Jump to content

குடி கும்மியடி, குடிக்காட்டில் பம்மியடி


Recommended Posts

இதுதான் வெளிநாட்டில் எம்மவர்கள் தற்போதைய கலாசாரம். நாட்டில் குடிப்பவனை கேவலமாக பார்க்கும் எம் இனம், வெளிநாட்டில் குடிக்காதவனை கேவலமாக பார்க்கும் ஒரு நிலைமையை பார்த்தேன்.

வயது எவ்வளவு வந்தாலும் குடியில் ஒரு முதுமையை காணவில்லை. வயது வந்த ஒரு ஐயா கேட்டார், என்ன தம்பி ஒரு பியர் உடன் சுருண்டுவிட்டாய்?

ஏன் குடித்து விட்டு பிள்ளைகள் முன் கும்மியடிக்கும் அப்பா அம்மா நாளைக்கு பிள்ளை கஞ்சா அபின் அடிக்கேக்க எப்படி தடுக்க முடியும்?

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

உண்மை..! அண்மையில்கூட இந்ந அனுபவம் ஏற்பட்டது. குடிக்க விருமபாதவனைப் பார்த்து 'நீர் என்ன யோக்கியரா' என்பதுபோலத்தான் கேட்பார்கள்.. சிலர் குடிக்காமல் விடுவது வேறு சிலருக்கு மனச்சாட்சியை உறுத்துவதாக உள்ளது.

Link to comment
Share on other sites

நான் UK போனவுடன் கடையில் வேலை செய்யும் போது, வரும் வெள்ளையள் அநேகமானதுகள் குடிகாரன்கள் தான். எங்கடை ஆட்கள் மலிவாக விற்கும் பியர் வேண்டத்தான் எங்கடை கடையளுக்கு வாறதுகள். அதுகளை பார்க்கும்போது நான் நினைத்தேன் வெள்ளையள் வாழ்கை தண்ணியில் தான் ஓடுது என்று. இப்படிதான் எங்கடை ஆட்களும் நினைத்துகொண்டு குடிச்சு கொண்டு இருக்குதுகள்.

கடையை விட்டு வெளிய வந்தபிறகு தான் தெரிஞ்சுது அநேகமான படிச்ச வெள்ளையள் அளவாக குடிக்குங்கள் அல்லது குடிக்கதுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க பிறந்ததில் இருந்து இது வரை.. மது மாது போதை இவை எதனையும் தொடல்ல. யாரும் அதற்காக கேவலமாப் பார்த்ததா தெரியல்ல. ஆச்சரியமா பார்த்தோர் தான் உண்டு. இதில முக்கியம் நாங்க கடந்து வந்த பாதையில் பட்டறிவு.. படிப்பறிவு இருந்த மக்கள் அதிகம் இருந்தாக இருக்கலாம்.

 

குறிப்பாக வெள்ளையர்கள் சேர்ந்து குடிக்காட்டி தரக்குறைவாக நினைப்பார்கள் என்று சொல்லும் எம்மவர்களுக்கு.. அப்படி எதுவுமே இல்லை. வெள்ளையர்களும் குடிக்காத மனிதர்களை அவர்களுக்குரிய சிறப்புடன் தான் பார்க்கின்றனர். குடிப்பது.. குடிக்காதது.. அவரவர் விருப்பம் என்பதை உணர்கிறார்கள்.. மதிக்கிறார்கள். 

 

இங்கு யாழில் தான் ஒரு சிலர் யதார்த்தம் தெரியாமல்.. எங்களை எல்லாம்.. தரக்குறைவான வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக செய்துள்ளனர். அவர்களின் அறியாமை தான் அதற்கு காரணம் என்று உடனவே அவர்களை..  மன்னிச்சுடுறது.  :)  :icon_idea:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் சொல்வதும் உண்மை.. மேலை நாட்டவரின் கொண்டாட்டங்களுக்குப் போனால் தனிநபர் சுதந்திரத்தை மதிக்கிறார்கள். சொந்தக்காரனுகள் கூப்பிட்டால் கட் பண்ணுறதுதான் நல்லது.. :o:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் UK போனவுடன் கடையில் வேலை செய்யும் போது, வரும் வெள்ளையள் அநேகமானதுகள் குடிகாரன்கள் தான். எங்கடை ஆட்கள் மலிவாக விற்கும் பியர் வேண்டத்தான் எங்கடை கடையளுக்கு வாறதுகள். அதுகளை பார்க்கும்போது நான் நினைத்தேன் வெள்ளையள் வாழ்கை தண்ணியில் தான் ஓடுது என்று. இப்படிதான் எங்கடை ஆட்களும் நினைத்துகொண்டு குடிச்சு கொண்டு இருக்குதுகள்.

கடையை விட்டு வெளிய வந்தபிறகு தான் தெரிஞ்சுது அநேகமான படிச்ச வெள்ளையள் அளவாக குடிக்குங்கள் அல்லது குடிக்கதுகள்.

M.P. உங்கள் வசனநடையைப் பார்க்க உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று வேறுபாடு பார்க்கும் ஒருவராகத் தெரிகின்றது. சமூகம், மக்கள், கலாச்சாரம் என்று வேறுபாடுகள் உள்ளவர்களையும் அனுசரித்துப் போகும் மக்கள்தான் மேற்குநாடுகளில் (பிரித்தானியா உட்பட) அதிகம் பேர் இருக்கின்றார்கள். எனவே வெள்ளை குடிக்குது நாங்கள் குடிப்பதில்லை என்றும், படிச்ச வெள்ளைகள் பரவாயில்லை, படிக்காதவர்கள் உதவாதவர்கள் என்றும் பாகுபாட்டைப் பார்ப்பதை விட்டுவிட்டு எல்லோரும் மனிதர்கள், அவர்களில் பலவிதம் என்று யோசித்துப் பாருங்கள்.

எல்லா சமூகத்திலும் குடிப்பவர்களும் இருக்கின்றார்கள், குடிக்காதவர்களும் இருக்கின்றார்கள். குடிக்காதவர்கள் எல்லாரும் ஒழுக்கமானவர்கள் இல்லை. நிறைய ஆசாடபூதிகள் உலவுகின்றார்கள்!

மற்றது மனிதர்களை அஃறிணையில் எழுதுவதை விட்டுவிடுங்கள்.

Link to comment
Share on other sites

கிருபனின் கருத்துடன் உடன்படுகிறேன். M>P எப்பவும் படித்தவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்றமாதிரி காட்ட முயல்கிறார். 

Link to comment
Share on other sites

வெள்ளையை ஒரு ஒப்பீடாக எடுப்பது நாம் இப்பவும்  மனதளவில் ஒருவித அடிமை மனப்பான்மையில் இருப்பதினால்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய் நாட்டை கைவிட்டு.. வெள்ளையின் நாட்டில் உட்காரும் வரை அடிமைத்தனம் தெரியல்ல.. நல்ல சில விடயங்களை ஒப்பிடுவதில் மட்டும் சில ஆக்களுக்கு அடிமைத்தனம் பளிச்சென்று தெரியுது.  :lol:  :D

Link to comment
Share on other sites

அருமையான விளக்கம்  கிருபன் .

 

ஒரு சிறிய வட்டத்திற்குள் நிற்பதால் வரும் கருத்துக்கள் என்றுதான் நினைக்கின்றேன் .


வெள்ளை நாட்டில் உட்காருவதற்கும் அடிமைக்கும் என்ன சம்பந்தம் . :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்.பி யாழில் இட்ட ஒரு சில பதிவுகளிலேயே அவரது பரந்த அனுபவமின்மை துருத்திக் கொண்டு தெரிகிறது என்பது என் கருத்து! படிச்ச வெள்ளையள் படிக்காத வெள்ளையள் கதை இப்ப மீளவும் அதையே காட்டுது. இதற்கு ஒரே வழி வீட்டை அடைஞ்சு கிடக்காமல் நாலு உள்ளூர் மக்களோட தோள் உரசிப் பழக வேணும் (rub shoulders!) ! குடிச்சுப் புரள வேணும் எண்டு அர்த்தம் இல்லை! ஆனால், அவர்கள் குடிக்கும் போது கூட இருந்து பச்சைத் தண்ணியையாவது குடிச்சு social intelligence ஐ வளர்த்துக் கொள்ள வேணும்! இது எல்லாம் இல்லாமல் 150K சம்பளத்தோட வேலை உங்களுக்கு யார் தந்தான் எண்டு தான் எனக்கு விளங்கேல்ல! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MP ண்ட அவுஸ் ஊர்க்காரர், ஒருத்தர், கல்லோட வந்து, 'உவர் படிப்பு பத்தி கதைக்கிறார் அடிக்கடி, கதைக்கிறார். உது யாழ்ப்பாணப்புத்தி எண்டு', எறியப்போறார். கவனம் பார்த்து. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடிப்பவர்களில்... மூன்று வகை உண்டு.

 

ஒன்று, மொடாக் குடியர். 
அவர்களுக்கு, தினமும் குடி வேண்டும்.
இவர்களால்... சமூகத்துக்கு பிரச்சினை.

 

இரண்டாவது, டீசண்டாக... கிழமைக்கு ஒரு நாள் மட்டும் குடிப்பவர்கள். (என்னைப் போல)
இப்படியானவர்கள்..... வேலை அலுப்புக்கும்,  சிறிது சந்தோசத்துக்கும் மட்டுமே குடிப்பார்கள்.
இவர்களால்.. சமூகத்துக்கோ, யாழ்கள நிர்வாகத்துக்கோ... எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. :D  :lol:

 

மூன்றாவது  வகையானவர்கள், ஆபத்தானவர்கள்.  தாங்கள் குடிப்பதில்லை என்று பலருக்கும் சொல்லி....
பிறரை ஏமாற்றிக் கொண்டு இருப்பார்கள்.
ஆனால்... அவர்களில் பலர், வீட்டு அலுமாரியில் ஒளித்து வைத்து குடிப்பார்கள்.
இது, அவர்களின்... வீட்டில் உள்ளவர்களுக்கே தெரியாது என்பது தான்... ஆச்சரியம்.

 

ஒருவர் குடிப்பதை, வைத்து.... அவரின் குண இயல்புகளை... கணிப்பது, முட்டாள்தனமானது. :)

 

 

Link to comment
Share on other sites

சிலபேர் படித்தவனாக.. பண்பாளனாக.. குடிக்காதவனாக நல்லவன்போல இருப்பாங்கள்.

பக்கத்தில போய்ப் பாருங்கள்.. முகம் 'குப்'பெனச் சிவந்துவிடும்.
ஹோமோசெக்ஸ்காரங்க!! 

:o  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலபேர் படித்தவனாக.. பண்பாளனாக.. குடிக்காதவனாக நல்லவன்போல இருப்பாங்கள்.

பக்கத்தில போய்ப் பாருங்கள்.. முகம் 'குப்'பெனச் சிவந்துவிடும்.

ஹோமோசெக்ஸ்காரங்க!! 

:o  :icon_idea:

 

அட... இந்தக், கண்றாவியும்.... இவங்களுக்குள்ளை, ஒளிஞ்சு கொண்டிருக்குதா?

அதுதான்... குடிக்காதவர்கள் என்று சொல்லுபவர்களை, உடனே... நம்பி, ஏமாறக் கூடாது. :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  திரி பல குடிமக்களை தாக்கியிருப்பது தெரிகிறது... :lol:  :D

 

 

எப்பொழுதும்  இப்படித்தான்

இன்னொன்றின் மீது பழியைப்போட்டு தப்பும் பழக்கம்

தமிழனது சொத்து.. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் இத்திரி பல குடி மக்களை தாக்கியதால்.. அவர்கள் பொங்கி எழுகிறார்கள்.

 

அதிலும் சிலர் சொந்த மூட நம்பிக்கைகளை விதைக்கிறார்கள்.

 

இன்னும் சிலர் வெள்ளையரின் நாட்டில் தாங்கள் அடிமைகளாக உள்ள உணர்வை பெற முடியாத அளவுக்கு குடியோடு வாழ்கிறார்கள்.

 

இன்னும் சிலர் குடிகாரர் அல்லாதவர்கள் லெஸ்பியன்.. கேய் என்ற சொந்த முடிவில் வாழ்கிறார்கள்.

 

இன்னும் சிலர் வெள்ளை எல்லாம் குடிச்சால் தான் மனிசரா மதிக்கும் என்ற இன்னொரு கற்பிதத்தை வழங்க.. தாங்கள் என்னவோ.. வெள்ளைகளோடு பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருவது போலவும் கதை அளக்கிறார்கள்.

 

உண்மையில்.. எம் பி சொல்ல வந்தது.. மாமிசம் உண்ணாதவர்களுக்கு எப்படி சுய உரிமை உள்ளதோ.. அதே குடி வெறியற்றவர்களுக்கும் உலகம் வழங்கி வருகிறது. வெள்ளைகளும் வழங்கி வருகின்றனர்.

 

முன்னர்  நாங்கள் வேலை செய்த இடத்தில்.. கிறிஸ்மஸ்.. மற்றும் நியூ இயருக்கு உயர்ந்த ரக வைன் எல்லா ஸ்ராவ்வுக்கும் வழங்குவார்கள். முதற் தடவை நாங்கள் அதனை நிராகரித்த போது முகாமையாளர்.. ஆச்சரியத்தோடு.. அதை எல்லோரோடும் பகிர்ந்து கொண்டதோடு அதற்கு சம மதிப்புள்ள உயர் ரக சொக்கிலேட்டுக்களை அன்பளிப்பாக தரும் வழக்கத்தை உருவாக்கிக் கொண்டார்.

 

இதுதான் வெள்ளைக்கும் நம்மவருக்கும் உள்ள வித்தியாசம். இந்தத் தலைப்பும் இங்கு பகிரப்படும் கருத்துகளும்.. அதுக்குச் சான்று.  :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அளவாக, குடிப்பனிடம் உள்ள திறமை.....
அறவே.... குடிக்காதனிடம் இல்லை, என்பதை.... அமெரிக்காவில் உள்ள சிக்காக்ககோ பிரபல பல்கலைகழகம் தமது ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளதை அண்மையில்... வந்த, ஜேர்மன் மருத்துவ சஞ்சிகை ஒன்றில் வாசித்தேன்.
அவற்றை..... பலர் வாசிக்க, சந்தர்ப்பம் கிடைத்திராது என்பது... இப்போது தான் புரிகின்றது. :rolleyes:  :D

Link to comment
Share on other sites

வெள்ளை மற்றவன் தனது நாட்டில் அகதியா.. அதிதியா என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான்.. எங்கடையாட்கள்தான் அடிமைத்தனத்திலும் ஆர் பெரிசு என்று தற்புராணம் பாடுவார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளியில போய் அசூர் என்று சொல்லிப் பார்க்கல்லப் போல. வெள்ளை நல்ல மரியாதை காட்டும்.  :icon_idea:  :D

Link to comment
Share on other sites

வயது போனதுகளுக்கு சொன்னால், உலகப் போர்மூட்டம் தாங்கள் பட்ட கஸ்டத்தை கதை கதையாகக் கூறுவார்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளியில போய் அசூர் என்று சொல்லிப் பார்க்கல்லப் போல. வெள்ளை நல்ல மரியாதை காட்டும்.  :icon_idea:  :D

 

இங்கிலாந்தும், இந்தியாவும் இன்னும்.... பழம் பெருமை பேசி, தமக்குள் புளகாங்கிதம் அடையும் நாடுகள்.

ஆனால்... பக்கத்தில் உள்ள ஐரோப்பிய நாடுகள் எல்லாம்... குதிரை வேகத்திலை போய்க் கொண்டிருப்பது அவர்களின்.. அறியாமை. :D

பாவங்ககள்... கனவு,, ஆவது கண்டு விட்டுப் போகட்டும்.

இதைத்ததான்.... முன்னாள் இந்திய ஜனாதிபதி.... அப்துல் கலாமே... சொன்னார்.

கனவு காணுங்கள்.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் இருந்து இங்கிலாந்து நோக்கி ஏன் படை எடுக்கிறார்கள்..?! இங்கிலாந்தில் இருந்து ஜேர்மனிக்கு வருவது ரெம்ப ரெம்ப குறைவு.. ஏன்..?! பழமை பேசவோ.. பெருமை பேசவோ?!  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் இருந்து இங்கிலாந்து நோக்கி ஏன் படை எடுக்கிறார்கள்..?! இங்கிலாந்தில் இருந்து ஜேர்மனிக்கு வருவது ரெம்ப ரெம்ப குறைவு.. ஏன்..?! பழமை பேசவோ.. பெருமை பேசவோ?!  :lol:  :icon_idea:

 

ஜேர்மனியில் இருந்து, இங்கிலாந்து வரும் தமிழரை உங்களுக்கும், எனக்கும் தெரியும் :D

 

ஆனால்... இங்கிலாந்திலிருந்து இங்கு வரும், பல ஆங்கிலேயரை... இங்குள்ள எல்லாருக்கும் தெரியும்.

எனது, பக்கத்து வீட்டுக்காரன், எனது பிள்ளைகளுக்கு படிப்பித்த இரண்டு ஆசிரியர்கள் கூட... இங்கிலாந்து ஆங்கிலேயர்கள்.  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.