Jump to content

காங்கேசன்துறையில் அமைக்கப்படுவது ஜனாதிபதி மாளிகை அல்ல! மஹிந்த:-


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தனது பயன்பாட்டிற்காக காங்கேசன்துறை பகுதியில் ஜனாதிபதி மாளிகை நிர்மாணிக்கப்பட்டதாக வௌியாகும் செய்திகளில் உண்மையில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் அது சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்காக அமைக்கப்பட்ட கட்டிடம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

1980ம் ஆண்டு பயங்கரவாதிகளால் சேதப்படுத்தப்பட்ட ஜனாதிபதி மாளிகை ஒன்று யாழ்ப்பாணம் கோட்டையில் அமைந்துள்ளது என்பதை நினைவூட்டுகிறேன்.

அது இன்னும் மீள்நிர்மாணம் செய்யப்படவில்லை.

காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டு வருவது, ஜனாதிபதி செயலகத்திற்கு கீழ் வரும், சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்காக அமைக்கப்பட்ட கட்டிடம்.

இந்த நிர்மாணப் பணிகள் ஒப்படைக்கப்பட்டமை கடற்படையினரிடம்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம், தாமரைத் தடாகம் போன்றனவும் ஜனாதிபதி செயலகத்தினாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

காங்கேசன்துறை, அறுகம்பை ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்படுவது, ஜனாதிபதி மாளிகைகள் அல்ல, சர்வதேச மாநாட்டு மண்டபங்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.
  

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117263/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ சொல்லவே இல்லே. உங்க ஆட்சில வெளிநாட்டுக்காரர் வடக்குக்கு போக அனுமதி தாராளமா இருந்ததுபோல அங்க சர்வதேச மகாநாட்டு மண்டபம் ஒன்னு தான் குறைச்சலா இருந்துதோ. அதுவும் ஜனாதிபதிக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியமோ? இதுவரைக்கும் எவருமே இதுபற்றி வாயை திறக்கலையே. சர்வதேசமே கூடி மாநாடு வைக்க அப்படி என்ன சமாசாரம் இருக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

. சர்வதேசமே கூடி மாநாடு வைக்க அப்படி என்ன சமாசாரம் இருக்கு?

 

என்ன இப்படி கேட்டுபோட்டியள், casino நடத்த தான்:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.