பெரியம்மை என்றால் சீழுடன் கூடிய கொப்பளங்கள் வலியும் எரிச்சலும் தரக்கூடியவையாக தான் இருக்கும். இவ்வற்றுடன் முகமும் மொத மொத வென வீங்கி போய் இருக்கும். இப்படி பட்ட சூழலில் கண்ணாடியில் முகத்தையும் உடலின் மற்ற பாகங்களையும் பார்த்தால் கை சும்மா இருக்குமா? கண்டிப்பாக கொப்பளங்களை கிள்ள செய்யும். இதனால் அம்மை நோயின் தாக்கம் இன்னும் அதிகமாகும். வலியும் அதிகரிக்கும். எனவே தான் இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டன.

9.வீட்டு வாசலில் கண்ணாடியை வைத்தால் கெட்ட ஆவிகள் பேய் பிசாசுகள் அண்டா.

இந்த நம்பிக்கையின் பின்புலம் சீனர் நம்பிக்கைதான். சீனர்களின் எல்லா குடியிருப்புகளின் வாசலில் எல்லாமே கண்ணாடி மாட்டப்பட்டிருக்கும். என்னவென்று ஆராய்ந்தால் எல்லாமே ஃபெங்சுய் (சீன வாஸ்துசாஸ்திரம்) தான். அதாவது கெட்ட சக்திகளை திசை திருப்ப வாசலில் வைக்க படுவதாக நம்ப படுகிறது. அதாவது வீட்டின் சில இடங்களில் கண்ணாடி வைக்கலாம் சில இடங்களில் வைக்க கூடாது. எல்லாவற்றுக்கும் காரணம் வீட்டின் மூலைகள் பூமியின் காந்த திசைகளை வைத்து கட்டப்படிருப்பதாகவும் அதனால் உண்டாகும் ஈர்ப்பு சக்தி அதிர்வலைகளை உண்டாக்கி நல்ல கெட்ட சக்திகளை உருவாக்கும் என நம்ப படுகிறது. (நம்பிக்கை மட்டுமே, அறிவியலால் இன்னும் ஊர்ஜீத படுத்தப்படவில்லை).

எனவே இவற்றை எல்லாவற்றையும் பார்க்கும் போது கண்ணாடி உடைவது பாதுகாப்பற்றது, நெருப்போ அல்லது அதிகபடியான சூரிய ஒளியோ பட்டால் அது பிரதிபலிக்கப்பட்டு நெருப்பை உண்டாக்கும். எனவே கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. ஆயினும் இவற்றை பின்பற்றுவது என்பது அவரவர் சிந்தனையை பொருத்து உள்ளது. கொஞ்சம் பௌதீகமும் கலந்து இருக்கிறது. எனவே இவற்றை கடைபிடிப்பதா இல்லையா என்பது காலத்துக்கு ஏற்றவாறு சிந்தித்து செயல்படுவது தான் உத்தமம் என்பது என் கருத்து. தேர்வு உங்கள் கையில்.

பின் குறிப்பு: இக்கருத்து ஒரு சிலரோடு உரையாடியும் பின்வரும் அகப்பக்கத்திலிருந்தும் பெறபட்டது.

https://books.google.com.my/books?id=L4hVFpgwe48C&pg=PA342&lpg=PA342&dq=If+a+mirror+falls+and+breaks+by+itself,+someone+in+the+house+will+soon+die.+why?&source=bl&ots=xtIxNXfEX0&sig=bST07K9KSWWdf2JkPjEdHf4Qcgs&hl=en&sa=X&ei=NiXmVLy4EIOC8QW164HoDA&ved=0CDIQ6AEwAw#v=onepage&q=If%20a%20mirror%20falls%20and%20breaks%20by%20itself%2C%20someone%20in%20the%20house%20will%20soon%20die.%20why%3F&f=false

http://redlotusletter.com/reflections-on-feng-shui-10-mirror-dos-and-donts/

http://www.pookapages.com/Gruenwold/halloween_magic_and_superstition.htm

http://www.csicop.org/superstition/library/mirrors/

http://www.penmai.com/forums/spiritual-queries/56521-spiritual-queries-7.html

http://vallinam.com.my/version2/?p=2014

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

அவநம்பிக்கையும் அறிவியல் கூறும் – 3

நோவா

நிறைய பேர் மனதிலும் மூளையிலும் குடி கொள்ளும் ஒரு பிம்பம் பெண். அவள் குழந்தையாக இருக்கும் போதும் சரி, பூப்படையும் போதும் சரி, அவள் தாய்மையடைந்த கர்ப்பக்காலத்திலும் சரி, தொடர்ந்து மீண்டும் குழந்தை என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல நம்பிக்கைகளுக்கு உள்ளாகிறாள் (உள்ளாக்கப்படுகிறாள்). பெரும்பாலும் பெண்ணின் வாழ்க்கை முறையை கட்டமைக்க பல நம்பிக்கைகள் உட்புகுத்த படுகின்றன. நானும் பெண் என்பதால் இதற்கும் எனக்கும் நேரடி தொடர்ப்பு உண்டு. சிறுவயதில் என்ன நடந்தது என்பதில் எனக்கு அவ்வளவு ஞாபகம் இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதில் இருந்து எனக்கு இந்த நம்பிக்கைகள் தெரியப்படுத்தப்பட்டன.

நான் பிறந்து வளர்த்தது தோட்டப்புற சூழலில்தான். நான் கேட்டு பழகிய ஒரு சில விஷயங்களையும் அவற்றின் அறிவியல் சாத்திய கூறுகளையும்தான் இங்கு பகிர போகிறேன். என்னைப்போல் தோட்ட சூழலில் வளர்ந்த பலரும் இன்றைய காலக்கட்டத்தில் நகரத்தில் அடைக்கலமானாலும் இன்னுமும் அவற்றை ஏதோ ஒரு காரணத்துக்காகப் பின்பற்றுகின்றனர். அவற்றுள் பின்வருவன.

1. பெண் எந்த வாசலிலும் படிக்கட்டிலும் அமரக் கூடாது.

2. சமையலறையில் பெண் பாடினால் கிழவன் தான் மாப்பிள்ளையாவான்.

3. பெண்ணுக்கு விரைவில் கல்யாணமாக பூக்குளியல் செய்ய வேண்டும்

4. பெண்ணாகிவிட்டாலே கால்களை அகல வைத்து நடக்கக் கூடாது அல்லது வேகமாக தரை அதிர நடக்கக்கூடாது.

5. மாதவிடாய் காலத்தில் வெளியிலோ அல்லது இரவு நேரத்திலோ வெளியே செல்ல நேரிட்டால் கொண்டையிலோ அல்லது சடையிலோ இரும்பு ஆணி ஒன்றை வைத்து கொள்ள வேண்டும்.

6. மாதவிடாய் காலத்தில் பூஜை அறையில் புழங்கக் கூடாது. (சாமி கும்பிடக் கூடாது)

7. மாதவிடாய் குருதியும் மாதவிடாய் கண்ட பெண்ணும் தீண்டத்தகாதவர்கள்.

8. மாதவிடாய் நேரத்தில் குளிக்கக்கூடாது.

9. மாதவிடாய் நேரத்தில் தண்ணீரில் நீந்தக்கூடாது.

10. மாதவிடாய் காலத்தில் பெண் பேய்களுக்கு விருப்பமானவள்.

11. கர்ப்பகாலத்தில் புகைப்படம் எடுக்கக்கூடாது.

12. கர்ப்பகாலத்தில் கூந்தலை வெட்டக்கூடாது.

13. பெண்ணின் முதல் கர்ப்பகாலத்தில் ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில் வளைக்காப்பு செய்தல் வேண்டும்.

14. கிரகணத்தின் போது கர்ப்பிணி பெண் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது

15. பெண் கர்ப்பகாலத்தில் மெத்தையின் மேல் காகிதத்தை நறுக்கக் கூடாது.

16. பெண் கர்ப்பகாலத்தில் எந்த மிருகத்தையும் கொல்லக் கூடாது.

இங்கே குறிப்பிடப்பட்டவை கொஞ்சம்தான். இன்னும் பல இருக்கின்றன. ஓரளவு மேலோட்டமாக இந்த நம்பிக்கைகளைப் பார்த்தோமாயின், அவற்றை மூன்று பகுதியாக பிரிக்கலாம். ஒன்று பொதுவாக பெண் கடைபிடிக்க வேண்டிய நம்பிக்கைகள்; இரண்டு மாதவிடாய் சம்பந்தப்பட்டவை; மூன்று கர்ப்பக்காலத்தின் போது கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைகள்.

இவ்வற்றை இன்னும் ஆழமாக நோக்கும் போது ஏன் பெண்ணைச் சுற்றி இவ்வளவு அவநம்பிக்கைகள் என்னும் கேள்வி எனக்கு எழுந்தது. இதைப் படிக்கும் உங்களுக்கு அதே கேள்வி எழலாம். எனவே இதை யாராவது குறிப்பிட்டு ஆய்வு செய்திருக்கிறார்களா என தேடும்போது ஒரு ஆய்வு கட்டுரை கண்ணில் பட்டது. அவநம்பிக்கையும் பெண்களும் (Superstitions and Women) என்னும் இவ்வாய்வு கட்டுரையை எழுதியவர் மும்பையைச் சேர்ந்த சந்தோஷ் ஹிராமென் தக்கலே (Santosh Hiraman Takale) என்பவர்.

பெண்ணின் குணாதிசியங்களைப் பற்றி அவர் தனது ஆய்வுக்கட்டுரையில் சில விஷயங்களை முன்வைக்கிறார், அவை பின்வருவன:

1.மனோரீதியாக பெண் அடிமைப்படுத்தப்படுதல்.

2.குடும்பத்தில் ஒரு பெண் சந்திக்கும் பிரச்சினைகளும் சவால்களும் அவற்றிலிருந்து அவள் மீண்டும் எழாதப்படி கட்டமைக்கப்பட்டிருக்கும் சமுதாய அமைப்பு முறை மற்றும் மத கோட்பாடுகள்.

3.ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவளே தீர்மானிக்க முடியாதபடி உருவாக்கப்பட்டிருக்கும் ஆணாதிக்கம்.

இந்த மூன்று கருத்துக்களின்படி அவநம்பிக்கைகள் வலுக்கட்டாயமாக சிறுவயதிலிருந்தே பெண்ணுக்குள் திணிக்கப்பட பின் வருங்காலத்தில் அவளாகவே அவற்றை விரும்பி ஏற்றுகொள்ளும் ஒரு நிலைக்கு தள்ளப்படுகிறாள். இது பெண் மேல் செலுத்தப்படும் ஒரு சத்தமில்லாத வன்முறையாகவே கருதப்படுகிறது. இவையெல்லாம் சேர்ந்து பெண் என்பவள் தலைமுறை தலைமுறையாக அவநம்பிக்கைகளைக் கடத்தும் ஒரு ஊடகமாக மாறுகிறாள். இதைதான் சந்தோஷ் தனது ஆய்வு கட்டுரையில் இன்னும் விரிவாகச் சுட்டிக்காட்டி உள்ளார்.

முன்பு சொன்னதுபோல பெண்ணை சுற்றி பின்னப்பட்டிருக்கும் மூன்று பகுதிகளில் முதல் பகுதியைப்பற்றி கொஞ்சம் விவாதிக்கலாம். அதாவது பெண்ணை பற்றிய பொதுவான நம்பிக்கைகள். இவற்றுக்கான மேலும் செய்திகள் சேகரிக்க எனக்கு ஒரு ஆள் தேவைப்பட்டது. அவர் தான் என் பள்ளி உஸ்தாசா.

என் பள்ளி உஸ்தாசா எனக்கு மிகவும் நெருக்கமானவர். அவரின் வீட்டில் தங்கி சமைத்து உறங்கி வரும் அளவுக்கு நெருக்கம். அதேபோல் அவரின் கணவர் உஸ்தாசும் மிகவும் அன்பானவர். உஸ்தாசாவை நான் அக்கா என்றே அழைப்பேன். அவரிடம் இந்த மூடநம்பிக்கைகள் பற்றி ஒருநாள் கேட்டு கொண்டிருந்தேன். அதாவது இஸ்லாத்தில் இப்படிப்பட்ட நம்பிக்கைகளைக் குராஃபாட் என அழைப்பார்கள் என அவர் சொன்னார். மேலும் அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். இப்படிப்பட்ட நம்பிக்கைகளை நாம் கடைப்பிடித்தால் மதக்கோட்பாடுகளை மீறுவதாக ஆகும், ஆனால் அப்படியே கடைப்பிடிக்காமல் போனால் குடும்ப சம்பிரதாயங்களை மீறுவதாக பொருள்படும். செய்தாலும் தப்பு செய்யா விட்டாலும் தப்பு. இதில் முழுக்க முழுக்க பாதிக்கப்படுவது பெண்கள் மட்டும்தான் என அவரும் சந்தோஷ் முன்வைத்த அதே கருத்தை சொன்னார். நம்பிக்கைகள் குறித்து அவர் என்னோடு பகிர்ந்து கொண்ட விடயங்களை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

1. பெண் எந்த வாசலிலும் படிக்கட்டிலும் அமர கூடாது

ஒரு பெண் எந்த வாசலிலும் படிக்கட்டிலும் அமரக்கூடாது, அப்படி அமர்ந்தால் திருமணமாகாது என்பது ஐதீகம். இந்த நம்பிக்கை மலாய் சமூகத்தில் இன்றளவும் பரவலாகக் கடைப்பிடிக்கப்படும் ஒரு நம்பிக்கை. ஏன் இப்படி அக்காலத்தில் சொல்லப்பட்டது? இதற்கான காரணத்தைக் கண்டுப்பிடிக்க வேண்டும் என்றால் மலாய்க்காரர்களின் கட்டிடகலையை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அக்காலத்தில் மலாய் சமூக வீடுகளின் வாசல்கள் படிகள் வைத்து மாடிகளாக கட்டப்பட்டவை. அதோடு அக்கால மலாய் பெண்கள் பெரும்பாலும் அழகாக இருப்பார்கள். அவ்வாறு அவர்கள் வாசலிலோ அல்லது படிக்கட்டிலோ அமர்ந்திருந்தால் தெருவில் போகும் ஆண்கள் அடிக்கடி அவர்களை காண நேரிடும். இதனால் குறிப்பிட்ட அப்பெண்ணில் அழகு குறைந்து, பார்ப்பவருக்கு சலிப்படைந்து விடுமாம். யாரும் பெண் கேட்டு வரமாட்டார்களாம். இதுதான் காரணமாக சொல்லப்படுகிறது.

அறிவியல் ரீதியாக எதேனும் காரணம் உண்டா என ஆராய்ந்த போது அதுவும் அழகு சம்பந்தமாகவே கிடைத்தது. அக்காலப் பெண்களுக்கு கல்யாணம் என்பது வாழ்க்கை இலட்சியம். இது மலாய் சமுதாயத்துக்கு மட்டும் சொல்லப்படுவது இல்லை. மொத்த பெண்ணினத்துக்கு அக்காலத்திலிருந்தே வலியுறுத்தப்பட்டது. அதாவது அக்கால கன்னிப்பெண்கள் பெரும்பாலும் வெளியே செல்வதில்லை. அதோடு அவர்கள் படிக்கட்டிலும் வாசலிலும் நின்றால் வெயில் பட்டு அவர்கள் கறுத்து போகலாம். எனவே அப்படி நிற்கக் கூடாது என விதி விதிக்கப்பட்டது. இதற்கு கௌரவ ரீதியாக இன்னொரு காரணமும் உண்டு. எங்கே வெளியில் போக வர இருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் உறவாகி குடும்பத்துக்கு அவதூறு ஏற்பட்டுவிடும் என பயந்தும் இந்த விதி விதிக்கப்பட்டது.

ஆனால் இக்காலத்தில் இந்த நம்பிக்கை தேவையா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. இன்றும் பெண்கள் தங்கள் அழகில் மிகுந்த சிரத்தை எடுத்து கொள்கிறார்கள். அன்று வாசலும் படிக்கட்டும் என்றால் இன்று ஃபேஸ்புக், இன்ஸ்தாகிராம், டிவீட்டர் என்று சொல்லலாம். இதனால் திருமணமாகாது என்பதற்காக யாரும் இவற்றில் உட்புகாமலில்லை. ஆக இந்த நம்பிக்கை செயலிழந்து விட்டது எனவே சொல்லலாம்.

2. சமையலறையில் பெண் பாடினால் கிழவன்தான் மாப்பிள்ளையாவான்

இந்த நம்பிக்கையும் மலாய் சமூகத்தில் பரவலாகதான் சொல்லப்படுகின்றன. என் மலாய் தோழிகள் சொல்லியே நான் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியென்றால் சமையலறையில் விரும்பி பாடும் நான் இந்நேரம் யாரோ ஒரு வயதானவருக்கு மனைவியாக இருந்திருக்க வேண்டுமே. ஆனால் இல்லை. அப்படியென்றால் இந்த நம்பிக்கைகுள்ளும் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது என்று தானே அர்த்தம். அறிவியலால் இது இன்னும் நிருபிக்கப்படவில்லை. ஆனால் காரணம் மட்டும் கூறப்படுகிறது.

இது ஏன் என்று கேட்டேன் உஸ்தாசாவிடம். அதாவது சமையலறையில் பாடினால் கவனம் சிதறி சமைப்பதில் தவறு ஏற்படக் கூடும். இதனால் சமைக்கும் உணவு சுவையில் குன்றலாம். இளைஞன் கணவனானால் இப்படி சமைக்கப்பட்ட உணவினால் சண்டை சச்சரவு ஏற்பட்டு உறவு பிரியலாம். ஆனால் வயது முதிர்ந்த ஒரு கணவன் பக்குவமடைந்தவனானதால் சுவையில் கூட,குறைய இருந்தாலும் பொறுத்து கொண்டு இளமனைவியின்பால் அன்பு செலுத்துவான் என கூறப்படுகிறது. உங்கள் வாழ்வில் இப்படி ஏதேனும் நடந்துள்ளதா என்பதைப் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் அனுபவத்தைப் பொறுத்தே இந்த நம்பிக்கை காலத்துக்கு ஏற்றதா என்பதை கணித்துக் கொள்ளலாம்.

3. பெண் விரைவில் கல்யாணமாக பூக்குளியல் செய்ய வேண்டும்

இதுவும் பெண்ணும் திருமணமும் சம்பந்தப்பட்ட ஒரு நம்பிக்கையே. ஆனாலும் இது இருபாலராலும் அனுசரிக்கப்படுகிறது. பூக்குளியல் எனப்படுவது ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது என ஒற்றை எண்களாக வாசமுள்ள வெவ்வேறு நிறத்திலான பூக்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை தண்ணீரில் ஊற வைத்து அதை இரவு முழுக்க பனியில் வைத்து மறுநாள் தலையோடு குளிக்க வேண்டும் என்பதுதான் அதற்கான செய்முறை. பெரும்பாலும் மாக் ஊருட் (Mak Urut), பீடான் (Bidan) எனப்படும் மருத்துவச்சிகள் அல்லது அழகு ஒப்பனையாளர்களால் அனுசரிக்கப்படுகிறது. திருமணத்துக்கு முன்னும் இப்படி செய்கிறார்கள். மந்திரவாதிகளும் செய்கிறார்கள். இதற்காகச் சொல்லப்படும் காரணம் உடலில் இருக்கும் கெட்ட சக்திகளை வெளியேற்றி உடலுக்கு புது பொழிவையும் பிரகாசத்தையும் தரவல்லது இப்பூக்கள் என்பதாகும்.

அறிவியல் ரீதியாகவும் காரணம் சொல்லப்படுகிறது. அதாவது பூக்கள் பல நிறங்களால் ஆனது. ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு அதிர்வலைகளைக் கொண்டது. ஒவ்வொரு அதிர்வலையும் வெவ்வேறு சக்தி தாரத்தை கொண்டது. எனவே வேவ்வேறு அளவிலான சக்திகள் தண்ணீரில் கலக்கும் போதும் அது நம் உடலில் படும்போதும், நம் உடலில் இருக்கும் நெகதிவ் அயோன்கள் (negative ions) வெளியேற்றப்பட்டு இழந்து போன சக்தியை மீண்டும் பெறும். அதோடு பூக்களிலிருந்து வேளியேறும் வாசமானது எஸ்தர் (Ester) எனப்படும் வேதியல் வகையைச் சேர்ந்தது. இந்த வேதிபொருள் நீரில் கொஞ்சமாகக் கரையக்கூடியது. அதோடு இதை நுகரும்போது மூளையில் உள்ள ஹார்மோன் சுரப்பி (Hormanal gland) உந்தப்பட்டு அது மற்ற சுரப்பிகளை உந்தும். இதனால் உடல் பழைய உற்சாக நிலையை அடையும் என்பதற்காக இந்த பூக்குளியல் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது.

4.பெண்ணாகிவிட்டாலே கால்களை அகல வைத்து நடக்கக் கூடாது அல்லது வேகமாக தரை அதிர நடக்கக்கூடாது

இந்த நம்பிக்கை கொஞ்சம் சுயநலமானது என்றே படுகிறது. பெண்கள் அடங்கி போகவேண்டும், அதிர்ந்து நடக்கக்கூடாது, பதுமையாக நடந்து கொள்ளவேண்டும் என்றெல்லாம் சொல்வது தாம்பத்தியத்தின்போது பெண்ணின் மீது அவள் கணவனுக்கு எந்த சந்தேகமும் வந்துவிடக்கூடாது என்பதற்காக என சொல்லப்படுகிறது. இது ஏன் என்று பார்த்தோமானால் வேகமாக நடந்தாலோ காலை அகல வைத்து எதேனும் வேலையில் ஈடுப்பட்டாலோ பெண்ணின் யோனி வாயில் உள்ள ஹைமன் (Hymen) என்னும் மெல்லிய பகுதி கிழிய வாய்ப்பு உண்டு. ஆனால் அக்கால பெண்கள் இக்கால பெண்களைப் போல தாவுதல், ஓடுதல் போன்ற கடின நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.

ஆக, அக்காலத்தில் பெண்ணின் ஹைமன் கிழிய ஒரே காரணம் என நம்ப படுவது ஒரு ஆணுடன் கொள்ளும் உடலுறவினால்தான். எனவே எங்கே தனக்கு முன் தன் மனைவி இன்னொரு ஆணுடன் உறவு கொண்டு விட்டாலோ என சந்தேகப்படகூடிய சூழ்நிலை வந்து விடுமோ என அஞ்சியே பெண்ணின் நடவடிக்கைக்கு தடைப்போட்டுள்ளனர். அதற்கு கற்பு என்ற அலங்காரத்தினை மாட்டி விட்டிருக்கிறார்கள். காலங்காலமாய் பெண்களிடையே ஊறியும் போயிருக்கிறது இந்த கற்பு கலாச்சாரம். ஆனால் இன்று ஆண்களுக்கு இணையாக பெண்களும் உள்ளார்கள். சைக்கள் ஓட்டுதல், மலையேறுதல் ஜிம்னாஸ்டிக் என பல நடவடிக்கைகள் ஹைமன் கிழிய ஏதுவாகவே இருக்கிறது. இது ஹைமன் உள்ளவர்களுக்கு. ஒரு சிலருக்கு மருத்துவ ரீதியாக யோனி துவாரம் இல்லாமலும், ஒரு சிலருக்கு ஒரே யோனியில் பல துவாரங்ளும் சிலருக்கு பிறக்கும் போதே ஹைமன் இல்லாமலும் என இப்படி பல விஷயங்கள் உள்ளன.. எனவே இதை காரணமாக வைத்து ஒரு பெண்ணின் அன்பை எடைபோடுவது இக்காலத்துக்கு ஏற்றதல்ல. எனவே உடலுக்கும் கற்புக்கும் தேவையில்லாமல் முடிச்சிப்போடப்படிருக்கிறது என்பதே இவ்விடம் தெளிவு. இது உலகில் எல்லா சமூகத்திலும் நடந்து வரும் ஒரு நிலை..

தங்களின் சுகத்தை கருத்தில் கொண்டே ஆண் சமூகம் பெண் இப்படிதான் இருக்க வேண்டும் என்று சட்டதிட்டங்கள் கொண்டு வந்து இருப்பது எவ்வளவு கொடூரம். அதையே ஏன் ஆண்கள் இப்படிதான் இருக்க வேண்டும் என விதி நிருவபடவில்லை? எனவே இந்த நம்பிக்கை காலத்துக்கு ஒவ்வாத ஒரு நம்பிக்கை எனவே தோன்றுகிறது. இப்படி பெண்களையே சுற்றி சுற்றி துரத்தும் அவநம்பிக்கைகள் ஏற்று கொள்ள கூடியவையா இல்லையா என்பது அவரவர் அறிவு சம்பந்தபட்ட தேர்வு. இதைப்பற்றி எழக்கூடிய விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன.

பின் குறிப்பு: இக்கருத்து ஒரு சிலரோடு உரையாடியும் பின்வரும் அகப்பக்கத்திலிருந்தும் பெறபட்டது.

http://www.ways2gohealthy.com/2013/12/17/bust-the-myths-on-menstrual-cycle-13-superstitions-revolving-around-periods/

http://www.buzzle.com/articles/pregnancy-superstitions-around-the-world.html

http://www.academia.edu/5979155/SUPERSTITIONS_AND_WOMEN

http://jagoansilat.blogspot.com/2012/10/rahsia-mandi-bunga-mengikut-kajian-sains.html

http://www.healthresource4u.com/hymen-definition-location-pictures-repair-broken-hymen-surgery-hymen.html

http://vallinam.com.my/version2/?p=2146

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அவநம்பிக்கையும் அறிவியல் கூறும் – 4

by நோவா

cc10b930-d228-4cc7-a788-ffe64b563cf8_S_secvpf.gif
கடந்த தொடரில் பெண்ணும் அவநம்பிக்கையும் எப்படி ஒன்றோடு ஒன்று செர்த்து பிணைக்கப்படிருக்கின்றன என்பதை பற்றி பார்த்தோம். இத்தொடரும் பெண்ணைப் பற்றியதுதான். ஆனால் பெண்ணுக்கு மட்டுமே ஏற்படும் இயற்கை உபாதை எப்படி சில நம்பிக்கைகளை உருவாக்கியுள்ளது என்பதை பார்ப்போம்.
 
உலகை ஒரு பெண் தாய்மை அடைய வேண்டுமாயின் அவளுக்கு மாதவிடாய் கண்டிப்பாக எற்பட்டிருக்க வேண்டும். தாய்மையுடைய முதல் தகுதியே அவளுக்கு மாதாமாதம் கண்டிப்பாக விந்து புணரா கருமுட்டை உடைந்து உதிரமாக வெளியேற வேண்டும். இதுதான் அவள் ஆரோக்கியமான பெண் என்பதற்கு அடையாளம். அப்படியிருக்க, மாதவிடாய் காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் தீண்ட தகாதவளாகவும் கறை கொண்டவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள். அதுவும் மாதவிடாய் குறித்து பொது இடத்தில் கண்டிப்பாகப் பேசவே கூடாது. அதுவும் மாற்று பெயரிலில்தான் அதை குறியிட வேண்டும். ஏன், நானும் இந்த சந்தர்ப்பங்களுக்குள் உந்தபட்டிருக்கிறேன். இன்னொரு விஷயம். ஆண்கள் இருக்கும் போது இது பற்றி பேசுதல் கூடவே கூடாது. இப்படி பல கட்டுப்பாடுகள். இது எல்லா சமுதாயத்திலும் நாட்டிலும் கலாச்சாரத்திலும் உண்டு என்பதுதான் நிஜம்.
 
எனவே பெண் சம்பந்த பட்ட நம்பிக்கைகள் குறித்து தேடலில் ஈடுப்பட்ட போது மாத விடாய் பற்றிய பல நம்பிக்கைகள் அகப்பட்டன. அவற்றை இதற்கு முந்தைய தொடரில் மேலோட்டமாக சொல்லியிருந்தேன். இந்த தொடரில் கொஞ்சம் ஆழமாக அலசலாம் என்பதுதான் என் நோக்கம். ஏன் மாதவிடாய் என்பது அசூசையாக கருதப்படுகிறது? அது உதிரம் என்பதாலா? ஆண்கள் அதை அனுபவிக்காததாலா? பேய் என்னும் பிம்பம் உதிரத்தை உறியும் என்று நம்பிக்கை இருப்பதாலா? இல்லை அதன் உருவாக்கத்தின் கூறு புரியாததாலா?
 
மாதவிடாய் என்பது என்பது பெரும்பாலான பெண்களுக்கு ஒரு கஷ்ட காலம் என்னையும் சேர்த்து. இந்நாள்  வலிகள் நிறைந்தது. மனோரீதியாக குண மாற்றங்களை ஏற்படுத்த கூடியது. எனவே இந்த நேரத்தில்தான் ஒரு பெண்ணுக்கு அரவணைப்பும் ஆறுதலும் அதிகம் வேண்டும். தீட்டு என்று ஒதுக்க கூடாது. சரி, இப்போது முதல் நம்பிக்கையை பார்ப்போம்.
 
1.   மாதவிடாய் காலத்தில் வெளியிலோ அல்லது இரவு நேரத்திலோ வெளியே செல்ல நேரிட்டால் கொண்டையிலோ அல்லது சடையிலோ இரும்பு ஆணி ஒன்றை வைத்து கொள்ள வேண்டும்.
என் அம்மா அடிக்கடி சொல்லுவார். மாதவிடாய் காலத்தில் இரவில் எங்கேயும் வெளியே செல்ல கூடாது. பேய்களும் ஆவிகளும் பெண்ணை துரத்துமாம். இதை விரட்ட கொண்டையிலோ அல்லது பையிலோ இரும்பு ஆணியை வைத்து கொள்ள வேண்டும் என்பதை பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். நானும் ரொம்ப நாள் இதை பின்பற்றி இருக்கிறேன். ஆனால் இதற்கான காரணம் ஆணியில் அல்ல இரும்பில் என்பதுதான் என்பதுதான்.
 
இங்கே நேரம் என்பது முக்கியமில்லை. ஆனால் இரும்பு ரொம்பவும் முக்கியம். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உதிர போக்கு அதிகம் இருக்கும். இரத்தத்தின் அடிப்படை பொருள் ஹீம் (Haem). இது இரும்பு சக்தியை அடிப்படியாக கொண்டுதான் உருவாகும். எனவேதான் உங்கள் இரத்தத்தை நீங்களே ருசித்து பாருங்கள். அது இரும்பு போன்ற ஒரு சுவையை தரும். ஆதலால் குறிப்பாக மாதவிடாய் காலத்தில் பெண்கள் உட்கொள்ளும் உணவில் இரும்பு சக்தி கொண்ட பிட்ரூட், கீரைகள் என பலவற்றை உண்ண வேண்டும். இதனால் அளவுக்கு அதிகமாக வெளியேறும் குருதி இவ்வாறாக உட்கொள்ளும் உணவினால் ஈடுச்செய்யப்படும். ஆனால் இது இரும்பு துண்டு ஆணி என பல்வேறாக பொருள் சொல்லப்பட்டு ஆவிகளோடு சம்பந்தப்படுத்தப்பட்டு ஒரு புதிய நம்பிக்கையாக உருவாக்கம் பெற்று விட்டது.
 
ஒரு உயிரில்லாத ஆணியா அவளை பேய் பிசாசிடமிருந்து காப்பாற்றிவிட போகிறது? நானும்தான் மாதவிடாய் காலத்தில் காட்டிலும் மேட்டிலும் மலையுச்சியிலும் இரவு நேரங்களில் முகாமிட்டு தங்கியிருக்கிறேன். இங்கே இரும்பு சத்துள்ள உணவுதான் முக்கியமே தவிர இரும்பு ஆணியல்ல.
 
2.   மாதவிடாய் காலத்தில் பூஜை அறையில் புழங்க கூடாது. (சாமி கும்பிட கூடாது)
அடுத்து மாதவிடாய் காலத்தில் பெண்கள் கடவுளுக்கு தூரமானவள். எனவே அவள் சாமி கும்பிட கூடாது, விளக்கு ஏற்ற கூடாது, தெய்வ சம்பந்தப்பட்ட எங்கும் செல்ல கூடாது என பல நம்பிக்கைகள். இது மிகவும் சர்ச்சையான விஷயம். (எல்லா சமயங்களுக்கும் பொதுவான கருத்துதான் இது. எந்த சமயத்தையும் குறிப்பிட்டு சொல்ல கிடையாது). இங்கே என் கருத்து என்னவென்றால் மாதவிடாய் என்பது சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது, வியர்வை வெளியேறுவது போன்ற இயற்கையான ஓர் உடல் கழிவுதான். பின்பு ஏன் இறைவனுக்கும் பெண்ணுக்குமான தொடர்பு மாதாமாதம் துண்டிக்கப்படவேண்டும்? இதனால் எந்த விதத்தில் குற்றம் ஏற்பட போகிறது? உலகில் எதுவுமே புனிதம் அற்ற நிலையில் மாதவிடாய் எந்த விதத்தில் இல்லாத புனிதத்தை கெடுத்து விடும்? கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தானே.
 
மலம் கழிப்பதை வியர்வை வருவதை சிறுநீர் கழிப்பதை நாம் யாருக்கும் அறிவிப்பதில்லை. பின்னர் இறைவனுடனான ஆத்மார்த்தமான உரையாடல் நிறுத்தப்படுவது மாதவிடாயினால்தான் என அதிகாரபூர்வமாக அறிவிப்பதுப்போல் அல்லவா இந்த நிகழ்வு இருக்கிறது. ஒரு பெண் தனக்கு மாதவிடாய் என்று சொன்னால்தான் பிறருக்கு தெரியும். சொல்லாவிட்டால் தெரியாது. அதற்கு எந்த முக்கியதுவமும் கிடையாது தாய்மைக்கான நேரம் வரும் வரை. எனவே தெய்வக்காரியங்களிலிருந்து பெண்களை முடக்கி வைப்பது முறையல்ல என்றே தான் தோன்றுகிறது.
 
இது அக்காலத்தின் பெண்ணடிமை கூறு. அதுவே காலப்போக்கில் கடைப்பிடிக்கப்பட்டு நம்பிக்கையாக உருவெடுத்திருக்கிறது.
 
3.   மாதவிடாய் குருதியும் மாதவிடாய் கண்ட பெண்ணும் தீண்டதகாதவர்கள்.
இந்த நம்பிக்கையின் பின்புலனை நான் வேதாகமத்தில் ஆராய்ந்தேன். வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டின் லேவியராகமதில் 18-ஆம் அதிகாரத்தில் 19-ஆம் வசனத்தில் பின்வருமாறு கூறப்படுகிறது.
 
‘மாதவிடாயுள்ள பெண்ணோடு சேர்ந்து அவள் அசுத்தத்தை வெளிப்படுத்தலாகாது’
 
இந்த கூற்றுப்படி பார்த்தோமானால் மாதவிடாயின் போது பெண் ஆணால் தீண்டப்படகூடாது. உடலுறவு கூடாது. அப்போது வெளிப்படும் குருதி இருவருக்குமே அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஆணானவன் பெண்ணை அந்நிலைக்கு கட்டாயப்படுத்தக்கூடாது என்றே சொல்லப்பட்டது. அதையும் மீறி உறவு கொண்டால் நோயும் கிருமிகளும் பரவ வாய்ப்புண்டு என்பதற்காகவும் சொல்லப்பட்டது. எல்லாராலும் பெண்ணானவள் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்பதற்காக அல்ல. இதைப்பற்றி தொடர்ந்து ஆராயும் போதுதான் இது எல்லா மதங்களிலும் அக்காலத்தில் பின்பற்றப்பட்டது.  அதோடு மட்டுமின்றி அக்காலத்தில் பெரியவர்கள் மாதவிடாய் கொண்ட பெண் அதிகபடியான குருதி வெளியேற்றத்தால் வெகுவாக களைப்படைவாள் என உணர்ந்து அவளுக்கு கொஞ்சம் ஓய்வு தந்தார்களே தவிர இப்படி ஒரேயடியாக ஒதுக்க வேண்டும் என்பதற்காக இல்லை. ஆனால் இன்று என்ன நடக்கிறது? இதற்கு மாறாக அல்லவா நடக்கிறது. எனவே நாம் சரியான புரிதலை கொண்டுள்ளோமா என்பதை சீர்தூக்கி பார்க்க வேண்டியது அவசியம்.
 
4.   மாதவிடாய் நேரத்தில் தலைக்கு குளிக்கக்கூடாது.
5.   மாதவிடாய் நேரத்தில் தண்ணீரில் நீந்தக்கூடாது.
இந்த இரு நம்பிக்கைகளும் தண்ணீரும் பெண்ணும் கொண்ட உறவு என சொல்லலாம். மாதவிடாய் காலத்தில் உடல் மிகவும் சோர்வாக இருக்கும். அதிகம் அசதியாக இருக்கும். சிலருக்கு அதிகம் குளிராக இருக்கும். சில நேரங்களில் கால்களில் காலுரைகளை அணிந்து கொண்டு தான் நடமாட வேண்டி இருக்கும். உடலின் உஷ்ணம் பெரிதும் குறைந்து இருக்கும். ஆனாலும் மாதவிடாய் கண்ட பெண் சுத்தமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் தான் பெண்ணின் பிறப்புறுப்பின் தூய்மை அதிகம் பாதுகாக்கப்படும். எனவே அவள் அதிகம் குளிப்பாள். பொதுவாகவே இரவில் தலையோடு குளித்தால் நுரையீரலில் நீர் கோர்த்து கொள்ளும் என்பதால் ஆணும் சரி பெண்ணும் சரி யாராயிருந்தாலும் குளிக்க கூடாது. அப்படியிருக்க உடல் அதிகபடியாக சோர்வான போது மட்டும் எப்படி குளிக்க முடியும்? இது தான் உண்மையான காரணம். (அனுபவ உண்மை: மாதவிடாயின் போது கடலிலோ அல்லது ஆற்றிலோ இறங்கினால், மாதவிடாய் நின்று விடுகிறது).
 
6.   மாதவிடாய் காலத்தில் பெண் பேய்களுக்கு விருப்பமானவள்.
இதை தொடர்ந்து மாத விடாய் காலத்தில் பெண் வித்தியாசமாக நடந்து கொள்வாள். பேய்கள் அவளோடு இருக்கும் என பலவாறாக நம்பப்படுகிறது. இது எதனால்? மீண்டும் நாம் மாதவிடாய் ஏற்ப்படுத்து மாற்றங்களை புரிந்து கொள்ள வேண்டும். இதை தான் mirrorgirls.ik வலைபக்கத்தில் இவ்வாறாக கூறப்படுகிறது.
 
//உடலியல் சுழற்சி முறையால் மாதவிலக்கான பெண்ணின் உடலுக்குள் பலவிதமான மாற்றங்களை உருவாக்குகிறது. குருதியானது சிறிது சிறிதாக தொடர்ந்து வெளியேறும்போது அவள் பலவிதமான சக்திகளை இழக்கிறாள், இதனால் அவள் களைப்படைகிறாள். இந்த நேரங்களில் சிலருக்கு தலைவலி கூட கடுமையாக இருக்கும். இந்த மாற்றங்களால் அருவருப்புத் தன்மை தோன்றுகிறது. சில நேரங்களில் அடி வயிற்றில் பலமான வலியும் உண்டாகும். இந்த மாற்றங்களால் அழுகை, விரக்தி, கோபம், எரிச்சல், படபடப்பு,சோர்வு, ஒருவித மயக்கம் போன்றன உண்டாகும். இதன் காரணங்களால் அவள் தன் வேதணைகளை சினத்தில் காட்டலாம், சில நேரங்களில் சில பேரிடம் எரிச்சல் கொள்வாள் அல்லது எரிந்து விழுவாள்! எந்தப் பெண்ணானவளும் இவையனைத்தையும் உடனே வெளிக்காட்டமாட்டாள். தன் ஆழமான மனதிற்குள் புதைத்து விடுவாள்! சில நேரங்களில் மிகவும் முடியாமல் போகவே…. தன் எல்லாவிதமான வேதனைகளையும் சேர்த்து கோபத்தில் வெளிப்படுத்துவாள்//
 
இறுதியாக, நாம் யோசித்தோமானல், மாதவிடாய் என்பது ஓர் இயற்கை உபாதையே. அதை காரணம் காட்டி பெண்ணை ஒதுக்குவது சரியாகாது. யோசிப்போம் இது தகுமா தகாதா என்று. அவசியத்தை புரிந்து நடந்து கொள்வது தான் உச்சிதம். மாதவிடாய் பற்றிய தெளிவு எல்லாருக்கும் வேண்டும். இன்னும் ஒதுக்கு முறை கூடாது என்பதே என் கருத்து. மாதவிடாயின் போதும் பெண் தெம்போடு நடமாட இது ஒரு உத்வேகமாக இருக்கும். மாற்று கருத்துக்கள் வரவேற்க படுகின்றன.
 
பின் குறிப்பு: இக்கருத்து ஒரு சிலரோடு உரையாடியும் பின்வரும் அகப்பக்கத்திலிருந்தும் பெறப்பட்டது.
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.