Jump to content

'நிர்பயா': ஒரு ஆவணப்படமும்...அரசின் அலட்சியமும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி மாணவி ஓடும் பேருந்தில் கொடூர பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட  `இந்தியாவின் மகள்` என்ற ஆவணப்படத்தில் குற்றவாளி முகேஷ் சிங் பெண்களை அவமதிக்கும் வகையில் கூறிய கருத்து, நாடு முழுவதும்  கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாலியல் கொடூரத்திற்கு உள்ளாகும் பெண்களுக்கு உடனடியாக நீதி கிடைக்காததும், குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்படாததுமே இந்த நிலைக்கு காரணம் என்று ஆவேச குரல்கள் எழத்தொடங்கி உள்ளன.

`நிர்பயா` (ஊடகங்கள் சூட்டிய  பெயர்)  என்றழைக்கப்பட்ட டெல்லியைச் சேர்ந்த பிஸியோதெரபி மருத்துவ மாணவி, கடந்த 2012 ஆம் nirbaya5.jpgஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி இரவு டெல்லியில் ஓடும் பேருந்தில் ஒன்றில்  கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்ட்டார். தனது ஆண் நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நிர்பயாவை  போதையிலிருந்த கும்பல், அந்த இளம்பெண்ணுடன் வந்த நண்பரையும்  கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கி, அவரையும் அடித்து உதைத்து ஆயுதங்களால் தாக்கி கொடூரமாக சிதைத்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

இந்திய தலைநகர்  டெல்லியில் நடந்த இந்த கொடூர பாலியல் வக்கிரம் உலக நாடுகளில் பெரிய தலைக்குனிவை இந்தியாவுக்கு ஏற்படுத்தியது. இந்தியப் பெண்கள் மட்டுமல்லாமல் வெளி நாட்டுப் பெண்களும்  தனியாக  செல்லவோ, சுற்றுலா செல்லவோ பாதுகாப்பு இல்லாத மாநகரம் என்று டெல்லியை குறிப்பிடும் நிலை ஏற்பட்டது.  

மருத்துவ மாணவிக்கு  நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிராக எழுந்த போராட்டங்கள்  டெல்லியைக் குலுங்க வைத்தது. கல்லூரி மாணவ மாணவிகள்,சமூக ஆர்வலர்கள் என்று ஆயிரக் கணக்கானோர் ஒன்று திரண்டு பலவீனமான காவல்துறையைக் கண்டித்தும், அரசு அதிகார வர்க்கத்திற்கு எதிராகவும் எழுப்பிய குரல்கள், நடத்திய போராட்டங்கள் உலகின் கவனத்தை  திருப்பியது. 

nirbaya%20aqu.jpgடிசம்பர் 20 ஆம் தேதி முதல் நடந்த இந்த போராட்ட தீ,   இந்தியாவின் பிற நகரங்களுக்கும் பரவியது. மகளிர் அமைப்புகள்,  குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கவேண்டும் என்றும்,  தூக்கில் இடவேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுப்பின.டெல்லியில்,  குற்றவாளிகளை உடனே தூக்கில் போட வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி இந்தியா கேட் பகுதியில் பல்லாயிரக்கணக்கான பெண்கள், மாணவ- மாணவிகள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

டிசம்பர் 21 ஆம் தேதி, மாணவியை சீரழித்த  5 ஆவது குற்றவாளி அக்ஷய் தாக்குர் உத்தரபிரதேச மாநிலத்தில் பிடிபட்டான். 6 ஆவது குற்றவாளியும் கைதானான். அவன் மைனர் என்பதால், பெயரை போலீசார் வெளியிடவில்லை. இதற்கிடையே சப்தர்ஜங் மருத்துவமனை டாக்டர்கள் கொடுத்த சிகிச்சையால் மாணவி மயக்கம் தெளிந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட செயற்கை சுவாசம் விலக்கப்பட்டது. அவரிடம் டெல்லி மாஜிஸ்திரேட் மரண வாக்குமூலம் வாங்கினார்.

அப்போது அந்த மருத்துவ மாணவி, " நான் உயிர் வாழ ஆசைப்படுகிறேன். எப்படியாவது என்னைக்  காப்பாற்றுங்கள். குற்றவாளிகளைத்  தப்பவிட்டு விடாதீர்கள்"  என்றார். இதனால் கொந்தளித்த இளைய தலைமுறை டெல்லியில் விடிய, விடிய போராட்டம் நடத்தியது. இந்தியா கேட் பகுதியில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் தர்ணாவைத்  தீவிரப்படுத்தினார்கள்.

போரட்டக்காரர்கள்  திரளாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அவர்களிடம் பேசிய சோனியா காந்தியும், ராகுலும், " குற்றவாளிகளைத்  தப்ப விடமாட்டோம். உரிய தண்டனை பெற்றுக்  கொடுப்போம்" என்றனர். எத்தனை நாட்களுக்குள் தண்டனை பெற்று கொடுப்பீர்கள்?  என்று போராட்டக்காரர்கள் கேட்டனர். அதற்கு சோனியா பதில் அளிக்கவில்லை. இதையடுத்து போராட்டம் தொடரும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்தனர்.

nirbaya4.jpg

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் டெல்லி இந்தியா கேட் பகுதியில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களின்  எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. இதனால் போலீசார் திணறினார்கள். இதையடுத்து இந்தியா கேட் பகுதியில் திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தடியடி நடத்தியும், தண்ணீர் பீய்ச்சியடித்தும் கலைக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் மீண்டும் இந்தியா கேட் பகுதியில் திரள முடியாதபடி அந்த பகுதி சீல் வைக்கப்பட்டது.

nirbaya2.jpg

இந்நிலையில்  சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டும், கொடூரத் தாக்குதல் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த இளம் மருத்துவ மாணவி, சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 29 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.புத்தி சாதுர்யம் மற்றும் தைரியம் மிக்க அந்த இளம் மருத்துவ மாணவி கொடூர குணம் படைத்த ஆண்களின் இச்சைக்குப் பலியானது எவருக்கும் கண்ணீரை வரவழைக்கும். இந்த அவலமான நிகழ்வு நடந்து, மனப் பிறழ்வு கொண்ட ஆண்களை அடையாளம் காட்டி,நாட்டின் முக்கிய பிரச்சனையாக மாறி 3 ஆண்டு ஆகிறது.ஆனால் இன்னமும் வழக்கு நடக்கிறது...நடக்கிறது...

இந்நிலையில்தான் 'நிர்பயா' வுக்கு நிகழ்ந்த பாலியல் வன் கொடுமையை அடிப்படையாக வைத்து, லெஸ்லி உட்வின்  என்ற பிரிட்டிஷ் பெண்மணி, `இந்தியாவின் மகள்` என்ற ஆவணப்படத்தை தயாரித்து இருக்கிறார். அதில், பாலியல் வன்கொடுமை நடத்தப் பயன்படுத்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநராக இருந்த முகேஷ் சிங் பேட்டியும் இடம் பெற்றுள்ளது. மேலும் வன்கொடுமைக்கு உள்ளான மருத்துவ மாணவியின் பெற்றோர் உள்ளிட்டவர்களின் நேரடி பேட்டிகளும் அதில் இடம் பெற்றுள்ளன.

முகேஷ் சிங் அளித்துள்ள பேட்டியில், "  நாங்கள்  பாலியல் பலாத்கார கும்பலாக மாறுவதற்கு இரவு நேரத்தில் வெளியே வந்த பெண்தான் காரணம். இதற்கு அந்தப்  பெண் தன்னையே குற்றம் சாட்டிக் கொள்ள வேண்டும்.  அந்தப் பெண்ணும், அவரது நண்பரும் திருப்பி தாக்காமல் இருந்தால் நாங்கள் அவர்களைத்  தாக்கி இருக்க மாட்டோம். இது ஒரு விபத்து. நாங்கள் பாலியல் பலாத்காரம் செய்தபோது அமைதியாக அனுமதி அளித்து இருக்க வேண்டும். அப்படி செய்து இருந்தால் தாக்கப்பட்டு இருக்க மாட்டார்" என்று திமிர்த்தனத்தில் பேசியிருக்கிறான்.

nir7.jpgஇது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், கண்டனத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் மத்திய அரசு 'இந்தியாவின் மகள்'  ஆவணப் படத்திற்கு தடை விதித்தது கடுமையான விவாதத்தையும் எழுப்பியுள்ளது. படத்தின் தயாரிப்பாளர்,  'முறையான அனுமதியோடுதான் படம் எடுக்கப்பட்டிருக்கிறது அதனால் தடை விதிக்க கூடாது!' என்று தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில், பி.பி.சி. தொலைக்காட்சி ஆவணப்படத்தை ஒளிபரப்பும் செய்துவிட்டது.

இந்நிலையில், உள்துறை அமைச்சர்  ராஜ்நாத்சிங் அளித்த விளக்கத்தில், குற்றவாளியின் பேட்டி மாணவியை அவமானப்படுத்துவது போல் உள்ளது. இதை அரசு கண்டிக்கிறது. அரசு அனுமதியின்றி ஆவணப்  பட காட்சிகள் வெளியிடப் பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டே ஆவணப் பட வீடியோவை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. கொடுத்த அனுமதியை தவறாகப்  பயன்படுத்தியும், விதியை மீறியும் முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியின் பேட்டியை ஒளிபரப்ப நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. எனவே குற்றவாளியின் பேட்டி ஒளிபரப்பாகாது. இதுபோன்ற சம்பவங்களை எந்த அமைப்போ அல்லது யாரும் வணிக ரீதியில் பயன்படுத்துவதற்கு அரசு ஒரு போதும் அனுமதி அளிக்காது. இந்தப்  பேட்டி எடுக்க அனுமதி அளித்தது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்" தெரிவித்துள்ளார்.

ஆனால்  2014 ஆம் ஆண்டே ஆவணப் பட வீடியோவை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டு இருந்ததாக தற்போது கூறும் மத்திய உள்துறை அமைச்சகம், அதன்பின்னர் அந்த விஷயத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தாமல் காட்டிய அலட்சியமே, தற்போது ஏற்பட்டுள்ள இத்தனை விவகாரங்களுக்கும் அடித்தளமாக அமைந்துவிட்டது.

மேலும் 3 ஆண்டுகாலம் நடந்து கொண்டு இருக்கும், நாட்டின் மன சாட்சியை உலுக்கிய கொடூர சம்பவ rajnath%20sing6.jpgவழக்கு இன்னமும் தீர்ப்பை எட்டாமல் இருப்பது மோசமான முன்னுதாரணம். குற்றவாளியில் ஒருவன் சிறையில் தற்கொலை செய்துகொண்டான்.

மீதமுள்ள குற்றவாளிகளை தண்டிக்க ஏன் காலம் தாமதம் செய்யப்படுகிறது என்பது நீதி தேவதைக்கே பொறுக்காது. இந்தச் சூழ்நிலையில் உண்மை நிலவரத்தைப்  பொய்ப் புனைவுகள் இன்றி தொடர்பு உடையவர்களிடம் நேரடி பேட்டிகள் பதிவு செய்து `இந்தியாவின் மகள் `தயாரிக்கப் பட்டிருக்கிறது. 

சம்பவம் உண்டாக்கிய தாக்கத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம், குற்றத்தின் உண்மைத் தன்மையை வெளி உலகிற்கு காட்டும் ஒன்றுதான் என்றும்,  பொது மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்கும் முயற்சிதான் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் இந்த ஆவண படத்தை தடை செய்யக் கூடாது என வாதிடுபவர்கள், " இந்த படம் முகேஷ் சிங் போன்று இந்தியாவில் இருக்கும் ஏராளமான ஆண்கள், பெண்கள் மீது எத்தகைய மதிப்பீடுகளை கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது. சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்கும் முகேஷ் சிங்குகளிடம் புரையோடிபோய் இருக்கும் பெண்கள் மீதான இத்தகைய எண்ணங்களை அகற்றுவதற்கான உரிய சமூகம் சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என்கின்றனர்.

இந்நிலையில் இனிமேலாவது பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீதான வழக்குகள், மற்ற வழக்குகளை போன்று இழுத்தடிக்கப்படாதவாறு சிறப்பு அமர்வுகளை ஏற்படுத்தி, பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்க செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கங்கள் துரிதப்படுத்திட வேண்டும்.

அப்போதுதான் நிர்பயாவின் ஆன்மா அமைதி அடையும்; முகேஷ் சிங்குகளும் முளைக்கமாட்டார்கள்! 

 

 - தேவராஜன் 

 

http://www.vikatan.com/news/article.php?module=news&aid=39380

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகேஷ் சிங்கின் கருத்துக்களைப் பார்த்த பிறகு எனக்குத் தோன்றியது: முகேஷ் சிங்கைத் தூக்கில் போடக் கூடாது! ஒருமூன்றங்குல தடிப்பமுள்ள இரும்புக் கம்பியை நன்கு சூடாக்கி முகேஷ் சிங்கின் குதவாயிலில் இரண்டு தடவை நுழைத்து எடுக்க வேண்டும்! பிறகு எந்த மருத்துவமும் செய்யாமல் அப்படியே சாக விட வேண்டும்! தூக்கு இந்தப் புழுவுக்கு ஒரு இரக்க செயலாகி விடும்!

Link to comment
Share on other sites

இன்னும் தண்டனை கிடைக்கவில்லையே என்று அங்கலாய்க்கிறார்களாம் மக்கள்.. அதெப்படி கிடைக்கும்..? மின்கலம் வாங்கிய பற்றுச்சீட்டை சட்டைப்பையில் வைத்திருந்தார் என்று சொல்லி நீதியை தாங்கிப்பிடிக்கும் நிலையில்தான் இருக்கு இந்தியா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.