Jump to content

திருநெல்வேலி சொதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக புதுமண தம்பதியர்களுக்கு திருநெல்வேலி ஜில்லாவில் செய்து கொடுக்கப்படும் பிரபலமான ஒரு ரெசிபி தான் சொதி. இது மிகவும் வித்தியாசமான சுவையுடன் தேங்காய் பால் மற்றும் நிறைய காய்கறிகள் சேர்த்து செய்யப்படும். சொல்லப்போனால் இது ஒரு ஆரோக்கியமான சமையல் என்றும் சொல்லலாம். ஏனெனில் இதில் காய்கறிகளை அதிகம் சேர்த்து செய்வதால், இதில் சத்துக்கள் அதிகம் இருக்கும்.

 

சரி, இப்போது திருநெல்வேலி சொதி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

 

 
05-1425545918-tirunelveli-sodhi-recipe.j

 

தேவையான பொருட்கள்:

 

கேரட் - 1

உருளைக்கிழங்கு - 1

பீன்ஸ் - 10

பச்சை பட்டாணி - 1/4 கப்

கத்திரிக்காய் - 2

முருங்கைக்காய் - 1

வெங்காயம் - 2

இஞ்சி - 2 இன்ச்

பூண்டு - 5 பற்கள்

பச்சை மிளகாய் - 5

தேங்காய் - 1/2 மூடி (துருவியது)

பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிது

நல்லெண்ணெய்/தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

 

செய்முறை:

 

முதலில் அனைத்து காய்கறிகளையும் நறுக்கிக் கொள்ள வேண்டும்.

 

பின்னர் தேங்காயை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து அரைத்து, 1 கப் தேங்காய் பால் எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் மீண்டும் அதில் தண்ணீர் ஊற்றி, 1 கப் தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 

பிறகு அதில் இஞ்சி, பூண்டு, வெந்தயம் சேர்த்து தாளித்து, பின் அதில் வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.

 

பின் அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்கி, மிஞ்சுள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

 

அடுத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, இரண்டாவது தேங்காய் பாலை ஊற்றி, 10 நிமிடம் காய்கறிகளை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

 

பின் வதக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை, பொட்டுக்கடலையுடன் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

 

காய்கறிகளானது நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை பேஸ்ட் சேர்த்து, தீயை குறைத்து, முதல் தேங்காய் பாலை ஊற்றி, 1-2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

 

குழம்பானது கொதிக்க ஆரம்பித்ததும், அதனை இறக்கி, அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

 

இறுதியில் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்தால், திருநெல்வேலி சொதி ரெடி!!!

 

 

http://tamil.boldsky.com/recipes/veg/tirunelveli-sodhi-recipe-007675.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஊர் சொதி மிகவும் இலகுவாக செய்யலாம் என்பது எனக்கும் தெரியும். இது நம்ம ஊர் பால்கறி போன்று இருக்கும் என நினைக்கின்றேன் யாராவது விரும்பினால் சமைத்து சுவைத்து பாருங்கள் .....  :D  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது தமிழகத்து திருநெல்வேலி ரசம்..!

அப்படியே ஈழத்து திருநெல்வேலிக்கு எடுத்துச் சென்றால் சொதி..!

இது தமிழனின் சதி! :)
 

Link to comment
Share on other sites

'திருநெல்வேலி'..... நான் யாழ் திருநெல்வேலியைச் சொல்கிறேன். மீன் சமைத்தால் அன்று மீன்தலையில் சொதி கட்டாயம் இருக்கும், அதன் சுவையே தனி.  :)  :D  

 

சொதிக்கு ஆள் எழுப்பி என்றும் பெயருண்டு. "உண்டது போதும் எழுந்திரு" என்று சொல்லாமல் சொல்வதற்குச், சொதியை விட்டாலே போதும் உண்பவருக்கு விளங்கிவிடும்.  :(  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரசத்துக்கு மிளகு கட்டாயம் சேர்க்க வேண்டும். அதனுடன் பூண்டும் நிறையப் போடவேண்டும். ஒரு கொதியுடன் இறக்க வேண்டும்...!! :)

 

இது பாற்சொதி சுவையாய் இருக்கும்...!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'திருநெல்வேலி'..... நான் யாழ் திருநெல்வேலியைச் சொல்கிறேன். மீன் சமைத்தால் அன்று மீன்தலையில் சொதி கட்டாயம் இருக்கும், அதன் சுவையே தனி. :):D

சொதிக்கு ஆள் எழுப்பி என்றும் பெயருண்டு. "உண்டது போதும் எழுந்திரு" என்று சொல்லாமல் சொல்வதற்குச், சொதியை விட்டாலே போதும் உண்பவருக்கு விளங்கிவிடும். :(:lol:

ஆமாம், வீட்டில் சோறு போதாவிடில், முதல் சேர்விங்குடன், 'சொதிய விட்டு சாப்பிடுங்க' எண்டால், அதோட எழும்ப வேண்டியது தான் எண்டு விளங்கும். :D

Link to comment
Share on other sites

எந்த இலைக்குச் சொதி வேணும்.....??

 

 

63466.gif                     37.jpg                                

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவளுகள் ஏற்கனவே நல்லா திருநெல்வேலி அல்வா குடுப்பதில் கெட்டிக்காரிகள், இப்ப வேற திருநெல்வேலி சொதி வந்திச்சா, செலவில்லாம சிம்பிளா ஊத்திவிட்டுப் போயிடுவாளுகள். இனி அல்வா குடுக்குறது மட்டுமில்லை சொதி ஊத்திறதும் நடக்கும்!

Link to comment
Share on other sites

சொதி என்றாலே வாயூறும். இணைப்பிற்கு நன்றி தமிழரசு.

 

என்ன இருந்தாலும் திரளிமீன் சொதியை வெல்ல முடியாது. வெள்ளை இடியப்பத்துடன் திரளிமீன் சொதியைச் சேர்த்தால் சொர்க்கத்துக்கே சென்று வரலாம்.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 
05-1425545918-tirunelveli-sodhi-recipe.j

 

தேவையான பொருட்கள்:

 

கேரட் - 1

உருளைக்கிழங்கு - 1

பீன்ஸ் - 10

பச்சை பட்டாணி - 1/4 கப்

கத்திரிக்காய் - 2

முருங்கைக்காய் - 1

வெங்காயம் - 2

இஞ்சி - 2 இன்ச்

பூண்டு - 5 பற்கள்

பச்சை மிளகாய் - 5

தேங்காய் - 1/2 மூடி (துருவியது)

பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிது

நல்லெண்ணெய்/தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

 

இதை... நம்மூரிலை, சாம்பார் என்று சொல்வார்கள்.

சிலோன் சொதியை மட்டுமல்ல, எந்த ஒரு கறி வகைகளையும் தமிழக தமிழரால் சுவையாக செய்ய முடியாது என்பது தான் உண்மை.

 

அவர்களுக்கு... இட்லி மட்டும் தான்... மல்லிகைப் பூவை போல செய்யத் தெரியும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

... எந்த ஒரு கறி வகைகளையும் தமிழக தமிழரால் சுவையாக செய்ய முடியாது என்பது தான் உண்மை. :D

 

ஆதாரம்..? :o:)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரம்..? :o:)

 

 

சொந்த அனுபவம். :D 

முன்பு.. தமிழ் நாட்டு, உணவு விடுதிகளில் சாப்பிட்டு... நாக்கு செத்து விட்டது..

எல்லாவற்றுக்கும் கடலை எண்ணையை... சேர்ப்பதால், அந்த வாசனை எனக்கு பிடிக்கவில்லை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

...

எல்லாவற்றுக்கும் கடலை எண்ணையை... சேர்ப்பதால், அந்த வாசனை எனக்கு பிடிக்கவில்லை. :)

 

மனசிலாயி..! ஆ.., எந்தா சேட்டா.. தேங்கா ஊனு கழிஞ்ஞோ..? :o

 

Link to comment
Share on other sites

எந்த ஒரு கறி வகைகளையும் தமிழக தமிழரால் சுவையாக செய்ய முடியாது என்பது தான் உண்மை.

 

ஆதாரம்..? :o:)

 

 

புளி புளிக்கும். உப்பு கைக்கும். இரண்டும் உணவில் சேரும்போது அதன் சுவை......... ஆகா !!  :)
 
தமிழ்சிறி சாடல். ராசவன்னியர் தேடல். ஒருவர் ஈழம் மற்றவர் தமிழகம். இருவரும் தமிழில் சேரும்போது அதன் சுவை......... ஆகா ஆகா !!!  :wub:

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியர்,

சிறியர் சொல்வது சரிதான்.

இலங்கையர்கள், கறி வகைகளில் மிளகாயினை அறிமுகப்படுத்தி பெரும் கறிப்புரட்சி செய்த போர்த்துக்கேயர், பின்னர் ஒல்லாந்தர் ஆட்சிக்கு உட்பட்டவர்கள்.

தமிழ்நாட்டில் கறிப்புரட்சி செய்தவர்கள். பிராமணர்களும், செட்டிநாட்டவர்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

..சொதிக்கு ஆள் எழுப்பி என்றும் பெயருண்டு. "உண்டது போதும் எழுந்திரு" என்று சொல்லாமல் சொல்வதற்குச், சொதியை விட்டாலே போதும் உண்பவருக்கு விளங்கிவிடும்.  :(  :lol:

 

விருந்தோம்பலுக்கு பெயர்போன தமிழர் வழக்கத்தில் இப்படியுமா..? தமிழகத்தில் இப்படியெல்லாம் இல்லை..Thank god..! :o

இனிமேல் யாராவது ஈழத்தமிழர் வீட்டிற்குச் சென்றால், உணவு வகைகளில் சொதி இல்லைதானேயென உறுதிபடுத்துவதில் அவதானமாக இருப்பேன். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த அனுபவம். :D 

முன்பு.. தமிழ் நாட்டு, உணவு விடுதிகளில் சாப்பிட்டு... நாக்கு செத்து விட்டது..

எல்லாவற்றுக்கும் கடலை எண்ணையை... சேர்ப்பதால், அந்த வாசனை எனக்கு பிடிக்கவில்லை. :)

 

நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்?

 

கடலை எண்ணை போய், இப்பொழுது சூரியகாந்தி ரிபைன்டு ஆயில், நல்லெண்ணை என மாறிவிட்டது.. ஆனால் நீங்கள் தான் தலைக்கு தடவும் தேங்காய் எண்ணையை பயன்படுத்தி உடலில் கொழுப்பை ஏற்றுகிறீர்கள்.. :o

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

புளி புளிக்கும். உப்பு கைக்கும். இரண்டும் உணவில் சேரும்போது அதன் சுவை......... ஆகா !!  :)
 
தமிழ்சிறி சாடல். ராசவன்னியர் தேடல். ஒருவர் ஈழம் மற்றவர் தமிழகம். இருவரும் தமிழில் சேரும்போது அதன் சுவை......... ஆகா ஆகா !!!  :wub:

 

பாஞ்ச் 'பஞ்சாயத்து தலைவராக' இருக்க வேண்டியவர்..! (பச்சை முடிஞ்சது).

Link to comment
Share on other sites

சொதியை விட்டு ஆட்களை எழுப்பும் கதை இன்றைக்குத்தான் கேள்விப்படுகிறேன்.. என்ன இருந்தாலும் விருந்தோம்பலுக்கு தமிழகம், நிழலி வீடு, விவசாயி விக் பண்ணைதான்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது உணவு வகைகளில் காரம் அதிகமாய் இருக்கும். உறைப்பு இல்லையென்டால் எங்களுக்கு இறங்காது. மூண்டுவயதுக் குழந்தைகள் கூட கண்ணில் நீர் வடிய மூக்கில் சளி ஒழுக மூக்கை உறிஞ்சிக்கொண்டு குழம்புச் சாதத்ததொரு வெட்டு வெட்டுவதை சாதாரணமாய் வீடுகளில் காணலாம்...! :rolleyes::)

 

தமிழகத்தோர், மலையாளிகள் மிளகாய்த் தூளைக் கண்டாலே கண்ணில் நீர் விடுவார்கள்...!!  :)  :D

Link to comment
Share on other sites

நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்?

 

கடலை எண்ணை போய், இப்பொழுது சூரியகாந்தி ரிபைன்டு ஆயில், நல்லெண்ணை என மாறிவிட்டது.. ஆனால் நீங்கள் தான் தலைக்கு தடவும் தேங்காய் எண்ணையை பயன்படுத்தி உடலில் கொழுப்பை ஏற்றுகிறீர்கள்.. :o

 

 

சார்.. மேனாட்டுக்காரங்க வெஜிடபிள் ஓயில விற்பதற்காக தேங்காய் எண்ணை கொழுப்பு கூடாதென சொன்னாங்க.. தற்போது தேஙாய் என்ணெய் நல்லதென சொல்லியிருக்காங்க.. http://coconutoil.com

Link to comment
Share on other sites

நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்?

 

கடலை எண்ணை போய், இப்பொழுது சூரியகாந்தி ரிபைன்டு ஆயில், நல்லெண்ணை என மாறிவிட்டது.. ஆனால் நீங்கள் தான் தலைக்கு தடவும் தேங்காய் எண்ணையை பயன்படுத்தி உடலில் கொழுப்பை ஏற்றுகிறீர்கள்.. :o

 

 

கொழுப்பைக் குறைக்கும் உணவுகள்.
 
கொழுப்பைக் குறைப்பதற்கு இயற்கையான வழிகள் பலவும் உள்ளன. பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு, மிளகு, தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை , கடுகு, கிராம்பு ஆகியவையும் கொழுப்பைக் கரைக்க உதவுகின்றன. 
 
சிறிது கிராம்பு, பச்சைப் பூண்டு சிறிது இஞ்சி ஆகியவற்ரைக் கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் கொழுப்பை நிச்சயம் கரைக்க முடியும். 
 
வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சைச் சாறு, தேன் கலந்துகாலையில் வெறுவயிற்றில் அருந்துவதும் மிகப்பிரபலமான உடல் எடையைக் குறைக்கும் வழியாகப் பின்பற்றப்படுகிறது. 
 
கெட்ட, தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கும் முயற்சியில் ஆரோக்கியமான கொழுப்பு வகைகளைப் புறம் தள்ளிவிடக் கூடாது. 
 
நல்ல கொழுப்பு வகைகளான தேங்காய்நெய், வெண்ணை, ஆலிவ், ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.    
 
பாட்டி வைத்தியம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

...
நல்ல கொழுப்பு வகைகளான தேங்காய்நெய், வெண்ணை, ஆலிவ், ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.    
 
பாட்டி வைத்தியம்

 

தேங்காய் எண்ணெய் கொழுப்பா, இல்லையா? இதில நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு வேறையா?

 

இது எந்த ஊரு 'யூஸ்லெஸ்' பாட்டி? மலையாள பார்டியா ? ராங்கா பேசுது! :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்?

 

கடலை எண்ணை போய், இப்பொழுது சூரியகாந்தி ரிபைன்டு ஆயில், நல்லெண்ணை என மாறிவிட்டது.. ஆனால் நீங்கள் தான் தலைக்கு தடவும் தேங்காய் எண்ணையை பயன்படுத்தி உடலில் கொழுப்பை ஏற்றுகிறீர்கள்.. :o

 

 

வன்னியன் சார்... நான் தமிழ்நாட்டுக்குப் போனது,

சென்ற நூற்றாண்டு,  நைன்டீன் எய்ட்டி சிக்ஸ் (1986)

இப்ப.. நீங்க சொல்லுற கதை... ரூ தவுசன்ட் பிப்டீன் (2015)

அதற்கு இடையில்.... மாற்றங்கள், நிகழ்ந்து இருக்கலாம்.. என்பதை மறுக்கவில்லை.

ஆனால்... தமிழ்நாட்டு சமையல் குறிப்புக்களில் இன்றும்... இரண்டு தக்காளியும், மஞ்சள் தூளும் இல்லாத சமையலே இல்லை. என்பதை, நீங்க ஒத்துக் கொள்கிறீர்களா? :D  

 

ஆங்... கேட்க மறந்துட்டேன், பாமாயில் என்றால்... என்ன அண்ணா? :icon_idea:

Link to comment
Share on other sites

Palm Oil. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவ‌ர்க‌ள் இந்த‌ முறை கோப்பை வெல்ல‌ மாட்டின‌ம் இவ‌ருக்கு ப‌தில் மாற்று வீர‌ரை தெரிவு செய்தாலும் க‌ர்விய‌ன் மைதான‌த்தில் இவ‌ர்க‌ளால் அடிச்சு ஆட‌ முடியாது வெஸ்சின்டீஸ் மைதான‌ங்க‌ளில் இங்லாந் அணி அதிக‌ம் தோற்று இருக்கு போன‌ வ‌ருட‌மும் 20ஓவ‌ர் தொட‌ரை வெஸ்சின்டீஸ் அணி இவ‌ர்க‌ளை வென்றார்க‌ள்   நாச‌மாய் போன‌ வெஸ்சின்டீஸ் தேர்வுக்குழு சுனில் ந‌ர‌னை தேர்வு செய்தால் அணிக்கு கூடுத‌ல் ப‌ல‌மாய் இருக்கும்..................ஜ‌பிஎல்ல தொட‌க்க‌ வீர‌ராய் இற‌ங்கி ப‌ல‌ விளையாட்டில் அடிச்சு ஆடி அணிக்கு வெற்றிய‌ பெற்று கொடுத்த‌வ‌ர்......................................................
    • அப்படி தான் செய்திகள் சொல்கிறது பையா. ஓட்டங்களை மெதுவாக எடுக்கிறாராம்.
    • கிட்ட‌ த‌ட்ட‌ ஒரு மாத‌மும் ஒரு கிழ‌மையும் இருக்கு வீர‌ர்க‌ளுக்கு ஓய்வில்லாம‌ போட்டிய‌ தொட‌ர்ந்து ந‌ட‌த்துகின‌ம் ஜ‌பிஎல் முடிந்த‌ கையோடு வீர‌ர்க‌ள் க‌ர்விய‌ன் தீவை நோக்கி ப‌ய‌ணிக்க‌னும்........................... நியுசிலாந் Bரீம் பாக்கிஸ்தான் சென்று பாக்கிஸ்தானை வென்று விட்டின‌ம் தொட‌ரையும் வென்று விட்டின‌ம்.................சென்னை அணிக்காக‌ விளையாடும் இர‌ண்டு நியுசிலாந் வீரர்க‌ள் இதுவ‌ரை அடிச்சு ஆட‌ வில்லை இவ‌ர்க‌ளுக்கு ப‌தில் பாக்கிஸ்தான் தொட‌ரில் சிற‌ப்பாக‌ விளையாடின‌ வீர‌ர்க‌ளை நியுசிலாந் தேர்வுக்குழு தேர்வு செய்யுக் கூடும் என்று நினைக்கிறேன்.............................  
    • தமிழரசு கட்சியாலேயே அந்த எதிர்ப்பு  மேற்கொள்ளப்பட்டதாகவே நான் கூறியுள்ளேன். அதை வாசிக்க வில்லையா?  அல்லது வாசித்தும்  ஏதோ எழுதவேண்டும் என்பதற்காக எழுதி உள்ளீர்களா?  இப்போதும் கருத்துக்களை நேர்மையாக எதிர் கொள்ளாமல் தந்தை செல்வாவின் பிரபல்யத்துக்கு  பின்னால் ஒழிய வேண்டிய நிலை.   தந்தை செல்வா இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருந்து அவர் ஆயுததாரிகளால்  சுட்டுக்கொல்லப்பட்டிருந்தால் நீங்கள் பிளேட்டை மாத்தி கூறி இருப்பீர்கள். 😂
    • என் inspiration ஆல் இப்படி பல தரவுகளை ஆராய்ந்தமை அதை நான் உட்பட பலருக்கு அறியதந்தமைக்கு நன்றி. என் கட்டுரை வேறு எந்த பலனை தராவிடிலும் - இது ஒன்றே போதும். நான் எப்பவுமே இவற்றை அங்குதான் போய் சாப்பிடுவது.  தவிரவும் கோப்பித்தூள், மிளகாய்தூள், எல்லாம் அங்கே இருந்து நேரடியாக அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.